ஒப்பிட்டு பாருங்க... ஒப்பாறி வைக்காதீங்க

நாம் இப்போது எல்லாம் எதற்க்கு எடுத்தாலும் ஒன்றோடு மற்றொன்றை ஒப்பீட்டு பார்ப்பது வழக்கமாகி விட்டது.

எம்.ஜி.ஆர்-ன்னா சிவாஜி-கூட, ரஜினிகாந்தோட கமலஹாசன, சரோஜாதவி-ன்னா பத்மினி-கூட... தமிழ ஆங்கிலத்தோட...

இது ஒரு இந்திய அமெரிக்க நிலம் மற்றும் மக்கள் தொகை ஒப்பீடு.

எண்களில் சொல்லும் போது அது எண்ணத்தை அடைவதை காட்டிலும் படத்தில் பார்த்தால் பட்டுன்னு புரியும் இல்லையா? அதான் இந்த ஒப்பீடு...படத்த பாருங்க... பதறாதீங்க

நிலப்பரப்பில் இந்தியா ஒரு பங்கு (2,973,190 சதுர கி.மீ), அமெரிக்கா மூன்று மடங்கு (9,631,418 சதுர கி.மீ)

மக்கள் தொகையில் அமெரிக்கா ஒரு பங்கு (306 மில்லியன்), இந்தியா அதை போல் மூன்று மடங்கு (1,147 மில்லியன்).

ஈவ்வ்வ்... எம்பராஸிங்க்... டிஸ்கஸ்டிங்க்

அது எம்பராஸிங்க் இல்லை... அதுக்கு அர்த்தம் தமிழ்ல இன்பமா ரசிங்க... திரும்ப திரும்ப சொல்லி பாருங்க இன்பராஸிங்க்-ன்னு வரும்.

நம்ம தமிழ்/தெலுங்கு படத்துல வர பாட்டு... குறிப்பா வெளி நாடுகளில் நடு ரோட்டில் நம் கதா நாயகரும் நாயகியும் ஆடும் ஆட்டம் இருக்கே... அத பார்த்து இப்ப உள்ள பிள்ளைகள் சொல்லும் வார்த்தை... ஈவ்வ்வ்...எம்பராஸிங்க் இல்லைன்ன அடுத்த வார்த்தை டிஸ்கஸ்டிங்க் (இது ஆங்கில படங்களுக்கு).

இந்த பாடல்கள் ஒரு செட்டின் உள்ளே... பிறகு தோட்டத்தில் உள்ளே என உள்ளே எடுக்கப்பட்டு இன்பமாய் ரசிக்க பட்டது. பிறகு செட்டை விட்டு...பிறகு நம்ம நாட்டை விட்டு... பல பிறகுக்கு பின்னே வெளி நாட்டில் நடு தெருவில் எடுக்கப் பட்டு (பட்ஜெட்டால தயாரிப்பாளர் நடு தெருவுக்கு வருவது வேறு விஷயம்) எம்பராஸிங்க் ஆகிவிட்டது.

எவ்வளவு எம்பராஸிங்கா இருந்தாலும் ஹாலிவுட் கிராபிக்ஸ் பாடாவதிய பார்க்கும் போது நம்ம படத்த இன்பமா ரசிக்கலாம்.

ரசனை என்பதை சொன்ன உடனே எனக்கு ஒரு ஆங்கில படம் நினைவிற்க்கு வந்தது... நம்ம ஊரு ஆதி, பேதி, வில்லு, அம்பு அருவான்னு வர படங்களுக்கு நடுவில் பொம்மலாட்டம்-னு ஒரு படம் வந்த மாதிரி. கிராபிக்ஸ் கொடுமைகள் இல்லாம... கண்களுக்கும் காதுகளுக்கும் இதமா... எல்லோரிடமும் டிஸ்கஸிங்க் பண்ணக்கூடிய படம்.

பச்சை நிறமே... பச்சை நிறமே என பாடத்தோன்றும் அந்த படத்தை பார்த்த பிறகு. படம் முழுவதும் அப்படி ஒரு பச்சை வண்ணம். சார்லஸ் டிக்கென்ஸோட நாவலை தழுவி 1946-ல் பிரிட்டனில் எடுக்கப் பட்ட படம். அவசரப் படாதீங்க அது கருப்பு வெள்ளை படம், நமக்காக அந்த படத்தை மீண்டும் 1998-ல கலர்ல எடுத்திருக்காங்க...

என்ன கடைசியில் பச்சை நிறமே... பச்சை நிறமே... உடைந்தது என் இதயமே-ன்னு பாடுற மாதிரி ஆயிடுச்சி... அட இன்னும் படத்தோட பேர சொல்லவே இல்லையா நான்...கிரேட் எக்ஸ்பெக்டேஸன்ஸ்.

க.பி.கு: அதிக பட்சம் ஐந்து ஈர முத்தம், ஒரு முக்கால் நிர்வாண முதுகு.

வ.பி.கு: பெட்டியில் இருந்து தவறி வெளியே விழும் துப்பாக்கி, சத்தமில்லாமல் ஒரே ஒரு கத்தி குத்து.

இந்த படம் பற்றிய மேலும் தகவலுக்கு...
http://en.wikipedia.org/wiki/Great_Expectations_(1998_film)
கூகிள் பண்ணி பாருங்க... படம் கிடைச்சாலும் கிடைக்கும்.

எப்படி ஒரு எம்பராஸிங்க் தமிழ் படத்த இன்பாமா ரசிச்சோமோ... அது மாதிரி டிஸ்கஸ்டிங்க் ஆங்கில படத்த டிஸ்கஸிங்க பண்ணுனோம் அவ்வளவுதான்.

வெந்ததைத்தின்று வாயில் வந்ததை பேசும்...

வெந்ததைத்தின்று வாயில் வந்ததை பேசும்... என்ன எல்லாம் வெ வா வ-ன்னு கோர்வையாக வருகிறதா? இருக்காதா பின்ன பேசியது வைகோ-வாச்சே.

விருது நகர் லோக்சபா-விற்க்கு போட்டியிடும் அவர் சந்திரப்பட்டியில் பேசிய பேச்சை பாருங்கள்

"ரத்த ஆறு ஓடும் என்று சொன்னதை நான் மறுக்கவில்லை" முத்துக்குமரனைப் போல் தீக்குளிப்புகள் நடக்கும் என்பதை கூறினேன் என்று அந்தர் பல்டி அடித்திருக்கிறார். மேலும் " நான் என்ன கருணாநிதி பேசாததையா நான் பேசிவிட்டேன்" என்ற கேள்வி வேறு...

வடிவேலு: ஏ வென்று அந்த ஆள் சரியில்லை என்றுதானய்ய உன் பின்னே ஒரு கூட்டம் வந்தது, அதை புரிந்து கொள்ளாமல் நானும் சேற்றில் விழுந்து புரல்கிறேன் என்கிறாயே? கவுத்துப்புட்டாய்ங்கய்யா கவுத்துப்புட்டாய்ங்க.

ஜெயலலிதா ஒரு டி.வி-க்கு அளித்த பேட்டியில், நாங்கள் கொண்ட நட்பின் காரணமாக "இன்று நேற்றா வைகோ இதுபோல் பேசுகிறார், எத்தனை ஆண்டுகளாக பேசிவருகிறார்" என்று மேற்கோளிட்டு பேசியிருக்கிறார்.

கவுண்டமணி: அடங்கொன்னியா... அந்த அம்மா உண்மையாவே என்ன சொன்னுதுன்னு நீ தெரிஞ்சு பேசுறியா இல்ல தெரியாம பேசுறியா? நீ தி.மு.க-வுல இருந்தப்ப ஆடுன ஆட்டத்துக்குத்தான் உன்ன பொடாவுல போட்டுது, இப்ப கூட இருந்துகிட்டு டார்ச்சர் பண்ணுரன்னு போட்டு குடுக்குது, நீ என்னமோ நட்பு தோழமைன்னு கூட்டம் போட்டு பேசிகிட்டு இருக்கிற... நாராயணா இந்த (வைகோ) கொசு தொல்ல தாங்களடா.

கட்ட கடைசியா மக்கள பார்த்து ஒன்னு சொல்லி இருக்கிறார் " நீங்கள் மனிதாபிமானத்திற்க்கு ஓட்டு போடுவீர்கள் பணத்திற்க்கு ஓட்டு போடமாட்டீர்கள் என்று நம்புகிறேன்" என்று.

விவேக்: அட தோ பார்ரா மிஸ்டர் கிளீன் சொல்றாரு நம்ம எல்லோரும் கேட்கணுமாம், இவரு மட்டும் 30 கோடிய வாங்கிகிட்டு மூனு வருஷமா மூடிகினு இருப்பாராம்...ஹும் இந்த தமிழக வாக்காளார்களை ஆயிரம் பெரியார் இல்ல... கூட ஆயிரம் காமராஜர் சேர்ந்து வந்தாலும் காப்பாத்த முடியாது.

காதல் கல்யாணம்...

காதல் கல்யாணம்...

நான்கு கண்கள் பார்த்தன
இரண்டு மனங்கள் பேசின
ஒரு காதல் உருவானது...

ஒரு கல்யாணம் நடந்தது
இரண்டு வீடுகள் சம்மதித்து
நான்கு திசையிலும் சந்தோஷம்...

கூட்டி கழிச்சி பார்த்தா கணக்கு சரியா வருதா?

வோட்டு... அதுக்கு முன்னாடி

வோட்டு... அதுக்கு முன்னாடி
வேட்பாளருக்கு வெக்கிராங்க வேட்டு.

தொண்டன்: என்ன தலைவரே இப்படி ஆயிப்போச்சி

வேட்பாளர்: என்னடா என்ன ஆயிப்போச்சி இப்ப?

தொண்டர்: ஜெயிக்கிறதுக்கு நிறைய எலெக்சன் டெக்னிக் வச்சிருக்கேன்னு சொன்னீங்க, இப்ப நிக்க சீட்டு கூட கிடைக்கலியே

வேட்பாளர்: டேய், அது அம்மாவோட கலெக்சன் டெக்னிக்டா, முதல்ல அறிவித்த வேட்பாளர் சரியில்லைன்னு என்னை அறிவிப்பாங்க பாரு.

---

தொண்டன்: தலைவா, எல்லாம் நாசமாகிப் போச்சு தலைவா

வேட்பாளர்: என்னடா நாசமா போச்சி, நான் இன்னும் ஜெயிக்கவே இல்லையேடா

தொண்டன்: அது இல்ல தலைவா, எதிர் கட்சி வேட்பாளருக்கு இணையா நீங்க தாக்கு பிடிக்க மாட்டீங்கன்னு வேறு வேட்பாளர அறிவிச்சிட்டாங்க தலைவா

வேட்பாளர்: விடுடா, ஏற்கனவே எதிர்கட்சி வேட்ப்பாளர் எல்லாத்துலயம் பாதி கமிசன் தரேன்னு சொல்லிட்டாரு

---

தொண்டன்: தலைவா என்ன அதுக்குள்ளே எல்லோருக்கும் இனிப்பு வழங்குறீங்க

வேட்பாளர்: எதிர்கட்சி வேட்பாளர மாத்திட்டங்களாம்ல, பிறகு என்ன நான் ஜெயிச்ச மாதிரிதான

தொண்டன்: புரியலயே தலைவா

வேட்பாளர்: விடுடா பழைய வேட்பாளர் புது வேட்பாளர தோற்க்கடிச்சி தொகுதியில் அவர் பவர காமிச்சிடுவார்.

---

தொண்டன்: தலைவா, நீங்க எங்கயோ போயிட்டீங்க தலைவா

வேட்பாளர்: என்னடா சொல்லுற, ஜெயிச்சா டெல்லிக்கு போவேன், தோத்தா அடுத்த எலெக்சனுக்கு எதிகட்ச்சிக்கு போயிடுவேன் நீ எத சொல்லுற?

தொண்டன்: அதில்ல தலைவா, நேத்தி மப்புல் இருந்தப்ப நீங்க அடிச்சீங்களே ஜோக்கு, தேர்தல் பிரச்சாரம் பண்ண வெள்ளை மாளிகையில் இருந்து ஓபாமா வாரான்னு - அத சொன்னேன்.

ஏய்ய்... சைலன்ஸ்... கூட்டணி பாட்டு பாடிகிட்டு இருக்கோம்ல...

இடம்: போயஸ் தோட்டம்
நேரம்: கூட்டணி தொகுதிப் பங்கீடு முடிந்த நேரம்
காலம்: அந்தி மாலைப் பொழுது

( நீண்ட நாட்களாய் தன்னை திரும்பி பார்க்காமல் இருக்கும் சசிகலாவை பார்த்து நடராஜன் ஆரம்பிக்கிறார்)

நடராஜன்: யம்மாடி... ஆத்தாடி...
என்கிட்ட திரும்பி வருவியாடி...

ஜெ: செரினா-வ உள்ள போட்டு நொங்கு எடுத்தது மறந்து போச்சா... அப்படியே ஓடிபோயிடு...

சசி: அக்கா, விடுங்கக்கா... காய்ஞ்சி போயி வந்திருக்கிறார், நாமும் சீட்டு பேரம் பேசி மண்ட காய்ஞ்சி கிடக்கிறோம்... ஏதோ பாடிட்டு போகட்டும்... நீ பாடுய்யா...டி.ஆரோட குத்துப் பாட்டு சும்மா சூப்பரா இருக்கும்.

ஜெ: அப்படியா... சரி கூட்டணி தலைவர்கள் எல்லோரும் இருக்கீங்க... கூச்சப்படாம ஆளாளுக்கு ஒரு குத்து குத்துங்க

சசி: வைகோ ஸ்டார்ட் த மியூசிக்

நடராஜன்: யம்மாடி... ஆத்தாடி...
என்கிட்ட திரும்பி வருவியாடி...

சசி: அக்கா பாதி... நான் பாதி
அட சேர்ந்துபுட்டா தமிழ்நாடு காலி...

வைகோ: அம்மா காலில் விழுவோமா...
குடுத்த இடத்தில் நிப்போமா...

இடது சாரி: கலைஞ்சர் பேர கெடுப்போமா...
சேதுபாலம் பிரச்சனைன்னு சொல்லுவோமா...

கூட்டணி தலைவர்கள் (ஜெ காலை தொட்டு வணங்கி வணங்கி):
யம்மா யம்மா யம்மா யம்மா
யம்மா யம்மா யம்மம்மா...

கூட்டணி தலைவர்கள் (ஜெ காலை தொட்டு வணங்கி வணங்கி):
யம்மா யம்மா யம்மா யம்மா
யம்மா யம்மா யம்மம்மா...

நட: யம்மாடி... அய்யோ ஆத்தாடி...
எனக்கொரு எம்பிசீட்டு வாங்கித் தரியாடி...

சசி: ஏய் அக்காதாண்ட முதளாலி...
மத்தவனெல்லாம் எங்களுக்கு தொழிளாலி...

(கூட்டணி ஸ்பெசல் தலைவர் மரம் வெட்டி அய்யா எண்ட்ரி ஆகிறார்)

மரு.அய்யா: அச்சம்வேண்டும் மரம் வெட்டுவேண்ணு அச்சம்வேண்டும்
கூட்டணி தாவிப்பார்த்தா தாவிப்பார்த்தா சீட்டு கூடவரும்...

ஜெ:வெட்கம் கெட்ட அய்யாவத்தான்...
அனைச்சிகிட்டா சேர்த்துகிட்டா ஜெயிசிடுவோம்

மரு.அய்யா: நேத்துவர நேத்துவர
நீயும்தான் நானும்தான் ஒட்டவில்ல...

ஜெ: ஓடுகாலி நீ ஓடுகாலி ஜெயிச்சபிறகு
நானும்தான் உன்ன நம்பவில்ல

வைகோ: எனக்கு தொகுதி கொஞ்சமடி...

சசி: நீ ஓடிப்போன கட்சிகாரன தேடிப்புடி...

(சுப்ரமணிய சாமி உள்ளே வருகிறார்)

சு.சா: உன்னைபோல என்னைபோல
தமிழகத்த காப்பாத்த யாருமில்ல

ஜெ: நல்லவரே... வல்லவரே
"அவளண்ட என்ன இல்லைன்னு" சொன்னவரே

கூட்டணி தலைவர்கள் (ஜெ காலை தொட்டு வணங்கி வணங்கி):
யம்மா யம்மா யம்மா யம்மா
யம்மா யம்மா யம்மம்மா...

கூட்டணி தலைவர்கள் (ஜெ காலை தொட்டு வணங்கி வணங்கி):
யம்மா யம்மா யம்மா யம்மா
யம்மா யம்மா யம்மம்மா...

வைகோ: அய்யோ... அய்யோ

(சைடில் நடராஜன் சசியை சரிகட்டியதை பார்த்த ஜெ-வுக்கு அதிர்ச்சி, பிறகு இருவரும் சுதாரித்து கொண்டு ரொமான்ஸ்)

ஜெ: ஆதாரமா... அவதாரமா...
ஆயிபுட்ட நெஞ்சுக்குள்ள

சசி: உன்ன விட்டா, என்ன விடும்
உயிர்தானம்மா உள்ளுக்குள்ள

ஜெ: உன்வாசம்தான் என்மூச்சில்வீசி
உயிருக்குள் உயிர்வாழுரேன்

சசி: நம் பேரத்தான் ஊரெல்லாம் பேசும்...
ஊமைக்கும் மொழியானது...

(ஜெ-சசி ரொமான்ஸை பார்த்த நட்டு மூட் அவுட், அவரை சரிகட்டுகிறார் சசி)

சசி: நீதாண்ட நீதாண்டா ஜல்லிக்கட்டு
முடிஞ்சாக்கா என்ன கட்டு
(சசி இருக்கிற சைஸுக்கு எங்க கட்டுரது)

நட: ஊருக்கும் பேருக்கும் மல்லுக்கட்டு
என்னோட பெட்டுக்கு டாட்டா காட்டு...டு ...டு... டு

கூட்டணி தலைவர்கள் (ஜெ காலை தொட்டு வணங்கி வணங்கி):
யம்மா யம்மா யம்மா யம்மா
யம்மா யம்மா யம்மம்மா...

கூட்டணி தலைவர்கள் (ஜெ காலை தொட்டு வணங்கி வணங்கி):
யம்மா யம்மா யம்மா யம்மா
யம்மா யம்மா யம்மம்மா...

நடராஜன்: யம்மாடி... ஆத்தாடி...
என்கிட்ட திரும்பி வருவியாடி...

சசி: அக்கா பாதி... நான் பாதி
அட சேர்ந்துபுட்டா தமிழ்நாடு காலி...

வைகோ: அம்மா காலில் விழுவோமா...
குடுத்த இடத்தில் நிப்போமா...

இடது சாரி: கலைஞ்சர் பேர கெடுப்போமா...
சேதுபாலம் பிரச்சனைன்னு சொல்லுவோமா...

சு.சா: ஏ எம்மா... ஏ எம்மா... ஏ எம்மா... ஏ எம்மா... யம்மம்மா

மரு.அய்யா: யம்மா யம்மா யம்மா யம்மாயம்மா யம்மா யம்மம்மா...

வலது சாரி வரதராஜன்: என்னய்யா பாட்ட நிறுத்திட்டீங்க...பட்டய கிளப்பு...

நட: குத்துன்னா... கூட்டணியாத்தான் குத்தனும்... செமகுத்து... தேங்க்ஸுப்பா...

யம்மாடி... ஆத்தாடி...

ஆண்: யம்மாடி... ஆத்தாடி...
உன்ன எனக்குத் தரியாடி...

பெண்: நீ பாதி... நான் பாதி
அட சேர்ந்துபுட்டா சிவன் ஜாதி...

ஆ: அரைச்ச மாவ அரைப்போமா...
துவைச்ச துணிய துவைப்போமா...

பெ: ராமன் கதைய கேட்ப்போமா...
வில்ல வலைச்சி பார்ப்போமா...

ஆ: யம்மா யம்மா யம்மா யம்மா
யம்மா யம்மா யம்மம்மா...

பெ: யம்மா யம்மா யம்மா யம்மா
யம்மா யம்மா யம்மம்மா...

ஆ: யம்மாடி... அய்யோ ஆத்தாடி...
உன்ன எனக்குத் தரியாடி...

பெ: ஏய் நாந்தாண்ட முதளாலி...
நீதான் எனக்கு தொழிளாலி...

ஆ: மச்சம் வேண்டும் நட்ச்சத்திரம் நீ
எண்ணிப்பார்த்தா எண்ணிப்பார்த்தா வெட்கம்வரும்...

பெ:வெட்ட வரும் வில்லனத்தான்...
அடிச்சிபுட்டா உடைச்சிபுட்டா சத்தம்வரும்

ஆ: நேத்துவர நேத்துவர
நீயும்தான் நானும்தான் ஒட்டவில்ல

பெ: வாழும்வர வாழும்வர
நீயும்தான் நானும்தான் ரெட்டபுள்ள

ஆ: வயசுப்ப் பையன் மூச்சிடி...

பெ: அடப் பட்ட இடம் பூச்செடி...

ஆ: உன்னைபோல என்னைபோல
காதலிக்க யாருமில்ல

பெ: நல்லவரே... வல்லவரே
வாழவைக்க வந்தவரே

ஆ: யம்மா யம்மா யம்மா யம்மா
யம்மா யம்மா யம்மம்மா...

பெ: யம்மா யம்மா யம்மா யம்மா
யம்மா யம்மா யம்மம்மா...

ஆ: அய்யோ... அய்யோ

பெ: ஆதாரமா... அவதாரமா...
ஆயிபுட்ட நெஞ்சுக்குள்ள

ஆ: உன்ன விட்டா, என்ன விடும்
உயிர்தானம்மா உள்ளுக்குள்ள

பெ: உன்வாசம்தான் என்மூச்சில்வீசி
உயிருக்குள் உயிர்வாழுரேன்

ஆ: நம் பேரத்தான் ஊரெல்லாம் பேசும்...
ஊமைக்கும் மொழியானது...

பெ: நீதாண்ட நீதாண்டா ஜல்லிக்கட்டு
முடிஞ்சாக்கா என்ன முட்டு

ஆ: பூவுக்கும் பேருக்கும் மல்லுக்கட்டு
என்னோட பெட்டுக் கட்டு...டு ...டு... டு

பெ: யம்மா யம்மா யம்மா யம்மா
யம்மா யம்மா யம்மம்மா...

ஆ: யம்மா யம்மா யம்மா யம்மா
யம்மா யம்மா யம்மம்மா...

ஆண்: யம்மாடி... ஆத்தாடி...
உன்ன உன்ன எனக்குத் தரியாடி...

பெண்: நீ பாதி... நான் பாதி
சேர்ந்துபுட்டா சிவன் சிவன் ஜாதி...

ஆ: அரைச்ச மாவ அரைப்போமா...
துவைச்ச துணிய துவைப்போமா...

பெ: ராமன் கதைய கேட்ப்போமா...
வில்ல வலைச்சி பார்ப்போமா...

ஆ: ஏ எம்மா... ஏ எம்மா... ஏ எம்மா... ஏ எம்மா... யம்மம்மா

பெ: யம்மா யம்மா யம்மா யம்மா
யம்மா யம்மா யம்மம்மா...

டி.ஆர்: என்னய்யா பாட்ட நிறுத்திட்டீங்க...பட்டய கிளப்பு...

சிம்பு: தேங்க்ஸுப்பா.

பாடல் வரிகள் தெரிந்து பாடல் கேட்பது ஒரு சுகம்... இப்ப கேட்டு பாருங்க பாட்ட...

http://geetham.biz/V/Vallavan/Tamilmp3world.Com%20-%20Ammadi%20Athadi.mp3

என்ன... எங்க ஊரு காரு...டி.ஆரு நல்லா பாடியிருக்காருல்ல... ரசிச்சிகிட்டே இருங்க... அரசியல் உள்குத்தோடா மீண்டும் வரேன்

என்ன ஆச்சு எங்க ஊருக்கு...

எங்கு பார்த்தாலும் மாயூரம் பற்றிய பேச்சு... என்ன ஆச்சு எங்க ஊருக்கு...

மாதவி பந்தலில் ஒரு அருமையான பதிவு...
http://madhavipanthal.blogspot.com/2009/04/blog-post_08.html

தட்ஸ் தமிழில் ஒரு ஏக்கம்...
http://thatstamil.oneindia.in/cj/vaithiyanathan-sowmian/2009/0409-will-mayiladuthurais-dream-come-true.html

என்ன செய்வது படித்தவர்கள் ஊரை முன்னேற்ற பார்க்கிறார்கள், பணம் படைத்தவர்கள் (இப்போதுள்ள பேரூந்து நிலையத்தை சுற்றி தொழில் செய்யும் பலவான்கள்) ஊரை பின்னேற்றுகிறார்கள்... சுயநலவாதிகள்.

ஊமைக் குசும்பன்...

நம்ம வலையுலக குசும்பு ஒன்லி குசும்பன உங்களுக்கு எல்லாம் நன்றாக தெரியும், நல்ல நகைச்சுவையா ஏழுதுகிறவர்... அவர் குசும்பன்.

சென்ற வாரம் அவர நட்ச்சத்திர பதிவரா இருந்து சில பல நல்ல குசும்புகளை எழுதியதால்... அவர் நட்ச்சத்திர குசும்பன்.

இப்போது ஆராவாரம் இல்லாமல் அவங்க ஊரு பண்ணையார் மற்றும் சொடலையின் லீலைகளை குசும்பி இருக்கிறாரே அந்த குசும்பனை வேறு என்ன சொல்ல... அவர்தான் ஊமைக் குசும்பன்.

வலையுலக ஈழ தோழர்களுக்கு...

வலையுலக ஈழ தோழர்களுக்கு...

உங்களில் நிறைய பேர் தமிழக மற்றும் இந்திய அரசியல்வாதிகள் ஈழ பிரச்சனைக்கு உதவுபவர்கள் என எண்ணி உங்கள் எண்ண குமுறல்களை வெளிப்படுத்தி கொண்டிருக்கிறீர்கள், தவறு ஒன்றும் இல்லை... அவர்கள் எண்ணிப் பார்க்கிறார்களோ இல்லையோ, நிச்சயம் சக பதிவர்கள் படித்து அவர்களால் முடிந்த உதவி கரத்தை கொடுத்துக் கொண்டிருக்கின்றனர் என்பது மட்டுமே உண்மை.

தமிழக அரசியல்வாதிகளால் இங்கு உள்ள காவிரி, முல்லை பெரியாறு மற்றும் ஒக்கேனக்கல் போன்ற உள் மாநில / நாட்டு பிரச்சனைகளை(யே) தீர்க்க முடியாத அவலத்தில் இருக்கின்றனர் இவர்கள் எங்கே வெளி நாடான ஈழத்திற்க்கு உதவ போகின்றனர்?

உங்கள் தேர்தல் பகிஷ்கரிப்பு கோஷங்கள் அவர்களை ஒன்றும் பெரிதாக பாதிக்க போவதாக எனக்கு தெரியவில்லை. பதவிக்கு வந்தவர்களும் வரப்போகின்றவர்களும் "இறையாண்மை" என்ற ஒரு வார்த்தையில் ஈழ "இயலாமையை" முடித்து விடுவார்கள்.

ஈழத்திற்க்கு ஓரளவு உதவ முடியும் என்றால் அது நிச்சயம் புஷ் போன்ற அமெரிக்க அதிபர்களால் மட்டுமே சாத்தியம் என நினைக்கிறேன். ஏனென்றால் அவர்(கள்)தான் இல்லாததை இருக்கு என்று சொல்லி - உதாரணத்திற்க்கு ஈராக்கில் சதாமை ஒரு வழி பண்ணியவர் - காரியத்தை கச்சிதமாக முடிப்பவர்கள். அப்படி பட்டவர்கள் உண்மையிலேயே ஈழத்தில் நடக்கும் கொடுமைகளுக்கு ஒரு முடிவு கட்ட உதவுவார்கள். எட்டு ஆண்டு கால புஷ் ஆட்சியில் ஏன் அவர் ஈழ பிரச்சனையை கண்டுகொள்ள வில்லை? பிரச்சனையின் தீவிரம் அவருக்கு சரியாக சென்று சேரவில்லையா? நான் பத்திரிக்கை/மீடியா-களில் படித்த விசயங்களில் பதில் கிடைக்க வில்லை. நீங்களும், மற்ற ஈழ அமைதி விரும்பிகளும் பதில் தெரிந்தால் சொல்லுங்கள்.

யோசியுங்கள்... ஓபாமா ஓரளவுக்கு உதவக்கூடும் என்பது என் கணிப்பு. அமெரிக்க பொருளாதார மீட்ச்சிக்கு பின் அவர் உலக அமைதிக்கு தன்னால் இயன்ற உதவி செய்வதாக கூறியிருக்கிறார்.

தேர்தல் திருவிழா...

காணாம போனாலும் வைகோ அழுதுகிட்டே அம்மாகிட்ட வந்து சேர்ந்துடுவாரு...

இந்த இடதும் வலதும் என்ன பண்ண போகுதுன்னு தெரியலயே? மத்தியில் காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவிச்சது போல்... லெஃப்டல சிக்னல போட்டு ரைட்டுல கைய போட்டு ஸ்ட்ரெட்யிட்டா தமிழகத்துல பி.ஜே.பி-கூட போயிடுவாங்களோ

எஸ்.எம்.எஸ்

மருத்துவர் அய்யா அம்மாகூட கூட்டணி வச்சதிலிருந்து ஒரே எஸ்.எம்.எஸ்...

செல்வி ட்டுமே கோதரி - வருகிற தேர்தல் முடியும் வரை.

சிதம்பரத்துல ரம்வெட்டிக்கு ங்கு - சிதம்பரத்துல பொன்னுசாமி பா.மா.க வேட்பாளராம், சங்கு உறுதி.

சின்னைய்யாவுக்கு த்தியமந்திரி சிண்ட்ரோம் - ஒதுக்கி வச்சிருக்கிர ராஜ்யசபா சீட்டு அதுக்குத்தானே?