ஸீரோ-வோடு சேர்ந்த ஹீரோ

பன்றி(ஸீரோ) குட்டி-யோடு சேர்ந்த கன்று(ஹீரோ) குட்டி....

நம்ம ஹீரோ சென்னைக்கு வேலை பார்க்க வந்தாரு. வேலை பார்க்க வந்த இடத்துல நிறைய கெட்ட வார்த்தை கத்துகிட்டாரு. அதுல அவருக்கு ரொம்ப புடிச்ச வார்த்தை மூன்று எழுத்து வார்த்தை...சென்னை-ல ரொம்ப ஃபேமஸ்..."ஓ.."ல ஆரம்பிக்கும், 'தா'-வுல முடியும். வீட்ல, நண்பர்கள் கூட, எங்கேயும், எப்போதும்...சுருக்கமா சொல்லனும்னா வாய திறந்தா "ஓ" ஒடதான். ஒரு விஷயம் நல்ல இருக்குன்னு சொல்லனும்னா கூட "ஓ.. சூப்பரா இருக்கு"-னு தான் சொல்லுவாரு.

அவுங்க அம்மாவுக்கு ரொம்ப கவலையா போயிடுச்சி, நம்ம சிவபெருமான் கிட்ட போயி முறையிட்டாங்க...என் புள்ளைக்கு நல்ல புத்திய குடு...கொஞ்சம் திருத்தி குடுன்னு வேண்டிகிட்டாங்க. சிவபெருமான் அந்த அம்மா பட்ட கவலைய பார்த்து...முருகன கூப்பிட்டு அந்த ஸீரோவ ஹீரோவா மாத்து-னு சொன்னாரு. முருகன், அப்பா அவன் என் பக்தன், என்னை கும்பிடும் போதே "ஓ.." போட்டுதான் கும்பிடுவான்...சரியான முரட்டு பக்தன்னு நான் அவன கண்டுகிறது இல்ல...இருந்தாலும் அவன கரக்ட் பண்ணனும், விஷ்ணு மாமா-தான் அதுக்கு சரியான ஆளு, நான் அவர்கிட்ட சொல்லி "ஓ"-வுக்கு ஒரு ஸ்கெட்ச் போட சொல்லுறன்-னு மாமா கிட்ட ஹீரோவோட ஃபோட்டோ & அட்ரெஸ் குடுத்துட்டாரு.

விஷ்ணு சென்னைக்கு வந்தாரு...விசாரிச்சா ஹீரோ சிங்கப்பூர் போயிட்டாரு-னு சொன்னாங்க. விஷ்ணுக்கு ரொம்ப சந்தோஷம்...வேலை சுலபமா முடிஞ்சிடுச்சி, பையன் அங்க போயி திருந்தி இருப்பான், ஜஸ்டு ஒரு லுக் விட்டு கன்ஃப்ர்ம் பண்ணிக்குவோம்-னு சிங்கப்பூர் வந்தாரு. பையன் எங்க இருப்பான்னு விசாரிச்சா...சிராங்கூன் ரோட்டுலனு தெரிஞ்சுது, அங்கேயும் ஒரே கெட்ட வார்த்தை...சரி பேசி சரிபண்ணிடலாம்னு நேரா மீட் பண்ண போனாரு. பையன் இப்ப சிங்கப்பூர விட்டு கலிஃபோர்னிய போயி அங்க 'குப்ப' கொட்டுரான்னு அங்க போனாரு. ஹீரோ கெட்டா வார்த்தை பேசுரத நிறுத்து-னு சொன்னாரு. "ஓ..." நீ யாருய்யா அத சொல்ல-னு கேட்க, விஷ்ணு சொன்னாரு, சொன்னா கேளு இல்ல போட்டு தள்ளிடுவன்னாரு. ஹீரோ கொஞ்சம் புத்திசாலி இல்லியா, விஷ்ணு-கிட்ட வின்-வின் டீல், "ஓ..." நீ ஒரே ஒரு முறைதான் உன் ஆயுதத்த யூஸ் பண்ணனும்-னு சொன்னான், விஷ்ணுவும் சரி-னு சொல்லிட்டாரு. இருந்தாலும் நல்லா யோசி-னு சொன்னாரு. "ஓ.." நான் திருந்த முடியாது, உன்னால என்னா பண்ண முடியுமோ செஞ்சிக்க-னு ஹீரோ 'குப்ப' கொட்ட போயிட்டான்.

விஷ்ணு, அவர் ஆயுதத்த(சக்கரம்) எடுத்து...மவனே தீந்தடானு விரல்லேருந்து சக்கரத்த ரிலீஸ் பண்ணிட்டாரு. சக்கரம் ஹீரோ கழுத்து கிட்ட போயிடுச்சி...அப்பதான் ஹீரோ 'குப்ப'-ய கொட்ட குனிஞ்சான், சக்கரம் தலைய தாண்டி போயிடுச்சி. விஷ்ணு டென்ஷன் ஆயி சொன்னாரு...'ஓ...' ஜஸ்ட் மிஸ்-னு. அதனால...என் இனிய தமிழ் மக்களே.. நீங்க விஷ்ணு மாதிரி டென்ஷன் ஆகி - பன்றி(ஸீரோ) குட்டி-யோடு சேர்ந்த கன்று(ஹீரோ) குட்டி....ஆகிடாதீங்க.

No comments: