மறந்தே போச்சி... ரொம்ப நாள் ஆச்சி...

மறந்தே போச்சி... ரொம்ப நாள் ஆச்சி...
நான் பதிவு போட்டு-ன்னு சொல்ல வந்தேன், அதுவே தலைப்பாகி விட்டது.

மூன்று மாத காலமாக, அலுவல், தமிழ்க் கல்விப் பணி, எங்கள் (அட்லாண்டா) தமிழ்ச் சங்கப் பணி, இந்தியப் பயணம் பிறகு வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை பணி என்று நாட்கள் ஓடிவிட்டது.

சரி நாட்டுல என்ன நடக்குதுன்னு பார்த்தா... திருந்தாத முன்னேற்றக் கழகம் திஹார் முன்னேற்ற கழகமா மாறிவிட்டது போல இருக்கு. மேற்கொண்டு செய்திகள வாசிச்சா ஒரு அருமையான நகைச்சுவை விருந்த நமது எஸ்.ஏ.சி சொல்லியிருக்காரு... தகவல் என்னன்னு பெட்டிச் செய்திய பாருங்க.இவரு (எஸ்.ஏ.சி) முன்னின்று வழி நடத்துவாராம், (இளைய) தளபதி (விஜய்) கேடயமா நமக்கு பின்னாடி இருப்பாராம். எனக்குத் தெரிந்த வரை தளபதின்னா முன்னின்று போரிடுபவர், கேடயம்னா நெஞ்சுக்கு முன்னாடி ஏந்தி நம்மை எதிரியிடம் இருந்து காத்துக்கொள்ள. இவரு பின்னாடி கேடயமா இருந்து நமக்கு யாரும் ஆப்பு அடிக்காம காப்பாத்துவாரா?

எனக்கு ஒன்னும் புரியல, உங்களுக்கு ஏதாவது புரியுதா?

செல்வி செயலலிதாவோட ஆப்பு அடிக்கிற விதமே தனி, எஸ்.ஏ.சி-க்கு அவசியம் பின்னாடி கேடயம் தேவை என்கிறதைதான் இப்படி சொல்கிறாரோ? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.