வெற்றி வேல் முருகன் -"பிண்ணா"

மக்களே...உங்கள் மான்னா...வந்து விட்டேன் "பிண்ணா"-வோடு.
நான் கேட்ட கதைய கொஞ்சம் உஜாலா (ஹி..ஹி...பாலிஸ்) பண்ணி உட்டுருக்கேன்...அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க.

இலங்கை-ல, "கதிர்காமம்"-கிற ஊர்ல நம்ம முருகன் "தவம்" அதாங்க "தியானம்" பண்ணிக்கிட்டு இருந்தாரு. அப்போ ஒரு அசுரன்/அரக்கன் முருகன தியானம் பண்ண உடாம தொந்தரவு பண்ணிகிட்டே இருந்தாரு..இருந்தாரு என்ன...இருந்தான். முருகன் சொல்லி சொல்லி பார்த்தாரு...அவன் கேக்குற மாதிரி தெரியல...முருகன் சொன்னாரு...இங்க பாரு நான் விதி 1-ன்ன மட்டும் உபயோகம் பண்ணுரேன், விதி 4-ல உபயோகம் பண்ண வச்சுடாத போயிரு-னு சொன்னாரு.

அவன் கேக்குல...என்ன முருகா நம்ம கைல ரூல் பேசுர...என்ன அது ரூல் 4-னு கேட்டான். உங்களுக்கு எல்லாம் தெரியும் தானே நம்ம 4 ரூல்? அதாங்க four tactics 1.சாம [Peace Talks] 2. தான [Give ransom to keep our mouth shut] 3.பேத [Divide and Rule] 4.தண்டம் [using Force].

நம்ம.."தண்டாயுதபாணி" என்கிற முருகன் சுத்தி பார்த்தாரு...தவம் பண்ணுற எடத்துல எங்க கிடைக்கும் "தண்டம்"? ஆன ஏதாவது பன்னி ஆவனுமே... பக்கதுல பார்த்தா... ஒரு "வெற்றிலை" கொடி இருந்துச்சி... அந்த "வெற்றிலை" கொடியில் இருந்து ஒரு "வெற்றிலை"-ய பறிச்சி... அத "வேலா" அந்த அசுரன் மேல உட்டாரு..அசுரன் மே...ல பூட்டாரு.

இப்ப தெரிஞ்சுதா..."வெற்றி வேல்" முருகன் எங்க இருந்து வந்தாருன்னு. அவர் "வெற்றி-இலை-வேல்" முருகன்...நம்மதான் மாப்பிள்ளைய மாப்ஸ்/மாப்பு-னு சுருக்கமா கூப்பிடுர ஆளச்சே..."வெற்றி-இலை-வேல்" முருகன்-ல இலை-ய கட் பண்ணி "வெற்றி வேல்" முருகன்னு ஆக்கிட்டோம்.

No comments: