ஞாபகம் வருதே.... ஞாபகம் வருதே - 2

அந்த "எலிமண்டி" ஸ்கூலுல ஐந்து வருஷம் படிச்சேன். நண்பர்களில் பெரிய மாற்றம் இல்லை, அதே கூட்டம், அதே கொட்டம் வேற வேற வகுப்பறை.

3-பி, ராமன் ஸார். மீண்டும் ஒரு நல்ல சார். இங்க நான் ஒரு சுவராஸ்யமான ஒரு சேதி சொல்லியாகனும். மதிய உணவு - முழு நேர பள்ளி, 1 மணி நேர உணவு இடைவேளை, கட்டாயம் வீட்டுக்கு வந்து சாப்பிட்டுட்டு போகனும். அம்மாவிடம் கெஞ்சி கூத்தாடி ஓறீரண்டு நாட்கள் டிஃபன் பாக்ஸ் சாப்பாடு வேணும்னு கேட்பேன். இதுல மேட்டர் என்னன்னா எடுத்துட்டு போன சாப்பாட்ட எவன் கிட்டயாவது கொடுத்துட்டு ஸ்கூல்ல போடுவாங்களே அந்த மதிய உணவ வாங்கி சாப்பிடுவேன். நான் படிச்சப்ப ரொம்ப ஸ்ட்ற்றிக்ட், சாப்பிட அட்டெண்டன்ஸ் எடுப்பாங்க, அதுல வீரா சார் ரொம்ப கடுமையானவரு. பரமசிவம் சாரும் ராமன் சாரும் என்ன ஒன்னும் சொல்ல மாட்டாங்க... டேய் "வேணு மகனே" இரு உங்க அப்பாகிட்ட சொல்லுரேன்னு மிரட்டிடுட்டு போயிடுவாங்க.

என்னதான் அரிசி மக்க வாசனை அடிச்சாலும்... நான் சாப்பிட்ட அந்த "வரட்டு கோதுமை உப்புமா", சுட சுட "சாம்பார் சாதம்" - இன்னும் என் நினைவில் நீங்காதவை.

4-பி, ஆக்கூர் சார், பெயர் செல்வராஜ்-னு நினைக்கிறேன். எனக்கு தெரிந்து ஆங்கிலம் அதிகம் சொல்லி கொடுத்தவர், அதற்க்காக நிறைய அடியும் கொடுத்தவர், கணக்கு சொல்லி கொடுக்க பாலு சார். படிப்பில் போட்டி இங்குதான் ஆரம்பம்... தாமரை டீச்சர் மகன் ஜவஹர், நான் மற்றும் டெயிலர் மகன் வாசன்... முதல் மூன்று ரேங்கை மொத்த குத்தகைக்கு எடுத்திருந்தோம்.

No comments: