பராசக்தி

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் பேசி புகழ் பெற்ற அந்த ஏழு நிமிட வசனம்... நீங்கள் படித்து மகிழ...

நீதி மன்றம், விசித்திரம் நிறைந்த பல வழக்குகளை சந்தித்து இருக்கிறது, புதுமையான மனிதர்களை கண்டு இருக்கிறது, ஆனால் இந்த வழக்கு விசித்திரமும் அல்ல, வழக்காடும் நான் புதுமையான மனிதனும் அல்ல. வாழ்க்கை பாதையிலே, சர்வ சாதாரணமாக தென்படக் கூடியவந்தான் நான்.

கோவிலிலே குழப்பம் விலைவித்தேன், பூசாரியை தாக்கினேன், இப்படியெல்லாம் குற்றம் சாற்றப்பட்டிருகிறேன் நான். நீங்கள் எதிர்பார்த்து இருப்பீர்கள் இதையெல்லாம் நான் மறுக்க போகிறேன் என்று, இல்லை நிச்சயமாக இல்லை. கோவிலிலே குழப்பம் விளைவித்தேன்... கோவில் கூடாது என்பதர்க்காக அல்ல... கோவில் கொடியவ்ரின் கூடாரமாக இருக்க கூடாது என்பதர்க்காக. பூசாரியை தாக்கினேன்... அவன் பக்தன் என்பதர்க்காக அல்ல... பக்தி பகல்வேசம் ஆகிவிட்டதே என்பதை கண்டிப்பதர்க்காக.

உனக்கு ஏன் இவ்வளவு அக்கறை... உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை என்று கேட்பீர்கள்? நானே பாதிக்கப்பட்டேன்... நேரடியாக பாதிக்கப்பட்டேன். சுய நலம் என்பீர்கள்... என் சுய நலத்திலே பொது நலமும் கலந்து இருக்கிறது. ஆகரத்திற்க்காக அழுக்கை சாப்பிட்டு தடாகத்தை சுத்தப்படுத்துகிறதே மீன்... அதை போல.

என்னை குற்றவாளி என்கிறார்களே... இந்த குற்றவாளியின் வாழ்க்கையிலே கொஞ்ச தூரம் பின்னோக்கி பார்த்தால் அவன் கடந்து வந்துள்ள காட்டாறு எவ்வளவு என்று பார்க்க முடியும். பாட்டொலிக்கும் குயில்கள் இல்லை என் பாதையில்... படமெடுக்கும் பாம்புகள் நெளிந்து இருக்கின்றன. தென்றலை தீண்டியது இல்லை நான்... தீயை தாண்டி இருக்கிறேன்.

கேளுங்கள் என் கதையை, தீர்ப்பு எழுதுவதர்க்கு முன் கேளுங்கள் என் கதையை, தமிழ் நாட்டிலே... இந்த திருவிடத்திலே பிறந்தவன் நான். பிறக்க ஒரு நாடு... பிழைக்க ஒரு நாடு. தமிழ் நாட்டின் தலை எழுத்திற்கு நான் விதிவிலக்கா? ரங்கூன் என் உயிரை வளர்த்தது, உயர்ந்தவனாக்கியது. திருமண கோலத்தில் இருக்கும் என் தங்கையை காணவந்தேன், மோசடி வழக்கில் ஈடுபட்டு குற்றவாளி கூண்டிலே நிற்கிறாலே இதோ இந்த ஜாலகாரி ஜாலி, இவள் வலையிலே விழுந்த ஆடவர்களில் நானும் ஒருவன். பணப்பெட்டியை பறிகொடுத்தேன்... பட்டினியில் திரிந்தேன்... பசியால் மெலிந்தேன்... கடைசியில் பைத்தியமாக மாறினேன்.

காண வந்த தங்கையை கண்டேன்... உயிர் அற்ற ஓவியமாக... ஆம் கைம்பெண்ணாக. தங்கையின் பெயரோ கல்யாணி... மங்களமான பெயர்... ஆனால் கழுத்திலோ மாங்கள்யம் இல்லை. செழித்து வாழ்ந்த குடும்பம் சீரழிந்து விட்டது, கையிலே பிள்ளை... கண்ணிலே நீர்... கல்யாணி அலைந்தால், கல்யாணிக்காக நான் அலைந்தேன். கல்யான்ணிக்கு கருணை காட்டினார்கள் பலர், அவர்களில் காளையர் சிலர் கைமாறாக அவளின் காதலை கேட்டனர். கொலை வழக்கில் சம்பந்தப்பட்டு கைதியாக நிற்கிறானே இதோ இந்த கொடியவன் வேலு... இவன் பகட்டால் மயக்க முயன்றான் என் தங்கையை. நான் தடுத்திருக்காவிட்டல் அப்போதே தற்கொலை செய்து கொண்டிருப்பால் என் தங்கை.

கடவுள் பக்தர்களும் காப்பற்ற வந்தார்கள் கல்யாணியை... பிரதி உபகாரமாக கேட்டார்கள் அவள் கடைக்கண் பார்வையை... அவர்களில் தலைமையானவன் இதோ இந்த பூசாரி... கல்யாணியின் கற்பை காணிக்கையாக கேட்டிருக்கிறான்... பராசக்தியின் பெயரால்... உலக மாதாவின் பெயரால். கல்யாணி புழுவாக துடித்தபடியாவது இருந்திருப்பால் இந்த உலகத்தில்...அவளை தற்கொலை செய்ய தூண்டியது இந்த பூசாரிதான்.

தன் குழந்தையை இந்த இறக்கமற்ற உலகத்தில் விட்டு செல்ல அவள் விறும்பவில்லை... ஆதரவற்று துடித்து இறப்பதை விரும்பவில்லை அவள், அதனால் அவளே கொன்றுவிட்டால். விறுப்பமானவர்களை கொல்வது விந்தையல்ல... உலக உத்தமர் காந்தி... அகிம்சா மூர்த்தி... ஜீவகாருன்ய சத்தியசீலர்... அவரே நோயால் துடித்து கொண்டிருந்த கன்றுகுட்டியை கொன்றுவிட சொல்லி இருக்கிறார் அது கஷ்டமுருவதை காணசகிக்காமல். அதே முறையைதான் கையாண்டு இருக்கிறாள் கல்யாணி. இது எப்படி குற்றமாகும்? வெளி நாட்டில் இருந்து திரும்பிய ஒரு தமிழனுக்கு வாழ வழியில்லை... தமிழ் நாட்டிலே பிறந்த ஒரு பெண்ணுக்கு வாழ்வதற்கு பாதுகாப்பு இல்லை...என் தங்கை மட்டும் கொஞ்சம் விட்டு கொடுத்திருந்தால்... கோடிஸ்வரன் வீட்டு பள்ளியறையிலே ஒரு நாள்... மானத்தை விலை கூறி இருந்தால் மாளிகை வாசியின் மடியேலே ஒரு நாள்... இப்படி ஓட்டியிருக்கலாம் நாட்களை.

அதைத்தானா இந்த நீதி மன்றம் விரும்புகிறது? பகட்டு என் தங்கையை விரட்டியது... பயந்து ஓடினால்... பணம் என் தங்கையை துரத்தியது... மீண்டும் ஓடினால்... பசி என் தங்கையை பயமுறுத்தியது... ஓடினால் ஓடினால் வாழ்க்கையின் ஓரத்திற்க்கே ஓடினால். அந்த ஓட்டத்தை தடுத்திருக்க வேண்டும், அவள் வாட்டத்தை போக்கியிருக்க வேண்டும் இந்த சட்டத்தை நீட்டுவோர். வாழ விட்டார்களா? வாழ விட்டார்களா? என் தங்கை கல்யாணியை?

(ஹும்..ஹும்...குற்றவாளி...யார் வழக்கிற்கோ வக்கீலாகிறார்)

இல்லை... யார் வழக்கிற்கும் இல்லை... அதுவும் என் வழக்குதான்... என் தங்கையின் வழக்கு... தங்கையின் மானத்தை அழிக்க எண்ணிய மாபாவிக்கு புத்தி புகட்ட அண்ணன் ஓடுவதில் என்ன தவறு? கல்யாணி தற்கொலை செய்ய முயன்றது ஒரு குற்றம், குழந்தையை கொன்றது ஒரு குற்றம், நான் பூசாரியை தாக்கியது ஒரு குற்றம்... இத்தனை குற்றங்களுக்கும் காரணம் யார்? யார்...யார் காரணம்?

கல்யாணியை கஞ்சிக்கு வழியில்லாதவளாக அலைய விட்டது யார் குற்றம்? விதியின் குற்றமா? அல்லது விதியின் பெயரை சொல்லி வயிறு வளர்க்கும் வீணர்களின் குற்றமா?
பணம் பறிக்கும் கொள்ளை கூட்டத்தை வளரவிட்டது யார் குற்றம்? பஞ்சத்தின் குற்றமா? அல்லது பஞ்சத்தை மஞ்சத்திற்கு வரவைத்த வஞ்சகர்களின் குற்றமா?
கடவுள் பெயரால் காமலீலை நடத்தும் போலி பூசாரிகளை நாட்டிலே நடமாடவிட்டது யார் குற்றம்? கடவுளின் குற்றமா? அல்லது கடவுள் பெயரை சொல்லி கலாட்சேபம் நடத்தும் கயவர்களின் குற்றமா?

இந்த குற்றங்கள் களையப்படும் வரை இந்த குணசேகரன்களும், கல்யாணிகளும் குறையப்போவது இல்லை... இதுதான் எங்கள் வாழ்க்கை ஏட்டில் எந்த பக்கத்தை புரட்டினாலும் காணப்படும் பாடம்... பகுத்தறிவு... பயனுள்ள அரசியல் தத்துவம்.

No comments: