நான் பிச்சைக்காரன்...

பயப்படாதீங்க, நான் இத படிக்க வந்த உங்க கிட்ட பிச்சை கேட்களீங்க, நான் கடவுள்-னு ஒரு படம் எடுத்தாரே இயக்குநர் பாலா அவர்கிட்ட கேட்கிறேன்...

அய்யா... சாமி... பாலா... தயவு செய்து இப்படி கொல்லாதீங்க அய்யா... ஆசைபட்டு படம் பார்க்க வந்த எங்கள ஏன் சாமி இந்த பாடு படுத்துறீங்க... நாங்க என்ன சாமி குத்தம் செஞ்சோம்...

ஏதோ பாலா படத்துல கொஞ்சம் நகைச்சுவை இருக்கும் என்பதை மறக்காமல், பிச்சை எடுக்கும் போது அப்ப அப்ப பழைய சோத்துக்கு நடுவே சுடு சோறு கிடைக்குமே அதே மாதிரி, அங்க அங்க வரும் அந்த குள்ளர்களின் வசனமும், எம்.ஜி.ஆர் வேடத்தில் வருபவர் சிவாஜி வேடத்தில் உள்ளவரை பார்த்து "கணேசா எவன் எவனோ நடிகன்னு வந்து கொல்ராம்பா... நீ கொஞ்சம் நடிப்ப சொல்லி கொடுத்துவிட்டு போயிருக்க கூடாதா"-னு கேட்பார்... சிரிக்கும் படியாக இருந்தது.

பாரதிராஜாவின் பொம்மலாட்டம் பார்த்து... அடடா ஒரு படத்திற்க்கு இயக்குநர் தான் கதாநாயகன்-னு மீண்டும் நிருபித்து இருக்கான்னு நினைச்சு சந்தோஷப் பட்டேன்... அத நீங்க காலி பண்ணிப்புட்டீங்களே சாமி... இது நியாயமா? தருமமா?

அய்யா... பிச்சை எடுக்கும் போது தருமம் பண்ணுங்க சாமின்னு கேட்ப்பாங்க... நானும் அதான் கேட்கிரேன்... காசு கொடுத்து சினிமா பார்க்க வர எங்கள தயவு செய்து பல்ல பிடிச்சி பதம் பார்க்காம... மக்களின் ரசனை என்கிற பல்ஸை பார்த்து படம் பண்ணுங்க சாமி.

யார் கடவுள்?
இயக்குநர் கடவுளா?? இல்ல...
படத்தோட கதை கடவுளா???

இல்லீங்க இந்த கருமத்த எல்லாம் காசு கொடுத்து படம் பார்க்கிற நம்ம தாங்க கடவுள்

தே பா ச...

2002 இந்திய அரசை பாரதிய ஜனதா பார்டி ஆட்சி செய்தபோது தேசிய நலனை கருத்தில் கோண்டு கொண்டுவரப் பட்ட சட்டம் (பொடா-PoTA) தே.பா.ச என்கிற தேசிய பாதுகாப்புச் சட்டம்.

ஆனா அது தேசியத்த பாதுகாத்ததை விட பல அரசியல் தேராவெட்டிகளை பாதுகாத்ததுதான் அதிகம். ஒரு கால கட்டத்துல வடக்கு முதல் தெற்க்கு வரை அது அரசியல் வாதிகளின் மீது தேடி பாயும் ட்டம் ஆக இருந்ததுன்னே சொல்லல்லாம்.

தமிழகத்துல நம்ம அ.இ.அ.தி.மு.க கொ.ப.செ (அட செல்வி ஜெயலலிதாங்க) அந்த தே.பா.ச-வ நம்ம வைக்கோ மேல போட்டாங்க... என்ன ஆச்சு? அண்ணன் மு.க தம்பி மீது சுமத்தப் பட்டுள்ள அவதூருகளை தேடி பார்த்தோம் ரியில்லை... அவரு வைக்கோ இல்ல சைக்கோ-ன்னு சொல்லிட்டாரு.

அப்புறம் பழ. நெடுமாறன் மேல, அவர் மேல இவர் மேலன்னு இப்ப இயக்குனர் சீமான் வரைக்கும் வந்து நிக்குது... தேடி பார்த்தோம் ரியில்லை என்று சொல்லி விடுவார்கள்.

ஆமாம் நீங்க இந்த பதிவுல என்னத்த தேடுறீங்க? மெஸேஜா? நையாண்டியா?

என்ன நக்கலா? பதிவோட தலைப்ப பாருங்க... மு.க சொன்னதையேதான் நானும் சொல்றேன். தே.பா.ச-ன்னா தேடி பார்த்தோம் சரியில்ல.

தி.மு.க-வின் கைப்புள்ள...

மத்திய அமைச்சர் ராசா என்னா சொல்லி இருக்காரு பார்த்தீங்களா? மருத்துவர் ராமதாசு பேசுவது "திண்ணையை பிடிக்கும் முயற்ச்சியே, திண்ணிய முயற்ச்சி இல்லை".

ஆஹா கலைஞ்சர் வீட்டு கட்டுத்தறி இசை அமைக்குதா இல்ல? கனிமொழி வீட்டு கட்டில் கவி பாடுதான்னு தெரியலயே?

சரி யார் சொல்லி கொடுத்து சொன்னா நமக்கு என்ன... எதுகை மோனையோட படிக்க நல்லாத்தான் இருக்கு.

ஆனா எனக்கு ஒன்னு நல்லா தெரியும், அமைச்சர் ராசா இப்படியே பேசிகிட்டு இருந்தார்ன்னா மரம் வெட்டி மருத்துவர் அய்யாவோட ஆளுங்க திண்ணிய முயற்ச்சி பண்ணி ராசாவோட மெண்ணிய பிடிப்பது உறுதி.

ராசா நீ ரொம்ப நல்லவன்னு சொல்லி இப்பதான் தாத்தா தயாநிதி கூட சேர்ந்து உனக்கு ஒரு ஆப்பு வெச்சாரு, நீ இத சொன்னதுக்கும் ராசா நீ ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டு நாளைக்கே மா.வெ.ம.அ கூட கூட்டணி வெச்சுடுவாரு, வெச்சதுக்கு பரிகாரமா உன் தொகுதிய பா.மா.க-வுக்கு விட்டு கொடுத்திடுவாரு... பார்த்து பேசுப்பா... மத்திய அமைச்சர் பதவி, பிறகு தொகுதி... அவ்வ்வ்வ்வ்வ்

கோடீஸ்வர சேரிநாய்

என்ன கொடுமை சார் இது? நீங்க இந்த பதிவோட தலைப்ப சொல்லுறீங்க... நான் எனக்கு தெரிஞ்ச தமிழ்ல ஸ்லம்டாக் மில்லினியர் படத்தோட பேர மொழி பெயர்த்தா அப்படிதாங்க வருது அதுக்கு நான் என்ன பண்ணட்டும்?

ஏங்க நான் தெரியாமதான் கேட்குறேன் இந்த படத்துக்கு கோடீஸ்வர சேரிபையன்-ன்னு அதாங்க ஸ்லம்பாய் மில்லினியர்-னு வெச்சிருந்தா இன்னும் பொருத்தமாகவும் நன்றாகவும் இருந்திருக்கும் என்பது என் எண்ணம். நீங்க என்னா நினக்கிறீங்க?

எனக்கு என்னவோ டைரக்டர் டேனி பாயலுக்கோ அல்லது ரைட்டர் சைமன் பியூபாய்க்கோ தங்கபூமி விருது குழு-வில் யாரையாவது தெரிஞ்சிருக்கனும்ன்னு நினைக்கிறேன். விஹாஸ் ஸ்வரூப்-பின் மூலக் கதை, லவ்லீன் டேண்டனின் திரைக்கதை - சும்மா சொல்ல கூடாது மூன்று டிராக் கதை (ஹூ.வா.மி நிகழ்ச்சி - இண்ட் ராகேஸன் - பழைய சம்பவம்) ஒருங்கிணைப்பு அருமை... பாராட்டலாம்.

ஏ.ஆர்.ரஹ்மானின் இசை மிக அருமை. இளையராஜா இசைக்கு ஈஸ்வரன் என்றால், இவர் கோடீஸ்வரன்.

கௌவுதம் மேனன் மட்டும் வாரணமாயிரம் படத்துக்கு ஆங்கில பேரு வெச்சிருந்தா நிச்சயம் ஆஸ்கர் கிடைச்சிருக்கும். என்னடா இப்படி சொல்லுரனேன்னு நினைக்காதீங்க என்கிட்ட இருக்கு காரணமாயிரம். மக்கா படம் முழுவதும் ஒரே இங்கிலீஸுதான்.

சரி விடுங்க... இதுக்காக வடக்கு வாழ்கிறது தெற்க்கு தேய்கிறதுன்னு நினைக்காதீங்க. எப்ப ஒரு ஹிந்தி படம் தங்க பூமி விருது வாங்கினுதோ அது மணி ஓசை (வரும் முன்னே) யானை-யா (வரும் பின்னே) அடுத்தது ஒரு தமிழ் படம் ஆஸ்கர் விருது வாங்கப் போவது நிச்சயம் - அதுவரை காத்திருப்போம்.