எந்திரன்... மந்திரன்... தந்திரன்

பல திறமைசாலிகள் ஒன்றிணைந்து விரைவில் நாம் வெள்ளித்திரையில் காணக் கிடைக்கப்போகும் ஒரு பெரிய விருந்து எந்திரன். இது தமிழ் சினிமாவில் ஒரு மைல் கல்லாக அமையும் என்பது எல்லோரும் எதிர்பார்க்கும் ஒன்று. மிகப் பெரிய வெற்றி பெற்றால் தமிழ் சினிமாவின் ஒரு புதிய தொலவை காட்டும் கல், சராசரி படமாக இருந்தால் சினிமா என்ற நெடுந்தொலைவு பயணித்தில் சற்றே அமர்ந்து செல்ல ஒரு ஒய்வுக் கல்.

எந்திரன்... ரஜினி, அவர்தானே கதாநாயகன். ஒரு சராசரி சினிமா ரசிகனுக்கு என்ன எதிர்பார்ப்பு இருக்குமோ அதை தருவதில் ரஜினி என்றும் ஏமாற்றியது இல்லை. ஆக்‌ஷன், ஸ்டைல், சிரிப்பு, டயலாக் டெலிவரி... அது குசேலனோ, சிவாஜியோ இல்லை எந்திரனோ அவர் பகுதியை சிறப்பாக செய்திருப்பார்.

மந்திரன்... சங்கர், அவர்தானே இயக்குனர். தன் ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய முந்தைய படத்தினை விட அடுத்த ஒரு படி மேலே செல்ல என்ன செய்ய வேண்டும் என யோசிப்பவர். சிவாஜி இயக்குனர் சங்கரை வெல்வது எப்படி என சிந்தித்து நிச்சயமா எந்திரனில் பல புதிய மந்திரங்களை உச்சரித்து இருப்பார்.

தந்திரன்... கலாநிதிமாறன், அவர்தானே தயாரிப்பாளர். வியாபார தந்திரம் அறிந்த எந்திரன் & மந்திரன். காசை போட்டு காசை எடுக்கும் இயந்திரம் எந்திரன் என்பதை அறிந்து இயக்குனர் கேட்ட கோடிகளை கொட்டிக் கொடுத்த (கேடி) மந்திரன். இசைத் தகடு வெளியீட்டை வெளிநாட்டில் (மலேசியாவில்) வெளியிட்டு முதல் வருமானத்தை வெள்ளிகளில் (டாலர்களில்) வெள்ளாமை செய்ய ஆரம்பித்து விட்டார். இனி எந்திரன் எழுத்தது, ஆயிபோனது, பல்துலக்கியது என்று இரவு எந்திரன் தூங்கப்போனது வரை அனைத்தையும் சன் நெட்வொர்க்கில் நீங்கள் பார்த்து ர(இம்)சிக்கலாம். அதுதானே அவரது வியாபார தந்திரம்.

எந்திரனோ, மந்திரனோ இல்லை தந்திரனோ, ஒரு இந்திரனாக தமிழ் சினிமா ரசிகர்களை இரட்சித்து மகிழ்விக்க வேண்டும்.

கலியுகமா இல்லை பலியுகமா?

ஆட்டுரலில் குழவி நின்று கல் சுற்றியது
கலி காலமாம்

தொடர்வண்டி நீராவியில்லாமல் ஓடுகிறது
மின்சாரத்தின் உதவியாம்

தொடர்பில்லாமல் தொலைக்காட்சியும் தொலைபேசியும்
தகவல்தொடர்பின் புதுப் பரிணாமமாம்

கடல் நீரைக் குடி நீராக்கி குடிக்கப்போகிறோம்
சுழற்ச்சி மாற்றமாம்

ஆமாம், இவையெல்லாம்
கலியுகத்தின் மாற்றம் பலியுகத்தின் தோற்றம்.

மறந்து விட்டோம் பண்பாட்டை
இழந்து விட்டோம் செயல்பாட்டை

அறிவியல் ஆடுகிறது வேட்டை
ஓசோனில் போடுகிறது ஓட்டை

தெரிகிறதா அதுகாட்டும் நடைபாட்டை?
அடையப்போகிறோம் விரைவில் சுடுகாட்டை.

வண்ணாந்துறை

ஒவ்வொரு நாட்டிலும் சைனா டவுன் இருப்பது போல் வண்ணாந்துறையும் இருக்கும் போல, சென்னையில் அது வண்ணாரப் பேட்டை, சிங்கப்பூரில் அது தோபி காட் (பிரிட்டிஷ் காலணிகளில் என்று நினைக்கிறேன்).

அன்று வண்ணாந்துறையில் அழுக்கு வெளுக்கப் பட்டு பலரும் பொலிவுடன் வளம்வர காரணமாயிருந்து உள்ளது. இன்று அந்த வண்ணாந்துறைய மையமாக வைத்து ஒரு சிறந்த தமிழ்ப் படம் வந்துள்ளது. இது தமிழ் சினிமாவில் உள்ள இன்றைய இயக்குனர்களின் மனதை வெளுக்குமா?

ஒரு படத்தின் கதாநாயகன் அதன் இயக்குனர் என்பதில் எனக்கு மாறுபட்ட கருத்து கிடையாது, ஹீரோ-தான் மாஸு என சொல்பவர்கள் என் பார்வையில் வெரும் லூஸு. வெரும் வெளிர் வெள்ளை வேட்டியில் ஒரு கதா நாயகனை இன்று நம் கண்ணில் காட்டியுள்ளது இப்படம்.

வடநாட்டு கோழியைப் போட்டு வறுத்தால் மசாலாவாக இருக்கும் என்று எண்ணி கதையை நம்பாமல் வெள்ளைச் சதையை நம்பி படம் பண்ணும் இயக்குனர்களின் நம்பிக்கையை வெளுக்க இதோ ஒரு தமிழ்ப் படம். அறைகுறை ஆடையில் (ஏமி ஜாக்ஸன்) – அள்ளித்தர இருந்தாலும் அவரை அழகியாக (ஏமி மில்கின்ஸனாக) காட்டியவர் இப்பட இயக்குனர்.

டெக்னாலஜி ஹாஸ் ஸோ இம்ப்ரூவ்ட் ஆனால் இயக்குனர் சைக்காலஜி ஹாஸ் ஸோ டேமேஜ்ட், கணணி வரைகலையை இப்ப உள்ள படத்துல பார்த்து கண்கள் அவிந்து போனதுதான் மிச்சம் என்று சொல்லும் அளவிற்கு கதாநாயகன் கைய தூக்குனா மின்னல் வெட்டுது, கால தூக்குனா பொறி பறக்குது, கதாநாயகி நடந்து வரும்போது கலர் கலரா உடை மாறுது என்ற மாயை கலர்களை வெளுத்து சிங்கார சென்னையை கருப்பு வெள்ளையில் அழகாக காட்டுவதற்கு கணணி வரைகலையை பயன் படுத்திய இயக்குனருக்கு ஒரு ஹேட்ஸ் ஆஃப்.

இப்படி பல இடங்களில் வெளுத்து வாங்கி,

தமிழ் சினிமாவில்
கதைக்கு இல்லை வெற்றிடம்
சதைக்கு இல்லை புகளிடம்
நல்ல இயக்குனரிடம்
மனம் இருந்தால் எடுக்கலாம்
மதராசப்பட்டினம் போல் வெற்றிப்படம்

மதராசப்பட்டினம் – இன்றைய தமிழ் சினிமா இயக்குனர்களின் மன அழுக்கை வெளுக்க வந்த வண்ணாந்துறை.