வெந்ததைத்தின்று வாயில் வந்ததை பேசும்...

வெந்ததைத்தின்று வாயில் வந்ததை பேசும்... என்ன எல்லாம் வெ வா வ-ன்னு கோர்வையாக வருகிறதா? இருக்காதா பின்ன பேசியது வைகோ-வாச்சே.

விருது நகர் லோக்சபா-விற்க்கு போட்டியிடும் அவர் சந்திரப்பட்டியில் பேசிய பேச்சை பாருங்கள்

"ரத்த ஆறு ஓடும் என்று சொன்னதை நான் மறுக்கவில்லை" முத்துக்குமரனைப் போல் தீக்குளிப்புகள் நடக்கும் என்பதை கூறினேன் என்று அந்தர் பல்டி அடித்திருக்கிறார். மேலும் " நான் என்ன கருணாநிதி பேசாததையா நான் பேசிவிட்டேன்" என்ற கேள்வி வேறு...

வடிவேலு: ஏ வென்று அந்த ஆள் சரியில்லை என்றுதானய்ய உன் பின்னே ஒரு கூட்டம் வந்தது, அதை புரிந்து கொள்ளாமல் நானும் சேற்றில் விழுந்து புரல்கிறேன் என்கிறாயே? கவுத்துப்புட்டாய்ங்கய்யா கவுத்துப்புட்டாய்ங்க.

ஜெயலலிதா ஒரு டி.வி-க்கு அளித்த பேட்டியில், நாங்கள் கொண்ட நட்பின் காரணமாக "இன்று நேற்றா வைகோ இதுபோல் பேசுகிறார், எத்தனை ஆண்டுகளாக பேசிவருகிறார்" என்று மேற்கோளிட்டு பேசியிருக்கிறார்.

கவுண்டமணி: அடங்கொன்னியா... அந்த அம்மா உண்மையாவே என்ன சொன்னுதுன்னு நீ தெரிஞ்சு பேசுறியா இல்ல தெரியாம பேசுறியா? நீ தி.மு.க-வுல இருந்தப்ப ஆடுன ஆட்டத்துக்குத்தான் உன்ன பொடாவுல போட்டுது, இப்ப கூட இருந்துகிட்டு டார்ச்சர் பண்ணுரன்னு போட்டு குடுக்குது, நீ என்னமோ நட்பு தோழமைன்னு கூட்டம் போட்டு பேசிகிட்டு இருக்கிற... நாராயணா இந்த (வைகோ) கொசு தொல்ல தாங்களடா.

கட்ட கடைசியா மக்கள பார்த்து ஒன்னு சொல்லி இருக்கிறார் " நீங்கள் மனிதாபிமானத்திற்க்கு ஓட்டு போடுவீர்கள் பணத்திற்க்கு ஓட்டு போடமாட்டீர்கள் என்று நம்புகிறேன்" என்று.

விவேக்: அட தோ பார்ரா மிஸ்டர் கிளீன் சொல்றாரு நம்ம எல்லோரும் கேட்கணுமாம், இவரு மட்டும் 30 கோடிய வாங்கிகிட்டு மூனு வருஷமா மூடிகினு இருப்பாராம்...ஹும் இந்த தமிழக வாக்காளார்களை ஆயிரம் பெரியார் இல்ல... கூட ஆயிரம் காமராஜர் சேர்ந்து வந்தாலும் காப்பாத்த முடியாது.

1 comment:

நட்புடன் ஜமால் said...

காமெடியா இருக்கு


(இடுக்கண் வருங்கால் நகுக)