அமெரிக்கா பராசக்தி

இனையதளத்தில் 'கம்ப்யூட்டர் பராசக்தி', 'சாஃப்ட்வேர் பராசக்தி' -னு சில பராசக்திகள்... இது ஒரிஜினல் பராசக்தியில் 'இம்ப்ரஸ்' ஆகி... அமெரிக்க அனுபவத்தில் 'கம்ப்ரஸ்' ஆன என் அனுபவத்தில் உருவான பராசக்தி... எவர் மனதையும் புண்படுத்த அல்ல.

அமெரிக்கா, லேண்ட் ஆஃப் ஆபர்சுனிட்டி... விசித்திரம் நிறைந்த பல நாட்டவரை உள்ளே விட்டிருக்கிறது, புதுமையான மனிதர்களை கண்டு இருக்கிறது, ஆனால் இந்த தேசியின் கூவல் விசித்திரமானதும் அல்ல, கூவும் நான் புதுமையான தேசியும் அல்ல.

அமெரிக்கா ஆசையிலே... ஒரு சாதாரண தேசியாக H1-ல் வந்தவன் தான் நான், இரண்டு டாலர் அதிகம் கிடைக்கிறது என்பதர்க்காக அடிக்கடி எம்ப்லாயரை மாற்றினேன், இரண்டு மூன்று H1 அப்லை பண்ணி லாட்டரிக்கு வழிவகுத்தேன், கிரீன் கார்டு பிராஸஸை ரிட் ராகேஸனுக்கு தள்ளினேன், இப்படியெல்லாம் குற்றம் சாற்றப்பட்டிருகிறேன் நான்.

நீங்கள் எதிர்பார்த்து இருப்பீர்கள் இதையெல்லாம் நான் மறுக்க போகிறேன் என்று, இல்லை நிச்சயமாக இல்லை.

இரண்டு டாலர் அதிகம் கிடைக்கிறது என்பதர்க்காக அடிக்கடி எம்ப்லாயரை மாற்றினேன்... இரண்டு டாலர் அதிகம் கிடைக்கிறது என்பதர்க்காக அல்ல, கிளையண்டிடம் 90 டாலர் வாங்கி எனக்கு 33 கொடுத்து... நாம் கொடுப்பதைதான் வாங்கிகொள்ள வேண்டும் என்று மார்தட்டினார்களே அந்த எம்ப்ளாயர்களின் கொட்டத்தை அடக்க வேண்டும் என்பதர்க்காக.

இரண்டு மூன்று H1 அப்லை பண்ணி லாட்டரிக்கு வழிவகுத்தேன்... ஏன்? அதனால் இன்னொரு சக தேசிக்கு கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்பை கெடுக்க அல்ல... என்றோ ஒரு நாள் என்னுடைய தற்போதைய எம்ப்ளாயரால் வேலை போய்... நான் என் சோற்றுக்கு லாட்டரி அடிக்க கூடாது என்பதர்க்காக.

உனக்கு ஏன் இவ்வளவு அக்கறை... தேசிகள் யாருக்கும் இல்லாத அக்கறை என்று கேட்பீர்கள்?

நானே பாதிக்கப்பட்டேன்... நேரடியாக பாதிக்கப்பட்டேன். சுய நலம் என்பீர்கள்... என் சுய நலத்திலே பலர் குடும்ப நலமும் கலந்து இருக்கிறது. என் வேலையை பற்றி மட்டுமே கவலாப்படாமல்... எல்ல தேசிகளுக்காகவும் கவலைப்படேன், தனக்கு சாப்பிட உணவு கிடைத்தால் ஊரையே கூப்பிடுமே... அந்த காக்கையை போல.

என்னை குற்றவாளி என்கிறீர்களா?... இந்த குற்றவாளியின் வாழ்க்கையிலே கொஞ்ச தூரம் பின்னோக்கி பார்த்தால் அவன் கடந்து வந்துள்ள காட்டாறு எவ்வளவு என்று பார்க்க முடியும். தானே முன்வந்து சம்பளத்தை உயர்த்தி கொடுக்கும் எம்ப்ளாயர் இல்லை என் பாதையில்... அலுவலக பாலிட்டிக்ஸில் படாதபாடு பட்டேன் நான்... தங்கமானவன் என்று தட்டிக் கொடுக்கவில்லை என்னை... தத்தாரிகளை தாண்டி வந்து இருக்கிறேன் நான்.

கேளுங்கள் என் கதையை, இவன் தேசி இல்லை பரதேசி என்று பரிகாசம் செய்யும் முன் கேளுங்கள் என் கதையை, தமிழ் நாட்டிலே... மயிலாடுதுறையிலே பிறந்தவன் நான். பிறக்க ஒரு நாடு... பிழைக்க ஒரு நாடு. தமிழ் நாட்டின் தலை எழுத்திற்கு நான் விதிவிலக்கா? சிங்கப்பூர் என்னை சீராட்டி வரவேற்றது, உடம்பை வளர்த்தது, உயர்ந்தவனாக்கியது.

சரி அமெரிக்காவையும் ஒரு எட்டு பார்த்துவிடலாம் என்று அமெரிக்கா வந்தேன். லாட்டரி H1-ஆல் கலலத்துபோய் கிடக்கிறார்களே இந்த மேன்பவர் கம்பெனிகள்... அவர்கள் விரித்த வலையில் விழுந்த ஆயிரக்கணக்கானவர்களில் நானும் ஒருவன்... இண்டர்வியூ நன்றாக செய்தும் ரேட் சரியில்லை என்று பெஞ்சில் உட்கார வைக்கபட்டேன்... நல்ல ரேட்டிற்க்காக சீனியாரிட்டியை பறிகொடுத்தேன்... மனம் உடைந்தேன்... கடைசியில் கன்சல்ட்டண்டாக மாறினேன்.

காண வந்த அமெரிக்காவை கண்டேன்... அகண்டு விரிந்த மாஹானங்களாய்... ஆம் தறிகெட்ட தட்ப வெட்ப நிலையிலும், நாலு வேறுபட்ட நேரங்களுடனும். தரையிறங்கிய ஊரோ 'சிகாகோ'... அடித்தது குளிர்... என்னை 'சிக்காக்க'. தடுமாறிவிட்டது டிராஃபிகள் வெதரில் வளர்ந்த உடம்பு.

கூட்டாளிகளின் தொல்லை, குடிக்க சொன்னார்கள். எனக்கு பிடித்ததோ 'கல்யாணி' (பீர்)... கூட்டாளிகள் 'ஹாட்'டுக்கு அலைந்தார்கள்... கல்யணிக்காக நான் அலைந்தேன். கண்டுபிடிதோம் ஒரு கடையை... கல்யாணிக்காக காத்திருந்தனர்... அதில் காளையர் பலர், கண்ணியர் சிலர். கல்யாணியின் டிமாண்டை பார்த்து காசு கூட கேட்டான் அந்த கடைகாரன்.

சம்பள பாக்கியில் சம்பத்தப்பட்டு லேபர் கோர்ட்டில் பாப்பர் சொல்லி நிற்க்கிறார்களே இந்த Inc கம்பெனிகள்... பகட்டு வார்த்தையால் பலபேரை பதம் பார்த்தவர்கள்... என்னையும் மயக்க பார்த்தார்கள்... என் நண்பர்கள் தடுத்திருக்காவிட்டல் நானும் மாட்டியிருப்பேன். அமெரிக்க கம்பெனிகள் காப்பாற்ற வந்தன என்னை... பிரதி உபகாரமாக 'டிராவலிங்' பண்ண வேண்டும் என்று சொன்னார்கள். அதில் தலையாய பங்கு வகித்த கம்பெனி IBM. நாலு நால் வேலை பார்த்தால் போதும் என்றான்... ஆனால் அந்த நாலு நாலில் என் நாடி நரம்பை எல்லாம் கயட்டி விட்டான் அவன் கிளையண்ட்.

IBM-ல் வேலை என்ற பெருமை... விட்டு வர மனமில்லை, குடும்பத்தை விட்டு அலையவும் விருப்பம் இல்லை... அதானல் 'டிராவலிங்கை' கைவிட்டேன். விருப்பமான வேலையை விடுவது விந்தையல்ல... உலக உத்தமர் காந்தி... அகிம்சா மூர்த்தி... பாரட்-லா படித்தவர்... அவரே தேச சுதந்திரத்திற்க்காக வக்கீல் தொழிலை விட்டு இருக்கிறார்.

வேலை என்னை விரட்டியது... ஆரம்ப பிராஜக்ட் ஆர்க்கன்ஸாசில் என்றான்... அங்கு ஓடினேன். பக்கா பிராஜக்ட் பாஸ்டனில் என்றான்... பறந்து ஓடினேன். ஜாப் ரிஸர்ஸன் என்னை பயமுறுத்தியது... ஓடினேன்... ஓடினேன்... அமெரிக்காவின் 50 மாஹானங்களுக்கும் ஓடினேன். அந்த ஓட்டத்தை நிறுத்தி இருக்க வேண்டும்... என் வாட்டத்தை போக்கி இருக்க வேண்டும் அந்த கிரீன் கார்ட் பிராஸஸ் பண்ணும் INS. EAD கொடுத்தார்களா? EAD கொடுத்தார்களா H4-ல் உள்ளவர்களுக்கு?

(ஒருவர் இடை மறித்து: ஹும்..ஹும்...இவர் கிரீன் கார்டுக்காக கூவ வில்லை... யாரோட EAD-க்காக கூவுகிறார்)

இல்லை... யாரோட EAD-யோ இல்லை... அதுவும் என் கூவல்தான்... என் மனைவியின் கூவல். மனைவியின் படிப்பை, திறமையை வீணடிக்காமல் துட்டு பார்க்க நினைப்பதில் என்ன தவறு?

தகுதி உடையவர்களை EAD-யை காரணம் காட்டி வீட்டில் உட்கார வைத்தது ஒரு குற்றம், தேசத்திற்கு திரும்பி விட்ட R2I-யை கணக்கில் கொண்டுவராமல் பழைய கேப் கவுண்டை காட்டுவது இன்னொரு குற்றம். இத்தனை குற்றங்களுக்கும் காரணம் யார்? யார் காரணம்?

H4 ஆண்டிகளுக்கு EAD கொடுக்காதது யார் குற்றம்? H1-ல் வந்தவனின் குற்றமா? அல்லது ஒருவருக்கே பல H1 தரும் INS-ன் குற்றமா?

பணம் பறிக்கும் Inc கம்பெனிகளை வளர விட்டது யார் குற்றம்? அமெரிக்கா வந்தால் போதும் என்று வரும் தேசிகளின் குற்றமா? அல்லது கஞ்சமாக பலர் நெஞ்சை மிதிக்கும் வஞ்சகர்களின் குற்றமா?

பிரையாரிட்டி டேட்டை பிண்ணுக்கு தள்ளியது யார் குற்றம்? கோட்டா என்ற பெயரில் அப்லிகேஸன் 'துட்டை' உயர்த்தி தேசியிடம் 'ஆட்டை'ய போடும் INS-ன் குற்றமா? அல்லது 'துட்டை' வாங்கி கொண்டு பதிலே பேசாது தேசியின் நெற்றியில் 'பட்டை'யை போடும் வக்கீலின் குற்றமா?

இந்த குற்றங்கள் திறுத்தப்படும் வரை இந்த H1, H4-களின் கூவல் குறைய போவது இல்லை. இதுதான் நான் இங்கு படித்த பாடம், பட்டறிவு...பரிதாபமான அமெரிக்க அனுபவம்.

No comments: