ஒன்று இல்ல இரெண்டு. எல்லாம் போன வாரம் பார்த்த ரெண்டு படத்தோட பாதிப்பு.
முதல்ல நாம பார்க்க போறது "சென்னை காதல்". இத விக்ரமன் இயக்க பரத், ஜெனிலியா நடிக்க, இது ஒரு ஃபார்முளா படம். அதாவது 123...பாட்டு, 123...பாட்டு-னு ஐய்யயோ அடுத்தது ஒரு பாட்டு வந்துடுமோ-னு ஒரு பயத்தோடவே படம் நகருது.
"சென்னை காதல் - வேதனை" (இது ஒரு விக்ரமன் படம் இல்லை)
இரண்டாவது படம் "வெயில்". இது இயக்குனர் சங்கர் தயாரிப்புல, வசந்தபாலன் இயக்கத்துல வெளிவந்து இருக்கு. நசிந்து போயிட்டு இருக்கிற சினிமா வியாபாரம் ஒரு பக்கம், வளர்ந்து வர விளம்பர வியாபாரம் மறுபக்கம்-னு ரெண்ட ஒட்டி கதை சொல்லி இருக்காரு. மதுரைய கதை களமா அமைச்சு, மக்கள கருவா வச்சு வந்து இருக்கு இந்த வெயில்.
"வெயில் - சுடும்" (படம் பார்த்தா நம்ம மனச சுடும் - சோகம்)
No comments:
Post a Comment