கள்ளக்குறிச்சியில்...

கள்ளக்குறிச்சியில்... விஜய.டி.ஆர்...ஆ... டர்..ர்..ர்

ஏய்...
நான் தேர்தல்ல நின்ன இடம் கள்ளக் குறிச்சி
மக்கள் தந்தாங்க தோல்வி அதிர்ச்சி
காரணம் எனக்கு சரியில்ல சனிப் பெயர்ச்சி

ஏய் டண்டனக்கா...
ஏய் டணக்குனக்கா

அரசியலில் எனக்கு இருக்கு முதிர்ச்சி
தொடர்ந்து செய்வேன் நான் முயற்ச்சி
அடுத்து வருது குருப் பெயர்ச்சி

ஏய் டண்டனக்கா...
ஏய் டணக்குனக்கா

மருத்துவருக்கு அடிச்சாங்க ஆப்பு
அம்மாவுக்கு கொடுத்தாங்க கேப்பு
வைகோவுக்கு வாயில டேப்பு
கலைஞர் ஆயிட்டார் ஸேஃபு
காங்கிரஸ் மொத்ததில் டாப்பு

ஏய் டண்டனக்கா...
ஏய் டணக்குனக்கா

சுதீசு மாமா கேப்டன்
ரித்தீசு மாமா டாப்டென்

ஏய் டண்டனக்கா...
ஏய் டணக்குனக்கா

தமிழர்கள் அறிவாளிகளா?

என்னை இப்படி ஒரு கேள்வி கேட்டு ஒரு பதிவு போட தூண்டியது தற்போது நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்.

இந்தியாவில் 100 சதவிகிதம் படிப்பறிவு கொண்டவர்கள், இந்திய அளவில் முக்கிய உயர் பதவி வகிப்பவர்கள் என்று நிரூபிக்கப்பட்ட கேரள மக்களை காட்டிலும் தமிழ் மக்கள் ஓட்டறிவு பெற்றவர்கள் என்பதை நிரூபித்துள்ளனர்.

அன்னம் போல் வண்ணம் (ஜாதி) பெயரை கொண்டு கட்சி நடத்தியவர்களை இனம் கண்டு கொடுத்திருக்கின்றனர் பெரிய அடி.

ஈழப்பிரச்சனை இந்தியாவின் பிரச்சனை இல்லைதான். ஆனால் அவர்கள் தமிழர்களின் உறவுகள். அவர்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டாம், ஆனால் ராஜீவ் காந்தி செய்தது போல் அமைதி படையை அனுப்பாமலும், இப்போது செய்யும் ராணுவ தளவாடங்கள் உதவியை கொடுத்து உபத்திரவம் செய்யாமலும் இருங்கள் என்று வன்முறை இல்லாமல் சாத்வீகமாக காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு கொடுத்திருக்கிறார்கள் பெரிய இடி.

நான் பார்த்த தேர்தல்களில் இந்த தேர்தல் வாழ்க்கை முக்கியத்துவம் கொண்ட தேர்தல், இந்த முறை என்னால் வாக்கு அளிக்க முடியவில்லையே என்ற வருத்தம் ஒருபுறம் இருந்தாலும் நல்ல தேர்தல் முடிவை கண்டு மகிழ்ச்சி அடைந்தேன்.

ஒரு பானை சோற்றிர்க்கு ஒரு சோறு பதம் என்பார்கள், அதற்க்கு எங்கள் மயிலாடுதுறை தொகுதி ஒரு முன் உதாரணம். சென்ற வருடம் ஊருக்கு சென்ற பொழுது தொகுதி மறுசீரமைப்பு பற்றி கேள்வி பட்டேன், அதனால் மயிலாடுதுறை தொகுதிக்காண இழப்பீடு பற்றி நண்பர்களிடம் பேசிய பொழுது, அவர்கள் தொகுதி வேட்பாளர் மணி சங்கர் அய்யரின் பங்களிப்பு பற்றி சொன்னார்கள். சரியாக சொன்னேன், இம்முறை அய்யர் சரியான பாடம் பெருவார், இனி அவர் ராஜ்ய சபா எம்.பி.யாக மட்டுமே தொடர முடியும் என்று. என் தொகுதி மக்களும் அறிவாளிகளே.

கலைஞரின் அணுகுமுறை சரியாக இருந்து தி.மு.க சார்பாக ஒரு இஸ்லாமிய வாக்காளர் நிருத்தப்பட்டிருந்தால் இது தி.மு.க கூட்டணிக்கு ஒரு வெற்றித் தொகுதி என்பது என் எண்ணம்.

ஓ.எஸ்.மணியன் வெற்றதில் சற்று வருத்தம்தான், அவருக்கு பதிலாக ம.தி.மு.க-வின் மகாலிங்கம் ஒரு நல்ல மாற்று வேட்ப்பாளராக வெற்றி கண்டு இருப்பார், அந்த வைகோ சைக்கோ தனக்கு பதில் அவரை அங்கு நிருத்தி இருந்தால் ம.தி.மு.க-வின் செல்வாக்கை கொஞ்சம் உயர்த்தி இருக்கலாம்.

எது எப்படியோ இந்த தேர்தலிலும் தமிழக மக்கள் 40-க்கு 40. பின்ன 7-க்கு 7 அவுட்ன்னா 40க்கு 40-தானே?