எனக்கு சாதி பிடிக்கும், மதம் பிடிக்கும்

சத்தியமாய்
சாதிப் பிடிக்காது
ஆனால்
மதம் பிடிக்கும்.

மதம் பிடிக்கும்
சில சமயங்களில்
எனக்கு
சாதியைப் பிடிக்கும்

சண்டாளா
சாதி மதம் பிடிக்காதென்று
பதிவு எழுதி பேசியது?

பேசியது உண்மைதான்...
சாதிகள் இரண்டொழிய வேறில்லை
அதை மீண்டும் உணர்த்திச் சொல்லப் பதிவு

பதிவெழுதி பதிவெழுதி
பலவேலைகளை நான் கால தா-மதம் செய்தும்
அதை பொருட்-படுத்தாத
என் பெண்-சாதியை பிடிக்கும்
அதை பொருட்-படுத்தினாலும்
மதம் பிடிக்காத பெண்-சாதியை பிடிக்கும்

தா-மதம் தா-மதம் என்றாலும்
இன்னுமொரு இடுக்கை இடவில்லையா
என பதிவெழுத சம்-மதம் சொல்லும்
மதம் பிடித்த பெண்-சாதியை பிடிக்கும்.

குடைச்சல்...

ஒருவன்தான் உணவுண்டேன்
சோற்றுடன் கறி ஒன்று
ஒழித்துப் போட்டேன்
பத்துப்பசை பாத்திரங்கள் ஒன்பது
கழுவிப் போட்டேன்
கையெல்லாம் வலி குடையுது

என்னவளை எண்ணினேன்
நித்தம் கறி இரண்டு
ஒழித்துப் போடப்போட
வற்றா பத்துப்பசை பாத்திரங்கள்
கைவலித்ததாய் செவிமடிக்கவில்லை
மனதெல்லாம் வலி குடையுது

கவி.பர்வீன் சுல்தானாவிற்கு நன்றி

கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடுமென்பது – அன்று
கருணாநிதி வீட்டிக் கட்டில்தறி கவிபாடியது – இன்று

கவிஞர் பர்வீன் சுல்தானா
கவிஞர் பர்வீன் சுல்தானா
கவிதையாய்
பாரில் இனி உன் தமிழ் சொல் தானா?

அவையில் உங்களை
பேசச்சொல்லி அழைத்தவர் துணைத்தலைவர் ரவி
கேட்டு ரசித்ததோ அவையில் உள்ளோரின் செவி.

தலைப்போ சிகரம் தொட்டு
தலைப்போ “பெண்மையின்” சிகரம் தொட்டு
திகைத்தோம் உங்கள் உரையைக் கேட்டு
காரணம் – நீங்கள் பேசியவை
ஒவ்வொன்றும் எங்கள் மனதைத் தொட்டு.

நீங்கள் பேசியதெல்லாம் பெண்ணின் “சுயம்”
அதைக்கேட்ட ஆண்களுக்கு சற்றே பயம்.

அகநானூறு சொன்னீர், புறநானூறு சொன்னீர்
ஆம், அகம் சொன்னீர், புறம் சொன்னீர்
அகமோ, புறமோ
உங்களால் இந்த முத்தமிழ் விழாவில் நாங்கள் பெற்றது
தமிழ் எனும் சுகம் சுகம் சுகம்.