ஏய்ய்... சைலன்ஸ்... கூட்டணி பாட்டு பாடிகிட்டு இருக்கோம்ல...

இடம்: போயஸ் தோட்டம்
நேரம்: கூட்டணி தொகுதிப் பங்கீடு முடிந்த நேரம்
காலம்: அந்தி மாலைப் பொழுது

( நீண்ட நாட்களாய் தன்னை திரும்பி பார்க்காமல் இருக்கும் சசிகலாவை பார்த்து நடராஜன் ஆரம்பிக்கிறார்)

நடராஜன்: யம்மாடி... ஆத்தாடி...
என்கிட்ட திரும்பி வருவியாடி...

ஜெ: செரினா-வ உள்ள போட்டு நொங்கு எடுத்தது மறந்து போச்சா... அப்படியே ஓடிபோயிடு...

சசி: அக்கா, விடுங்கக்கா... காய்ஞ்சி போயி வந்திருக்கிறார், நாமும் சீட்டு பேரம் பேசி மண்ட காய்ஞ்சி கிடக்கிறோம்... ஏதோ பாடிட்டு போகட்டும்... நீ பாடுய்யா...டி.ஆரோட குத்துப் பாட்டு சும்மா சூப்பரா இருக்கும்.

ஜெ: அப்படியா... சரி கூட்டணி தலைவர்கள் எல்லோரும் இருக்கீங்க... கூச்சப்படாம ஆளாளுக்கு ஒரு குத்து குத்துங்க

சசி: வைகோ ஸ்டார்ட் த மியூசிக்

நடராஜன்: யம்மாடி... ஆத்தாடி...
என்கிட்ட திரும்பி வருவியாடி...

சசி: அக்கா பாதி... நான் பாதி
அட சேர்ந்துபுட்டா தமிழ்நாடு காலி...

வைகோ: அம்மா காலில் விழுவோமா...
குடுத்த இடத்தில் நிப்போமா...

இடது சாரி: கலைஞ்சர் பேர கெடுப்போமா...
சேதுபாலம் பிரச்சனைன்னு சொல்லுவோமா...

கூட்டணி தலைவர்கள் (ஜெ காலை தொட்டு வணங்கி வணங்கி):
யம்மா யம்மா யம்மா யம்மா
யம்மா யம்மா யம்மம்மா...

கூட்டணி தலைவர்கள் (ஜெ காலை தொட்டு வணங்கி வணங்கி):
யம்மா யம்மா யம்மா யம்மா
யம்மா யம்மா யம்மம்மா...

நட: யம்மாடி... அய்யோ ஆத்தாடி...
எனக்கொரு எம்பிசீட்டு வாங்கித் தரியாடி...

சசி: ஏய் அக்காதாண்ட முதளாலி...
மத்தவனெல்லாம் எங்களுக்கு தொழிளாலி...

(கூட்டணி ஸ்பெசல் தலைவர் மரம் வெட்டி அய்யா எண்ட்ரி ஆகிறார்)

மரு.அய்யா: அச்சம்வேண்டும் மரம் வெட்டுவேண்ணு அச்சம்வேண்டும்
கூட்டணி தாவிப்பார்த்தா தாவிப்பார்த்தா சீட்டு கூடவரும்...

ஜெ:வெட்கம் கெட்ட அய்யாவத்தான்...
அனைச்சிகிட்டா சேர்த்துகிட்டா ஜெயிசிடுவோம்

மரு.அய்யா: நேத்துவர நேத்துவர
நீயும்தான் நானும்தான் ஒட்டவில்ல...

ஜெ: ஓடுகாலி நீ ஓடுகாலி ஜெயிச்சபிறகு
நானும்தான் உன்ன நம்பவில்ல

வைகோ: எனக்கு தொகுதி கொஞ்சமடி...

சசி: நீ ஓடிப்போன கட்சிகாரன தேடிப்புடி...

(சுப்ரமணிய சாமி உள்ளே வருகிறார்)

சு.சா: உன்னைபோல என்னைபோல
தமிழகத்த காப்பாத்த யாருமில்ல

ஜெ: நல்லவரே... வல்லவரே
"அவளண்ட என்ன இல்லைன்னு" சொன்னவரே

கூட்டணி தலைவர்கள் (ஜெ காலை தொட்டு வணங்கி வணங்கி):
யம்மா யம்மா யம்மா யம்மா
யம்மா யம்மா யம்மம்மா...

கூட்டணி தலைவர்கள் (ஜெ காலை தொட்டு வணங்கி வணங்கி):
யம்மா யம்மா யம்மா யம்மா
யம்மா யம்மா யம்மம்மா...

வைகோ: அய்யோ... அய்யோ

(சைடில் நடராஜன் சசியை சரிகட்டியதை பார்த்த ஜெ-வுக்கு அதிர்ச்சி, பிறகு இருவரும் சுதாரித்து கொண்டு ரொமான்ஸ்)

ஜெ: ஆதாரமா... அவதாரமா...
ஆயிபுட்ட நெஞ்சுக்குள்ள

சசி: உன்ன விட்டா, என்ன விடும்
உயிர்தானம்மா உள்ளுக்குள்ள

ஜெ: உன்வாசம்தான் என்மூச்சில்வீசி
உயிருக்குள் உயிர்வாழுரேன்

சசி: நம் பேரத்தான் ஊரெல்லாம் பேசும்...
ஊமைக்கும் மொழியானது...

(ஜெ-சசி ரொமான்ஸை பார்த்த நட்டு மூட் அவுட், அவரை சரிகட்டுகிறார் சசி)

சசி: நீதாண்ட நீதாண்டா ஜல்லிக்கட்டு
முடிஞ்சாக்கா என்ன கட்டு
(சசி இருக்கிற சைஸுக்கு எங்க கட்டுரது)

நட: ஊருக்கும் பேருக்கும் மல்லுக்கட்டு
என்னோட பெட்டுக்கு டாட்டா காட்டு...டு ...டு... டு

கூட்டணி தலைவர்கள் (ஜெ காலை தொட்டு வணங்கி வணங்கி):
யம்மா யம்மா யம்மா யம்மா
யம்மா யம்மா யம்மம்மா...

கூட்டணி தலைவர்கள் (ஜெ காலை தொட்டு வணங்கி வணங்கி):
யம்மா யம்மா யம்மா யம்மா
யம்மா யம்மா யம்மம்மா...

நடராஜன்: யம்மாடி... ஆத்தாடி...
என்கிட்ட திரும்பி வருவியாடி...

சசி: அக்கா பாதி... நான் பாதி
அட சேர்ந்துபுட்டா தமிழ்நாடு காலி...

வைகோ: அம்மா காலில் விழுவோமா...
குடுத்த இடத்தில் நிப்போமா...

இடது சாரி: கலைஞ்சர் பேர கெடுப்போமா...
சேதுபாலம் பிரச்சனைன்னு சொல்லுவோமா...

சு.சா: ஏ எம்மா... ஏ எம்மா... ஏ எம்மா... ஏ எம்மா... யம்மம்மா

மரு.அய்யா: யம்மா யம்மா யம்மா யம்மாயம்மா யம்மா யம்மம்மா...

வலது சாரி வரதராஜன்: என்னய்யா பாட்ட நிறுத்திட்டீங்க...பட்டய கிளப்பு...

நட: குத்துன்னா... கூட்டணியாத்தான் குத்தனும்... செமகுத்து... தேங்க்ஸுப்பா...

3 comments:

நட்புடன் ஜமால் said...

அட

குத்து பாட்டுல

இம்பூட்டு

குத்து இருக்கா

ஆ.ஞானசேகரன் said...

நல்லா இருக்கு

ஆ.ஞானசேகரன் said...

//குத்துன்னா... கூட்டணியாத்தான் குத்தனும்... செமகுத்து... தேங்க்ஸுப்பா... //
கலக்கல்