அஞ்சா நெஞ்ஜன் அசாங்...

விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் பால் அசாங் பற்றி நிறைய படித்திருப்பீர்கள், இல்லையேல் பதிவர் சுடுதண்ணி-ய படிங்க. இது சும்மா நகைச்சுவைக்காக மட்டும்.




தகுதி என்பது...1

காஞ்சி மகாப் பெரியவர் பற்றி திரு.சுகி சிவம் அவர்கள் பேசியதை கேட்டுக்கொண்டிருந்தேன்... ஒரு உயர்ந்த பதவியில் இருப்பவர் அல்லது பொது நலச்சேவையில் இருப்பவர் எப்படி இருக்க வேண்டும், சிலர் எப்படி வாழ்ந்தார்கள் என்று சொன்னார்... அப்படி நான் கேட்டதில் ஒன்றிரண்டு... நன்றி சொல்வேந்தர் சுகி அவர்களுக்கு.


அன்று வழக்கம் போல் பூசை முடிந்தது, மகா பெரியவர் தனக்கு பிட்சை (உணவு) வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம். சரி பெரியவருக்கு பசியில்லை போல என நினைத்து அலுவலர்கள் தங்கள் வேலையை பார்க்க சென்றுவிட்டார்கள். இரண்டாம் நாளும் பெரியவர் பூசை முடித்து போசனம் வேண்டாம் என்று சொல்லி சென்றுவிட்டார். மடாலய நிர்வாகிகளுக்குள் சற்று பயம், ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்ள ஆரம்பித்தனர், யார்-என்ன-ஏது நடந்தது என தகவல் பறிமாற்றம் தீவிரமடைந்தது.

மூன்றம் நாள், பெரியவர் வழக்கம் போல் பூசையில், இன்று எல்லா மட நிர்வாகிகளும் ஆஜர், பிட்ஷைக்கு அழைப்பு, பெரியவர் மறுப்பு. மடத்தின் நிர்வாகிகள் இன்று நாங்கள் செய்த தவறு தெரியாமல் வேறு வேலை செய்யப்போவது இல்லை (உணவு உண்பது உட்பட) என்று பெரியவரிடம் சொல்ல, பெரியவர் சொன்னாராம்... சரி என்னை விடமாட்டீங்க போல இருக்கு, தவறு செய்தது நான் தான் என்றும், அதற்க்கு தண்டனையாய் உணவருந்தாமல் இருப்பதாகவும் சொன்னாராம்.

கீரைக்கு ஆசைப்பட்டு...


அவர் அப்படி என்ன தவறு செய்தார் தெரியுமா? பெரியவர் சொன்னதாக..
ஒரு நாள் (பிட்ஷை வேண்டாம் என்று சொன்ன மூன்று தினங்களுக்கு முன்) உணவில் கீரை சாப்பிட்டேன், நன்றாக இருக்க கொஞ்சம் அதிகம் சாப்பிட்டேன், அதை கவனித்த மட சிப்பந்தி இரண்டாம் நாளும் அந்த கீரையை சமைத்து பறிமாறினார், அன்றும் நன்றாக சாப்பிட்டேன். மூன்றாம் நாள் பூசையின் போதே மனம் பூசையில் ஒட்டாமல் இன்றும் சமையலில் கீரை இருக்குமா என்று நினைக்க ஆரம்பித்து விட்டது. அந்த ஆசையை ஒழிக்கவும், பூசையில் மனமில்லாமல் உணவை நினைத்ததிற்காகவும் நான் எனக்கு கொடுத்து கொள்ளும் தண்டனை இது, நீங்கள் அவர் அவர் தங்கள் அலுவல்களை கவனியுங்கள் என்று சொன்னாராம்.

பெரியவர்... தன் செயல்பாட்டால் என்றுமே பெரியவர்.

என்னை மன்னியுங்கள் அப்பா...

உழுதவன் கணக்கு பார்த்தால்
உழக்கு கூட மிஞ்சாது
விவசாயத்தில் விழுந்து விழுந்து
உடலும் மனமும் காயம் ஆகும்முன்
உன் ஆடை சாயம் போகும்முன்
படி படி என்றாள் அம்மா.



படித்தவுடன் வேலையை
பிடி பிடி என்றாள் பாட்டி
உள்ளூரிலே வேலை ரொம்ப
கடி(னம்) கடி(னம்) என்றாள் மனைவி
விவசாயத்தை விட்டேன்
விமானத்தை தொட்டேன்.



கலந்துரையாடைலில் நண்பர்கள் சொன்னார்கள்
என் அப்பா டாக்டர்... நானும் டாக்டர்
என் அப்பா எஞ்ஜினியர்... நானும் எஞ்ஜினியர்
அப்பா... நான் என்ன சொல்ல?
மவுனமாய் இருந்து விட்டேன்
விவசாயத்தை மறந்து விட்டேன்
அப்பாவை மறைத்து விட்டேன்...

என்னை மன்னியுங்கள் அப்பா...