கவிஞர் வைரமுத்துவிற்க்கு என் வரவேற்ப்பு

பெஃட்னா 2009, அட்லாண்டாவில் மிக சிறப்பாக கொண்டாட பட்டது. கவிஞர் வைரமுத்துவிற்க்கு நான் வாசித்த கவிதை...

பெயரோ வைரமுத்து
கைகளிலோ விரல்கள் பத்து
உன் கவிதைகளோ பெரும் சொத்து.

முகத்திலே சாந்தம்
குரலிலே காந்தம்
கவிப்பாக்களிலே பாந்தம்
சுருங்கச்சொன்னால் நீயொரு ஏகாந்தம்.

மண்ணிற்க்கு கவிதை எழுதினாய்
மொழிக்கு கவிதை எழுதினாய்
மனிதனுக்கு கவிதை எழுதினாய்

ஏன்...மரத்திற்க்கும் கவிதை எழுதினாய்...

கவிதையின் தலைப்புத்தான் மரம்
அதில் ஒவ்வொரு வரியும் உலகத் தரம்
கவியே, நீ எங்களுக்கு கிடைத்த வரம்.

மரத்திலிருந்து... மரப்பாச்சி
மனிதனுக்கு... மனசாட்சி
கரிசலிலிருந்து... கருவாச்சி
அதுகாவியமாய்... உருவாச்சி.

தமிழை காதலித்தாய்... கவிஞனானாய்
பொண்மணியை காதலித்தாய்... கணவனானாய்
எதனை காதலித்தாய்?
கலைஞரின் நண்பனானாய்?

மொழிகளில் செம்மொழி
நம் தமிழ் மொழி
இவ்விழாவிற்க்கு அழைத்ததும்
இசைந்தது உன் விழி

தமிழில் நீயொரு அங்கம்
தமிழில் நீயொரு அங்கம்
உனை வருக வருக எனவரவேற்க்குது
அட்லாண்டா தமிழ் சங்கம்.


பி.கு: நேரமின்மை காரணமாக வரவேற்ப்பு நன்றி நவிலலாய் மாறியது...

தமிழில் நீயொரு அங்கம்
தமிழில் நீயொரு அங்கம்
உன் வருகைக்கு நன்றி நவிழ்கின்றது
அட்லாண்டா தமிழ் சங்கம்.

2 comments:

நட்புடன் ஜமால் said...

கவிஞருக்கு ஒரு கவி வரவேற்பு

அருமை நண்பரே!

[[தமிழில் நீயொரு அங்கம்
தமிழில் நீயொரு அங்கம்
உனை வருக வருக எனவரவேற்க்குது
அட்லாண்டா தமிழ் சங்கம்]]

நல்லாயிருக்கு.

அரசூரான் said...

நன்றி ஜமால்