கவி.பர்வீன் சுல்தானாவிற்கு நன்றி

கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடுமென்பது – அன்று
கருணாநிதி வீட்டிக் கட்டில்தறி கவிபாடியது – இன்று

கவிஞர் பர்வீன் சுல்தானா
கவிஞர் பர்வீன் சுல்தானா
கவிதையாய்
பாரில் இனி உன் தமிழ் சொல் தானா?

அவையில் உங்களை
பேசச்சொல்லி அழைத்தவர் துணைத்தலைவர் ரவி
கேட்டு ரசித்ததோ அவையில் உள்ளோரின் செவி.

தலைப்போ சிகரம் தொட்டு
தலைப்போ “பெண்மையின்” சிகரம் தொட்டு
திகைத்தோம் உங்கள் உரையைக் கேட்டு
காரணம் – நீங்கள் பேசியவை
ஒவ்வொன்றும் எங்கள் மனதைத் தொட்டு.

நீங்கள் பேசியதெல்லாம் பெண்ணின் “சுயம்”
அதைக்கேட்ட ஆண்களுக்கு சற்றே பயம்.

அகநானூறு சொன்னீர், புறநானூறு சொன்னீர்
ஆம், அகம் சொன்னீர், புறம் சொன்னீர்
அகமோ, புறமோ
உங்களால் இந்த முத்தமிழ் விழாவில் நாங்கள் பெற்றது
தமிழ் எனும் சுகம் சுகம் சுகம்.

No comments: