தாங்குமா தமிழகம்?

சமீபத்திய சட்டசபை கூட்டத்தில் தமிழகத்தின் நிதித்துறை அமைச்சர் அன்பழகன் நாம் ரூ.74,456 கோடி கடனில் இருப்பதாகவும், வரும் வருடங்களில் அது இன்னும் அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளார்.

தங்களது (தி.மு.க) ஆட்சியால் ஒன்றும் அது அதிகரிக்க வில்லை, அதற்க்கு முன் இருந்த ஆட்சியிலிருந்து அது தொடர்வதாக குறிப்பிட்டு உள்ளார். அது 2000-2001 தி.மு.க ஆட்சியில் இருந்தபோது சுமார் 28,000 கோடியாகவும், தொடர்ந்து வந்த அ.தி.மு.க ஆட்சியில் அது சுமார் 57,000 பின்பு 60,000 என்று வளர்ந்து இன்று 75,000 கோடியை தொட்டு நிற்கிறதாம்.

நம் ஆட்சியாளர்களின் குறிகோள் என்ன? தமிழர்களை கடனில் முன்னேற்றுவதா? முந்தைய அட்சியில் இவ்வளவு கடன் இருந்தது அதை நாங்கள் குறைத்துள்ளோம் அல்லது உயராமல் பல நல்ல திட்டங்களை செய்துள்ளோம் என்று இருக்க வேண்டாமா?

தேவையான தொழிலுக்கு / துறைக்கு, நலிந்த மக்கள் வளர்ச்சிக்கு அரசு மானியம் மிக அவசியம். ஆனால் ஓட்டு தேவைக்காக அரசு மானியம் பல இலவச திட்டங்களால் வீணடிக்கப்பட்டு, தமிழர்களின் வீட்டை கொள்ளையடிக்கிறார்கள் நம் ஆட்சியாளர்கள்.

சட்டசபை உறுப்பினர்களுக்கு சென்னையில் வீடாம்... என்ன கொடுமை? அவர்களுக்கு அவர்கள் தொகுதியில் இல்லாத வேலை சென்னையிலா இருக்கிறது? அவர்கள் சட்டசபை கூட்ட நேரத்தில் தங்கிகொள்ளத்தானே பல கோடியில் சமீபத்தில் எம்.எல்.ஏ விடுதி புதுப்பிக்கப் பட்டது?

இலவசத்தாலும், தகுதிக்கு/திறமைக்கு மீறிய சம்பள முறையாலும் இன்று அமெரிக்கா எதிர்கொள்ளும் பொருளாதாரச் சீரழிவு உங்களுக்கு தெரிய வில்லையா?

பட்டு தெரிந்துகொள்பவன் முட்டாள், பட்டு கெட்டவரிடம் இருந்து கற்றுகொள்பவன் அறிவாளி.

அமெரிக்காவின் கட்டமைப்பு அதனை எந்த சீரழிவிலிருந்தும் எழுச்சிகொள்ள செய்துவிடும். தமிழகம் தாங்குமா?

உருவாக்கத்தன்மையின் உச்சகட்டம்...

கிரியேட்டிவிட்டி என்கிற உருவாக்கத்தன்மைக்கு இன் நாளில் ஒரு சிறந்த உதாரணம் கூகிள் தேடு தளம் என்றால் மிகையாகாது.

அவர்கள் தொடர்ந்து அந்த நாளைப் பற்றிய சிறப்பை கூகில் முத்திரையாக பதிப்பதில் பெரும் கவனம் செலுத்தி அதில் வெற்றியும் பெற்று வருகின்றனர்.

இன்று மனிதன் நிலவில் காலடி வைத்த நாற்பது ஆண்டுகள் நிறைவை கொண்டாடுவதை குறிப்பிடும் பொருட்டு கூகிளின் முத்திரை...




எச்சரிக்க கடமை பட்டிருக்கிறேன்...

இதுவும் ஒரு பெஃட்னா-2009 நிகழ்வு குறிப்புதான். இலக்கிய கவியரங்க நாள் அன்று கவிஞர் ஜெய பாஸகரன் சமகால கவிஞர்கள் பற்றி பேசிய போது "அரசியல்வாதி" பற்றி அவர் எழுதிய கவிதை ஒன்றை சொன்னார்...

அவர் சற்று நகைச்சுவையுடன் சொன்னது என்னை மிகவும் கவர்ந்தது... நீங்களும் படித்து மகிழுங்கள்.

இதுவரை
இருபது முறைகளுக்கு மேல் எதிரிகளை
"எச்சரிக்க கடமை பட்டிருக்கிறேன்"
என்றாய்...
சலனமற்றுக் கிடந்த உன்
ஆதரவாளர்கள் முன்னிலையில்.

பலமுறை
"நான் சொல்லிக்கொள்வது என்னவென்றால்"
என்றாய்...
அதை தாண்டி நீ சொன்னது
எதுவுமே விளங்கவில்லை.

அடிக்கடி
"இன்னொன்றையும் குறிப்பிட்டாக வேண்டும்"
என்றாய்...
ஆயினும் ஒன்றை கூட
குறிப்பிட வில்லை.

கடைசியில்
"இறுதியாக ஒன்றை சொல்லி விடை பெறுகிறேன்"
என்றாய்...
அந்த ஒன்றையாவது
சொல்லிவிட்டு போயிருக்கலாம் நீ.

நன்றி: கவிஞர் ஜெய பாஸ்கரனுக்கு - காதால் கேட்டதை கண்ணால் குறிப்பெழுதி இங்கு இடுக்கையாக இட்டிருக்கிறேன் - தவறுகள் இருப்பின் மன்னிக்கவும்

வென்றாக வேண்டும் தமிழ்...

வென்றாக வேண்டும் தமிழ்... அமெரிக்க மாகாணம் ஜார்ஜியா - அட்லாண்டாவில் நடைபெற்ற பெஃட்னா - 2009 நிகழ்வுகளில் நடைபெற்ற ஒரு இலக்கிய நிகழ்ச்சி.

அதில் குறிப்பிடப்பட்ட ஒரு கவிதை குறிப்பு...

இப்போது
இருதயம் கூட இயந்திரத்தில்
தமிழ் கூட தடுமாற்றத்தில்...

உண்மைதான், தமிழ் வென்றாக வேண்டுமோ இல்லையோ தமிழ் ஒன்றாக வேண்டும் என்பது என் ஆசை... காரணம் அங்கு நான் கண்ட சில காட்ச்சிகள். அவ மனதிற்க்கு மிக வருத்தமளிக்கும் வகையில் இருந்தது.

விழாவில் கலந்துகொள்ள அழைக்கப்பட்ட கவிஞர்களிடம் காணப்பட்ட வேற்றுமை. சிலர் அதை பேசும் போது வெளிப்படுத்தினர், சிலர் அவர்களது செய்கை / நடத்தையில் வெளிப்படுத்தினர்.

இருந்தாலும் தமிழர்களின் ஒற்றுமை குறித்து பேசினார்கள்... எனக்கு அதில் மகிழ்ச்சியே.

கவிஞர் வைரமுத்துவிற்க்கு என் வரவேற்ப்பு

பெஃட்னா 2009, அட்லாண்டாவில் மிக சிறப்பாக கொண்டாட பட்டது. கவிஞர் வைரமுத்துவிற்க்கு நான் வாசித்த கவிதை...

பெயரோ வைரமுத்து
கைகளிலோ விரல்கள் பத்து
உன் கவிதைகளோ பெரும் சொத்து.

முகத்திலே சாந்தம்
குரலிலே காந்தம்
கவிப்பாக்களிலே பாந்தம்
சுருங்கச்சொன்னால் நீயொரு ஏகாந்தம்.

மண்ணிற்க்கு கவிதை எழுதினாய்
மொழிக்கு கவிதை எழுதினாய்
மனிதனுக்கு கவிதை எழுதினாய்

ஏன்...மரத்திற்க்கும் கவிதை எழுதினாய்...

கவிதையின் தலைப்புத்தான் மரம்
அதில் ஒவ்வொரு வரியும் உலகத் தரம்
கவியே, நீ எங்களுக்கு கிடைத்த வரம்.

மரத்திலிருந்து... மரப்பாச்சி
மனிதனுக்கு... மனசாட்சி
கரிசலிலிருந்து... கருவாச்சி
அதுகாவியமாய்... உருவாச்சி.

தமிழை காதலித்தாய்... கவிஞனானாய்
பொண்மணியை காதலித்தாய்... கணவனானாய்
எதனை காதலித்தாய்?
கலைஞரின் நண்பனானாய்?

மொழிகளில் செம்மொழி
நம் தமிழ் மொழி
இவ்விழாவிற்க்கு அழைத்ததும்
இசைந்தது உன் விழி

தமிழில் நீயொரு அங்கம்
தமிழில் நீயொரு அங்கம்
உனை வருக வருக எனவரவேற்க்குது
அட்லாண்டா தமிழ் சங்கம்.


பி.கு: நேரமின்மை காரணமாக வரவேற்ப்பு நன்றி நவிலலாய் மாறியது...

தமிழில் நீயொரு அங்கம்
தமிழில் நீயொரு அங்கம்
உன் வருகைக்கு நன்றி நவிழ்கின்றது
அட்லாண்டா தமிழ் சங்கம்.