கல்லூரி கானா...

கல்லூரி கானா...

வகுப்புல யென் பேரு கிட்டு
கிட்ட சுத்தி நிறைய சிட்டு
அதுல பல பேரு அட்டு, சில பேரு லட்டு

மாலாதான் யென்னோட பிட்டு
மயக்கத்துல ஊ..ல..லா..லா பாட்டு
மார்க்குல ஓ..ல..லா..லா கோட்டு

கையில கொடுத்தா ஒரு சீட்டு
அமெரிக்காவுக்கு விட போரா ஜூட்டு
நான் இப்ப வெத்து வேட்டு.

(கீழே உள்ள வரிகள் தனி நபர் தனிக்கைக்கு உட்பட்டது...U/A சர்டிஃபைடு)
பச்சை

அவள்... பக்கதுல பாக்கி(யம்/ஸ்தானி) பச்சை
கண்ணுல காமிக்குரா இச்சை
மார்புல கட்டியிருக்கா கச்சை
கண்கள் கேட்காது என் பேச்சை
நிறுத்த போகுது என் மூச்சை
கயட்டி போடுவாலா பிச்சை?

ஹி...ஹி..துவைத்து போடத்தான்.

சிரிக்காதே...

சிரிக்காதே...
சிரித்தால் உன் கண்ணத்தில் குழி...
என் மனம் தடுக்கி விழுந்து விட போகிறது

கண்களைத் திற...
அந்த ஒளியில் தான் நான்
உன் இதழ் என்ற இருவரி கவிதையை படிக்க முடிகிறது.

மௌனத்தை கைவிடு...மரணம் நிகழ்ந்துவிட போகிறது

உன் கயல் விழியால் ஒரு கடைகண் பார்வை...
கண்ணக் குழியோடு ஒரு கள்ளமில்லா சிரிப்பு...
காற்றுக்கும் வலிக்காமல் ஒரு கையசைவு...
ஒன்றே... ஒன்று மட்டும்... என் உயிர் பிழைக்க.

பெண்ணே நீ ஒரு மாயம்...

முகத்தில் எப்பொழுதும் முக-சாயம்
ஆடை அணிவதில் சிக்கனம் அணி-யாயம்
இவற்றால் என் மனதில் பெரும் காயம்
காயத்திற்க்கு மருந்தாக...
நீ என் கூட விளையாட வறியா தாயம்?

No comments: