கடலையா இல்லை பீட்டரா?

பள்ளி/கல்லூரி காளைகள் பேசுவது கடலையாகவும், கன்னிகள் பேசுவது பீட்டராகவும் நாம் கூறுவோம். ஆங்கிலத்தில் இதை பொதுவாக “வோக்கல் ஃபிரை” என்று அழைக்கிறார்கள்.


இந்த “வோக்கல் ஃபிரை” அதிகம் காணப்படுவது பெண்கள் இடத்தில் என்று ”ஜர்னல் ஆஃப் வாய்ஸ்”-ன் சமீபத்திய கணக்கெடுப்பு சொல்லுகிறது. இது ஒரு பக்கம் பேச்சின் புதிய வடிவம்/அமைப்பு (ஃபேஷன்/ஸ்டைல்)-ன்னு சொன்னாலும் இது ஒரு வைகையான பாதிப்பு (ஸ்பீச் டிஸாடர்)-ன்னு மருத்துவகள் சொல்லுகிறார்கள். நான் இது பற்றி “இன்னா பேசுர நீ”-ன்னு ஒரு பதிவிட்டிருந்தேன்.


நாம் பேசும் போது ஒன்னு பம்மி பேசுவோம், இல்லையா உரக்க பேசுவோம் இல்லை வறுப்போம், அதைதான் இப்ப “வோக்கல் ஃபிரை”-ன்னு சொல்லுராங்க. எனக்கு ரொம்ப நாளா சில/பல தமிழ்ப் பெயர்களும் ஆங்கில பெயர்களும் ஒத்து இருப்பதை பார்த்து ஆச்சிரியமாக இருக்கும். உதாரணத்திற்க்கு வானவில் (ரெயின்போ) – தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் பெயர் வைத்தவர்களுக்கு வில்லின் அமைபை பொதுப்படையாக கையாண்டிருப்பது. இதிலும் வறுத்தலை (ஃபிரை) பொதுப்படையாக இருப்பது.

சரி, வறுத்தலுக்கு அடிப்படை பிரிட்னியோட ஓ பேபி பேபி பாடல், மற்றும் பாப் பாடகிகளோட ஹஸ்கி, முஸ்கி, புஸ்கி பாடகல்தான் காரணமாம்.
ஓ பேபி பேபி கேட்கனும்னா படத்தை கிளிக்குங்க.



உப்புமாக் கவி!

கவிதை எழுதும் நண்பா
தெரியுமா உனக்கு வெண்பா?

கேள்வி கேட்கும் நண்பா
எனக்கு பேசதெரியும் அன்பா!

இலக்கணத்தில்
நேர் நேர் தேமா, நிரை நேர் புளிமா

அரசியலில்
நேரு நேரு மாமா, அமெரிக்க அதிபர் ஒபாமா

கவிதைக்கு அழகு - சீரும் தொடையும்
மதிய உணவுக்கு அழகு - மோரும் வடையும்

கவிதையை மெருகூட்ட - தலையும் யாப்பும்
சிகையை மெருகூட்ட - சோப்பும் சீப்பும்

கவிதை சிறக்க - எதுகையும் மோனையும்
புதுக்கவிதை சிறக்க - ரைமிங்கும் டைமிங்கும்

ஆஹா, புதுக்கவிதையில்
நீ ஓபாமா!

அய்யகோ,
கவிஞன் எனச் சொல்ல என்மனம் ஒப்புமா?
கவிதையில் இது வெறும் உப்புமா!!

தமிழ் இனி மெல்ல வாழும்...

தமிழ்
தமிழ் தமிழென்று தமிழ் அமிழ்தமாய்
தமிழ்மொழி நம் தாய்மொழி எனும் தாரக மந்திரமாய்
தமிழ் தமிழ்நாட்டில் வாழ்ந்த காலம் - இறந்த காலமாய்

இனி
இனிய மொழிகளிலே தமிழ் மொழிபோல்
இனிதானது எங்கும் காணோம் என்று
இன்று இணையத்தில் தமிழ் வாழும் காலம் – நிகழ் காலமாய்

மெல்ல
தமிழ் இனி மெல்லச் சாகும்
எனச் சொன்னவர்களிடம் மெல்லச் சொல்லுங்கள்
புலம்பெயர்ந்த தமிழர்களிடம் தமிழ் – எதிர் காலமாய்

வாழும்
வாழ்வாங்கு வாழ்வது வள்ளுவரின் குறள் மட்டுமல்ல
வாழையடி வாழையாய் நாம் பேசும் தாய்மொழியும் தான் என்று
மெல்ல அல்ல உரக்கச் சொல்லுங்கள்

தமிழ் இனி மெல்ல வாழும் – காலம் காலமாய்.

குறிப்பு: இது நான் அட்லாண்டா தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற விடுமுறை தின கவிதை அரங்கத்திற்க்காக எழுதியது. தமிழ் நாட்டில் தமிழ் இறந்த காலமாய் என குறிப்பிட்டது இன்றைய தமிழ் ஆர்வத்தையும், ஆங்கில மோகத்தையும் காலத்தால் குறிப்பிடவே அன்றி குறைத்து மதிப்பிட அல்ல.