உங்களுக்கு "கமல கண்ணன்"-ஐ தெரியுமா?"

கமல கண்ணன்" வேற யாரும் இல்ல நம்ம "மஹா விஷ்ணு"-தான்.

நம்ம வி(ஷ்ணு) தினமும் ஆயிரம் தாமரை(கமலம்)-யை வைத்து மச்சான் சிவா-வுக்கு பூஜை பண்ணுவார். வி மாம்ஸ் பண்ணுற பூஜைல மாப்ஸ்(பிள்ளையார்) கொஞ்சம் ரௌஸ் உடலாம்னு யோசிச்சாரு, கூப்பிட்டாரு சுண்டெலிய(அவரோட கைத்தடி), போயி அங்க உள்ள 1000-த்ல ஒன்ன உருவிட்டு வான்னு சொன்னாரு (நீங்க பார்த்து இருப்பீங்க...எல்லா பிள்ளையார் காலண்டரிலும் உள்ள சுண்டெலி வாயில் ஒரு தாமரை பூ வச்சி இருக்கும் - இதான் மேட்டர்), அதுவும் உருவிட்டு வந்துட்டுது.

வி பூஜைல 999 சுலோகத்த சொல்லிடாரு, 1000-த்த சொல்லும் போது பார்த்தா பூ-வ காணூம்...உடனே தன் கண்-ன எடுத்து(ஆஹா இது வல்லவா பக்தி) பூஜைய முடிச்சிட்டாரு.

கண்-னை கமலம்-ஆக பயன் படுத்தியதால் "கமல கண்ணன்"

No comments: