தோப்புக்கரணம் - பிண்ணா

நம்ம பிள்ளையாரோட மாமா மாஹா விஷ்ணு இருக்காரே...அவர் ஒரு முறை பிள்ளையரை முறைச்ஜிண்டு...ஒரு காரியம் பண்ணிட்டார். அதனால பிள்ளயாருக்கு மாமா மேல கோவம் வந்துடுத்து...மாமாவுக்கு எப்பிடி வைக்கலாம் ஆப்பு-னு பார்த்தாரு...ஒரு நாள் விஷ்ணு மாமா குளத்துல நீராட மூழ்கிண போது...பிள்ளையார்...மாமாவோட சுதர்ஷன சக்ரத்த எடுத்து முழுங்க்கிட்டாரு.

குளிசிட்டு மேல வந்த மாமாவுக்கு அதிர்ச்சி...(இருக்காத பின்ன)...சுத்தி முத்தி பார்த்தாரு... ஒருத்தரும் இல்ல... வேற வழி இல்லாம SIL-லுகிட்ட போயி மேட்டர சொன்னாரு...SIL-லு அதாங்க சிவன் (அக்கா வீட்டுக்காரு Sister-In-Law) மேட்டர ஒடைச்சிட்டாரு...அது உன் மாப்பு (பிள்ளையார்) கிட்ட இருக்கு... உன் சக்கரம் அவன் வாயில/வயித்துல இருக்கு-னு சொல்லிட்டாரு.

மாமாவுக்கு தெரியாதா...மாப்பிள்ளைய எப்பிடி வழிக்கு கொண்டுவரனும்னு, மாப்பிள்ளை கிட்ட போயி மாமா கதை சொன்னாரு... ஜோக்கு சொன்னாரு... ஹ்ம்ம் யாண தலையன்... வாய தொறக்கர மாதிரி தெரியல. பார்த்தாரு இரெண்டு கையயும் காதுல வச்சி ஒரு தோப்புக்கரணம் (டான்சு - சிரிச்சி சிரிச்சி வந்த ம(ஹா)ஆன வி(ஷ்ணு)ஆன டோய்) போட்டாரு....மாப்பிள்ளை குஸி ஆகி சிரிக்கவும்...சக்கரம் வெளிய வந்து விழுந்துடுச்சி.

மூலக்கதை:Dhobirh karnam - in Sanskrit, means ‘ears by hands’

No comments: