பெண் புத்தி பின் புத்தி

பெண் புத்தி பின் புத்தி - பழக்க மொழியோ இல்ல வழக்க மொழியோ இது எப்படி என்று நம்ம கண்ணா-பின்னாவில் ஒரு ஆராய்ச்சி.

சாதாரணமா சொல்லனும்னா இது அதிக படியா பெண்கள் மூளையை சற்று குறைத்து மதிப்பிட்டு சொல்லப்படுவது. பெண்கள் தாமதமாக அல்லது ரொம்ப யோசித்து காலதாமதமாக செயல்படுவதால் அவர்கள் எடுத்த முடிவால் எந்த பயனும் இல்லாமல் போய்விடும்.

அது சரிதானோ என நினைக்க தோன்றுகிறது - இதோ ஒரு புராதாண கதை சான்று - மஹாபாரத்தில் இருந்து.

பாஞ்சாலியை துகிலுரிய அழைத்து வர துரியோதனின் காவலர்கள் அவள் வீட்டுக்கு சென்று அரன்மனைக்கு வருமாறு அழைக்கிறார்கள். அதற்கு பாஞ்சாலி தான் வீட்டை விட்டு வர இயலாது என்று ( நான் நைட்டி போட்டு இருக்கேன்-சாக்கு, வீடுக்கு தூரம்-போக்கு) சொல்லுகிறாள், காவலர்கள் பலவந்தமாக இழுத்து செல்லுகிறார்கள்.

சபைக்கு சென்றவுடன் துரியோதனன் அவளை துகிலுரியுமாறு கட்டளையிடுகிறான். பாஞ்சாலி உடனே பெருங்குரலெடுத்து பாடுகிறாள் (என்ன மானமுள்ள பெண்ணுன்னு மதுரையில கேட்டாக... அந்த மாயவரத்துல கேட்டாக மெட்டுல)
எனக்கு புருஷன் 1-க்கு 5-பேரு இருக்காக...
மெத்த படிச்ச துரோணரய்யா இருக்காக...
அவுகளமீறியா என்மேல கைய வெப்பீக...-ன்னு

பாஞ்சாலி பாட்ட கேட்ட துரி-க்கு வந்தது வெறி. பார்வையால் காவலர்களை எறித்தான்... காவலர்கள் துகிலை உறித்தான்.

பாஞ்சாலி அழைத்தால் பரமாத்மாவை... கண்ணா... அவர் உடனே கேட்டார்...என்னா?

பிறகு நடந்தது என்ன என்று உங்களுக்கு தெரியும். இதுக்கும் நம்ம பழமொழிக்கும் என்ன சம்பந்தம்ன்னு கேட்க்குறீங்களா?

இந்த பாஞ்சாலி பின்-னாடி கூப்பிட்ட கண்ணன வீட்டுல முன்-னாடியே கூப்பிட்டு இருந்தா (ஹி...ஹி நான் இப்படி ஒரு பதிவு போட்டு இருக்க முடியாது) இவ்வளவு அவமானம் நடந்திருக்காது இல்லையா? பாஞ்சாலிக்கு பின் புத்திதானா?

சரி அத இந்த அரசூரான் சொல்லுறது கிடக்கட்டும், நாலு நல்லவர்களை என்ன சொல்லுறாங்கன்னு கேட்போமா?

சாலமன் பாப்பையா: நல்லா கேட்டீங்கய்யா, இதுக்கு நான் பதில் சொல்லுறத விட ஒரு பட்டி மன்றம் வச்சு சரிதான்னு சொல்ல இங்கன நாலு பேரு, இல்லன்னு சொல்ல அங்கன நாலு பேருன்னு எட்டு பேர பேச சொல்லி ஒரு நல்ல தீர்ப்பா சொல்ரேன் ய்யா... கொஞ்சம் பொருங்கய்யா.

திண்டு.ஐ.லியோனி: எனக்கு ஒரு புது பாட்டு ஒரு பழைய பாட்டு-ன்னு ரெண்டு பாட்டு பாடனும் போல இருக்கு... அவிங்க படத்துக்கு என்ன தேவையோ அத பாடிட்டு போயிட்டாய்ங்க... அது நமக்கு சரியா வராதுல்ல. இருந்தாலும் நீங்க கேட்டதுக்கு பதில் சொல்லனும்ல்ல. அது ஒன்னும் பெரிய விசயம் இல்ல... அது நம்ம பொம்பள பிள்ளைக ஆம்பிளைங்கள குத்தி குத்தி (முடிஞ்சா கொண்டை ஊசியால இல்லன்னா வார்த்தையால) பேசுரது... அதாங்க பஞ்ச் டயலாக்.

சுகி சிவம்: நான் சக்தி உபாசகன். பெண்களை அன்னை உமயவளுக்கு ஒப்பானவர்களாக கருதுபவன். அவர்கள் எடுக்கும் முடிவு நல்ல முடிவு... அவர்கள் இன்று எடுக்கும் முடிவால் பின் நாளில் என்ன நல்லது கெட்டது நடக்கும் என்று யோசித்து எடுக்கும் முடிவு. பின் வருவதை முன் கூட்டியே யோசிப்பவர்கள். பின் விளைவை நினைக்கும், யோசிக்கும் முன் புத்தி உடையவர்கள்.

ஏது... நம்ம சுகி சிவம் அய்யா சொல்லுறத பார்த்தா இதுக்கு பின்னால சுவையான பல விசயம் இருக்கும் போல... என்னன்னு பார்த்துடுவோமா? பாஞ்சாலி முன் புத்தியோட யோசிச்ச விசயத்த பார்ப்போமா?

சாக்கு-போக்கு: இதை வீட்டுக்கு வந்த காவலர்களிடம் சொல்லாம சபைல வந்து சொல்லியிருந்தா கணவர்கள் மற்றும் அங்க உள்ள பெருசு எல்லாம் என்ன சொல்லியிருக்கும்? யாம்மா நீ எல்லாம் ஒரு குடும்ப பெண்தானா? இதை உன்னை அழைக்க வந்த காவலர்களிடம் சொல்லியிருந்தால் உன்னை இங்கு அழைத்து வந்திருக்க மாட்டர்களே... உன் கணவர்களுக்குதான் அறிவில்லை பெண்ணை வைத்து சூது ஆடிவிட்டர்கள்... நீயாவது இங்கு வருவதை தவிர்த்திருக்கலாமே என்று பிளேட்டை மாத்தி போட்டு இருப்பார்கள். இப்ப சொல்ல முடியாதுல்ல. அரசன் எவ்வழியோ குடிகளும் அவ்வழி-ன்னு பாஞ்சாலி பஞ்ச் போட்டிருக்கும்.

ஆன்றோர்களே-சான்றோர்களே:
கண்ணனை கூப்பிடுவதற்க்கு முன் கணவன்களை கூப்பிடுகிறாள்...காப்பற்ற சொல்லி (குத்து பாட்டு)
சபைக்கு வந்திருக்கா பாஞ்சா
உங்களுக்கு இருக்கா மாஞ்சா
வாங்கடா அஞ்சா... நெஞ்சா...

கணவனுக்கு முன் கண்ணனை கூப்பிட்டிருந்தால்...ஏய் நாங்க ஐஞ்சு பேரும் இல்லாம யாரடி அவன் கண்ணன்? எங்கள எல்லாம் என்ன கையாலாவதவன்னு நினைச்சியான்னு ஊடு கட்டியிருப்பாங்க. ஹும் பஞ்சாத்தாவ வெச்சு மங்காத்தா ஆடுன அஞ்சாம்பிளையும் அவுட்.

ஆண்டவனை கூப்பிடுவதற்க்கு முன் அரசவை அறிவாளிகளை கூப்பிடுகிறாள்... நாட்டமை வேட்டிய தூக்கி போடுங்க... என் மானத்தை காப்பாத்துங்கன்னு.

ஆத்தா... இதே மங்காத்தவா இருந்து 2-ண்ட போடு ரம்மி சேரும், 5-அ போடு பட்டை சேரும்-ன்னா போட்டுடலாம். உன் புருஷனுக்கு அதெல்லாம் போட்டும் அவுட்டாயிட்டனுவோ. எஞ்சி இருப்பது வேட்டி மாட்டும்தான் அதையும் உன்கிட்ட கொடுத்துட்டா உன் மானம் போகுதோ இல்லயோ எங்க கோ-மனம் போயிடும், துரியோதனன பத்தி உனக்கு தெரியாதுன்னு பம்மிட்டாங்க.

நாட்டாமைய எல்லாம் கூப்பிடாம இருந்தா என்ன பண்ணியிருக்கும் பெருசெல்லாம். எவனோ கண்ணனாம்ல்ல... எங்கள மீறி சபைக்கு வந்துட முடியுமா? வந்தாலும் துரியோதனன்தான் அவன் பேச்ச கேட்டுடுவானா? சுத்து பட்டி பதினெட்டுலயும் துரியோதனன அடக்க எங்கள விட்டா ஆள் இருக்கா?-ன்னு சொம்ப தூக்கிவிட்டுகிட்டு கிளம்பி இருக்கும். இப்ப நாட்டமை எல்லாம் தலைய நட்டுகிச்சி.

பாஞ்சாலிக்கு தெரியாதா இறைவன் தூணிலும் இருக்கிறான் துரும்பிலும் இருக்கிறான் என்று. கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரும் அவனுக்கு வீடும் சபையும் ஒன்றுதான். இப்ப நீங்களே முடிவு பண்ணிக்கோங்க... பெண் புத்தி பின் - வருவதை முன் கூட்டியே யோசிக்கும் முன் - புத்தியா இல்லையா என்று.

ஓபாமா பிரஸிடண்சி லாண்ட்ரி லிஸ்ட்...

(பிரசிடண்ட் எலெக்டட் ஒபாமாவின் குறைந்த பட்ச செயல் திட்டம் - கலைஞ்சர் கருநாநிதியின் திட்டங்களில் இருந்து)

1. சனவரி திங்கள் பதவி ஏற்க்கும் போது முதல் கையெழுத்து - டாலருக்கு 5 எல்.பி அரிசி... இல்லை இல்லை ஒசாமாவுக்கு வாய்க்கரிசி...வாய்க்கு அரிசி

2. சமத்துவபுரம் - போஃர் குளோஸர்-ல வீடு போனவர்கள் அனைவருக்கும் இலவச வீடு

3. குறு நில விவசாயிகளுக்கு அசலுடன் வட்டியும் தள்ளுபடி - $250,000 வரை முதலீடு செய்து தொழில் செய்பவர்களுக்கு வங்கிகளில் வாங்கிய அனைத்து கடன்களும் தள்ளுபடி செய்யப்படும், மேலும் வருகிற நான்கு ஆண்டுககளுக்கு அவர்கள் ஸ்டேட் மற்றும் பெடரல் டாக்ஸ் கட்ட தேவை இல்லை.

4. குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு இலவச கேஸ் அடுப்பு - குடும்ப வருமானம் $50,000 வரை உள்ள குடும்பங்களுக்கு மாதம் 25 கேலன் கேஸ் மற்றும் $50 யுட்டிலிட்டி கூப்பன்.

5. குடும்ப அட்டை (ரேசன் கார்ட்) உள்ளவர்களுக்கு இலவச கலர் டி.வி - 2008-ல் எஸ்.எஸ்.என்னுடன் டாக்ஸ் பைஃல் பண்ணியவர்களுக்கு 1080பி ஹெச்.டி. டி.வி

நேற்று பெயில் அவுட்... இன்று பவல் அவுட்

(ரிப்பளிக்கன் பார்டியின் சார பாலின் கலந்து கொண்ட எஸ்.என்.எல் நிகழ்ச்சியை அதிக நேயர்கள் பார்த்தார்கள் என்பதை தொடர்ந்து... டுனைட் ஷோ-வில் ஜேலெனோ வோடு செனேட்டர் மெக்கைன்)

ஜே.லெனோ: செனேட்டர் மொக்கையன்... என்ன நடக்குது உங்க பார்ட்டியில

செ.மொ: என்ன என்னமோ நடக்குது ஜே. நீங்க எத கேட்குறீங்க?

ஜே: இப்போ காலின் பவல் ஒபாமாவ எண்டார்ஸ் பண்ணி இருக்காரே அத பத்திதான்

மொ: ஓ அதுவா... நான் மீட்டிங்க்ல பெயில் அவுட்-ன்னு சொன்னத அவர் பவல் அவுட்-ன்னு சொன்னேன்னு தப்ப புரிஞ்சிகிட்டு வெளியே போயிட்டரு

ஜே: சரி அதனால உங்களுக்கு பாதிப்பு இருக்குமே என்ன பண்ண போறீங்க

மொ: உண்மைதான் ஜே... ஆனா அந்த கெட்டதுலயும் ஒரு நல்லது நடந்துருக்கு

ஜே: என்ன அது?

மொ: இராக் போருக்கு சூத்திரதாரி பவல் தான், அதனால் அவர வெளியேத்திட்டோம்ன்னு சொல்லி சரிஞ்ச வாக்கை கைப்பத்திடுவோம்ல

ஜே: இப்படி சொன்னா அதிபர் புஸ் பேர் கெட்டுடுமே...

மொ: ஜே... காத குடுங்க உங்களுக்கு மட்டும் ஒரு ரகஸியம் சொல்ரேன்...

ஜே: சும்மா சொல்லுங்க மொக்கை, எனக்கு சப்ப வாய் மட்டும் இல்ல ஒட்ட வாவயும் கூட, நீங்க சொல்லாட்டி அத நான் சொல்லிடுவேன்

மொ: பவல் எண்டார்ஸ் பண்ணுன மாதிரி அடுத்த வாரம் புஸ் ஒபாமாவ எண்டார்ஸ் பண்ண போறார்

ஜே: ஐய்யோ...

மொ: என்ன நொய்யோ... இராக் போருக்கான சூத்திரதாரி பவல், எட்டு வருஷமா அமெர்க்காவ ஆட்டைய போட்ட புஸ் மற்றும் ஒசாமா பிஃரண்ட ஒபாமா கூட்டணிக்கா உங்கள் ஓட்டுன்னு கேட்டு பிளேட்ட மாத்தி ஆட்சிய பிடிக்க போரேன் ஜே

100-த்துல 25 பேர் ரொம்ப நல்லவங்க...

டாக்ஸ் ஆபீசர்: அமெரிக்காவில் எழுபத்தி ஐந்து சதவீதத்தினர் டாக்ஸ் பிஃராட் (பாஃல்ஸ் கிளைம்) பண்ணுகின்றனர்.

குசும்பு குப்புசாமி: சந்தோச படுங்க இருவத்தி ஐந்து சதவீதத்தினர் சரியா பண்ணுராங்கள்ல?

டா.ஆ: நீங்க வேற அந்த பாக்கி இருவத்தி ஐந்து சதவீதத்தினர் டாக்ஸ் கட்டுறதே இல்ல...

கு.கு: அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

பேப்பர்ல எழுதி நாக்குல நக்கிக்கோ...

நம்ம ஊருல ஒருவர் உண்மை இல்லாத ஒரு விசயத்தை தேன் ஒழுக பேசும் போது சொல்லப்படும் வாசகம் இது... பேப்பர்ல எழுதி நாக்குல நக்கிக்கோ...என்று.

இது இன்றைய ஸ்டாக் மார்க்கெட்டுக்கு மிகச் சரியாக பொருந்துகிறது பாருங்கள்.

நான் பத்து ரூபாய்க்கு வாங்குன ஸ்டாக் இன்று நூரு ரூபாய் போகுதாம்... எங்கடா பணத்த கண்ணுல காமிங்கன்னா... அதான் பேப்பர்ல இருக்குல்லன்னு சொன்னாங்க... இன்னிக்கு அது ஒரு ரூபாய்க்கு போகுதாம்.

அடேய் ஊகத்துல வணிகம் பண்ணி பல பேர சோகத்துல தள்ளிட்டீங்களே...

காம்ரேடும் கார்ப்பரேட்டும்...

அன்று...
சோவியத் ரஷ்யாவில் காம்ரேடுகள் காணாமல் போயினர்...
இன்று...
அமெரிக்காவில் கார்ப்பரேட்கள் காணாமல் போகின்றனர்...

காம்ரேடும் கார்ப்பரேட்டும் கைகோர்த்தால்?

நேற்று, இன்று நாளை...
என்றும்...
இந்தியாவில் கா-வும் கா-வும் கைகோர்த்து இருந்தும்...
நம் கனவு...
காணாமல் போயிற்று...
நம் கனவு...
கைகூடாமல் போயிற்று... ஏன்?

காம்ரேட் அரசியல்வாதிகளின்...
கார்ப்பரேட் அலுவலர்களின்...
கூட்டு கொள்ளை...

ஓ... இந்தியாவில் கா-வும் கா-வும் கைகோர்த்து...
கார்ப்பரேட் கரப்ஸன்

சாமீ... எனக்கொரு உம்ம தெரிஞ்சாவனும்...

(வீட்டில் தொலைபேசி கட்டணம் கட்டுக்கடங்காமல் போகவே... அவசர கூட்டம் கூடுகிறது)

கணவன்: நான் விடிய காலை ஆபீஸ் போனா இரவுதான் வீடு திரும்புறேன்... என் தேவைக்கு ஆபீஸ் போனத்தான் உபயோக்கிறேன்... யார் இவ்வளவு பேசுறது?

மனைவி: ஏங்க நானும் என் தோழிகளுடன் அலுவலக நேரத்திலேயெ பேசி முடிச்சிடுரேன்... அப்புறம் எப்படி?

பையன்: தோ பாருங்க, எனக்கு வேலை விசயமா போன் குடுத்து இருக்காங்க, நான் அதையே என் சொந்த உபயோகத்துக்கும் பயன் படுத்திக்கிறேன்... நான் அவன் இல்லை.

வேலைகாரி: என்ன இங்க கூட்டம் போட்டு சத்தம் போட்டுகிட்டு இருக்கிங்க? ஆளாலுக்கு அவங்க வேலை இடத்துல உள்ள போன தான உபயோக்கிறீங்க? என்னமோ அத பெருசா பேசிகிட்டு... போங்க போயி அவங்க அவங்க வேலைய பாருங்க... நீங்க இப்படி சத்தம் போட்டு பேசினா நான் எப்படி போன்-ல பேசுறது?

மெயில் இன் ரிபேட் இல்ல...

மெயில் இன் ரிபேட் இல்ல... இல்ல அது இப்ப பெயில் அவுட் ரிபேட்.

சமீப மாதங்களில் அமெரிக்காவில் உள்ள நிதி நிறுவனங்கள் விரும்பி சொல்லும் வாத்தை. முதலில் வேலை செய்பவர்கள் பை அவுட் பிறகு நிறுவனங்கள் பெயில் அவுட். காட் ப்ளஸ் அமெரிக்கா.

சரி நம்ம ஆராய்ச்சிய பெயில் அவுட் ரிபேட்டுல செய்யிரதுக்கு முன்னாடி மெயில் இன் ரிபேட்டுல செய்வோம்.

மெயில் இன் ரிபேட் (மிர்) பற்றி தெரியாதவர்களுக்கு - அமெரிக்காவில் சில வர்த்தக நிறுவனங்கள் பல வியாபார உத்திகளை கையால்வது உண்டு... அதில் ஒன்று மிர். சில சமயம் இது மெயில் இன் அபீட் ஆவது கூட உண்டு... அதாங்க ரிபேட் தருகின்றேன் என்று சொன்ன நிறுவனம் காணாமல் போய் விடும். சரி நம திருப்பி கொடுக்கறவங்கள பத்தி பார்ப்போம். ஒரு பொருளை 50 டாலர் விலை போட்டு, 30 டாலர் மிர் தருவார்கள். நாம் முதலில் பொருளை முழு விலை கொடுத்து வாங்க வேண்டும், பிறகு அந்த பொருளுக்கான மிர் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கூட (போலிகளை தவிக்க) பொருள் வாங்கியதற்கான ரசீது மற்றும் சில அடையாள (யு.பி.சி) குறிப்புகளுடன் அந்த வர்த்தக நிருவனத்திற்க்கோ அல்லது அந்த பொருளை தயாரித்தவருக்கோ அனுப்ப வேண்டும். அனைத்து விபரங்களும் சரி பார்த்த பின் உங்களுக்கு மிர் காசோலை வந்து சேரும். இது ஒரு நல்ல வியாபர உத்தி - அதில் எந்த சந்தேகமும் இல்லை.

இந்த மிர் ஒரு 100 டாலர் அடக்க விலையில் 50 டாலர் மிர்-க்கு நடந்தால் சரி. விற்க்கும் போது $100-க்கு வரி போட்டு அதி ஒரு 7$ அல்லது $8 டாலரை சம்பாதிக்கலாம். நம்ம ஆளுங்க 50 டாலருக்கு மேல போனா அரண்டு அடிச்சி ஓடி போயிடுவாங்க... சரி, சாராசரியாக ஒரு 10 முதல் 30 டாலர் வரையிலான பொருட்கள் இப்படி விற்பதாக வைத்து கொள்வோம். இறுதியாக ஒரு வர்த்தக நிறுவனம் 10 டாலர் காசோலையை பொருள் வாங்கியவருக்கு திருப்பி தர வேண்டும்.

அந்த 10 டாலர் காசோலையை திருப்பி பெற+தர பொருள் வாங்கியவர் (ரசீது காப்பி எடுக்க, அஞ்சல் செய்ய) மற்றும் பொருள் விற்றவர் (இதை சரி பார்க்க, காசோலை அச்சடிக்க, அஞ்சல் செய்ய) செய்யும் செலவு ஒரு 10 டாலரை தொடும்.

குரங்கு அப்பம் பிறிச்ச கதையா, பொருள் வாங்குனவருக்கும் இல்லாம, வித்தவருக்கும் இல்லாம எவரோ அதை ஆட்டைய போறூறாங்க... சரி இதையும் விடுங்க... நடந்த வேலைக்கு கொடுக்கப் பட்ட கூலி அது.

நம்ம உச்ச் கட்டத்துக்கு வருவோம்... இந்த மிர் சில சமயம் 30 டாலருக்கு 30 டாலர் கிடைக்கும். இதில் வாங்குபவருக்கு நிட்சயம் பலன் உண்டு... விற்றவருக்கு? நிட்சயம் கடன் உண்டு... இப்படி கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்த மெயில் இன் ரிபேட் வட்டியும் முதலுமா பெயில் அவுட் ரிபேட்ல வந்து நிக்குது.

அப்பா... அமெரிக்கனுங்களா கொஞ்சம் மாத்தியோசிங்கப்பா... 10 டாலருக்கு கீழ அல்லது சரிக்கு சரி மிர் கொடுக்கும் போது அத அந்த கடையிலேயே அடி மாட்டு விலைக்கு (அதாம்ப்பா 1 டாலர்) வித்தாகூட உங்களுக்கு லாபம்ப்பா... அத விட்டுட்டு மிர்-ருதான்ன்னு இருந்தீங்க கடவுள் வாழ்த்துனா (காட் ப்ளஸ்) மட்டும் இல்ல நேரடியா வந்தா கூட உங்கள பெயில் அவுட்லேருந்து காப்பாத்த முடியாது

போட்டு தாக்கு...

அமெரிக்காவில் தொடர் சூராவளி, புயல், மழை வெள்ளத்தால் பெரும் பாதிப்பு...

இயற்கை: (டிரிங்க்... டிரிங்க்...) ஹலோ
அமெரிக்கா: யாரது?
இயற்கை: நான் சூராவளி குட்சாவ்
அமெரிக்கா: நீ மேற்கே லூசியானாவுக்கு போ

இயற்கை: (டிரிங்க்... டிரிங்க்...) ஹலோ
அமெரிக்கா: யாரது?
இயற்கை: நான் கடும் புயல் ஹன்னா
அமெரிக்கா: நீ கிழக்கே நார்த் கரோலினாவுக்கு போ

இயற்கை: (டிரிங்க்... டிரிங்க்...) ஹலோ
அமெரிக்கா: யாரது?
இயற்கை: நான் சீரும் புயல் ஐக்
அமெரிக்கா: நீ தெற்கே ஹூஸ்டனுக்கு போ

இயற்கை: (டிரிங்க்... டிரிங்க்...) ஹலோ
அமெரிக்கா: யாரது?
இயற்கை: நான் ஜோசஃபின்
அமெரிக்கா: நீ வடக்கே போ

இயற்கை: (டிரிங்க்... டிரிங்க்...)
அமெரிக்கா: நீங்கள் தாக்க நினைத்த அனைத்து மாஹானங்களும் தாக்கப்பட்டு விட்டன. பீஃமாவில் பஃண்ட் இல்லாத காரணத்தால் சில மாதம் கழித்து தொடர்பு கொள்ளவும்

புள்ளைய தூக்கி தண்ணில போடு...

இதனை இதனால் இவன் முடிப்பான்-என்றாய்ந்து
அதனை அவன்-கண் விடல்.

இது யாருக்கு பொருந்துதோ இல்லையோ, இன்றைய தேதிக்கு ஒரு ஆளுக்கு மிகச்சரியா இருக்கு - அவர் தான் மைக்கேல் மதன காம ராஜன்... சாரி மைக்கேல் பெல்ப்ஸ்.

6 அடி 4 அங்குலம் உயரம், கையை விரித்தால் 6 அடி 7 அங்குலம் (விங்க் ஸ்பேனாம்), டார்சோ - அட அதாங்க உடம்பின் நடு பகுதி அது இவர் காலோட பெருசாம், பாதத்தின் அளவு 14(அதுவும் யு.எஸ் அளவு, இந்தியா பாட்டா அளவுன்னா ஒரு 18 இருக்கும்ன்னு நினைக்கிரேன்)... போதும் எனக்கு இப்பவே கண்ண கட்டுது.

வள்ளுவர் சொன்னத பெல்ப்ஸ் அம்மா சரியா புரிஞ்சிகினு புள்ளைய தூக்கி தண்ணில போட்டுட்டாங்க... அது இப்ப தங்கமா அள்ளுது

கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது

ஓ..ம் நமோ நாராயணாயா...

கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது
கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது
கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது
கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது

எட்டில் ஐந்து எண் கழியும் என்றும்
ஐந்தில் எட்டு ஏன் கழியாது
அஷ்ட அக்ஷரம் ஏற்கும் நெஞ்சு
பஞ்ச அக்ஷரம் பார்க்காது

ஊனக்கண்ணில் பார்தால் யாவும் குற்றம் தான்
ஞானக்கண்ணில் பார்த்தால் யாரும் சுற்றம் தான்

இல்லை என்று சொன்ன பின்பும் இன்றியமையாது
தொல்லை தந்த போதும் எங்கள் தில்லை மாறாது
இல்லை என்று சொன்ன பின்பும் இன்றியமையாது
தொல்லை தந்த போதும் எங்கள் தில்லை மாறாது

வீர சைவர்கல் முன்னால் எங்கள் வீர வைனவம் தோர்க்காது
மன்னன் சொல்லுக்கு அஞ்சி என்றும் மேற்கில் சூரியன் உதிக்காது
ராஜலக்ஷ்மி நாயகன் சீனிவாசன் தான்
சீனிவாசன் சேய் இந்த விஷ்னுதாசன் நான்

நாட்டில் உண்டு ஆயிரம் ராஜராஜதர் தான்
ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன் தான்
நீருக்குள்ளே மூழ்கினாலும் நீதி சாகாது
நெஞ்சுக்குள்ளே வாழும் எங்கள் ஜோதி சாகாது

நீருக்குள்ளே மூழ்கினாலும் நீதி சாகாது
நெஞ்சுக்குள்ளே வாழும் எங்கள் ஜோதி சாகாது

வீசும் காற்று வந்து விளக்கனைக்கும் வென்னிலாவை அது அனைத்திடுமா
கொட்டும் வான் மழை நிலம் நனைக்கும் அந்த வானம் தன்னை அது நனைத்திடுமா
சைவம் என்று பார்தால் தெய்வம் தெரியாது
தெய்வம் என்று பார்தால் சமயம் கிடையாது

கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியது
கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியது


இதையே ஒரு சாஃப்ட்வேர் டெவலப்பர் பாடினால்

ஓ..ம் புராஜக்ட் மேனேஜரே நமக...

பக்கை மட்டும் கண்டால் பர்ஃபாமன்ஸ் தெரியாது
பர்ஃபாமன்ஸ் மட்டும் கண்டால் ஓபியடிப்பது தெரியாது
பக்கை மட்டும் கண்டால் பர்ஃபாமன்ஸ் தெரியாது
பர்ஃபாமன்ஸ் மட்டும் கண்டால் ஓபியடிப்பது தெரியாது

ரெக்கொயர்மெண்டில் பக் இருக்குமென்றால்
டெவலப்மெண்டில் ஏன் இருக்காது
மேனேஜர் அடாவடி ஏற்கும் நெஞ்சு
லீடர் அடாவடிய பார்க்காது

கியூசிக்கண்ணில் பார்தால் யாவும் குற்றம் தான்
தேசிக்கண்ணில் பார்த்தால் யாரும் சுற்றம் தான்

பக்கில்லை என்று சொன்ன பின்பும் நம்பமாட்டாரு
தொல்லை தந்த போதும் எங்கள் கடலை குறையாது
பக்கில்லை என்று சொன்ன பின்பும் நம்பமாட்டாரு
தொல்லை தந்த போதும் எங்கள் கடலை குறையாது

ஆஃப்ஷோருக்கு முன்னால் எங்கள் ஆன்சைட்டு தோர்க்காது
புராஜக்ட் மேனேஜருக்கு அஞ்சி என்றும் டெவலப்மெண்டில் பக்கு குறையாது

மேனேஜருக்கு மண்டைய ஆட்டும் மாடியூல்லீடர் தான்
மாடியூல்லீடரக்கு மண்டகாய்ச்சல் இந்த டெவலப்பெர் கூட்டம் தான்

நாட்டில் உண்டு ஆயிரம் சாஃப்டேவர் கம்பெனிதான்
அந்த ஆயிரத்துல ஒன்னுல எனக்கு வேலை உண்டுதான்

டீம மாத்தி போட்டாலும் எங்க புத்தி மாறாது
புரொடக்சனிலே ஓடும் எங்க கோடு தேறாது
டீம மாத்தி போட்டாலும் எங்க புத்தி மாறாது
புரொடக்சனிலே ஓடும் எங்க கோடு தேறாது

யு.எஸ் ரிஸர்ஸன் வந்து புராஜெக்ட் போகும்
வேலையை அது காலிபண்ணுமா
கொட்டும் டாலர் பேன்க் பேலன்ஸை ஏற்றும்
அந்த டாலர் அதன் வேல்யுவை ஏற்றுமா

ஸ்கெடியூல் என்று பார்தால் மனிதாபிமானம் தெரியாது
மனிதாபிமானம் என்று பார்தால் புராஜெக்ட் கிடையாது

பக்கை மட்டும் கண்டால் பர்ஃபாமன்ஸ் தெரியாது
பர்ஃபாமன்ஸ் மட்டும் கண்டால் ஓபியடிப்பது தெரியாது

ஒபாமா - வைகோ சந்திப்பு

செய்தி: வைகோ அவரது அமெரிக்கா பயணத்தின் போது அதிபர் வேட்பாளர் ஒபாமாவை சிக்காகோவில் சந்தித்தார்

ஓ:மிஸ்டர் வைகோ என்ன இப்படி சின்ன பிள்ளை மாதிரி அடம் பிடிக்கிறீங்க?
வை: உங்களுக்கு தெரியாது, எங்க ஊருல இப்ப என்ன சைக்கோ-னு கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க, அதனால் தான் சொல்லுரேன், நீங்க பிரசிடண்டா வந்ததும் நான் சி.எம்மா ஆவரதுக்கு உதவுரேன்னு எழுதி கொடுங்க.

மோர் பார்'ஸ் இன் மோர் பிளேஸஸ்...

இது அமெரிக்காவில் இந்த சீஸனில் வரும் ஏ.டி&டி-யின் தொலைக்காட்சி விளம்பர கேப்சன் "மோர் பார்'ஸ் இன் மோர் பிளேஸஸ்", அத வெச்சு ஒரு சின்ன காமெடி.

குசும்பு குப்புசாமி - கு.கு / கஸ்டமர் சப்போர்ட்- க.ச

கு.கு: (ஒரு நல்லிரவில்) ஹலோ ஏ.டி&டி?

க.ச: சார் இனிய மாலை வணக்கம், நான் டேவிட், சொல்லுங்க சார் நான் எப்படி உதவ முடியும் உங்களுக்கு? உங்கள் பெயர்?

கு.கு: என் பெயர் குசும்பு குப்புசாமி

க.ச: நன்றி, சார் நீங்கள் எங்கள் வாடிக்கையாளரா? இல்லை எங்கள் சேவையை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா? உங்களுக்கு உதவுவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி

கு.கு: நான் உங்க வாடிக்கையாளர் ஆக வேண்டும் என்றுதான் முயற்ச்சி பண்ணுகிறேன், என்னால் முடியவில்லை அதான் கஸ்டமர்கேர கூப்பிட்டேன்

க.ச: நீங்கள் எங்கள் சேவையை உபயோகிக்க விரும்புவது குறித்து மிக்க சந்தோசம். நாங்கள் பல சேவை வழங்குகிறோம், நீங்கள் எந்த மாகானத்தில் இருந்து அழைக்கிறீர்கள்? ஏதேனும் குறிப்பிட்ட சேவை பற்றிய தகவல் வேண்டுமா இல்லை பொதுவான தகவல் வேண்டுமா?

கு.கு: நான் ஜார்ஜியா மாகானத்தில் இருந்து அழைக்கிறேன், ஆனால் எனக்கு குறிப்பிட்டு இங்குதான் என்று இல்லை, ஏனெனில் நான் என் பணி நிமித்தம் பல மாகானங்களுக்கு பயணிப்பவன், நீங்கள் உங்கள் சேவை எங்கு இருக்கிறது என்று சொன்னால் போதும்

க.ச: மிக்க மகிழ்ச்சி, எங்களுடைய எந்த சேவை பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்?கு.கு: உங்களுடைய விளம்பரங்களில் மோர் பார்'ஸ் இன் மோர் பிளேஸஸ்-ன்னு சொல்லுறீங்க, நானும் ஒரு பத்து பண்ணிரண்டு மாகானம் பார்த்துட்டேன், ஒரு இடத்துல ஒரு பார கூட காணுமே, நீங்க கிழக்கு மாகானத்துல ஒரு மேஜர் சிட்டி பேரு - உங்க பார் இருக்குற இடம் சொல்லுங்க பிளீஸ்

க.ச: சார் நீங்க விளம்பரத்த தவறாக புறிந்து கொண்டிருக்கிறீர்கள், அது நீங்க நினைக்கிற பார் இல்ல, தொலைதொடர்பு சாதனங்கள் மொபைல் போன், பி.டி.ஏ போன்றவற்றில் கிடைக்க கூடிய சிக்னல் பார்

கு.கு:என்னது நான் தவறா புறிஞ்சிகிட்டனா? நான் ஊரு முழுக்க நாய பேயா தேடுறேன் உங்க பார, என்ன மாதிரி இன்னும் பேர் தேடுராங்களோ. யோவ் நீங்க தவறா விளம்பரம் பண்ணிட்டீங்கன்னு சொல்லுங்க. முதல்ல உங்க மார்கெட்டிங்க் டிபார்ட்மெண்ட்ல சொல்லி விளம்பரத்த நிறுத்த சொல்லுங்க.

க.ச: நீ போன வைடா வெண்ணை, நாங்க கனைக்ஸன் குடுக்கிற பார சொன்னா நீ கவுந்தடிச்சு கிடக்கிற பார சொல்லுர... ங்கொயால உன்ன...

கு.கு:ஏய்... டேவிட்-ன்னு சொன்ன இப்ப வெண்ணை, ங்கொய்யா-ல்லாம் சொல்லுற... யாருடா நீ?

க.ச: ம்... தமிழ் நாட்டுல உள்ள ஏ.டி&டி-யோட பி.பி.ஓ-லேருந்து வெடிகுண்டு முருகேசன்

கு.கு: அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

குருவி குசும்பு...

குருவி குசும்பு: 1

ஏம்ப்பா படத்துக்கு பேரையாவது "சிங்கமுத்து பையன்"-ன்னு வெச்சி இருக்கலாம்...தாத்தா திருப்தி அடைஞ்சிருப்பாரு (உதய நிதி கொல்லு தாத்தா பேரு ஏதோ முத்து வேளர்) படத்துல குருவிய விட அதிக முரை சிங்கமுத்து பையன் சிங்கமுத்து பையன்-னு தான சொல்லுறாங்க?

குருவி குசும்பு: 2

சிங்கமுத்து மூன்று மனைவிகள் என்ன ஒத்துமையா ஒரே வீட்டில் இருக்காங்க... பேரன் உதய நிதி தாத்தாவுக்கு மெஸஜ் சொல்லுறாரு... தாத்தா நீ ஏன் கோபாலபுரத்துக்கும் ஆலிவர் ரோட்டுக்கும் டிரிப் அடிக்கிறிங்க... ரெண்டையும் ஒன்னாக்கிடுங்கன்னு

குருவி குசும்பு: 3 (ஸ்டோரி டிஸ்கஸன்)

தரணி: உதய், படத்துல வயலன்ஸ் இருக்கு, தமிழ் நாட்டு போலீஸ் வர மாதிரி வைப்போமா?
உ. நி: தாத்தாவோட ஆட்சியில் வயலன்ஸ் அதிகம்ன்னு எல்லோருக்கும் தெரியும், மேலும் போலீஸ் வந்து நாமே சட்ட ஒழுங்கு சரியா இல்லங்கறத படம் போட்டு காட்ட வேணாம்... நீ பொத்து.

தரணி: சரி, கடப்பா வேணாம் மதுரை-ன்னு வச்சுக்கலாம்... நேட்டிவிட்டி தூக்காலா இருக்கும்
உ. நி: டேய் அங்க என் பெரியப்பா அழகிரி இருக்காண்டா... நீ மதுரை என் கோட்டை-ன்னு வில்லனுக்கு டயலாக் வெப்ப, அத என் பெரியப்பன் கேட்டுட்டு எங்க அப்பன காலி பண்ணிடுவாண்டா, வேணாம் கடப்பா ஓ.கே

உ. நி: ஆமாம் இந்த குருவி மேட்டரால முஸ்லிம் ஓட்டு கலைஞ்சிடாதா, எனக்கு அதுதான் கொஞ்சம் இடிக்குது
தரணி:அட அதெல்லாம் தாத்தா பார்த்துப்பாரு, அவங்க கோர்ட்டுக்கு போனாலும் தாத்தாவுக்கு தெரியும் எப்படி சமாளிக்கனும்ன்னு... வர நோம்பு பண்டிகைல அவங்ககூட கஞ்சி குடிச்சி நோண்டி நொங்க எடுத்துடுவாறு.

அரசியல்ல இது சகஜமப்பா









மு.க: ஜாக்கி, அந்தர் பல்டி அடிக்கிறது உங்கள போல ஒருவர நான் பார்த்ததே இல்ல

ஜா: நீங்க அடிக்கிற அரசியல் பல்டிக்கு முன்னாடி நான் சும்மா!!!

அறைஞ்சா சும்மா அதிருதுல்ல

செய்தி: நேற்றைய ஐ.பி.எல் மேட்ச்சில் ஹர்பஜன் ஸ்ரீசாந்த்-தை அறைந்தார்
ஸ்ரீ: ஏண்டா டி.வி-ல சிம்பு, எஸ்.ஜே.சூர்யா, சிம்ரன் எல்லாம் ரியாலிட்டி ஷோ-வில போடுற மாதிரி சும்மா சண்ட போட்டு நம்மலும் நடிச்சி மீடியாவில இமேஜ பில்டப் பண்ணலாம்னு தான சொன்னேன், இப்படி ஏண்டா கண்ணத்துல அறைஞ்ச?

ஹர்: மவனே... கிரவுண்டுல ஆடாத ஆடாதன்னு எத்தனை தடவ சொன்னேன், கேட்டியா... சான்ஸ் கிடைச்சுது அதான் ரெண்டு போட்டேன்.
ஹர்பஜன்: யோவ்...யோவ்... சொன்ன கேளுங்கய்யா... நான் அவன அறைஞ்சி மூனு நாள் ஆயிடுச்சி... அவன் மூஞ்ச பாருங்க... வரலாறு பட அஜீத் மாதிரி ஆக்ட் குடுக்குறான்...
டேய்... டேய் வேணாண்ட... உன்னால எனக்கு இது வரைக்கும் மூனு கோடி நஷ்டம் ஆயிடுச்சி... மவனே மூஞ்ச நேரா வைய் இல்ல மைக்கால மூக்கு மேல போடுவேன்.



களவும் கற்று மற...

திருட்டு... களவும் கற்று மற... என்று சொல்ல வேண்டுமானல் எளிதாக இருக்கலாம், ஆனால் நிஜத்தில் அப்படி இல்லை... என் அனுபவம் அப்படி... இன்று வரை மறக்க முடியாமல் நினைத்து கொண்டிருக்கிறேன்.

பின்ன மறக்குமா... என்ன சாதாரண திருட்டா? மத்திய அரசாங்கத்தோட சொத்தல்ல திருடினோம்... ஆமாம் கூட்டு கொள்ளை... என் இளம் வயது பள்ளி தோழனுடன். திருடிய பொருள் ரயில் வண்டியிலிருந்து பல்ப்.

விடுமுறை நாட்களில் மதிய வேளையில் (எங்கள் வீட்டிற்கு அருகில் தான் ரயில் நிலையம், சில கட் சர்வீஸ் ரயில் எங்கள் நிலையத்தில் நீண்ட நேரம் நிற்க்கும்) ரயிலில் ஒழிஞ்சான் பிடிச்சி மற்றும் ஆலமர விழுதுகளில் ஊஞ்சல் ஆடுவது வழக்கம். அப்படி விளையாடி கொண்டிருக்கும் போது எங்க குள்ள ஒழிந்து கொண்டிருந்த சயிண்டிஸ்ட் முழித்துக் கொண்டான். பாட்டரி மற்றும் சைக்கிள் டைனமோவில் இருந்து மின்சாரம் தயாரித்து அதை வைத்து பல்ப் எரிய விடுவதற்க்காக இந்த ரயிலின் பல்பை ஏன் உபயோகப்படுத்த கூடாது என்று பேசி... பல்பை சுடுவது என்ற முடிவுக்கு வந்தோம்.

எங்களை கேனையர்கள் என்று நினைக்காதீர்கள். செய்யபோவது திருட்டு, மாட்டினால் என்ன ஆவது என்று யோசித்தால்... சரி போலீஸ் ஸ்டேசன் போவோம்... அங்கு எல்லோரும் தெரிந்தவர்கள்... மாட்டினால் சமாளித்து கொள்ளலாம் என்று முடிவு செய்து ரயிலின் கழிவரையில் உள்ள பல்பை சுட்டு விட்டோம்... எங்கள் போராத நேரம்... (இததான் அவன் மூஞ்சியே திருட்டு பயல காட்டி குடுத்துடும் என்று சொல்லுவாங்க போல) காங்கி மேன் கூப்பிட்டார்... நாங்கள் திருதிருவென முழிக்க... அவருக்கு சந்தேகம் வலுக்க... பையில் பல்ப் முந்திரி கொட்டை போல் தெரிய... பையில் என்னடா... வெளியில் எடு என்று சொல்ல... மாட்டிக் கொண்டோம்.

அவரும் தெரிந்தவர்தான் திட்டி அனுப்பி விடுவார் என்று நினைத்த எங்களுக்கு பெரிய அதிர்ச்சி... ஸ்டேசன் மாஸ்டரிடம் கொண்டு விட்டு விட்டார்... இந்த பெரிய இடத்து பிள்ளைகள் பண்ணுகிற கூத்தை பாருங்கள் என்று. அன்று எங்களுக்கு தெரிந்தவர் இல்லை... இவர் புதியவர்... எங்களுக்கு வகுப்பு எடுக்க ஆரம்பித்து விட்டார்... முடிவாக உங்களை மத்திய போலீஸில் (அடி ஆத்தி... மானில அரசு, மத்திய அரசு அப்படீன்னா என்ன என்று தெரிஞ்சிகிட்டோம்ல) ஒப்படைக்க போகிறேன் இல்லை அபராதம் ரூபாய் 20 கட்டு என்று சொல்லி விட்டார். அபராதம் கட்டுவது என்றால் ஒருவன் இங்கு (ஆபீஸ் அரஸ்ட்) இருக்க வேண்டும் ஒருவன் போய் பணம் எடுத்து வரலாம் என்றார். நண்பன் கை விரித்து விட்டன். அப்போது எனக்கு கிடைக்கும் புது ரூபாய் நோட்டுகளை என் ஸ்டாம்ப் கலெக்ஸனுடன் சேர்த்து வைத்திருப்பேன், அதிலிருந்து கொண்டுவந்து கொடுத்து சிறை மீண்டோம்.

இதுல கொடுமை என்னன்னா... இத கேள்வி பட்ட என் அண்ணன் சொன்னான்... டேய் எனக்கு 5 ரூபாய் கொடுத்திருந்தா உங்களுக்கு ரெண்டு பல்ப் கொண்டுவந்து குடுத்திருப்பேன். எனக்கு கொடுக்காம பணத்த பூட்டி பூட்டி வெச்ச பாரு... அதான் இப்படி மாட்டிகிட்ட-ன்னு சொல்லி நக்கல் அடிச்சான்.

கை காசு...2

3. தீப்பெட்டி சட்டம் அடுக்குவது (அப்போது எங்கள் தெருவில் புதிதாக ஒரு தீப்பெட்டி தொழிற்ச்சாலை, குடிசை தொழிலாம்... ஒரு வீட்டில் ஆரம்பித்து இருந்தார்கள்) எங்கள் வீட்டின் சுவற்றின் (பெரிய சுவர்) ஓரம் பெரிய சந்து, அதில் என் தாத்தா (இந்த வலை தளத்தின் கதாநாயகன்) மூன்று சிறிய (சார்பு)வீடுகளை கட்டி வாடகைக்கு விட்டிருந்தார், அந்த வீட்டில் குடியிருந்த ஒருவர் அந்த தீப்பெட்டி கம்பெனியில் வேலை செய்ய சென்றபோது, முதலாளி ரெஃபரன்ஸ் கேட்க, அவர் எங்கள் வீட்டில் குடியிருப்பதாக சொல்ல... எங்கள் வீட்டிலிருந்து யாரவது வந்து சொன்னால் வேலை தருகிறேன் என்று சொல்லி, அவரே என் தாத்தாவை நேரில் பார்த்து நலம் விசாரிக்க வந்து விட்டார். அவர் வந்த போது நான் தீபெட்டி தாயாரிப்பதை பார்க்க வேண்டும் என்று கேட்டேன்.

தயாரிப்பை பார்க்க போன எனக்கு சில தகவல்கள் கிடைத்தது... சட்டம் அடுக்குவதை "அவுட் சோர்ஸ்" பண்ணலாம் தெரிந்தவர்கள் இருந்தால் சொல்லு என்றார்கள். சரி என்று சொன்ன நான், எங்கள் வீட்டில் வேலை செய்த மற்றும் குடியிருந்த சிலரிடம் சொன்னேன்... பிரதி உபகாரமாக் எனக்கும் ஒரு உதவி செய்ய வேண்டும் என்ற நிபந்தனையோடு...

இங்கு நீங்கள் தீப்பெட்டி தாயாரிப்பை பற்றி கொஞ்சம் தெரிந்து கொண்டால் நல்லது என நினைக்கிறேன்.வெறும் தீக்குச்சிகளை (இயந்திரத்தால் வெட்ட பட்டது) ஒரு சட்டத்தில் ( நூரு குச்சிகள் பதியுமாரு வரும்பு இட பட்டிருக்கும்) வைத்து, 40/50 சட்டங்களை ஒரு ஃப்ரேமில் கோர்த்து (இது 1 அச்சு) அதை அச்சின் ஒரு பக்கம் சமன் செய்ய (இப்போது மறு பக்கமும் சீராக, குச்சிகளுக்கு இடையில் உள்ள இடைவெளி, இருக்கும்) அதை கலந்து வைக்கப்பட்டிருக்கும் கந்தக கலவையில் ஒத்தி எடுப்பார்கள்... தீக்குச்சி ரெடி... பிறகு டப்பாகளில் அடைத்து, ஆயத்தீர்வை லேபிள் ஒட்டி அனுப்புவார்கள்.

நிபந்தனை படி அவர்கள் எனக்கும் சேர்த்து குச்சிகளும் அச்சுகளும் எடுத்து வர வேண்டும், அடுக்கிய அச்சுகளை கொடுத்து விட்டு எனக்கு காசு கொண்டு வந்து கொடுக்க வேண்டும்... எங்கள் வீட்டு மோட்டார் கொட்டகையில் உட்கார்ந்து தீக்குச்சிகளை சட்டத்தில் அடுக்குவேன்... நல்ல பொழுது போக்கு + வருமானம்.

இத்துடன் என் இளம் வயதில் சம்பாதிக்கும் ஆசை முடிந்து... தொழில் அதிபர் ஆவது எப்படின்னு யோசிக்க ஆரம்பித்து விட்டேன்.

கை காசு...1

கை செலவுக்கு காசு... பாக்கெட் மணி... அட எப்படி வேணும்னாலும் சொல்லலாம்... நாகரீகமா சொல்லனும்னா இளம் வயதில் சம்பாதிப்பது எப்படி? நான் ஒன்னும் இங்க வளரும் வாலிபர்களுக்கு ஏதோ யோசனை சொல்ல வில்லை... நான் அடிச்ச கூத்த உங்க கிட்ட சொல்ல போரேன் அவ்வளவுதான்.

எங்க வீட்டில் இந்த வெளி செலவுக்கு எல்லாம் காசு கொடுக்க மாட்டார்கள், அப்பா இருந்த வரை கையை நீட்டினால் காசு... குறைந்தது 2-லிருந்து 5 ரூபாய் வரை கிடைக்கும், அது பொற்காலம் அது என் 12 வயதோடு முடிந்து விட்டது. அந்த வயதில் கை செலவு என்பது பள்ளிக்கு செல்லும் போது ஏதாவது திண்பண்டம் வாங்குவதற்க்கே... அப்படி ஏதாவது வேண்டும் என்றால் அம்மா அதை வீட்டில் செய்து கொடுத்து விடுவார்கள்... ஹும் வெளியில் வாங்கி சாப்பிடுவது கெட்ட பழக்கமாம்.

சரி சம்பாதிக்க வேண்டும் என்ற முடிவு செய்தாகி விட்டது... என்ன வழிகல் இருக்கிறது? நண்பர்களிடம் விசாரித்து பட்டியலிட்டேன். அவை...

1. கரி பொருக்கி விற்பது (எங்க வீட்டிற்கு எதிரில், அருகிலேயே புகைவண்டி நிலையம்) ரயில் வந்து நிற்க்கும் போது ரயில் டிரைவர் எரிந்த சாம்பல் கரியை கீழே தள்ளுவார், அதில் எரியாத கரியும் வந்து விழும், அத கரியை சேகரித்து எடுத்து கொண்டுபோய் கொல்லர் பட்டரையில் கொடுத்தால் காசு தருவார்கள்... அது எல்லோரும் வந்து போகும் பாதை, கரி பொருக்கினேன் என்று வீட்டில் போய் யாராவது சொல்லி விட்டால்... ஊஹும்... இது சரிபட்டு வராது என்று முடிவு செய்து விட்டேன்.

2. மட்டை முடைவது (1 மட்டை முடைந்தால் 5 காசு என்று நினைக்கிறேன்) எங்கள் வீட்டின் எதிரிலேயே, கூப்பிடும் தொலைவில் ஒரு வீட்டில் கூரைக்கு வேயும் தென்னங்க் கீற்று, தென்னை மட்டை வாங்கி அதை முடைந்து (பின்னி), விற்ப்பார்கள். அவர்கள் எங்கள் வீட்டிற்கு தெரிந்தவர்கள், நான் வந்து கேட்டது அல்லது மட்டை முடைய போவது வீட்டிற்கு சொல்ல கூடாது என்ற அன்பு கட்டளையுடன் அவர்களிடம் அப்பரண்டிஸாக சேர்ந்தேன்... ஒரு மூன்று நாளில் நான் மட்டை பின்ன கற்று கொண்டேன்... தலை கட்டு கட்டுவது தவிர.

ஆரம்பத்தில் கடினமாக இருந்தது, மட்டை நன்றாக மடிக்க வரவேண்டும் என்பதற்க்காக தண்ணீரில் ஊர வைத்து இருப்பார்கள்... அது சற்று துரு நாற்றம் அடித்தது... அதை எல்லாம் சமாளித்து ஒரு மணி நேரத்தில் 10 மட்டை (20 கீற்று) முடைய (பின்ன) தேர்ச்சி பெற்றேன்... விசயம் என் தாத்தாவிற்கு தெரிந்து விட்டது... அவர் என் முதுகில் பின்னி விட்டார்.

(ஒரு துடிப்பான் இளைஞன வளர விடாம என்ன அட்டகாசம் பாருங்க... ஆக அதுவும் போச்சு... ஒரு ஆண்டிற்கு பிறகு... கை காசு...2)

கத்தாழ கண்ணால... பாடல் வரிகள்

தகிட தகிட தகிட தகிட தகிட
தகிட தகிட தகிட தகிட தகிட
தகிட தகிட தகிட தகிட தகிட தா...

கத்தாழ கண்ணால குத்தாத நீ என்ன
இல்லாத இடுப்பால இடிக்காத நீ என்ன

(கத்தாழ)

தகிட தகிட தகிட தகிட தகிட
தகிட தகிட தகிட தகிட தகிட
தகிட தகிட தகிட தகிட தகிட தா...

தகிட தகிட தகிட தகிட தகிட
தகிட தகிட தகிட தகிட தகிட
தகிட தகிட தகிட தகிட தகிட தா...

கத்தாழ கண்ணால குத்தாத நீ என்ன
கூந்தல் கூரையில் குடிசையை போட்டு
கண்கள் ஜன்னலில் கதவினை பூட்டு
கண்ணே தலையாட்டு காதல் விளையாட்டு

(கத்தாழ)

கலகலவென ஆடும் லோளாக்கு நீ
பலபலவென பூத்த மேலாக்கு நீ
தல தலவென இருக்கும் பல்லாக்கு நீ
வலவலவென பேசும் புல்லாக்கு நீ
ஐயாவே ஐயாவே அழகிய பாருங்க
அம்மாவும் அப்பாவும் இவளுக்கு யாருங்க
வென்னிலா சொந்தக்காறீங்க

(கத்தாழ)
சையா... சையா... சையாரேய்...

தலுதலுவென கூந்தல் கை வீசுதே
துருதுருவென கண்கல் வாய் பேசுதே
பலபலவென பற்கல் கண் கூசுதே
பகல் இரவுகல் என்னை பந்தாடுதே
உன்னோட கண் ஜாட இலவச மின்சாரம்
ஆன்கோழி நான் தூங்க நீ தானே பஞ்சாரம்
உன் மூச்சு காதல் றீங்காரம்

(கத்தாழ)
(கத்தாழ)

கத்தாழ கண்ணால குத்தாத நீ என்ன
கூந்தல் கூரையில் குடிசையை போட்டு
கண்கள் ஜன்னலில் கதவினை பூட்டு
கண்ணே தலையாட்டு காதல் விளையாட்டு

(கத்தாழ)

தகிட தகிட தகிட தகிட தகிட
தகிட தகிட தகிட தகிட தகிட
தகிட தகிட தகிட தகிட தகிட தா...

தகிட தகிட தகிட தகிட தகிட
தகிட தகிட தகிட தகிட தகிட
தகிட தகிட தகிட தகிட தகிட தா...

தொலை தொடர்பு துறையில் குசும்பு குப்புசாமி...

(கு.கு ஓட மொக்கை திறமைய தெரிஞ்சி அவருக்கு Air Tel கம்பெனியில் கஸ்டமர் சப்போர்ட்-ல வேலை குடுத்தாங்க)

கஸ்: என் ஃபோன்ல இருந்து யாருக்காவது ஃபோன் பண்ணுனா ரிங்க் போகுது... ஆனா எதிர் முனைல யாரும் ஃபோன எடுக்க மாடேங்கிராங்க... கேட்ட அவங்களுக்கு என்கிட்ட இருந்து ஃபோனே வரலங்கிறாங்க... ஏதும் என் ஃபோனுல பிரச்சனைய இல்ல உங்க சர்வீஸ்ல பிரச்சனைய?

கு.கு: சார் பிரச்சனை ரெண்டுத்துலயும் இல்ல... நீங்க புரிஞ்சிக்கிட்டதுல தான் பிரச்சனை.

கஸ்: என்னது நான் புரிஞ்சிக்கிட்டதுல தான் பிரச்சனையா?

கு.கு: ஆமாம் சார்... நீங்க யாருக்கு ஃபோன் பண்ணுமோ அவங்க நம்பர டயல் பண்ணிட்டு தகவல காத்துல சொல்லிடுங்க, அதான் 'ஏர் டெல்'... தகவல அவங்க காதுல சொல்லனும்னா எங்க போட்டி கம்பெனியான Ear Tel-லுல சர்வீஸ் எடுத்துக்கோங்க.

(கு.கு Ear Tel கம்பெனிய ரெக்கமண்ட் பண்ணுனதால அவர VOIP செக்ஸன் கஸ்டமர் சப்போர்ட்-க்கு அனுப்பிடுறாங்க)

கஸ்: எங்க ஃபோன்ல இருந்து யாருக்காவது ஃபோன் பண்ணுனா அவங்க பேசுரது எங்களுக்கு கேட்குது... ஆனா நாங்க பேசுரது அவங்களுக்கு கேட்கலையாம்... என்னய்யா சர்வீஸ் பண்ணுறீங்க?

கு.கு: சார் பொறுமையா பேசுங்க, சத்தமா பேசி பி.பி ஏறிடப் போகுது...

கஸ்: ஓஹோ... முன்ன எல்லாம் அதிக நேரம் பேசினாத்தான் ஃபோன் பில் ஏறும்... இப்ப சத்தம் போட்டு பேசினாலே ஏறுமா?

கு.கு: சாரி சார்... நீங்க தவறா புரிஞ்சிகிட்டீங்க... நான் சொன்னது உங்க பிளட் பிரஸர... ஃபோன் பில்ல இல்ல. நீங்க எங்களோடதுல என்ன ஃபோன் சர்வீஸ் உபயோகிக்கிறீங்க?

கஸ்: இப்போ என்னமோ ஒரு ஐ.பி-னு அதான் VOIP போன் வெச்சுருக்கோம்

கு.கு: சார் VOIP-ன்னா (V)வாயஸ் (O)ஒன்லி (I)இந்த (P)பக்கம்... ஒங்க ஃபோன் சரியாத்தான் வேலை செய்யுது.

(கு.கு-வோட கஸ்டமர் சப்போர்ட் திறமை தெரிஞ்சி அவருக்கு BSNL-ல வேலை குடுக்குறாங்க)

கஸ்: சார் என்ன அனியாயம் இது பேசாத ஃபோனுக்கு பில்லு அனுப்பியிருக்கீங்க

கு.கு: நியாயமா அனியாயமான்னு நாங்க சொல்லுறோம் சார்... உங்க பிரச்சனை என்னன்னு முதல்ல சொல்லுங்க

கஸ்: நான் ரிங்க் பண்ணுனேன்... ரிங்க் போச்சு... ஆனா நான் பேசுனது அவங்களுக்கோ இல்ல அவங்க பேசுனது எனக்கோ கேட்கல... ஆனா பேசுனதா பில்லு மட்டும் வந்துருக்கு

கு.கு: சார் என் வேலைய நீங்க சுலபமாக்கீட்டீங்க நீங்க, நீங்க என்ன சொன்னீங்க " நான் பேசுனது அவங்களுக்கோ இல்ல அவங்க பேசுனது எனக்கோ கேட்கல" அதுதான் எங்க சர்வீஸே... (B)oth (S)ide (N)ot (L)istening... இப்பல்லாம் இன்கமிங்க் ஃபிரீ என்பதால ஒருத்தர் பேசுரத அடுத்தவங்க காதுல வாங்குறதே இல்ல... கஸ்டமரோட கஸ்டம் புரிஞ்ச நாங்க கூடுதல் சேவையா ரெண்டு பக்கமும் கேட்காம பண்ணிட்டோம்.

மூன்றாம் உலகப் போர்...

தாகம் எடுத்த வாய்க்கு தண்ணீர் கிடைக்காத போது தவிர்க்க முடியாமல் ஏற்படப் போகிற யுத்தம் - மூன்றாம் உலகப் போர் என்று முன்னுறைத்து இருக்கிறார்கள்.

அதற்கு முன்னோட்ட்டம் பார்க்கின்றார்கள் இந்தியாவை சார்ந்த மூன்று மானிலத்தினர்... தண்ணீர் தட்டுப்பாட்டால் தவிக்கும் தமிழகத்திற்க்கு தண்ணீர் தருவதில் தார்மீகத்தை தவித்து தலையில் தட்டுகின்றனர்.

காரணம் ஆந்திரா, கர்னாடகா மற்றும் கேரள மானில அரசியல் வாதிகளின் நாகரீகமற்ற மூன்றாம் தர அரசியல்.

முட்டாள்களே, தமிழனை வைத்து மூன்றாம் உலக போருக்கு முன்னோட்டம் பார்க்காதீர்கள். தமிழர்கள் தன்மானத்துடன் தணிந்த மனமும் உடையவர்கள்.

தண்ணீருக்காக உலகத்தை சென்னீர் சிந்த வைக்க மாட்டோம்... சிந்தித்து செயல்படுவோம்

அக்கடா... துக்கடா... - 2

செய்தி: கோலிவுட்டில் சிம்பு தனுஷ் டைட்டில் போட்டி

தனுஷ்: பொல்லாதவன்
சிம்பு: மோசமானவன்

அப்ப மத்தவங்க எல்லாம்....

கேப்டன்:கோபமானவன்
சித்தப்பா:பாசமானவன்
தல:வேகமானவன்(ரேஸ் பார்ட்டி)
விஜய்:அடக்கமானவன் (ண்னா..வேணாங்கனா)
விக்ரம்:விவரமானவன்
சூர்யா:ஒளிமயமானவன் (ஜோதியோடு)எஸ்.ஜே.சூர்யா:விவகாரமானவன்
விஷால்:வீறாப்பானவன் (முறைச்சது போதும் கொஞ்சம் சிரிப்பா)

எல்லாரையும் கவர் பண்ணிட்டனா?

ஹி... ஹி... பெருந்தலைகள் இல்லாட்டி எப்புடி?
கமல்:கண்ணியமானவன் (டைட்டில மட்டும் தான்)
ரஜினி:வயசானவன் (யூத்தா டைட்டில் சொன்னா என் பேரன் பெண்டு/பேத்து எடுத்துடுவான்)

போர்வால் டு ஃபயர்வால்

மன்னர்: யாரங்கே?
மந்திரி: மன்னா?
மன்னர்: அரசியிடம் வலை தளத்தில் யாரும் கடலை போடமல் இருக்க ஃபையர் வால் போட சொன்னேன், ஆனால்...
மந்திரி: என்ன ஆச்சு மன்னா?
மன்னர்: இப்போது நானே உள்ளே போக முடியாமல் அந்தபுரத்தை சுற்றி நெருப்பு வேலி போட்டு இருக்கிறார்கள்.
மந்திரி:??!!!

சின்ன ஆப்பா...பெரிய ஆப்பா...

(டைட்டில் சாங்க்:சின்ன ஆப்பா...பெரிய ஆப்பா...சந்திச்சலே ஆப்புதான்ப்பா...)

சி.ஆ: நான் அடிச்சா அது நைஸு
பெ.ஆ: நான் அடிச்சா அது சைஸு

சி.ஆ:ஆமாம் நம்மள ஏன் ஆப்பு-ன்னு கூப்பிடுறாங்க?
பெ.ஆ:அடிக்க ஆரம்பிச்ச ஒடனே வலிக்கும்ல, வலிக்கும் போது என்ன சொல்லுவாங்க..ஆ..ஆ-ன்னு, அடிச்சு முடிஞ்ச போது... அப்பா-டான்னு இருக்கும். சோ...ஆ-வும், அப்பா-வும் சேர்ந்து ஆப்பா ஆயிடுச்சி.

சி.ஆ: அப்ப ஆப்பா-ன்னு சொல்லம ஏன் ஆப்பு-னு சொல்லுறங்க?பெ.ஆ:அதுவா...ஆப்பா பிரஸண்டென்ஸ்/புலூரல்... ஆப்பு... பாஸ்டென்ஸ்/சிங்குலர்.

சி.ஆ:ஆப்புக்கே ஆப்பு அடிக்கிறவங்க இருக்காங்களா?
பெ.ஆ:தோ...அது நீதான்...உன் கேள்விய உன்கிட்டயே கேட்டுப்பாரு...அப்ப தெரியும்.

புராஜக்ட் சப்போர்ட்...பேட்டா ராப்...

தல: இன்னாப்பா? தலைல கைய வச்சிகினு உக்காந்துட்ட? இன்னா மேட்டர், யாங்க் கைல சொல்லுப்பா.
கில: ஆங்க்...அது நேத்து ரன் பன்னுன ஜாப் ஊத்திக்கிச்சுபா...அதான். நீ வந்து கேட்டா உன் கைல என்னா சொல்லுரதுனு தெரியாம முழிச்சிகினு இருக்கென்.
தல: அட தோ பாருடா, சப்ப மேட்டரு, அதுக்கு பொயி இன்னாமோ கப்ப கவுந்தமாரி இருக்க. போ போயி இப்ப ரீஸண்டா இன்னா சேஞ்ச் பன்னுனோம்னு யோசி, அப்பால விட கப்புனு கிடைக்கும்.
கில: யான்பா... என்கு அதுகூட தெரியாதா, நான் என்ன கூமுட்டையா? நேத்தி நம்ம கபாளி தான் கியூசி பன்னான்பா, எல்லாம் கறீட்டா கீது-னு சொன்னான்பா.
தல: கஸ்மாலங்களா, அதுக்குதான் கோட் செய்யசொல்லோ கொஞ்சம் புரோஆக்டிவா எக்ஸப்சன் ஹேண்டில் பன்ன்னுங்கோன்னு சொன்னேன், யவனாவது கேட்டீங்களா? இப்போ அனுபவிங்கோ.
கில: சும்மா கூவாதிங்க, கோட் பன்ன அஞ்சு நா கேட்டா ரெண்டு நா குடுக்க வேண்டிது, அதுல கூட அப்ப அப்ப கொசுரு வேளையும், இப்ப வந்து புரோஆக்டிவ், புரோட்டாவுக்கு ஸால்னானு...
தல: என்னாமே, நம்ம கைல ராங்க் பேசுர? ஏத்தமா உன்கு? நீ இன்னா பன்னுவியோ ஏது பன்னுவியோ என்கு தெரியாது, கோழி கூவசொல்லோ யாங்கைல ரிப்போட் இருக்கனும்..ஆங்க்.

வார்த்தையில் வன்முறை...

வார்த்த ஒன்னு வார்த்த ஒன்னு என்ன கொல்ல பாக்குதே
அது வாள் எடுத்து வாள் எடுத்து வெட்ட பாக்குதே

பொருக்கியா இருந்த நான் வருக்கியா ஆயிட்டேன்....

நான்...ஊருல பெறிய பொருக்கி
குறுக்க வந்தா ஒரு சிறிக்கி
கூபிட்டா கைய்ய சொடுக்கி

அவ...ஊருல மேனா மினுக்கி
கட்டி அனைச்சிட்டா என்ன இருக்கி
மனம் விழுந்துடிச்சி தடுக்கி

நான் அவ வாயில இப்ப வறுக்கி

கல்லூரி கானா...

கல்லூரி கானா...

வகுப்புல யென் பேரு கிட்டு
கிட்ட சுத்தி நிறைய சிட்டு
அதுல பல பேரு அட்டு, சில பேரு லட்டு

மாலாதான் யென்னோட பிட்டு
மயக்கத்துல ஊ..ல..லா..லா பாட்டு
மார்க்குல ஓ..ல..லா..லா கோட்டு

கையில கொடுத்தா ஒரு சீட்டு
அமெரிக்காவுக்கு விட போரா ஜூட்டு
நான் இப்ப வெத்து வேட்டு.

(கீழே உள்ள வரிகள் தனி நபர் தனிக்கைக்கு உட்பட்டது...U/A சர்டிஃபைடு)
பச்சை

அவள்... பக்கதுல பாக்கி(யம்/ஸ்தானி) பச்சை
கண்ணுல காமிக்குரா இச்சை
மார்புல கட்டியிருக்கா கச்சை
கண்கள் கேட்காது என் பேச்சை
நிறுத்த போகுது என் மூச்சை
கயட்டி போடுவாலா பிச்சை?

ஹி...ஹி..துவைத்து போடத்தான்.

சிரிக்காதே...

சிரிக்காதே...
சிரித்தால் உன் கண்ணத்தில் குழி...
என் மனம் தடுக்கி விழுந்து விட போகிறது

கண்களைத் திற...
அந்த ஒளியில் தான் நான்
உன் இதழ் என்ற இருவரி கவிதையை படிக்க முடிகிறது.

மௌனத்தை கைவிடு...மரணம் நிகழ்ந்துவிட போகிறது

உன் கயல் விழியால் ஒரு கடைகண் பார்வை...
கண்ணக் குழியோடு ஒரு கள்ளமில்லா சிரிப்பு...
காற்றுக்கும் வலிக்காமல் ஒரு கையசைவு...
ஒன்றே... ஒன்று மட்டும்... என் உயிர் பிழைக்க.

பெண்ணே நீ ஒரு மாயம்...

முகத்தில் எப்பொழுதும் முக-சாயம்
ஆடை அணிவதில் சிக்கனம் அணி-யாயம்
இவற்றால் என் மனதில் பெரும் காயம்
காயத்திற்க்கு மருந்தாக...
நீ என் கூட விளையாட வறியா தாயம்?

நானும் மாயவரம்- தாங்கோ

ஹேய்...யாருடா நீ பருப்பு?
மனசுல என்னா நெனப்பு?
மும்தாஜ் இடுப்பாடா அடுப்பு?
மத்தத பாத்தியா என்ன எடுப்பு?
நீ ஏத்தாத எனக்கு வெறுப்பு
"வீரா"வுக்கு வந்துடும் கடுப்பு.

செட்டு போட்டு எடுத்தா தான் அது படம்
பிட்டு போட்டு(அடிச்சி) பாஸ் பண்ணுனா அது பாடம்
சாமியாரு இருந்தா அது மடம்
மாமியாரு இருந்தா அது மாடம்
அடுக்கு மொழி பேசுனா அது டி.யா.ரு
என்ன கேக்க நீ யாரு?


ஆட்டோ ஷோ... (மிச்சிகனில்)

நான் பார்க்க போனேன் காடி
சுத்தி பார்த்தேன் தேடி
ரொம்ப புடிச்சது ஆடி
காரணம் அதோட பாடி
விலைய பார்த்தா...ஆத்தாடி
வீட்டுக்கு வந்துட்டேன்... ஓட்டமாய் ஓடி

தண்டனை...

கனவு கை கூடவில்லை - என் பெற்றோருக்கு,
காதலியுடன் என் கல்யாணம்

கால் காசு செலவில்லை - என் பெற்றோருக்கு,
காலையில் பதிவு திருமணம்

காலில் விழுந்து ஆசிபெற வழியில்லை - எங்களுக்கு,
காலம் கணிந்துவர காத்திருக்கிறோம்.

மல்லு கட்டு

'ஜல்லி கட்டு'... நக்கலுக்காக அது ஆயிடுச்சி 'மல்லு கட்டு'.

(அறிவிப்பாளர்: இந்த வருட மல்லு கட்டு நிகழ்ச்சியை நமது 'பட்டி மன்ற பாவலர்' அய்யா...சாலமன் பாப்பைய்யா தொகுத்து வழங்குவார்)

அனைவருக்கும் வணக்கம். ஒரு திரு நாளு... பண்டிகை அப்படீன்னா கொண்டட்டம் இருக்கனும்யா... அப்பதானா மனசு குதூகலமா இருக்கும். உண்மைய சொல்லனும்னா... இங்க 'ஜல்லி கட்டா' / 'மல்லு கட்டா'-னு ஒரு பட்டி மன்றம் நடத்துலாம்யா... இல்லியா பின்ன... அங்க பாருங்க... ஒரு பக்கம் கொம்பு சீவி, பல பல-னு வண்ணம் பூசி... சும்ம ஜில்..ஜில்-னு முரண்டு புடிச்சி நிக்கிற காளைங்க... மறு பக்கம் அந்த ஜல்லி கட்டு காளைய 'மல்லி மொட்டு'-னு நினைச்சி அடக்க துடிக்கிர வாலிப காளைங்க... திறந்து விடுங்கய்யா...காளைங்கல மோதி பாத்திறட்டும்.

தோ...திறந்து விட்டச்சய்யா முதல் காளைய... ஆங்க்... ஆகாங்க்... அருமைய்யா... தலைய ஆட்டுது, தரைய பிராண்டுது... முட்டப் போவுதா இல்ல முனகப் போவுதான்னு பாப்போம்.

அடடா... அம்புட்டு பேரும் கிளம்பிட்டாங்கய்யா காளைய அடக்க... பள்ளிக்கூடத்துல ஒரு வாத்தியார் பல காளைங்கள அடக்குவார்... அங்கிட்டும் இங்கிட்டும் ஓடி... இங்க ஒரு காளைய பல காளைங்க துரத்துது. ஓ... ஓய்... சும்மா சொல்லப்பிடாதுய்யா காளை அது வேளைய ஆரம்பிச்சிடுச்சி... சும்மாவா... அலங்காநல்லூர்ல... நம்ம பசங்கள ரவுண்டு கட்டுது.

ஓரு பயபுள்ள ஆர்வ கோளாருல காள வால புடிக்குது... நம்ம காள ஒரு யு டேர்ன் அடிக்குது. வால புடிச்ச புள்ள இப்ப காளையோட கால்ல... அவனுக்கு இந்த 'மல்லு கட்டு' இனி 'மண்ட கட்டு' தான்.

இதோ வந்துட்டாரு ஒரு மதுரகார தம்பி துள்ளிகிட்டு... தலையில முண்டாசு கட்டு (ஏதாவது 'பாபா' கட்டா இருக்குமோ)... பார்வையில ஒரு தெணாவெட்டு... இருக்காத பின்ன... அது மதுர மண்ணோட பிறந்தது ஆச்சே... அவரு காளைய பாக்க... காளை அவுர நோக்க... காளைகிட்ட கண்ணாலயே சொல்லுறாரு... மதுரக்காரன் அடக்கிடுவோம்ல...

அதான் சொன்னோம்ல... மதுரக்காரன் யா... காள இப்ப கதருதுல்ல... இதுக்கு மேல கமெண்டரி எதுக்கு... கிளம்புங்கய்யா வீட்டுக்கு போவோம்.

அறிவியல் முன்னேற்றம்...50/50

ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கம் போல, ஒரு நிகழ்வுன்னா நல்லது கெட்டது இரண்டும் நடப்பது போல...(ரொம்ப பில்டப் பண்ணுரனோ?) அறிவியல் முன்னேற்றமும் "ஆக்கப்பாதை" "அழிவுப்பாதை"-னு 50/50-யா இருக்கு.

ஆக்கப்பாதை பற்றி நான் ஒன்னும் புதுசா சொல்ல தேவை இல்லை இங்கே. அழிவுப்பாதைய பற்றி கொஞ்சம் அலசலாம். அடடா இவன் ஏதோ குண்டு வைக்கப் போரத பத்தியோ இல்ல இனையதளங்களால் தடுமாறிப்போகும் தற்குறிகளை பற்றியோ சொல்லப் போரான்னு நினைக்காதீங்க... இது ஆக்கப்பாதையில் உள்ள அழிவுப்பாதை பற்றியது (அங்க பில்டப் பண்ணுனேன்... இங்க பினாத்துரேனோ?). சரி புரியர மாதிரி சொல்லுரேன்... குறை-யில் குறை-யை காணாமல், நிறை-யில் குறை-ய பத்தி பார்ப்போம்.

ஒரு சராசரி மனிதனை நினைவில் வைத்து சில விசயங்களை அலசுவோம்...

1. நினைவாற்றல் - குறைய காரணமாகிறது

கால்குலேட்டர கையாலுவதே ஒரு திறமை, அத வச்சு சைன்/காஸ் தீட்டா இல்ல ஒரு பெரிய எண்ணோட மடங்கு/மூலம் இதெல்லம் அதிவேகமா போட பயன் படுத்த ஆரம்பிச்சோம்... இப்ப 5-யும், 9-யும் கூட்ட கால்குலேட்டர் எங்கன்னு தேடுராங்க. சரி இத விடுங்க சிலபேர் கணக்குன்னாலே கடுப்பாய்டுவீங்க. இந்த டெலிஃபோன் சமாச்சாரத்த பார்ப்போம்... என்னமோ டிஜிடல் டயரியாம்... பர்சனல் ஆர்கனைசராம்... அப்போல்லாம் 5 இல்ல 15 நம்பர பட படன்னு சொல்லுவோம்... இப்ப? அய்யோ நம் நம்பர் நமக்கே தெரியாது... என்ன ஒரு சாமர்த்தியம் நமக்கு... நம்பர் கேட்கும் நண்பரிடம் சொன்னத கொஞ்சம் யோசிச்சு பாருங்க... " நீங்க ஒங்க நம்பர சொல்லுங்க... அப்படியே என் செல்லு ஏத்திகிட்டு... அப்படியே ஒங்களுக்கு ஒரு மிஸ்டு கால் விடுரேன்... நீங்க அத அப்படியே ஸ்டோர் பண்ணிக்கலாம்" (ஹும் அவரே இதுக்கு-தான உங்க நம்பர கேட்டாரு). நான் யாரையும் குத்தம் சொல்ல விரும்புல... அடிக்கடி பிளான் மாறுது இல்ல புரொவைடர மாத்துரோம்... இதையே அடுத்தவங்களும் செய்ய... இப்ப நிலமை? "யாரு சிம்முல யாரு"-ன்னு ஒரு நிகழ்ச்சியே நடத்துலாம் போல இருக்கு.

2. சோம்பேரிதனம் - அதிகரிக்க காரணமாகிறது

என்ன கொடுமையா இருக்கு... எதுக்கெடுத்தாலும் கால்கடுக்க நிக்க வேண்டியிருக்கு... ஈ.பி பில்லுக்கு, டெலிஃபோன் பில்லுக்கு, பஸ்/ரயில்/விமானம் பயண முன்பதிவு செய்ய... அப்பாடா... வந்தாச்சு டெலி பேமெண்ட், டெலி புக்கிங்க், ஆன்-லைன் பேமெண்ட், ஆன்-லைன் புக்கிங்க... உங்களது அனைத்து தேவைகளும் உங்கள விரல் நுனியில்... சுழற்றுங்கள் அல்லது சொடுக்குங்கள்(கிளிக்குனுமாம்) நீங்கள் உட்கார்ந்த இடத்திலிருந்தே... ஓ இதான் அந்த "கவுச் பொட்டடோ"-வா.

அட அத இன்னாமோ சொல்ராங்கப்பா... ஆங்க் "ஐடெண்ட்டி தெஃப்ட்", அதாம்பா நம்ம விசயங்கள நமக்கு தெரியாம அடுத்தவன் ஆட்டைய போடுரது. இது சின்ன விசயதுலேருந்து பெரிய விசயம் வரைக்கும் நடந்துகிட்டு இருக்கு. நம்ம பேசாத பில்லுக்கு நமக்கு பில்லு வருது, நம்ம வாங்காத பொருளுக்கு பற்று அட்டை-க்கார வங்க்கியிலுருந்து பணம் கட்ட சொல்வது, இப்படி இந்த பட்டியல் நீண்டு கொண்டு போகிறது... எங்க போயி முடிய போகுது?

"ஐடெண்ட்டி தெஃப்ட்" என்பது "ஐடியா தெஃப்ட்"-ஆக அல்லது "மனசு தெஃப்ட்"-ஆக... நீங்க செய்யல்லாம்னு மனசுல நினைக்கிறத உங்களுக்கு அருகில் உள்ள ஒருவர் அல்லது உங்களுடன் ஏதாவது ஒரு வகையில் தொடர்பு உடைய ஒருவர் அதை செய்துவிட்டு இருப்பார்.

"கால் கடுக்க" நின்ன காலம் போய் "மனசு நடுங்க" வேண்டிய காலமா ஆயிடுச்சி.

சோம்பேரிகளான நாம் இனி அடிக்கடி உச்சரிக்க போகும் வார்த்தை - "நான் அவன் இல்லை".

சமையல் விமர்சனம்

சினிமா விமர்சனம், கதை, பாட்டு இப்படி பார்த்துகிட்டு இருக்கோம். ஒரு வித்தியாசமா இருக்கட்டுமே...அதனால இப்ப "சமையல் விமர்சனம்". ஒரு புதிய முயற்சியா சமையல் குறிப்பு பத்தி பார்க்க போறோம்.

சமையல் நிகழ்ச்சினா உங்களுக்கே தெரியும், அவங்க சமைக்கிரத விட அவங்க பேசி சமாளிக்கிரதே பெரிய விசயமா இருக்கும். ஏன்னா உங்க கவனம் எல்லாம் அவங்க பேச்சில இருக்கனும், சமயல் (குறிப்பு)-ல இருக்க கூடாது, அதுக்குத்தான். இந்த "சமையல் விமர்சனம்" நிகழ்ச்சியும் அப்படிதான்...உண்மைய சொன்னா, நம்ம பாணியில சொன்னா இது ஒரு "நக்கல் சமையல்"

இன்று ஒரு குவிக் ரெசிப்பி, மைக்ரோவேவ் ஓவன்ல, அஞ்சு நிமிஷத்தில் அல்வா, அதுவும் உடல் ஆரோக்கியதிற்கு தீங்கு இல்லாத, சுகர் பேஸண்ட்லாம் கூட சாப்பிடலாம்...அத்திப்பழ அல்வா.

என்னடா அல்வா-வானு நினைக்காதீங்க, நிறைய பேருக்கு பிடிச்ச ஸ்வீட், குறிப்பிட்டு சொல்லனும்னா சிலபேருக்கு அல்வா சாப்பிட பிடிக்கும், பல பேருக்கு அல்வா குடுக்க பிடிக்கும். (உன்களுக்கு எப்படி?)

இதோ தேவையான பொருள்கள்:
1. அத்திப்பழம் - 100 கிராம், நீங்க உலர்ந்த அத்தி பழத்த எடுத்து சுமார் 1 மணி நேரத்துக்கு ஊர வச்சிக்கனும். (என்ன முரைக்கிறீங்க? 5 நிமிஷம்-னு சொல்லிட்டு 1 மணி நேரம்-னு சொல்லுரனேனு நினைக்கதீங்க, ஊர வைக்கிரத "பிரிப்பரேஸன் டைம்"-னு சொல்லனும்..ஹி..ஹி)
2. பால் பவுடர் - 100 கிராம். (குழந்தைகளுக்கு குடுக்கிறது இல்லீங்கோ)
3. ஜீனி (அதிகம் இனிப்பு தேவைபட்டால்)
4. முந்திரி பருப்பு - 10 கிராம் (பாதியாக பிரித்தது)
5. பாதாம் பருப்பு - 10 கிராம் (கடையில ஃபிளேக்ஸா கிடைக்குமே அது)

பார்த்தீங்களா நேரம் மட்டும் இல்லீங்க தேவையான பொருள் கூட 5 தான்.

ரெடியா...அல்வா கிண்டுவோமா?

ஊர வச்ச அத்தி பழத்த எடுத்து மிக்ஸியில போட்டு நல்ல விழுதா அரைச்சிடுங்க. அரைக்கும் போது ஊர வச்ச தண்ணீரயே விட்டு அரைச்சிக்கலாம். அரைச்ச அத்தி விழுத ஒரு வாய் அகலமான பாத்திரத்தில் கொட்டி (அகலமான வாய்-ன உடனே உங்க வாய்-னு நினைச்சிகாதீங்க...அது நீட்டு...ஐ மீன் வாய் நீளம்) அது கூட பால் பவுடர சேர்த்து நல்ல கலக்கி, நான் முன்னமே சொன்ன மாதிரி இனிப்பு அதிகம் தேவைபட்டால் ரெண்டு ஸ்பூன் ஜீனி சேத்துக்கலாம். இந்த கலவைய ஒரு 3 நிமிஷம் மீடியும் ஹீட்ல குக் பண்ணுங்க. ஏன்னா மில்க் சாலிட்ஸ் ரொம்ப சாஃப்ட், ஈஸியா அத்தி பழத்தோட மிக்ஸ் ஆகி நல்லா வெந்து கம கம-னு இருக்கும். 3 நிமிஷம் ஆகிடுச்சி, எடுத்துடலாம். வேறு ஒரு கப்புல மாத்தி அது மேல முந்திரி மற்றும் பாதாம் வச்சு இப்படி டெக்கரேட் பண்ணி பரிமாரலாம்.

ம்..ம்..வாசனை அருமையா இருக்கு (பிளாக்-ல படிகிற உங்களுக்கு தெரிய போவுதா என்னா?) வாரம் ஒரு முறை இத சாப்பிடலாம் வயிற்றுக்கு ரொம்ப நல்லது, மல சிக்கல் குணமாகும்.

என்ன நேயழ்கலே நீழ்ங்க அச்சிபழ அழ்வா செழ்ஞ்சி ஷாப்டு பாழுங்க...(சாழி...அழ்வா வாயில ஒட்டிகிட்டு அதான் வாய் கொழருது)

(பிஹைண்ட் த ஸ்கிரீன் - அன் எடிட்டெட் ஸாட்ஸ் நம்ம மக்களுக்காக)

பிரசெண்டர்: ஏன்ங்க 3 நிமிஷம் போதுமா?
ஒருவர்: போதது, 5 நிமிஷம்-னு சொல்லிட்டோம், 1 நிமிஷம் அரைக்க, 1 நிமிஷம் கலக்க, பாக்கி 3 நிமிஷம் குக் பண்ண.
இன்னொருவர்: அது சரி, நமக்கு டைம்தான் முக்கியம், டேஸ்ட் பத்தி கவல இல்ல.
பிரசெண்டர்:நான் இன்னைக்கு டேஸ்ட் பண்ணவே இல்ல, கம கமன்னு இருக்குன்னு சொல்லி சமாளிச்சிட்டேன். டேஸ்ட் பண்ணியிருந்தா அம்மாடி... நாக்கு நம நமன்னு போயிருக்கும் போல.

பின் குறிப்பு: உண்மையில் இது ஒரு நல்ல ரெசிப்பி, ரோஜா குல்கந்து போல - இது ஒரு நல்ல மலம் இலக்கி (லக்ஸாடிவ்).

துளி...துளி...பனித்துளி

ஊரெல்லாம் பனி வெண்மை
கொல்லுது நண்பரில்லா தனிமை
சொல்லவா ஒரு உண்மை?

என்...
பக்கத்துல ஒரு எருமை
அதன் நிறம் கருமை
குணம் ரொம்ப அருமை

ஆனா...
கொஞ்சம் கூட இல்ல திறமை
அதனால...
எனக்கு மிஞ்சியது வெறுமை.
அது...
ஆண்மை-யோ இல்ல பெண்மை-யோ

எங்க...
HR பாலிசி ரொம்ப கடுமை
அது பேச சொல்லுது இனிமை
தவிர்க்க சொல்லுது பகைமை

ஆக... அமெரிக்காவில்
நமக்கு வேண்டியது மன வலிமை

ரோபோ ஃபீவர் வந்துடுச்சி....

என் பாணியில் சொல்லவா?
பேர கொஞ்சம் பிரிச்சி மேயவா?

ரோபோ... ரோ + போ
துணை எழுதுகளாகிய ரெட்டை கொம்பையும், கால் எழுத்தையும் எடுத்துட்டு படிங்க...

ரோபோ... ர + ப
அதாங்க, சங்கரோட பிரமாண்டம், சுஜாதவோட ஹைடெக் ரெண்டும் இல்லன்னா ரோபோ... ர ப... புரிய வில்லை?
ர ப... 'ர'ஜினி 'ப'டம்

ஆஹா...ஆஹா எஃப்.எம்-ல கேட்டேன்...
அரிசி இடிச்சா....மாவு
ரோபோ அடிச்சா....சாவு

ரோபோ-வாக அய்யா ராமாதாசு...
அடிக்கடி எம்ப்லாயர மாத்துனா அதிக துட்டு கிடைக்கும்
அது "ஐ.டி" பாலிஸி
அடிக்கடி கட்சிய மாத்துனா அதிக சீட்டு கிடைக்கும்
இது "அய்யா" பாலிஸி

காதல் கடிதம்...

என்ன...
நான் எழுதியது என்ன...
உன்னக்காக எழுதியது என்ன...

கடிதம்...
என்ன கடிதம்...
காதல் கடிதம்...

கவிதை...
என்ன கவிதை...
காதல் கவிதை...

கசக்கிவிடாதே...
காகிதமென்று கசக்கிவிடாதே...
கவிதையென்று கசக்கிவிடாதே...

கசங்கபோவது...
காகிதமும் இல்லை...
காதல் கவிதையுமில்லை...

அது... காதலால் கசிந்துருகிய என் கணத்த இதயம்.

மனை உச்சவரம்பு

நில உச்சவரம்பு சட்டம் பற்றி கேள்வி பட்டு இருப்பீர்கள்... 1963 இல்லை அந்த கால கட்டத்தில்... ஒருவர் எவ்வளவு நிலம் வைத்து இருக்கலாம் என நிர்ணயம் செய்தார்கள்... பினாமிகள் உருவான அல்லது உருவாக்கப்பட்ட காலம்... பெண்டு, பிள்ளை, வைப்பாட்டி, வண்டியோட்டி என்று பல பேரிடம் பட்டா பங்கு போடபட்டது. எது எப்படியோ பெரிய நில சுவாந்தார்கள் மேலும் நிலம் வாங்கினால் நமக்கு சங்கு... உள்ளதை காப்பற்றி கொண்டால் போதும் என்ற நிலமை.

அது போல் தற்பொழுது ஒருவர் ஓன்றீரண்டு (வீட்டு)மனைதான் வைத்து இருக்க வேண்டும் என் ஒரு சட்டம் கொண்டு வரவேண்டும்... வீடு என்பது ஒரு நடுத்தர வர்கத்தின் கனவு, எந்த ஒரு சாதாரண மனிதனும் ஆசைப்படும் விசயம்... அதை முன்பெல்லாம் அழகாக சொல்வார்கள்... "குந்த ஒரு குச்சி, கொழுகுத்த ஒரு நிலம்" என்று. கிராமமோ நகரமோ... இப்போது 'முதலீடு' என்ற பெயரில் அந்த கனவு தகர்க்கப்பட்டு வருகிறது.

நான் சின்ன வயதிலிருந்தே பார்த்து கேட்டு இருக்கிறேன்... புதிதாக வீடு வாங்கி குடியேரும் குடும்பத்தினர் அடையும் மகிழ்ச்சியை. அந்த மகிழ்ச்சி வரும் காலங்களில் வெறும் கைகூடா கனவாக ஆகிவிடுமோ?

திரி சூலம்...

என்னமோ நான் இங்க பழைய சிவாஜி படத்தை பத்தி (மூன்று வேடம்) சொல்ல போரேன்னு நினைக்காதீங்க... இது நான் எழுதிய(தாக சொல்லப்பட்ட) காதல் கடிதத்தின் கையொப்பம்... அப்போது நான் ஒன்பதாம் வகுப்பு-பி கிளாஸ்... கோ எஜுகேஸன்... ஏ-செக்ஸ்ன் (மகளிர் மட்டும்) ஃபுல் ஆனா பி-செக்ஸன்-னுக்கு மாணவிகள் அனுப்புவது வழக்கம், இல்லைன்னா மாணவர் மட்டும்தான். ஆனா நான் படிச்ச 5 வருசம் வரைக்கும் (6-லிருந்து 10-வரை) 9-பி செக்ஸன் கோ-எட்தான்.

இந்த பி-செக்ஸன்ல இடம் கிடைக்காதான்னு காத்து கிடந்தவர்கள் பல பேர்... நான் இல்லீங்கோ... ஏன்னா என் "பவுண்டேஸனே" பி-ல இருந்துதான், 6-பி, 7-பி, 8-பி... ஆக வேறு மிட்டில் ஸ்கூல்லேருந்து புதுசா "எங்க" ஹை ஸ்கூலுக்கு வர பொண்ணுங்கள தவிர, பழைய பி-செக்ஸ்ன் மாணவர்கள் தாக்கு பிடிக்கனும்னா அவன் நல்லா படிக்கிற பையனா இருக்கும்... ஏன்னா கிளாஸ் டீச்சர் அவங்க செக்ஸன் நல்ல பேர் எடுக்கனும்கிற ஸ்டேடஜிய வச்சு, கழிசடைகலை சி-க்கும் டி-க்கும் கழிச்சி கட்டிடுவாங்க... இப்ப தெரியுதா நான் ஏன் கவலைபடுலேன்னு... சரி அதவிடுங்க... உங்க காதுல வர புகை இங்க அடிக்குது.

ஒரு நாள் காலை வழக்கம் போல் நான் வகுப்பில் (முதல் பெஞ்ச்ல) உட்கார்ந்து இருந்தேன், பசங்க எல்லம் ஒரு பக்கம்... வாசல் அருகில், பெண்கள் உள்பக்கம் உட்கார வைக்கப்பட்டு இருப்பார்கள்... எல்லா பெண்களும் எங்கள கடந்து தான் செல்ல வேண்டும்... அப்ப புதுசா திருச்சி-யில் இருந்து வந்த ஒரு பொண்ணு, அவங்க பேரு இந்திரா... கண்ணு நிறைய "ஐ-டெக்ஸ்" மை விட்டு பார்க்கவே பயமா இருக்கும்... என்ன ஒரு லுக்... அதாங்க ஒரு முறை முறைச்சிட்டு போனாங்க... சரி, அது மூஞ்சி அப்படித்தான் என்று நான் ஒன்னும் சீரியஸா எடுத்துக்கல... அதோட எனக்கு அந்த கிளாஸுல ரெண்டு போட்டியாளர்கள்... அதுல இது ஒரு பெண்... சரி எதுலயோ நம்ம அதிகமா மார்க் வாங்கிட்டோம் போல... அங்க புகையுதுன்னு நினைச்சிகிட்டேன்.

பள்ளி மணி ஓலித்தது... பிரேயர் முடிந்து வகுப்பிற்கு வந்தோம், என் வகுப்பு ஆசிரியர் (அவர் ஒரு மாக்கான்... நல்லா பாடம் நடத்துவார் ஆனால் அடிக்கும் போது வாட்ச கயட்டி வச்சுட்டு அடிப்பார்... நீங்களே யோசிச்சி பாருங்க அடி எப்படி இருக்கும்னு) வழக்கத்திற்கு மாறாக சிறிது நேரம் கழித்து வந்தார், வந்தவர் வெங்கடேஸ், ராஜா, பழனி மூன்று பேரும் வகுப்பு வெளியில் முட்டி போடுங்கன்னார்... எங்களுக்கு ஒன்னும் புரியல... ஏன்னு கேட்ட பின்னி எடுத்துடுவார்... சரின்னு 45 நிமிஷம் முட்டி போட்டோம்... இதுல என்ன கொடுமைன்னா இந்த 9-பி இருக்கே அது எங்க ஸ்கூலோட லேடீஸ் எண்ட்றன்ஸ்... அன்று லேட்டா வந்த எல்லா பொண்ணுங்களும் எங்கள பார்த்து ஒரு நமுட்டு சிரிப்பு... மானம் போய் விட்டது.

வகுப்பு முடியும் நேரம் மூனு பேரையும் உள்ள கூப்பிட்டு வெங்கடேஸ் மூஞ்சியில் விட்டெரிந்தார் ஒரு பேப்பரை... படிக்க வந்தீங்களா இல்ல லவ் பண்ண வந்தீங்களா என கேட்டு ஒரு அடி (அவன் கொஞ்சம் குசும்பன்) வேறு அவனுக்கு, எனக்கு தெரியும் அவர் என்னை அடிக்க மட்டார் என்று... ஏன்னா நம்ம "பேக்கிரவுண்ட்" அப்படி... அங்க உள்ள வாத்தியார்ல பாதி பேர் எங்க அப்பா ஃபிரண்ட்... அதோட என் சகோதரிகள்... ஒன்னா... ரெண்டா... நாலு பேர் நல்ல பெயர் எடுத்து வைத்திருந்தார்கள்... அவர் பங்குக்கு ஒரு முறை முறைத்துவிட்டு... அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேளுங்கள் என்றார். அடுத்து வந்த சகுந்தலா டீச்சரிடம்... இந்த பசங்க மன்னிப்பு கேட்டா உள்ள விடுங்க இல்ல வெளியில் நிற்கட்டும் என்று சொல்லிவிட்டார்.

அப்பாட, சகுந்தலா டீச்சர் வந்தது பெரிய ஆறுதல்... நான் அவர்கள் செல்ல குட்டி... என்னடா இதெல்லாம் என்றார்கள்... அப்போதுதான் அந்த "லவ் லெட்டர்" என் கைக்கு வந்தது... அதில் சில வாசாகம்... ஞாபகம் இல்லை... முடிவில் இருந்ததுதான் நம்ம " நெஞ்சில் நின்ற" வரிகள்...

இப்படிக்கு,
(திரிசூலம்)
வெங்கடேசன்
வே.இராஜா
பழனி

உடனே டீச்சரிடம் சொன்னேன்... இது எங்கள் கையெழுத்து இல்லை... வேறு யாரோ எங்கள் பெயரை "பஞ்சர்" பண்ணிவிட்டார்கள் என்று. முட்டி போட்ட அவமானம்... மூலை பர பரத்தது... யார் அந்த கள்ளன்/கள்ளி? மட மட வென்று பட்டியல் இட்டோம்... நம் மூவரின் பொது எதிரி யார்... நிட்சயம் பெண் இல்லை... பிறகு... வெங்கடேஸ் கிளாஸ் லீடர்... கிளாசில் பாதி பேர் அவனுக்கு எதிரி... பழனி... கோபம் வந்தால் பட் என்று அடித்து விடுவான்... அவனிடம் அடி வாங்கியவர் கடைசி ரெண்டு பெஞ்ச்... எனக்கு ஒருவன் கூட இல்லை... மீண்டும் ஒரு முறை படிதேன் அந்த கடிதத்தை... உடனே கேட்டேன்... டேய் கனகசபை எங்கே?

ஆகா பாதி கண்டு பிடித்து விட்டேன்... மனதிற்க்குள் என் தமிழ் ஆசானுக்கு நன்றி சொன்னேன்... தமிழில் பெயர் எழுத சொல்லி வர்புறுத்தியவர் அவர்தான். தமிழ் கட்டுரை நோட் திருத்துவது எனக்கு கொடுக்கப் பட்டு இருந்தது... ஓரளவுக்கு எல்லோருடைய கையெழுத்தும் எனக்கு அத்துபடி... வெங்கடேஸிடம் கத்தினேன்... டேய் நம்ம வகுப்புல "வே"-வன்னாவுல உள்ள ரெட்டை சுழி-ய/கொம்ப "எட்டு" மாதிரி போடுர ஓரே ஒருத்தன் கனகசபை... இது அவனோட எழுத்து-ன்னு சொன்னேன். லவ் லெட்டர் கொடுத்தானே... இன்னிக்கு லீவ் லெட்டர் கொடுத்தானா-ன்னு கேட்டேன்... லீடர் வெங்கடேஸுக்கு சந்தோஷம் தாங்கள... எடுறா சைக்கிள... விடுறா வல்லத்துக்கு என்றான்.

கனகசபையோட வீடு வல்லம் என்ற ஊர்... 5 கி.மி போயி... ஆளுக்கு 4 அரை விட்டுட்டு... அவன் கட்டுரை நோட்டோட வந்து சேர்ந்தோம்... ஆதாரம் வேணும்ல்ல?

நாங்கள் நிரபராதி என்று நிரூபித்த பின் நன்றி சொன்னேன்... பரலோகம் சென்று விட்ட என் தந்தை "வேணு" விற்கு.

பால் வாளி...

எங்கள் வீட்டின் வருமானத்தின் ஒரு சிறு பகுதி பாலும் பாலை சார்ந்தும் இருந்தது. பாலின் தரத்தை கவனத்தில் கொண்டு எங்கள் வீட்டு பால் சில கடைகளில் பிரதான இடம் பிடித்து இருந்தது... தரம் மட்டும் அல்ல நேரம் தவறாமையும் கூட... காலை 5 மணிக்கு என்றால் 5 மணிக்கு பால் கடையில் இருக்கும், காரணம் என் தத்தா அரசூரார், இந்த வலை தலத்தின் கதாநாயகன். 4 மணிக்கு எழுந்து பால் கறந்து... எனது மூத்த சகோ மூலம் பட்டுவாட செய்யப்படும்.

இது... பால் வாளியும் அம்மாவசையும்...

இப்படி பால் கொண்டு போகும் வாளி திரும்பி வரும்போது அதில் பண் அல்லது "ஆட்டுகால் கேக்" (மைதாவும் + ஜீனி-யில் செய்யப்பட்ட ஒரு திண்பண்டம்) உடன் திரும்பிவரும், அது வீட்டில் கடைக்குட்டியான எனக்கு, அது கடைசியில் என் சகோ-க்களால் முற்றுகையிடப்பட்டு ஒரு பகுதி எனக்கு வந்து சேரும். இதுல அம்மாவாசை எங்க வந்துதுன்னு பார்க்குறீங்களா? அம்மாவாசை அன்று நாங்கள் கொடுக்கும் பாலுக்கு கடைகாரர் பணம் கொடுக்க மாட்டர், பதிலுக்கு ஸ்வீட்ஸ் (ஓ இதுதான் பண்டமாற்று முறை போலும்) கிடைக்கும்.

ஆக அம்மாவாசை-ன்னா எங்களுக்கு கருப்பு தினம் இல்லை இனிப்பு தினம்.

இது... பால் வாளியும் ரயிலடியும்...

நான் வளர்கிறேனே மம்மி... பால் குடிச்சிகிட்டு இருந்த நான் வளர்ந்து பால் வாளி தூக்கும் நாட்கள்... பல நாட்கள் கோபப்பட்டு இருக்கிறேன்... ஏன் இந்த வீட்டில் வந்து பிறந்தோம் என்று, குளிரில்... மழையில்... நாள் தவறாமல் இந்த வேலை... மழை நாட்களில் குடை பிடிது கொண்டு போக முடியாது... தாத்தா யூரியா சாக்கு பையை இரண்டாக மடித்து குடை போல் போட்டு அனுப்புவார்... ரெண்டு கைல பால் வாளிய வச்சுகிட்டு கொடைய எப்படி பிடிக்க முடியும்? அதனால இந்த சாக்கு குடை ஏற்பாடு.

பால்வாளிக்கு ரயிலடில என்ன வேலை? ரயிலடி எங்கே? ரயிலடி... அதாங்க எங்க ஊர் ரயில்வே ஸ்டேசன்... எங்க வீட்டுக்கும் கடைத்தெருவிற்க்கும் இடையில், அங்க நிறைய வாதாம் மரம் ( நாட்டு பாதாம்) இருக்கும், அதில் வந்து தங்கும் பறவைகள் மற்றும் அணில்கள் இரவு முழுதும் எனக்காக பறித்து போட்ட பழங்கள், கொஞ்சம் தாமதமா போனா கிடைக்காது, அந்த வாதாம் கொட்டைக்கு அவ்வளவு டிமாண்ட்... நான் என் ரெண்டு வாளியும் முழுவதும் நிரப்பி கொண்டு வருவேன்... ஹும் சரியான "பொருக்கி பையன்" என்னமா பொருக்கி இருக்கேன்... பிறகு அதை காயவைத்து, உடைத்து... அப்பப்பா... அது ஒரு வாரம் நடைபெறும்... கடைசியில் வாதம் பருப்பு என் பையில்... கையில்... வாயில்...

இதில் வேடிக்கை என்னன்னா இந்த வாதாம் பருப்பிற்க்காக என்னை நண்பனாக வைத்துக்கொள்ள பள்ளியில் போட்டா போட்டி... இருக்காத பின்ன? எல்லோருக்கும் கொடுக்க நான் என்ன இளிச்சவாயான?

கொவூகி

கொவூகி குருமா...

பெயரை பார்த்து பயப்படாதீங்க... நாம கரோகி ஸாங்க் மாதிரி... கொஞ்சம் ரெடி மேட்... கொஞ்சம் ஃபிரஸ்... கொவூகி ரெடி.

தே.பொ:

1. வெள்ளை கொண்டை கடலை - 1 சிறிய கப் (ஊரிய பின் வேக வைத்தது)
2. உருளை கிழங்கு - 1 நடுத்தர அளவு (தோல் நீக்கி, சிறிய துண்டுகளாக, கொ.க அளவுக்கு, வெட்டியது)
3. தக்காளி - 2 (சிறிய துண்டுகளாக வெட்டியது)
4. வெங்காயம் - 1 நடுத்தர அளவு (சிறிய துண்டுகளாக வெட்டியது)
5. இஞ்சி பூண்டு விழுது - 1/4 டே.ஸ்
6. ஆச்சி சிக்கன் மசாலா - 1 டே.ஸ்
7. கரம் மசாலா - சிறிதளவு9. பச்சை கொ.மல்லி - 1 இனுக்கு (பொடிதாக நறுக்கியது)
8. எண்ணை - 5 டே.ஸ்
9. உப்பு தேவைக்கு ஏற்ப்ப

செய்முறை:

1. வாணலியில் எண்ணை சூடானவுடன் வெங்காயம் + பிஞ்ச் உப்பு போட்டு வதக்கவும்
2. இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
3. தக்காளி + 1/2 டே.ஸ் ஆச்சி மசாலா + பிஞ்ச் உப்பு போட்டு வதக்கவும்
4. வதங்கிய மசாலா கலவையை ஸ்மாஸர் வைத்து நசுக்கி மசாலாவை விழுதாக மாற்றவும் (கையில் தெம்பு இல்லன்னா மிக்ஸில போட்டு அரைக்கலாம் - சுவை கொஞ்சம் குறையும்) நசுக்கினா அம்மா அம்மியில் அரைத்து செய்தது போல இருக்கும்
5. நறுக்கிய உ.கி சேர்த்து, வாணலியை மூடி ஒரு 10 நிமிடம் வேக வைக்கவும் (சில உ.கி முன்ன பின்ன வேகலாம்)
6. கொ.க + 1/2 டே.ஸ் ஆச்சி மசாலா + பிஞ்ச் கரம் மசாலா + பிஞ்ச் உப்பு போட்டு மேலும் ஒரு 5 நிமிடம் - மிதமான சூட்டில் - வேக வைக்கவும் (கொ.க முன்பே வேக வைத்தது, இந்த 5 நிமிடம் மசாலாவுடன் கலக்க)
7. பச்சை கொ.மல்லி சேர்த்தால் குருமா ரெடி.

இத நீங்க டிரை அல்லது கிரேவி எப்படி வேணுமோ அப்படி பண்ணிக்கலாம்... தலையெழுத்து நீங்க ஊத்துர தண்ணியில இருக்குஇத எதுகூட வேணும்னாலும் கூட்டணி வைச்சுக்கலாம்... பிரட், இட்லி, தோசை, சப்பாத்தி, பரோட்டா... எதோடு வேண்டுமானாலும்... ஏன்னா கொவூகி கூட்டணி அப்படி... கொ.கி + உ.கி + தக்காளி.

அன்பே... ராமதாசு...

டாக்டர் மு.க-வும் டாக்டர் ராமதாஸும் பல விசயங்களில் மோதி கொண்டு இருக்கிறார்கள்... இதை டாக்டர் மு.க ஒரு பாட்டாக பாடுகிறார்...
படம்: அன்பே... ஆருயிரே...
மூலப்பாடல்: மரம்கொத்தியே... நீ மரம்கொத்தியே...

மு.க:
மரம்வெட்டியே... நீ மரம்வெட்டியே...
விரட்டுகிறாய் என்னை...
அறிக்கை விட்டு அறிக்கை விட்டு...
மிரட்டுகிறாய் என்னை...

குழு (ஆற்காட்டார், பொன்முடி, ...):
கட்சியோடு கட்சி கட்டி புடிக்கனும்
தொடர்ந்து இருக்கனும் கூட்டணி...
ஒன்னுக்குள்ள ஒன்னா ஒட்டி கிடக்கனும்
தமிழ்னாட்டை அடிக்கனும் கொள்ளை...

மு.க:
மரம்வெட்டியே... நீ மரம்வெட்டியே...
விரட்டுகிறாய் என்னை...
அறிக்கை விட்டு அறிக்கை விட்டு...
மிரட்டுகிறாய் என்னை...

என் பார்ட்டியும்... உன் பார்ட்டியும்
ஒரு ஆறுவிடாம அள்ளுரானுவோ மண்ணை...

என் பார்ட்டி மந்திரிங்க மட்டும்
அதிகமா சுருட்டும் இடம் சென்னை...

ராம:
எம்.பி சீட்டும் குடுக்க மாட்டேங்குர...
டாஸ்மாக்குல பங்கும் குடுக்க மாட்டேங்குர...
பின்ன எதுக்கு இந்த கூட்டணி...

மு.க:
ஆட்சி கூட்டணிய நீ கொள்ளை கூட்டணின்னு புரிஞ்சிகிட்டது தவறு...
அரசியல்ல நான் ஒரு சூத்ரதாரி என்பது வரலாறு... வரலாறு...

மரம்வெட்டியே... நீ மரம்வெட்டியே...
விரட்டுகிறாய் என்னை...
அறிக்கை விட்டு அறிக்கை விட்டு...
மிரட்டுகிறாய் என்னை...

சினிமாவுக்கு பாட்டு எழுதுவது எப்படி?

நான் கவிஞர்கள் வாலி, வைரமுத்து போன்றவர்களின் பேட்டியை படித்தும் கேட்டும் இருக்கிறேன்... சமீபத்தில் யுக பாரதி-யின் பேட்டி கூட.

ஆர்வம், முயற்சி, கற்பனை இதோடு கொஞ்சம் அதிஷ்டம்... பிறகு என்ன நீங்களும் கவிஞர்தான்.

இருந்தாலும் சில அடிப்படை விசயங்கள் தெரிந்து கொண்டு ஒரு வேலை செய்தால் நம்மை யாரும் அசைக்க முடியாது பாருங்க... அதான் இந்த வகுப்பு.

படத்தின் இயக்குனர் பாடல் காட்சிக்கான சூழலை சொல்லுவார், அதை வைத்து ஒரு பல்லவி இரண்டு மூன்று சரணம் எழுத வேண்டும், மற்றதை இசையமைப்பாளர் பார்த்துக்கொள்வார். ஆக "பல்லவி"-யும் "சரணம்"-மும் தான் சினிமா பாடலுக்கான இலக்கணம். துள்ளல் பாடல்கள், அதாங்க "குத்து பாட்டு" இந்த இலக்கணங்களுக்கு அப்பாற்பட்டது.

சரி, தியரி வகுப்பு முடிஞ்சிடுச்சி, அடுத்து பிராக்டிகள். நம்ம அத ஒரு உதாரணத்தோட பார்த்தோம்னா பட்டுன்னு புரிஞ்சிக்குவீங்க.

படம்: சிவாஜி
பாடல்: சஹானா சாரல் தூவுதோ

சூழல்: நாயகனும் நாயகியும் பாடுர டூயட் பாட்டு. நாயகன் நாயகிய தன் வீட்டு விருந்துக்கு அழைக்கிறார். தன் காதலை சொல்லுறார், தான் அவளுக்காகவும் தன் குழந்தைக்காவும் என்ன என்ன வாங்கி வச்சிருக்கேன்னு காண்பிக்கிறார். இது எல்லாத்தையும் பார்த்த நாயகிக்கு காதல் வருது, அப்ப இந்த பாட்டு வருது.

பல்லவி: (காதல் பாடல்களில் பெரும்பாலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே பல்லவி-தான், மாறுபட்ட கருத்தை வலியுறுத்தும் போதுதான் ரெண்டு பல்லவி)

சஹானா சாரல் தூவுதோ...
சஹானா பூக்கள் பூத்ததோ?

சரணம்:1

ஆண்:
என் விண்வெளி தலைக்குமேல் திறந்ததோ
அடடா...
அந்த வெண்ணிலா வீட்டுக்குள் நுழைந்ததோ?
அது என்னுடன் தேனீர் கொண்டதோ?

பெண்:
கனவோ?, நிஜமோ?
காதல் மந்திரமோ?

ஆண்:
ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதலிது...
நூராயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது

(பெண் - பல்லவி...கோரஸ்)

சரணம்:2

பெண்:
தலைமுதல் கால்வரை தவிக்கின்ற தூரத்தை
இதழ்களில் கடந்துவிடு...
உன் மீசையின் முடியென்ற மெல்லிய சாவியால்
புலன்களை திறந்துவிடு...

ஆண்:
பூமிக்கும் வானுக்கும் விரிகின்ற தூரத்தை
பூக்களில் நிறப்பாட்டுமா?
பூக்களின் சாலையில் பூவுன்னை ஏந்தியே
வானுக்கு நடக்கட்டுமா?
ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதலிது...
நூராயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது

கோரஸ்:
தீம் தானனா... தீம் தானனா... தினனனனா...
தீம் தானனா... தீம் தானனா... தினனனனா...
தீம் தானனா... தீம் தானனா... தினனனனா...

இப்ப பாட்ட கேட்டு பாருங்க... படம் அப்படியே நம் கண் முன்னாடி ஓடும். ஒரு நல்ல இயக்குனர் இத சீன் பை சீன் கண்ணுல ஓட்டுனாதான் பின்னாடி செல்லுலாய்ட்-ல ஓட்ட முடியும்.

http://www.youtube.com/watch?v=YKvjPXns3jw&feature=related

மண்டகுள்ள மணியடிக்குது...

தேசிய கட்சிகள் தமிழகத்திற்கு பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை...

திராவிட கட்சிகள் இதுவரை அடித்த கொள்ளை... கூட்டுக் கொள்ளை, குடும்பக் கொள்ளை...

உண்மைதான்... ஆனா இப்ப டிரெண்ட் ரொம்ப மாறிடுச்சி... கொள்ளை அடிச்ச கும்பல் இப்ப கொஞ்சம் செய்யலாமுன்னு பாக்குது...

இப்ப கட்சிய ஆரம்பிச்ச தலிவருங்கோ எல்லாம் இன்ஸ்டண்ட்டா சி.எம் ஆயிடலாமுனு கன்வு கண்டுகிராங்கப்பா... அத்துதான் ஒரே டவுட்டா இருக்குதுப்பா...

அவனுங்க 5 பீரியட்ல போட்ட ஆட்டைய இவனுவோ 5 வருசத்துல போட்டுடுவானுவோ போலருக்கே... டெக்னாலஜி ஈஸ் ஸோ இம்ப்ரூவ்ட்பா... அத்தான் பயமாகீது... கட்சி மொதா கூட்டதுலேயே... பொண்டாட்டி, பொண்ணு, மச்சான், மாமன்-னு என்றி குடுக்க சொல்லோ...

எனக்கு மண்டகுள்ள மணியடிக்குது நைனா...

தவளையின் காதல்...

இரவு நிலவை...
தன் காதலியாக நினைத்து...
கானம் பாடி அழைத்தது...ரிதப்...ரிதப்...

வெட்கிய நிலவு...
மேக மூட்டத்தில் மறைந்தது...
சாரலை தூது விட்டது...சலசல...சலசல...

தவளையே...
உன் கரகரத்த குரலுக்கு இந்த சாரல்... வெண்ணை
மனமொத்த காதலுக்கு மொத்தமாக தருகிறேன்...என்னை.


அமெரிக்காவில்... அடக்க விலை

சேல் ப்ரைஸ் (Sale Price)...ஸ்லிப்ப பார்க்கனும்... சிந்திக்க கூடாது.

நான் முன்பே சொல்லி இருக்கேன்... எனக்கு ஒரு பொருளை வாங்கும்போது அட இது இவ்வளவு மிக அதிகமாக இருக்கேன்னு நினைக்க மாட்டேன்... அதுக்கு பதிலா இந்த பொருள் அந்த விலைக்கு தகுதியான பொருளான்னு பார்ப்பேன்னு. ஆனா அமெரிக்காவுல எப்ப பார்த்தாலும் சேல்... சேல்... சேல். மாதத்தில் குறைந்தது ஒரு சேல் அது எப்படி சாத்தியம் ஆகிறது என நம்ம "அடக்க விலை" ஆராய்ச்சியை இங்கயும் செஞ்சி பார்த்தேன்.

இப்ப நான் "அரசூரில் அடக்க விலை" -க்கு கேட்ட மாதிரி எந்த அம்மாவ இல்ல தத்தாவ போய் கேட்க முடியும்? தேவையே இல்லை... இப்ப என்கிட்ட இருக்கு படிப்பறிவு... பட்டறிவு...இனையம் எல்லாம் இருக்கு. கோபால் பல் பொடி வியாபாரம் போல... இந்தியா, சிங்கபூர், மலேசியா மற்றும் அமெரிக்க ஷாப்பிங்க் அனுபவம் தான்.

சிங்கப்பூர், உலக பொருளாதார சந்தைக்கு பெயர் எடுத்த ஊர். அங்கு ஓரளவுக்கு விலை, தரம் எல்லாம் நிரந்தரம். சரி ஒரு நல்ல பிராண்டட் பொருள எடுத்துக்கொள்வோம்... நைக்/ரீபோக் டி.ஷர்ட், அல்லது சார்லி/ஃபேரன்ஹீட் (C&D) பர்ஃபியூம் இப்படி சில. ஒரு பொருள் சிங்கபூர்ல 60 டாலர்னா அது அமெரிக்கவுல 40 டாலர் இருக்க வேண்டும்... கிட்ட தட்ட 1.5 அயல்னாட்டு பண மாற்றுவிகிதப்படி.

ஆனால் அது அமெரிக்காவில் 80 டாலருக்கு குறையாமல் விற்க்கப்படுகிறது. ஏறக்குறைய இரண்டு மடங்கு... ஏன்?

கொள்ளையடிக்கிறார்களா? இல்லை இல்லவே இல்லை. அமெரிக்காவில் "நோ கொஸ்டீன்ஸ் ஆஸ்க்ட்" ரிட்டர்ன் பாலிசி... கஸ்டமர் ஸேட்டிஸ்ஃபேக்ஸன். இப்ப புரியுதா? கடையில் எப்படி நீங்க திருப்பி கொடுக்கும்போது கேள்வி கேட்பது இல்லியோ... அதே மாதிரி கஸ்டமராகிய நம்மலும் அவங்க அதிகம் வெச்சு விக்கிற விலைய பத்தி கேள்வி கேட்க கூடாது. லாஜிக் கரெக்ட்டா?

லாஜிக் இருக்கட்டும்... அடக்க விலை?

இன்னுமா புரியல? சேல் ப்ரைஸ்தான் காஸ்ட் ப்ரைஸ். அதனாலதான் மாதத்தில் குறைந்தது ஒரு நாள் ஏதாவது ஒரு சேல் நடக்குது. கடைகாறார்களின் அடக்க விலை ஃபார்முலா இதுதான். அவங்க ஸ்டாக் பண்ணும் பொருளில் பாதி விற்றாலே போதும். முழு ஸ்டாக்கோட ஆர்.ஓ.ஐ கிடைச்சுடும். நீங்க பொருள் வேண்டாம் என்று திருப்பி கொடுத்தால்... சந்தோஷம் கொடுங்க கொடுங்க நாங்க 50% சேல்ல இதையும் வித்துடுவோம்னு சொல்லி வாங்கி கொள்வார்கள்.

குறள்: (கற்க கசடற...)
பாருங்க சேல்பாருங்க சேல் போட்டபின்
வாங்குங்க தேவைக் கேற்ப.

பி.கு: ஏம்ப்பா நான் ரொம்ப ஏமாந்த சோனகிரிப்பா... சேல் பார்க்க தெரியாது... (ஹி...ஹி உபயோகபடுத்துன) பொருள திறுப்பி கொடுக்க மனசு வறாது... சாதாரண நாள்ல எனக்கு பாதி விலைல கொடுங்கப்பா.

அரசூரில்... அடக்க விலை

காஸ்ட் ப்ரைஸ் (Cost Price)...கணக்கு பண்ணனும்... கடுப்பாவ கூடாது.

எனக்கு ஒரு பொருளை வாங்கும்போது அட இது இவ்வளவு மிக அதிகமாக இருக்கேன்னு நினைக்க மாட்டேன்... அதுக்கு பதிலா இந்த பொருள் அந்த விலைக்கு தகுதியான பொருளான்னு பார்ப்பேன். இது ஏதோ இப்பதான் தோனிச்சான்னு கேட்க கூடாது... சின்ன பிள்ளையா இருக்கும்போதே பண்ண ஆரம்பிச்ச கணக்கு... எங்க வீட்டுல பால், மோர், தயிர், வெண்ணை மற்றும் கீரை, வெண்டிக்கா, முருங்கக்கா இதெல்லம் விற்பாங்க... இது அம்மா/பாட்டி டிவிஸன். நெல், மாங்கா, தேங்கா, மரம் மட்டை... இது தத்தா டிவிஸன்.

எங்கம்மா வித்த கமாடிட்டியில மினிமம் விலை 10 காசு... ஒரு வட்டா மோரு அதுல மூன்று கரண்டி தயிரு (நோட் டவுன் த ஃபார்முலா 1+3). இங்க அந்த வட்டாவோ இல்ல கரண்டியோ எந்த மெட்ற்றிக் ஸ்டேண்டர்டு-க்கும் உட்பட்டது கிடையாது. ஆனா பாலுக்கு அப்படி கிடையாது, கால் லிட்டர் அலவு குவலை இருக்கும். அம்மாவிடம் கேட்பேன்... நீ இல்லாட்டி நான் எப்படி விற்கனும்/குடுக்கனும்-னு? எனக்கு கவலை என்னன்னா எங்க நிறைய கொடுத்து குடும்ப சொத்து குறைஞ்சிட போவுதோன்னு. அம்மா சொல்லுன்வாங்க என்ன பெரிய விஷயம் 10 காசுக்கு 1+3, 50 காசுக்கு 5+15 (அப்லை த ஃபார்முலா)... அப்புரம் கொஞ்ச மோரோ இல்ல 2 கரண்டி தயிரோ கூட போட்டு கொடுக்க வேண்டியது தான். சரி சேல்ஸ தெரிஞ்சி கிட்டாச்சி... அடக்க விலை?

நான்... அம்மா ஏதோ மாடு விலை இவ்வளவு, மட்டுக்கு வைக்கோல், புண்ணாக்கு, தீவனம் இத்யாதி... இத்யாதி... எல்லாத்தையும் "கூட்டி(+)" மாடு கறக்கிற பாலுக்கு ஒரு விலைய போட்டு அதால "வகுத்தா(/)" வரும்பான்னு சொல்லுவாங்க என்று நினைசேன்... ஆனா அவங்க என்ன சொன்னாங்க தெரியுமா? ஊருல என்ன விலை விக்குதோ நாமும் அந்த விலைக்கு விக்கிறோம்னு சொல்லிட்டாங்க. (மனசுக்குள் சொல்லிகிட்டேன் குடும்ப சொத்து குறைய நீதான் காரணமா?)

என மனசு அடங்க வில்லை, எப்படியாவது "அடக்க விலை"-யை கண்டு பிடித்து தீருவது என்று முடிவு செய்தேன். தாத்தாவிடம் சென்று கேட்டேன், தத்தா நம்ம சுருட்ட மாடு (ஒவ்வொரு மாட்டுக்கும் ஒரு பேர் உண்டு) என்ன விலை (தாத்தாவுக்கு டவுட் வந்துடுச்சி... என்ன டவுட்டுனு பிறகு சொல்லுகிரேன்) அது வருசத்துக்கு எத்தனை கட்டு வைக்கோல் திங்கும்? எவ்வளவு புண்ணாக்கு வாங்குவோம்? எவ்வளவு பால் கறக்கும்... அப்ப உள்ள அறிவுக்கு ஆல் டேட்டா கலெக்ட் பண்ணியாச்சு... விவரம் இதோ.

செலவு:
மாட்டின் விலை...2000.00, வைக்கோல்...100.00, புண்ணாக்கு... 1000.00 ஆக மொத்தம் 3100.00

வரவு:
சுருட்ட காலைல 2லி, மாலைல 2லி மொத்தம் 4 லி கறக்கும். சரிக்கு சரி தண்ணி ஊத்தலாம்னு (அதாவது 1லி பாலுக்கு 1லி தண்ணி) அம்மா சொல்லுவாங்க (பாட்டி சொல்லுவாங்க 1-க்கு 2 ஊத்துன்னு, ஹும் எங்க அம்மாவுக்கு ஊருல நல்ல பேரு... மாமியார்கிட்ட கெட்ட பேரு), ஆக 8லி. சுருட்டையோட குழந்தைப்பேரு காலம் 4 மாசம்... நோ மில்கிங்க்...
8(மாதம்) x 30 (னாள்) x 8(லி) x 2.00... 3840.00

யுரேகா... அம்மா பாலுக்கு அடக்க விலைய கண்டு புடிச்சிட்டேன்... இருந்தாலும் தவிடு, புல்லு, மாடு மேய்க்க ஆளு இதுகெல்லாம் எனக்கு விலை போட தெரியலம்மா... பெருசா ஒண்ணும் லாபம் இல்லையேன்னு கவலை பட்டேன். அம்மா சொன்னாங்க... அதுக்குதாண்டா செல்லம் உன்னை எப்ப பார்த்தாலும் படி... படின்னு சொல்லுரேன்.

பி.கு: நான் இருந்த நிலைமைய பார்த்து அம்மா சொன்னாங்க... நமக்கு லாபம்தான்... நீ மாட்டோட விலைய மொத்தமா போட்டுருக்க, அப்புறம் சுருட்ட வருஷா வருஷம் கண்ணு குட்டி போடும் அது நம்ம முதலுக்கு கிடைக்கிற மறு முதலீடு. (ஆகா இதுதான் ரெக்கரிங்க் டெப்பாசிட்டா?)

ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே - 3

"எலிமண்டி"-ல் இன்னும் ஒரு வருஷம் பாக்கி இருக்கு, கடைசி வருசம். அடுத்த வருஷம் எப்படியும் ஹை-ஸ்கூலுல சேர்த்துடுவாங்க... ஸோ எஞ்சாய் ராஜா எஞ்சாய்.

5-பி, 'அரக்கன்' பூபதி கிளாஸ் டீச்சர். நெற்றியில் திருனீரை பூசியிருந்தால் அடி நிச்சயம். அடுத்து முத்து சார்... என் கணக்கு வாத்தியார், திருனீரு பூசவில்லை என்றால் அடிப்பார்... கரும்பலகையிலிருந்து "ஜாக்பீஸ்" தூலை நெற்றியில் இட்டுக்கொள்வோம்.

சரி இங்க ஒன்னும் விஷேசம் இல்லையா? இருக்கே. அட்வென்ச்சர் பண்ணியிருக்கேன்ல. மதியம் வீட்டுல சாப்பிட்டரமோ இல்லியோ... லன்ச் பிரேக்ல விளையாடுரது ரொம்ப ஸ்பெசல்... கட்டிங்க் போட்டு ஓடுரதுல நான் பலே கில்லாடி... ஆனா என் போராத நேரம் அன்று சறுக்கு மரத்துல ஏறிட்டேன், எதிரி ரெண்டு பேரு வலைச்சிட்டானுங்க... சும்மாவா அப்பிடியே மீன் மாதிரி வளைஞ்சி பின்னாடி வந்தவங்கிட்டே இருந்து தப்பிச்சி முன்னாடி வந்தவன் மண்டைல ஒரே இடி... நடராஜ் மண்ட பனால்... ஒரே ரத்தம். பயத்துல என்ன பண்ணருதுன்னு தெரியல... அவன என் பிரண்ட்ஸ் ஆஸ்பத்ரிக்கு அழைத்து சென்று விட்டார்கள். திடீரென்று என் முன்னே பக்கத்து ஹை-ஸ்கூலில் படிக்கும் என் அண்ணன் என் முன்னால்... சரி எவனோ போட்டு கொடுத்த் விட்டான், இன்னிக்கி அடி பின்ன போரான்னு நினைச்சா... டேய் உன் மண்ட உடஞ்சி இருக்குடா வா ஆஸ்பத்ரிக்கு போவோம்னு சைக்கிளில் அள்ளிகிட்டு போனான். இன்றும் மறக்க வில்லை அந்த நாள், ராஜாமணி கம்பௌண்டர்... மயக்க மருந்து இல்லாமலே புருவத்தில் தையல் போட்டார். இப்போ எனக்கு ரெண்டு புருவத்துக்கு ஒரு புருவம் இலவசம்.

ஸ்போர்ட்ஸ்: தவ்வி கடித்தல் - நூலுல மேரி பிஸ்கட்-ட கட்டி ஆட்டுவாங்க... குறிபார்து கடிக்கனும்... அட அமெரிக்காவுல இததான் "பினாட்டா"-னு சொல்லுறாங்க...இது தவ்வி அடித்தல்.

சாக் ரேஸ் - என்னுடைய ஆல் டைம் பேவரிட்...எங்க வீட்டு களத்துல கடுமையா டிரைனிங்க் எடுப்பேன்.... மூனு வருசம் (ஹாற்றிக்) முதல் பரிசு வாங்குனேன்.

"எலிமண்டி" எலிமண்டி-ன்னு சொன்னனே அது என்னன்னு சொல்லாட்டி நல்லா இருக்காது...அது எலிமெண்டரி ஸ்கூல்... இப்ப எய்டெட் மிடில் ஸ்கூல் (உதவிபெரும் நடுனிலைப் பள்ளி) ஆயிடுச்சி.

ஞாபகம் வருதே.... ஞாபகம் வருதே - 2

அந்த "எலிமண்டி" ஸ்கூலுல ஐந்து வருஷம் படிச்சேன். நண்பர்களில் பெரிய மாற்றம் இல்லை, அதே கூட்டம், அதே கொட்டம் வேற வேற வகுப்பறை.

3-பி, ராமன் ஸார். மீண்டும் ஒரு நல்ல சார். இங்க நான் ஒரு சுவராஸ்யமான ஒரு சேதி சொல்லியாகனும். மதிய உணவு - முழு நேர பள்ளி, 1 மணி நேர உணவு இடைவேளை, கட்டாயம் வீட்டுக்கு வந்து சாப்பிட்டுட்டு போகனும். அம்மாவிடம் கெஞ்சி கூத்தாடி ஓறீரண்டு நாட்கள் டிஃபன் பாக்ஸ் சாப்பாடு வேணும்னு கேட்பேன். இதுல மேட்டர் என்னன்னா எடுத்துட்டு போன சாப்பாட்ட எவன் கிட்டயாவது கொடுத்துட்டு ஸ்கூல்ல போடுவாங்களே அந்த மதிய உணவ வாங்கி சாப்பிடுவேன். நான் படிச்சப்ப ரொம்ப ஸ்ட்ற்றிக்ட், சாப்பிட அட்டெண்டன்ஸ் எடுப்பாங்க, அதுல வீரா சார் ரொம்ப கடுமையானவரு. பரமசிவம் சாரும் ராமன் சாரும் என்ன ஒன்னும் சொல்ல மாட்டாங்க... டேய் "வேணு மகனே" இரு உங்க அப்பாகிட்ட சொல்லுரேன்னு மிரட்டிடுட்டு போயிடுவாங்க.

என்னதான் அரிசி மக்க வாசனை அடிச்சாலும்... நான் சாப்பிட்ட அந்த "வரட்டு கோதுமை உப்புமா", சுட சுட "சாம்பார் சாதம்" - இன்னும் என் நினைவில் நீங்காதவை.

4-பி, ஆக்கூர் சார், பெயர் செல்வராஜ்-னு நினைக்கிறேன். எனக்கு தெரிந்து ஆங்கிலம் அதிகம் சொல்லி கொடுத்தவர், அதற்க்காக நிறைய அடியும் கொடுத்தவர், கணக்கு சொல்லி கொடுக்க பாலு சார். படிப்பில் போட்டி இங்குதான் ஆரம்பம்... தாமரை டீச்சர் மகன் ஜவஹர், நான் மற்றும் டெயிலர் மகன் வாசன்... முதல் மூன்று ரேங்கை மொத்த குத்தகைக்கு எடுத்திருந்தோம்.

ஞாபகம் வருதே....ஞாபகம் வருதே - 1

என் பொண்ணு பிரி-ஸ்கூல் என்றதும் என் ஞாபகத்துக்கு வந்தது எங்க "எலிமண்டி" ஸ்கூலுதான். முப்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால்...

என் 1-ம் வகுப்பு டீச்சரின் பெயர் "குண்டு டீச்சர்" (ஜெயலஷ்மி), பெயரை பார்த்த உடனே உங்களுக்கு தெரிஞ்சி இருக்கும்... பெரிய உருவம், காலைல வந்து நாற்காலியில் உட்கார்ந்தா மதியம் சாப்பட்டுக்குதான் எழுந்திருப்பாங்க. அருமையா பாடம் சொல்லி தருவாங்க. வாளு பையன்கள அவங்க அடிக்கிற விதம் இருக்கே... நெய்வேலி காட்டாமணி செடி... நெடு நெடுன்னு வளர்ந்து இருக்குமே, தினம் ஐஞ்சு ஓடச்சி கொண்டாந்து வைக்கனும்... அத வச்சு சும்மா பின்னு பின்னு பின்னுவாங்க. அட நான் நல்ல பிள்ளைங்க... ஃபர்ஸ்ட் பெஞ்ச்.

எனது நண்பர்கள்... ரவி, செந்தில், ஜவஹர், இங்கர்சால், காசினாதான் மற்றும் பலர். நாங்க எல்லாம் 1-வது பி செக்ஸன், ஹி...ஹி...எங்க ஸ்கூலுல 'எ' செக்ஸன் பெண்களுக்கு. ஸ்கூலுக்கு பின்னாடி வாய்க்கால், சமயத்துல ஒன்னு, ரெண்டு, மூனு போக ரொம்ப வசதியா இருக்கும். மத்தபடி என்ன மார்க் வாங்கனேன்னு எல்லாம் ஞாபகம் இல்ல.

சொல்ல மறந்துட்டனே... என் பேரு இளங்கோவனாம்... ஸ்கூலுல சேரும் போது "உன் பேரு என்னன்னு" கேட்டதுக்கு ராஜா-ன்னு நான் சொன்னதால அதுவே இருக்கட்டும்னு சொல்லிட்டாங்களாம் என் அக்கா.

2-பி, 1-அம் வகுப்பு மாதிரி இல்ல இப்ப ரெண்டு சார், ஒன்னு கிளாஸ் டீச்சர் பரமசிவம் சார், இன்னொன்னு டிரில் சார் அவர் பெயர் ராஜேந்திரன். பரமசிவம் சார் தான் 2-ம் வகுப்பு சார்ல ரொம்ப நல்ல சார், யாரையும் அடிக்க மாட்டர். நான் அவர்கிட்ட நிறைய படிப்பு கத்துகிட்டேன். அந்த இங்கர்சால் இருக்கானே... அவந்தான் என்கிட்ட தகறாரு பண்ணுவான், அடிப்பான், கிள்ளுவான்... அவன நான் ஆளு வெச்சு (என் அண்ணன்) அடிப்பேன்.

யாருக்காக?

சிங்கப்பூரில் இருந்த போது நிறைய பிளாக் எழுத வேண்டும் என்று ஒரு பெரிய பட்டியல் தயார் செய்தேன். தமிழில் தட்டச்சு செய்ய முரசு அஞ்சல் கூட வாங்கியாகி விட்டது... ஏனோ வேலை நேரம் போக கணணியை பார்த்தாலே கடும் கோபம். சரி போ பிறகு பார்த்து கொள்ளலாம் என பல ஆண்டுகள்... ஒன்று இரண்டு அல்ல பத்து ஆண்டுகள் ஒடிவிட்டது.

அட இப்ப என்ன வந்துச்சு... எழுத வந்துட்டன்னு கேட்கறீங்களா? என் பொண்ணுதான் காரணம்... தினசரி பெட் டைம் ஸ்டோரி சொல்லனும். தினம் ரெண்டு கதை சொல்லனும், ஒன்னு நூலகங்களில் இருந்து எடுத்து வந்த புத்தகங்களில் இருந்து... அடுத்து "அப்பாவின் லைப்ரரில என்ன இருக்கு"? என் பெண்ணின் "அப்பாவின் லைப்ரரில என்ன இருக்கு"? கேள்விக்கு நான் சொன்ன பதில்... "அப்பாகிட்ட பழைய நினைவுகள்தான் இருக்கு"... அதுல உனக்கு என்ன வேணும்?

கொஞ்சம் கூட தாமதிக்கமல் அடுத்த கேள்வி, நீங்க என்ன பண்ணுனீங்க பிரி-ஸ்கூலுல? உங்க அம்மா என்ன பண்ணுவாங்க? உங்க அப்பா என்ன பண்ணுவாங்க? உங்கள மாதிரி கதை சொல்லுவாங்களா?

போதும்... சும்மா கேள்வி கேட்காம பதில சொல்லுங்கன்னு திட்டாதீங்க...பதில் எல்லாம் ஞாபகம் வருதே....ஞாபகம் வருதே.

அமெரிக்கா பராசக்தி

இனையதளத்தில் 'கம்ப்யூட்டர் பராசக்தி', 'சாஃப்ட்வேர் பராசக்தி' -னு சில பராசக்திகள்... இது ஒரிஜினல் பராசக்தியில் 'இம்ப்ரஸ்' ஆகி... அமெரிக்க அனுபவத்தில் 'கம்ப்ரஸ்' ஆன என் அனுபவத்தில் உருவான பராசக்தி... எவர் மனதையும் புண்படுத்த அல்ல.

அமெரிக்கா, லேண்ட் ஆஃப் ஆபர்சுனிட்டி... விசித்திரம் நிறைந்த பல நாட்டவரை உள்ளே விட்டிருக்கிறது, புதுமையான மனிதர்களை கண்டு இருக்கிறது, ஆனால் இந்த தேசியின் கூவல் விசித்திரமானதும் அல்ல, கூவும் நான் புதுமையான தேசியும் அல்ல.

அமெரிக்கா ஆசையிலே... ஒரு சாதாரண தேசியாக H1-ல் வந்தவன் தான் நான், இரண்டு டாலர் அதிகம் கிடைக்கிறது என்பதர்க்காக அடிக்கடி எம்ப்லாயரை மாற்றினேன், இரண்டு மூன்று H1 அப்லை பண்ணி லாட்டரிக்கு வழிவகுத்தேன், கிரீன் கார்டு பிராஸஸை ரிட் ராகேஸனுக்கு தள்ளினேன், இப்படியெல்லாம் குற்றம் சாற்றப்பட்டிருகிறேன் நான்.

நீங்கள் எதிர்பார்த்து இருப்பீர்கள் இதையெல்லாம் நான் மறுக்க போகிறேன் என்று, இல்லை நிச்சயமாக இல்லை.

இரண்டு டாலர் அதிகம் கிடைக்கிறது என்பதர்க்காக அடிக்கடி எம்ப்லாயரை மாற்றினேன்... இரண்டு டாலர் அதிகம் கிடைக்கிறது என்பதர்க்காக அல்ல, கிளையண்டிடம் 90 டாலர் வாங்கி எனக்கு 33 கொடுத்து... நாம் கொடுப்பதைதான் வாங்கிகொள்ள வேண்டும் என்று மார்தட்டினார்களே அந்த எம்ப்ளாயர்களின் கொட்டத்தை அடக்க வேண்டும் என்பதர்க்காக.

இரண்டு மூன்று H1 அப்லை பண்ணி லாட்டரிக்கு வழிவகுத்தேன்... ஏன்? அதனால் இன்னொரு சக தேசிக்கு கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்பை கெடுக்க அல்ல... என்றோ ஒரு நாள் என்னுடைய தற்போதைய எம்ப்ளாயரால் வேலை போய்... நான் என் சோற்றுக்கு லாட்டரி அடிக்க கூடாது என்பதர்க்காக.

உனக்கு ஏன் இவ்வளவு அக்கறை... தேசிகள் யாருக்கும் இல்லாத அக்கறை என்று கேட்பீர்கள்?

நானே பாதிக்கப்பட்டேன்... நேரடியாக பாதிக்கப்பட்டேன். சுய நலம் என்பீர்கள்... என் சுய நலத்திலே பலர் குடும்ப நலமும் கலந்து இருக்கிறது. என் வேலையை பற்றி மட்டுமே கவலாப்படாமல்... எல்ல தேசிகளுக்காகவும் கவலைப்படேன், தனக்கு சாப்பிட உணவு கிடைத்தால் ஊரையே கூப்பிடுமே... அந்த காக்கையை போல.

என்னை குற்றவாளி என்கிறீர்களா?... இந்த குற்றவாளியின் வாழ்க்கையிலே கொஞ்ச தூரம் பின்னோக்கி பார்த்தால் அவன் கடந்து வந்துள்ள காட்டாறு எவ்வளவு என்று பார்க்க முடியும். தானே முன்வந்து சம்பளத்தை உயர்த்தி கொடுக்கும் எம்ப்ளாயர் இல்லை என் பாதையில்... அலுவலக பாலிட்டிக்ஸில் படாதபாடு பட்டேன் நான்... தங்கமானவன் என்று தட்டிக் கொடுக்கவில்லை என்னை... தத்தாரிகளை தாண்டி வந்து இருக்கிறேன் நான்.

கேளுங்கள் என் கதையை, இவன் தேசி இல்லை பரதேசி என்று பரிகாசம் செய்யும் முன் கேளுங்கள் என் கதையை, தமிழ் நாட்டிலே... மயிலாடுதுறையிலே பிறந்தவன் நான். பிறக்க ஒரு நாடு... பிழைக்க ஒரு நாடு. தமிழ் நாட்டின் தலை எழுத்திற்கு நான் விதிவிலக்கா? சிங்கப்பூர் என்னை சீராட்டி வரவேற்றது, உடம்பை வளர்த்தது, உயர்ந்தவனாக்கியது.

சரி அமெரிக்காவையும் ஒரு எட்டு பார்த்துவிடலாம் என்று அமெரிக்கா வந்தேன். லாட்டரி H1-ஆல் கலலத்துபோய் கிடக்கிறார்களே இந்த மேன்பவர் கம்பெனிகள்... அவர்கள் விரித்த வலையில் விழுந்த ஆயிரக்கணக்கானவர்களில் நானும் ஒருவன்... இண்டர்வியூ நன்றாக செய்தும் ரேட் சரியில்லை என்று பெஞ்சில் உட்கார வைக்கபட்டேன்... நல்ல ரேட்டிற்க்காக சீனியாரிட்டியை பறிகொடுத்தேன்... மனம் உடைந்தேன்... கடைசியில் கன்சல்ட்டண்டாக மாறினேன்.

காண வந்த அமெரிக்காவை கண்டேன்... அகண்டு விரிந்த மாஹானங்களாய்... ஆம் தறிகெட்ட தட்ப வெட்ப நிலையிலும், நாலு வேறுபட்ட நேரங்களுடனும். தரையிறங்கிய ஊரோ 'சிகாகோ'... அடித்தது குளிர்... என்னை 'சிக்காக்க'. தடுமாறிவிட்டது டிராஃபிகள் வெதரில் வளர்ந்த உடம்பு.

கூட்டாளிகளின் தொல்லை, குடிக்க சொன்னார்கள். எனக்கு பிடித்ததோ 'கல்யாணி' (பீர்)... கூட்டாளிகள் 'ஹாட்'டுக்கு அலைந்தார்கள்... கல்யணிக்காக நான் அலைந்தேன். கண்டுபிடிதோம் ஒரு கடையை... கல்யாணிக்காக காத்திருந்தனர்... அதில் காளையர் பலர், கண்ணியர் சிலர். கல்யாணியின் டிமாண்டை பார்த்து காசு கூட கேட்டான் அந்த கடைகாரன்.

சம்பள பாக்கியில் சம்பத்தப்பட்டு லேபர் கோர்ட்டில் பாப்பர் சொல்லி நிற்க்கிறார்களே இந்த Inc கம்பெனிகள்... பகட்டு வார்த்தையால் பலபேரை பதம் பார்த்தவர்கள்... என்னையும் மயக்க பார்த்தார்கள்... என் நண்பர்கள் தடுத்திருக்காவிட்டல் நானும் மாட்டியிருப்பேன். அமெரிக்க கம்பெனிகள் காப்பாற்ற வந்தன என்னை... பிரதி உபகாரமாக 'டிராவலிங்' பண்ண வேண்டும் என்று சொன்னார்கள். அதில் தலையாய பங்கு வகித்த கம்பெனி IBM. நாலு நால் வேலை பார்த்தால் போதும் என்றான்... ஆனால் அந்த நாலு நாலில் என் நாடி நரம்பை எல்லாம் கயட்டி விட்டான் அவன் கிளையண்ட்.

IBM-ல் வேலை என்ற பெருமை... விட்டு வர மனமில்லை, குடும்பத்தை விட்டு அலையவும் விருப்பம் இல்லை... அதானல் 'டிராவலிங்கை' கைவிட்டேன். விருப்பமான வேலையை விடுவது விந்தையல்ல... உலக உத்தமர் காந்தி... அகிம்சா மூர்த்தி... பாரட்-லா படித்தவர்... அவரே தேச சுதந்திரத்திற்க்காக வக்கீல் தொழிலை விட்டு இருக்கிறார்.

வேலை என்னை விரட்டியது... ஆரம்ப பிராஜக்ட் ஆர்க்கன்ஸாசில் என்றான்... அங்கு ஓடினேன். பக்கா பிராஜக்ட் பாஸ்டனில் என்றான்... பறந்து ஓடினேன். ஜாப் ரிஸர்ஸன் என்னை பயமுறுத்தியது... ஓடினேன்... ஓடினேன்... அமெரிக்காவின் 50 மாஹானங்களுக்கும் ஓடினேன். அந்த ஓட்டத்தை நிறுத்தி இருக்க வேண்டும்... என் வாட்டத்தை போக்கி இருக்க வேண்டும் அந்த கிரீன் கார்ட் பிராஸஸ் பண்ணும் INS. EAD கொடுத்தார்களா? EAD கொடுத்தார்களா H4-ல் உள்ளவர்களுக்கு?

(ஒருவர் இடை மறித்து: ஹும்..ஹும்...இவர் கிரீன் கார்டுக்காக கூவ வில்லை... யாரோட EAD-க்காக கூவுகிறார்)

இல்லை... யாரோட EAD-யோ இல்லை... அதுவும் என் கூவல்தான்... என் மனைவியின் கூவல். மனைவியின் படிப்பை, திறமையை வீணடிக்காமல் துட்டு பார்க்க நினைப்பதில் என்ன தவறு?

தகுதி உடையவர்களை EAD-யை காரணம் காட்டி வீட்டில் உட்கார வைத்தது ஒரு குற்றம், தேசத்திற்கு திரும்பி விட்ட R2I-யை கணக்கில் கொண்டுவராமல் பழைய கேப் கவுண்டை காட்டுவது இன்னொரு குற்றம். இத்தனை குற்றங்களுக்கும் காரணம் யார்? யார் காரணம்?

H4 ஆண்டிகளுக்கு EAD கொடுக்காதது யார் குற்றம்? H1-ல் வந்தவனின் குற்றமா? அல்லது ஒருவருக்கே பல H1 தரும் INS-ன் குற்றமா?

பணம் பறிக்கும் Inc கம்பெனிகளை வளர விட்டது யார் குற்றம்? அமெரிக்கா வந்தால் போதும் என்று வரும் தேசிகளின் குற்றமா? அல்லது கஞ்சமாக பலர் நெஞ்சை மிதிக்கும் வஞ்சகர்களின் குற்றமா?

பிரையாரிட்டி டேட்டை பிண்ணுக்கு தள்ளியது யார் குற்றம்? கோட்டா என்ற பெயரில் அப்லிகேஸன் 'துட்டை' உயர்த்தி தேசியிடம் 'ஆட்டை'ய போடும் INS-ன் குற்றமா? அல்லது 'துட்டை' வாங்கி கொண்டு பதிலே பேசாது தேசியின் நெற்றியில் 'பட்டை'யை போடும் வக்கீலின் குற்றமா?

இந்த குற்றங்கள் திறுத்தப்படும் வரை இந்த H1, H4-களின் கூவல் குறைய போவது இல்லை. இதுதான் நான் இங்கு படித்த பாடம், பட்டறிவு...பரிதாபமான அமெரிக்க அனுபவம்.

பராசக்தி

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் பேசி புகழ் பெற்ற அந்த ஏழு நிமிட வசனம்... நீங்கள் படித்து மகிழ...

நீதி மன்றம், விசித்திரம் நிறைந்த பல வழக்குகளை சந்தித்து இருக்கிறது, புதுமையான மனிதர்களை கண்டு இருக்கிறது, ஆனால் இந்த வழக்கு விசித்திரமும் அல்ல, வழக்காடும் நான் புதுமையான மனிதனும் அல்ல. வாழ்க்கை பாதையிலே, சர்வ சாதாரணமாக தென்படக் கூடியவந்தான் நான்.

கோவிலிலே குழப்பம் விலைவித்தேன், பூசாரியை தாக்கினேன், இப்படியெல்லாம் குற்றம் சாற்றப்பட்டிருகிறேன் நான். நீங்கள் எதிர்பார்த்து இருப்பீர்கள் இதையெல்லாம் நான் மறுக்க போகிறேன் என்று, இல்லை நிச்சயமாக இல்லை. கோவிலிலே குழப்பம் விளைவித்தேன்... கோவில் கூடாது என்பதர்க்காக அல்ல... கோவில் கொடியவ்ரின் கூடாரமாக இருக்க கூடாது என்பதர்க்காக. பூசாரியை தாக்கினேன்... அவன் பக்தன் என்பதர்க்காக அல்ல... பக்தி பகல்வேசம் ஆகிவிட்டதே என்பதை கண்டிப்பதர்க்காக.

உனக்கு ஏன் இவ்வளவு அக்கறை... உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை என்று கேட்பீர்கள்? நானே பாதிக்கப்பட்டேன்... நேரடியாக பாதிக்கப்பட்டேன். சுய நலம் என்பீர்கள்... என் சுய நலத்திலே பொது நலமும் கலந்து இருக்கிறது. ஆகரத்திற்க்காக அழுக்கை சாப்பிட்டு தடாகத்தை சுத்தப்படுத்துகிறதே மீன்... அதை போல.

என்னை குற்றவாளி என்கிறார்களே... இந்த குற்றவாளியின் வாழ்க்கையிலே கொஞ்ச தூரம் பின்னோக்கி பார்த்தால் அவன் கடந்து வந்துள்ள காட்டாறு எவ்வளவு என்று பார்க்க முடியும். பாட்டொலிக்கும் குயில்கள் இல்லை என் பாதையில்... படமெடுக்கும் பாம்புகள் நெளிந்து இருக்கின்றன. தென்றலை தீண்டியது இல்லை நான்... தீயை தாண்டி இருக்கிறேன்.

கேளுங்கள் என் கதையை, தீர்ப்பு எழுதுவதர்க்கு முன் கேளுங்கள் என் கதையை, தமிழ் நாட்டிலே... இந்த திருவிடத்திலே பிறந்தவன் நான். பிறக்க ஒரு நாடு... பிழைக்க ஒரு நாடு. தமிழ் நாட்டின் தலை எழுத்திற்கு நான் விதிவிலக்கா? ரங்கூன் என் உயிரை வளர்த்தது, உயர்ந்தவனாக்கியது. திருமண கோலத்தில் இருக்கும் என் தங்கையை காணவந்தேன், மோசடி வழக்கில் ஈடுபட்டு குற்றவாளி கூண்டிலே நிற்கிறாலே இதோ இந்த ஜாலகாரி ஜாலி, இவள் வலையிலே விழுந்த ஆடவர்களில் நானும் ஒருவன். பணப்பெட்டியை பறிகொடுத்தேன்... பட்டினியில் திரிந்தேன்... பசியால் மெலிந்தேன்... கடைசியில் பைத்தியமாக மாறினேன்.

காண வந்த தங்கையை கண்டேன்... உயிர் அற்ற ஓவியமாக... ஆம் கைம்பெண்ணாக. தங்கையின் பெயரோ கல்யாணி... மங்களமான பெயர்... ஆனால் கழுத்திலோ மாங்கள்யம் இல்லை. செழித்து வாழ்ந்த குடும்பம் சீரழிந்து விட்டது, கையிலே பிள்ளை... கண்ணிலே நீர்... கல்யாணி அலைந்தால், கல்யாணிக்காக நான் அலைந்தேன். கல்யான்ணிக்கு கருணை காட்டினார்கள் பலர், அவர்களில் காளையர் சிலர் கைமாறாக அவளின் காதலை கேட்டனர். கொலை வழக்கில் சம்பந்தப்பட்டு கைதியாக நிற்கிறானே இதோ இந்த கொடியவன் வேலு... இவன் பகட்டால் மயக்க முயன்றான் என் தங்கையை. நான் தடுத்திருக்காவிட்டல் அப்போதே தற்கொலை செய்து கொண்டிருப்பால் என் தங்கை.

கடவுள் பக்தர்களும் காப்பற்ற வந்தார்கள் கல்யாணியை... பிரதி உபகாரமாக கேட்டார்கள் அவள் கடைக்கண் பார்வையை... அவர்களில் தலைமையானவன் இதோ இந்த பூசாரி... கல்யாணியின் கற்பை காணிக்கையாக கேட்டிருக்கிறான்... பராசக்தியின் பெயரால்... உலக மாதாவின் பெயரால். கல்யாணி புழுவாக துடித்தபடியாவது இருந்திருப்பால் இந்த உலகத்தில்...அவளை தற்கொலை செய்ய தூண்டியது இந்த பூசாரிதான்.

தன் குழந்தையை இந்த இறக்கமற்ற உலகத்தில் விட்டு செல்ல அவள் விறும்பவில்லை... ஆதரவற்று துடித்து இறப்பதை விரும்பவில்லை அவள், அதனால் அவளே கொன்றுவிட்டால். விறுப்பமானவர்களை கொல்வது விந்தையல்ல... உலக உத்தமர் காந்தி... அகிம்சா மூர்த்தி... ஜீவகாருன்ய சத்தியசீலர்... அவரே நோயால் துடித்து கொண்டிருந்த கன்றுகுட்டியை கொன்றுவிட சொல்லி இருக்கிறார் அது கஷ்டமுருவதை காணசகிக்காமல். அதே முறையைதான் கையாண்டு இருக்கிறாள் கல்யாணி. இது எப்படி குற்றமாகும்? வெளி நாட்டில் இருந்து திரும்பிய ஒரு தமிழனுக்கு வாழ வழியில்லை... தமிழ் நாட்டிலே பிறந்த ஒரு பெண்ணுக்கு வாழ்வதற்கு பாதுகாப்பு இல்லை...என் தங்கை மட்டும் கொஞ்சம் விட்டு கொடுத்திருந்தால்... கோடிஸ்வரன் வீட்டு பள்ளியறையிலே ஒரு நாள்... மானத்தை விலை கூறி இருந்தால் மாளிகை வாசியின் மடியேலே ஒரு நாள்... இப்படி ஓட்டியிருக்கலாம் நாட்களை.

அதைத்தானா இந்த நீதி மன்றம் விரும்புகிறது? பகட்டு என் தங்கையை விரட்டியது... பயந்து ஓடினால்... பணம் என் தங்கையை துரத்தியது... மீண்டும் ஓடினால்... பசி என் தங்கையை பயமுறுத்தியது... ஓடினால் ஓடினால் வாழ்க்கையின் ஓரத்திற்க்கே ஓடினால். அந்த ஓட்டத்தை தடுத்திருக்க வேண்டும், அவள் வாட்டத்தை போக்கியிருக்க வேண்டும் இந்த சட்டத்தை நீட்டுவோர். வாழ விட்டார்களா? வாழ விட்டார்களா? என் தங்கை கல்யாணியை?

(ஹும்..ஹும்...குற்றவாளி...யார் வழக்கிற்கோ வக்கீலாகிறார்)

இல்லை... யார் வழக்கிற்கும் இல்லை... அதுவும் என் வழக்குதான்... என் தங்கையின் வழக்கு... தங்கையின் மானத்தை அழிக்க எண்ணிய மாபாவிக்கு புத்தி புகட்ட அண்ணன் ஓடுவதில் என்ன தவறு? கல்யாணி தற்கொலை செய்ய முயன்றது ஒரு குற்றம், குழந்தையை கொன்றது ஒரு குற்றம், நான் பூசாரியை தாக்கியது ஒரு குற்றம்... இத்தனை குற்றங்களுக்கும் காரணம் யார்? யார்...யார் காரணம்?

கல்யாணியை கஞ்சிக்கு வழியில்லாதவளாக அலைய விட்டது யார் குற்றம்? விதியின் குற்றமா? அல்லது விதியின் பெயரை சொல்லி வயிறு வளர்க்கும் வீணர்களின் குற்றமா?
பணம் பறிக்கும் கொள்ளை கூட்டத்தை வளரவிட்டது யார் குற்றம்? பஞ்சத்தின் குற்றமா? அல்லது பஞ்சத்தை மஞ்சத்திற்கு வரவைத்த வஞ்சகர்களின் குற்றமா?
கடவுள் பெயரால் காமலீலை நடத்தும் போலி பூசாரிகளை நாட்டிலே நடமாடவிட்டது யார் குற்றம்? கடவுளின் குற்றமா? அல்லது கடவுள் பெயரை சொல்லி கலாட்சேபம் நடத்தும் கயவர்களின் குற்றமா?

இந்த குற்றங்கள் களையப்படும் வரை இந்த குணசேகரன்களும், கல்யாணிகளும் குறையப்போவது இல்லை... இதுதான் எங்கள் வாழ்க்கை ஏட்டில் எந்த பக்கத்தை புரட்டினாலும் காணப்படும் பாடம்... பகுத்தறிவு... பயனுள்ள அரசியல் தத்துவம்.