எனக்கு விளங்க வில்லை... நான் தேசி?
என் மூளையே நீ கொஞ்ஜம் யோசி
என் அறிவுக்கு தெரிந்தது...சுதேசி...விதேசி...பரதேசி...
யோசித்த பிறகு..சற்றே விலகுது மூளையில் பிடிச்ச பாசி
சுதேசி...'சு'ற்றத்தை விட்டு விட்டு வந்ததால் தேசி?
விதேசி...'வி'றுந்துகளை விட்டு விட்டு வந்ததால் தேசி?பரதேசி...'பர'..'பர'ப்புகளை விட்டு விட்டு வந்ததால் தேசி?
இன்னும் எனக்கு விளங்க வில்லை... நான் தேசி?
என் மூளையே நீ இன்னும் கொஞ்ஜம் யோசி
'சு'-வை விட்டாய்,
'வி'-யை விட்டாய்...
'$' மீது உள்ள தாகத்தை விட்டாயா?
$ 'தா'கத்தால் மனதை விற்ற 'தா'சி
நீ...'தேசி'...'$'-யே நேசி
இன்னும்..இன்னும் எனக்கு விளங்க வில்லை...
நான் தேசி? என் மூளையே நீ இன்னும்...இன்னும் கொஞ்ஜம் யோசி
நீ...இங்கேயே தங்கிவிட்டால்...சுகவாசி
நீ...ஊருக்கு திரும்பினால்...விசுவாசி
No comments:
Post a Comment