மக்களே...ஒரு கேள்வி

மடையர்களில் பல விதம், அதில் ஒரு வகை 'மாங்கா'...கூப்பிட்டு இருப்பீர்கள் அல்லது கேள்வி பட்டு இருப்பீர்கள். இதில் விஷேசம் என்னவென்றால்... குறிப்பாக 'ஆண்'-களை சொல்லும் போதுதான் அதிகம் உபயோகிப்பார்கள் - அவண் ஒரு 'மாங்கா மடையண்டா'-னு.

ஏன் அப்படி? மாங்கவுக்கும் ஆண்களுக்கும் என்ன ஒரு ரிலேசன்? சொல்லுங்க மாங்காகளே...ஹி..ஹி..மகா(இங்கு 'ங்க்' -கு சைலண்ட்) மக்ககளே.

நம்ம பிள்ளையாரும் முருகனும் உலகத்தை சுத்தி வந்த கதை தெரியும் தானே? கதை சுருக்கம் இதோ - பல கதை அதில் இது ஒரு கதை - நம்ம நாரதர் மாமாவுக்கு ஒரு ஸ்பெசல் மாம்பழம் கிடைத்தது, அதை அவர் திங்காம சிவ/பார்வதி-யாண்ட கொண்டாந்து குடுத்தாரு, அவ்வா ரெண்டு பேரும் அதை தன் பிள்ளைகள் தின்பதுதான் உசிதம் என்று...ஃபிளா... ஃபிளா... முருகன் மயில் ஏறி போனாரு... நம்ம ஸ்மார்ட் பிள்ளையர் அப்பா/அம்மா-வ சுத்தி வந்து மேங்கோ-வ டேக் ஒவர் பண்ணிட்டார். ஊர சுத்தி வந்த முருகன் டென்ஸ்ன் ஆகி ஆண்டியா போயிட்டார். இதுதான் கதை?!

இதத்தான் இத்தன நாளா நம்பினோம். இத நம்பினவுங்க எல்லோரும் 'த சோ காள்ட்' மாங்கா. ஹா..ஹா. பின்ன என்னங்க யாரவது ஒரு மாங்காய்க்காக இவ்வளவு ரிஸ்க் எடுப்பாங்களா? நம்ம பிள்ளையார் எந்த அளவுக்கு ஸ்மார்டோ...அந்த அளவுக்கு நம்ம முருகன் ஜெண்டில் மேன்...டேய் அண்ணா நீயே சாப்பிடு...எண்ஜாய்னு சொல்லிட்டு போயி இருப்பாரு.

ஹூம்.. நீங்க எல்லொரும் யோசிக்கிறிங்க மக்களே...எனக்கு தெரியுது. நம்ம வடிவேலு பாணியில சொன்னா...அப்ப மேட்டரு மாங்க-யில இல்லியா? மாங்கான்னு நெனைச்ச நான் தான் மாங்காயா?...அவ்..வ்...வ்..வ்....அப்ப என்னதான் மேட்டரு?

சிவனும் பார்வதியும், பிள்ளையாரையும் முருகனையும் கூப்பிட்டு... மக்கா... ஒங்களுக்கு கல்யாண வயசு வந்துடிச்சி...ஆனா யாருக்கு முதல்ல கல்யாணம் பண்ணுறதுன்னு தெரியல...அதனால யாரு முதல்ல உலகத்த சுத்தி வரீங்களோ...அவங்களுக்கு தான் கல்யாணம்னு சொல்லிட்டாங்க. ஆக...உலகத்த சுத்த சொன்னது மாங்காய்கு இல்ல...மங்கைக்கு. (அந்த ப்பிளா..ப்பிளா... கதைய இங்க சேர்த்துகுங்க).

ஆக நம்ம முருகன் ஊரை சுத்தி வந்து 'மடையன்' ஆனது மங்கை-க்காக. So அது 'மங்கை மடையன்' மேட்டர். நான் நினைக்கிறேன் முருகன 'மங்கை' மேட்டர்-ல நு சொன்னா நல்ல இருக்காதுன்னு 'மாங்காய்' நு சொல்லிட்டாங்க. மங்கை மேட்டர்-ல படம் விட்டதால 'ஆண்'கள 'மாங்கா'-னு சொல்லுறாங்க போல இருக்கு.

No comments: