போட மறந்த பதிவு...

இயக்குனர் சேரன் சொல்ல மறந்த கதை-க்கு பின் ஏதும் மிகப் பெரிய வெற்றி படங்கள் அமையாததற்க்கு காரணம் தான் வைத்த படத்தின் பெயர் என்று நினைத்து சில பெரிய மனிதார்களை தன் அடுத்த படத்திற்க்கு நல்லதொரு பெயர் வைத்து தருமாறு கேட்க... அவர்கள் பரிந்துறைத்த பெயர்கள்

க.மு.க: (என்னை வந்து) பார்க்க மறந்த நடிகை

மருத்துவர் ராமதாஸ்: ( நெடுஞ்ச் சாலைகளில்) வெட்ட மறந்த மரம்

செ.ஜெ: (ஆட்சியில் இருந்தபோது) நீக்க மறந்த அமைச்சர்
சசி: (அக்கா ஆசியுடன் வளைக்க) வாங்க மறந்த இடம்

வை.கோ: (கொள்கையை மட்டுமா?) என்னையே மறந்த நான்

சு.சா: (மன்மோகன் தாடி போச்சே) வைக்க மறந்த பார்ட்டி

அழகிரி: (அமைச்சர் ஆனதால்) அனுப்ப மறந்த ஆட்டோ

ஸ்டாலின்: ( நான் மட்டுமா?) நாற்காலி மறந்த நாலுபேர்

வைரமுத்து:(பொய்யில்லாம எப்படி) எழுத மறந்த கவிதை

ஆசிரியர்: (அட்டை டு அட்டை) எடுக்க மறந்த பாடம்

மாணவன்: (அட்டு முதல் அழகி வரை) சொல்ல மறந்த காதல்

நீங்களும் சொல்லலாம்ல...

யார் கடவுள்?

யார் நம் பிரச்சனையை தீர்த்து வைக்கிறார்களோ அவுங்கதான் கடவுள். பல சமயம் அது நம் நண்பர்களாகவே இருக்கும். அடிக்கடி சொல்லி இருப்போம்... என்ன செய்வது என்று அறியாது விழித்துக்கொண்டிருந்தேன்... நல்ல வேளை கடவுள் மாதிரி வந்து காப்பாற்றினாய் என்று. சில சமயம் அது நம் வலி/துயர் தீர்க்கும் மருத்துவராக கூட இருக்கலாம். டாக்டர்... பிழைப்பேனா இல்லை இறப்பேனா என்று கிடந்தேன்... கடவுள் மாதிரி வந்து காப்பாற்றினீர்கள் என்று சொல்லுவோம்.

மேலே சொன்ன பல சமயம் மற்றும் சில சமயம்-ல எந்த சமயத்துல யார் கடவுள்? இந்து சமயத்துல பல கடவுள், கிருஸ்துவ மற்றும் இஸ்லாமிய சமயத்தில் சில கடவுள் அல்லது தேவ தூதர்கள்... அவர்களும் கடவுள் தான்.

இந்து மதத்தில் ஏன் பல கடவுள்? அது தேவையா?

நாம் அனைவரும்/ஒவ்வொருவரும் ஒரு நிறுவாகத்தின்(பிரபஞ்ஜத்தின்) ஒரு அங்கம். உதாரணத்திற்க்கு ஒரு சிறிய அளவில் ஒரு பள்ளி / கல்லூரி / அரசாங்கம்-ன்னு எடுத்துக்கோங்க.... அதை நிறுவகிக்க ஒரு தலைமை, உப தலைமைகள், வேறுபட்ட துறைகள் என்று... திறம்பட செயல்பட.

இந்து மத கடவுள்களும் அப்படித்தான் தோன்றி வைக்கப்பட்டு இருக்கிறார்கள். அக்னி பகவான், வாயு பகவான், வருண பகவான்... என்று பஞ்ச பூதங்களுக்கு கடவுள். பின்னர் துறைகள்... பிறப்புக்கு பிரம்மா, கல்வியா அதற்க்கு சரஸ்வதி, பொருளாதாரமா அதற்கு லட்சுமி... இறப்புக்கு எமதருமன்.

சரி எமதருமன் தவறு செய்து விட்டால்? கணக்கை சரி செய்து காளனை வெள்ள திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர்... என்றும் இந்த கடவுள்களின் பட்டியல் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது...

சரி கடவுள்கள் சரியாத்தான் இருக்காங்க... தலைமை யாரு? அதுவம் சரியாகவே சொல்லப்பட்டு இருக்கிறது... கடவுள்கள் (காட்-GOD) பல... ஆனால் தலைமை (லார்ட்-LORD) ஒருவரே... அவர் கிருஷ்ண பரமாத்மா.