ஞாபகம் வருதே....ஞாபகம் வருதே - 1

என் பொண்ணு பிரி-ஸ்கூல் என்றதும் என் ஞாபகத்துக்கு வந்தது எங்க "எலிமண்டி" ஸ்கூலுதான். முப்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால்...

என் 1-ம் வகுப்பு டீச்சரின் பெயர் "குண்டு டீச்சர்" (ஜெயலஷ்மி), பெயரை பார்த்த உடனே உங்களுக்கு தெரிஞ்சி இருக்கும்... பெரிய உருவம், காலைல வந்து நாற்காலியில் உட்கார்ந்தா மதியம் சாப்பட்டுக்குதான் எழுந்திருப்பாங்க. அருமையா பாடம் சொல்லி தருவாங்க. வாளு பையன்கள அவங்க அடிக்கிற விதம் இருக்கே... நெய்வேலி காட்டாமணி செடி... நெடு நெடுன்னு வளர்ந்து இருக்குமே, தினம் ஐஞ்சு ஓடச்சி கொண்டாந்து வைக்கனும்... அத வச்சு சும்மா பின்னு பின்னு பின்னுவாங்க. அட நான் நல்ல பிள்ளைங்க... ஃபர்ஸ்ட் பெஞ்ச்.

எனது நண்பர்கள்... ரவி, செந்தில், ஜவஹர், இங்கர்சால், காசினாதான் மற்றும் பலர். நாங்க எல்லாம் 1-வது பி செக்ஸன், ஹி...ஹி...எங்க ஸ்கூலுல 'எ' செக்ஸன் பெண்களுக்கு. ஸ்கூலுக்கு பின்னாடி வாய்க்கால், சமயத்துல ஒன்னு, ரெண்டு, மூனு போக ரொம்ப வசதியா இருக்கும். மத்தபடி என்ன மார்க் வாங்கனேன்னு எல்லாம் ஞாபகம் இல்ல.

சொல்ல மறந்துட்டனே... என் பேரு இளங்கோவனாம்... ஸ்கூலுல சேரும் போது "உன் பேரு என்னன்னு" கேட்டதுக்கு ராஜா-ன்னு நான் சொன்னதால அதுவே இருக்கட்டும்னு சொல்லிட்டாங்களாம் என் அக்கா.

2-பி, 1-அம் வகுப்பு மாதிரி இல்ல இப்ப ரெண்டு சார், ஒன்னு கிளாஸ் டீச்சர் பரமசிவம் சார், இன்னொன்னு டிரில் சார் அவர் பெயர் ராஜேந்திரன். பரமசிவம் சார் தான் 2-ம் வகுப்பு சார்ல ரொம்ப நல்ல சார், யாரையும் அடிக்க மாட்டர். நான் அவர்கிட்ட நிறைய படிப்பு கத்துகிட்டேன். அந்த இங்கர்சால் இருக்கானே... அவந்தான் என்கிட்ட தகறாரு பண்ணுவான், அடிப்பான், கிள்ளுவான்... அவன நான் ஆளு வெச்சு (என் அண்ணன்) அடிப்பேன்.

No comments: