அக்கடா... துக்கடா... - 2

செய்தி: கோலிவுட்டில் சிம்பு தனுஷ் டைட்டில் போட்டி

தனுஷ்: பொல்லாதவன்
சிம்பு: மோசமானவன்

அப்ப மத்தவங்க எல்லாம்....

கேப்டன்:கோபமானவன்
சித்தப்பா:பாசமானவன்
தல:வேகமானவன்(ரேஸ் பார்ட்டி)
விஜய்:அடக்கமானவன் (ண்னா..வேணாங்கனா)
விக்ரம்:விவரமானவன்
சூர்யா:ஒளிமயமானவன் (ஜோதியோடு)எஸ்.ஜே.சூர்யா:விவகாரமானவன்
விஷால்:வீறாப்பானவன் (முறைச்சது போதும் கொஞ்சம் சிரிப்பா)

எல்லாரையும் கவர் பண்ணிட்டனா?

ஹி... ஹி... பெருந்தலைகள் இல்லாட்டி எப்புடி?
கமல்:கண்ணியமானவன் (டைட்டில மட்டும் தான்)
ரஜினி:வயசானவன் (யூத்தா டைட்டில் சொன்னா என் பேரன் பெண்டு/பேத்து எடுத்துடுவான்)

போர்வால் டு ஃபயர்வால்

மன்னர்: யாரங்கே?
மந்திரி: மன்னா?
மன்னர்: அரசியிடம் வலை தளத்தில் யாரும் கடலை போடமல் இருக்க ஃபையர் வால் போட சொன்னேன், ஆனால்...
மந்திரி: என்ன ஆச்சு மன்னா?
மன்னர்: இப்போது நானே உள்ளே போக முடியாமல் அந்தபுரத்தை சுற்றி நெருப்பு வேலி போட்டு இருக்கிறார்கள்.
மந்திரி:??!!!

சின்ன ஆப்பா...பெரிய ஆப்பா...

(டைட்டில் சாங்க்:சின்ன ஆப்பா...பெரிய ஆப்பா...சந்திச்சலே ஆப்புதான்ப்பா...)

சி.ஆ: நான் அடிச்சா அது நைஸு
பெ.ஆ: நான் அடிச்சா அது சைஸு

சி.ஆ:ஆமாம் நம்மள ஏன் ஆப்பு-ன்னு கூப்பிடுறாங்க?
பெ.ஆ:அடிக்க ஆரம்பிச்ச ஒடனே வலிக்கும்ல, வலிக்கும் போது என்ன சொல்லுவாங்க..ஆ..ஆ-ன்னு, அடிச்சு முடிஞ்ச போது... அப்பா-டான்னு இருக்கும். சோ...ஆ-வும், அப்பா-வும் சேர்ந்து ஆப்பா ஆயிடுச்சி.

சி.ஆ: அப்ப ஆப்பா-ன்னு சொல்லம ஏன் ஆப்பு-னு சொல்லுறங்க?பெ.ஆ:அதுவா...ஆப்பா பிரஸண்டென்ஸ்/புலூரல்... ஆப்பு... பாஸ்டென்ஸ்/சிங்குலர்.

சி.ஆ:ஆப்புக்கே ஆப்பு அடிக்கிறவங்க இருக்காங்களா?
பெ.ஆ:தோ...அது நீதான்...உன் கேள்விய உன்கிட்டயே கேட்டுப்பாரு...அப்ப தெரியும்.

புராஜக்ட் சப்போர்ட்...பேட்டா ராப்...

தல: இன்னாப்பா? தலைல கைய வச்சிகினு உக்காந்துட்ட? இன்னா மேட்டர், யாங்க் கைல சொல்லுப்பா.
கில: ஆங்க்...அது நேத்து ரன் பன்னுன ஜாப் ஊத்திக்கிச்சுபா...அதான். நீ வந்து கேட்டா உன் கைல என்னா சொல்லுரதுனு தெரியாம முழிச்சிகினு இருக்கென்.
தல: அட தோ பாருடா, சப்ப மேட்டரு, அதுக்கு பொயி இன்னாமோ கப்ப கவுந்தமாரி இருக்க. போ போயி இப்ப ரீஸண்டா இன்னா சேஞ்ச் பன்னுனோம்னு யோசி, அப்பால விட கப்புனு கிடைக்கும்.
கில: யான்பா... என்கு அதுகூட தெரியாதா, நான் என்ன கூமுட்டையா? நேத்தி நம்ம கபாளி தான் கியூசி பன்னான்பா, எல்லாம் கறீட்டா கீது-னு சொன்னான்பா.
தல: கஸ்மாலங்களா, அதுக்குதான் கோட் செய்யசொல்லோ கொஞ்சம் புரோஆக்டிவா எக்ஸப்சன் ஹேண்டில் பன்ன்னுங்கோன்னு சொன்னேன், யவனாவது கேட்டீங்களா? இப்போ அனுபவிங்கோ.
கில: சும்மா கூவாதிங்க, கோட் பன்ன அஞ்சு நா கேட்டா ரெண்டு நா குடுக்க வேண்டிது, அதுல கூட அப்ப அப்ப கொசுரு வேளையும், இப்ப வந்து புரோஆக்டிவ், புரோட்டாவுக்கு ஸால்னானு...
தல: என்னாமே, நம்ம கைல ராங்க் பேசுர? ஏத்தமா உன்கு? நீ இன்னா பன்னுவியோ ஏது பன்னுவியோ என்கு தெரியாது, கோழி கூவசொல்லோ யாங்கைல ரிப்போட் இருக்கனும்..ஆங்க்.

வார்த்தையில் வன்முறை...

வார்த்த ஒன்னு வார்த்த ஒன்னு என்ன கொல்ல பாக்குதே
அது வாள் எடுத்து வாள் எடுத்து வெட்ட பாக்குதே

பொருக்கியா இருந்த நான் வருக்கியா ஆயிட்டேன்....

நான்...ஊருல பெறிய பொருக்கி
குறுக்க வந்தா ஒரு சிறிக்கி
கூபிட்டா கைய்ய சொடுக்கி

அவ...ஊருல மேனா மினுக்கி
கட்டி அனைச்சிட்டா என்ன இருக்கி
மனம் விழுந்துடிச்சி தடுக்கி

நான் அவ வாயில இப்ப வறுக்கி

No comments: