கடிக்கலாம் வாங்க...

நண்-1: ஏண்டா உன் மனைவிக்கு உன் மீது ஆசை அதிகம் ஆயிடுச்சி போல இருக்கு?
நண்-2: எதை வச்சு மாப்ள நீ கண்டு பிடிச்ச?
நண்-1: நம்ம பழக ஆரம்பிக்கும் போது நீங்க/வாங்க-னு ஆரம்பிச்சு போக போக நீ/வா அப்புறம் வாட/போடா-னு கூப்பிடுறது போல உன் மனைவி உன்னை ச்சீ...வா..ச்சீ...வா-னு கூப்பிடுறாங்களே, அத வச்சுதான்.
நண்-2: டேய்..டேய்...வாய மூடுடா. அவ இனிமே வடமொழி எழுத்துக்கல உபயோகிக்காம பேசுரேன்னு சொல்லிட்டு..ஜீவா-ங்கிர என்ன சீவா-னு கூப்பிடுறா. நீ சீ-க்கும் வா-வுக்கும் இடைவெளி விட்டு குடும்பத்துல வலி-ய வுட்டுடாதாடா.

===

நண்-1: மாப்ள, ராத்திரி செல்லுக்கு கால் பண்ணுனேன்...பதிலே இல்ல?
நண்-2: செல்-லு தண்ணியில விழுந்துடுச்சிடா.
நண்-1: சரி காலைல பேச வேண்டியது தானே?
நண்-2: மடையா... நான் சொன்னது உள்ள ஊத்துன தண்ணியால இல்லடா...வெளிய இருந்த தண்ணியில.
நண்-1: அப்படி தெளிவா சொல்லு, நான் இன்னும் ராத்திரி அடிச்ச தண்ணி தெளியாம இருக்கேன்ல.

===

அம்மா: ஏண்டா...கம்பியூட்டர் செண்டர் உள்ள போக மாட்டேன்னு அழுது அடம் பண்ணினியமே?
மகன்: என் ஃபிரண்ட்ஸ் எல்லாம் உள்ள நிறைய 'மௌஸ்' இருக்குன்னு சொன்னாங்கம்மா, பயமா இருந்துச்சி அதான் போகல.
அம்மா: ?!!!

No comments: