வெற்றி வேல் முருகன் - "கண்ணா"

இதோ ஒரு "கண்ணா"...
நம்ம முருகருக்கு(கடவுள்) பல பேரு இருக்கு...கந்தன், சரவணன், வேலவன் இப்படி. நான் பேர பத்தி சொல்ல வல்ல...முருகன்-ன உடனே நமக்கு என்ன நினைவுக்கு வரும்? இரண்டு பொண்டாட்டியா? இல்ல... இல்ல...வேல்...மயில்..(கொடியில) கோழி...(காலுல) பாம்பூ..சரி...கையில் வேல் இருப்பதால வேலவன்-னு கூப்பிடுரோம்...

ஆன..திருவிழாவுல(தை பூசம்)...சவுண்டு வுடும் போது...என்ன உடுவோம்..?"வேல்..வேல்..வெற்றி வேல்""வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா"-னு சொல்லுரோம் இல்ல சொல்லுவாங்க. அப்போ...."வெற்றி"-கு opposit என்ன? "தோல்வி"அப்படீன்னா முருகன்...எங்கயும் தோத்துட்டாரா? இல்ல ஜெய்ச்சிகிட்டே இருந்தாரா?

ஆக....வேலுக்கு ஒரு வாலு மேட்டர் இருக்கு...என்ன அது? அந்த வாலு மேட்டர் தான் நம்ம நிகழ்சியோட "பிண்ணா"(வாலு-னு சொல்லிட்டோம்ல...அப்ப பிண்ணாடி தான வரும்...முறைச்சா எப்புடி?)

No comments: