யாருக்காக?

சிங்கப்பூரில் இருந்த போது நிறைய பிளாக் எழுத வேண்டும் என்று ஒரு பெரிய பட்டியல் தயார் செய்தேன். தமிழில் தட்டச்சு செய்ய முரசு அஞ்சல் கூட வாங்கியாகி விட்டது... ஏனோ வேலை நேரம் போக கணணியை பார்த்தாலே கடும் கோபம். சரி போ பிறகு பார்த்து கொள்ளலாம் என பல ஆண்டுகள்... ஒன்று இரண்டு அல்ல பத்து ஆண்டுகள் ஒடிவிட்டது.

அட இப்ப என்ன வந்துச்சு... எழுத வந்துட்டன்னு கேட்கறீங்களா? என் பொண்ணுதான் காரணம்... தினசரி பெட் டைம் ஸ்டோரி சொல்லனும். தினம் ரெண்டு கதை சொல்லனும், ஒன்னு நூலகங்களில் இருந்து எடுத்து வந்த புத்தகங்களில் இருந்து... அடுத்து "அப்பாவின் லைப்ரரில என்ன இருக்கு"? என் பெண்ணின் "அப்பாவின் லைப்ரரில என்ன இருக்கு"? கேள்விக்கு நான் சொன்ன பதில்... "அப்பாகிட்ட பழைய நினைவுகள்தான் இருக்கு"... அதுல உனக்கு என்ன வேணும்?

கொஞ்சம் கூட தாமதிக்கமல் அடுத்த கேள்வி, நீங்க என்ன பண்ணுனீங்க பிரி-ஸ்கூலுல? உங்க அம்மா என்ன பண்ணுவாங்க? உங்க அப்பா என்ன பண்ணுவாங்க? உங்கள மாதிரி கதை சொல்லுவாங்களா?

போதும்... சும்மா கேள்வி கேட்காம பதில சொல்லுங்கன்னு திட்டாதீங்க...பதில் எல்லாம் ஞாபகம் வருதே....ஞாபகம் வருதே.

No comments: