கோடை விடுமுறையில் ஆக்கப்பூர்வம்...

மார்ச், ஏப்ரல், மே மாதம் இந்தியாவில் பரிட்சை மற்றும் விடுமுறை காலம், இங்கு எங்களுக்கு ஸ்ப்ரிங்க் என்னும் வசந்த காலம், கடும் குளிரில் வீட்டில் அடைபட்டு கிடந்த குழந்தைகள் ஓடியாடி விளையாடுவதை பார்த்தவுடன் எழுத ஆரம்பித்து விட்டேன்.

ஆக்கப்பூர்வம் - கிரியேட்டிவிட்டி என்பதர்க்காண உரிய தமிழ் வார்த்தையாக இருக்கும் என நினைக்கிறேன்.

ஆக்கப்பூர்வ படைப்பு/சிந்தனை/கருத்து (கிரியேட்டிவ் ஆர்ட்/திங்கிங்க்/ஐடியா) -க்கு அடித்தளம் சிறந்த கற்பனை திறன், அந்த கற்பனை திறனை (சிறுவர்களிடம் இயற்க்கையாகவே இருக்கும், அதை கண்டு பிடித்து) வளர்க்க நாம் முயற்ச்சி செய்ய வேண்டும்.

இங்க நான் எப்படி அந்த ஆக்கப்பூர்வத்த வளர்க்கறது என்பதி பற்றி சொல்ல வரவில்லைங்க... என் சொந்தகதைய சொல்லுரேன் அவ்வளவுதான்.

ஆக்கப்பூர்வத்த உண்டாக்க இப்பவும் அப்பவும் பல விசயங்கள் இருக்கு அத ஒன்னு ஒன்னா சொல்லுரேன்.

இப்ப அத நம்ம இந்தியாவிலும் வெளி நாடுகளிலும் சம்மர் கேம்ப் அப்படின்னு சொல்லிகிறாங்க... நமக்கு அது கோடை விடுமுறை... எனக்கு அது கோடையில் மாடு மேய்த்தல். அதாங்க நமக்கு சொர்க்கம்... நமக்குள்ள இருக்கிற பல பரிமாணங்கள் அப்பதான் வெளிவரும்.

பிளே டோவ்: வயல்ல அப்பதான் அறுவடை முடிந்து களிமண் நல்ல பதமா இருக்கும்...அதான் எனக்கு பிளே டோவ்... சைக்கிள், கார், பஸ் ஏரோ பிளேன்-ன்னு எல்லாம் செஞ்சு காய வெச்சு இயற்க்கை வண்ணம் பூசி (கரி-கருப்பு, செங்கள்-சிவப்பு, பூலம் பழம்- நீலம்) வாழை மட்டைல நாறு உரித்து, வாய்ல சவுண்டு விட்டு வீட்டுக்கு ஓட்டிகிட்டு போயிடுவேன்.

லெகோ பிளாக்ஸ்: அடடா இந்த பிளாக்ஸ்ல என்ன ஒரு வெரைட்டி இப்போ... மக்கா இப்ப தெரியுதா நான் ஏன் சோகக்கதைன்னு சொன்னேன்னு. என் சம்மர் கேம்ப்ல நான் தேங்கா குரும்பை, நுனா காய், கோவைக்காய் (இப்ப இத சாப்பிடுராங்கடோய்), வேப்பங்காய் இப்படி சிறியதும் பெரியதுமாய் காய்களை ஈர்க்கு (தென்னை மட்டையில் உள்ள ஓலையில் இலையை சீவினால் கிடைக்கும்) குச்சியில் கோர்த்து பூம்புகார் கலைக்கூடம், அண்ணா அறிவாலயம், தாஜ்மஹால் மற்றும் ஈபிள் டவர் (இலங்கை டி.வி ரூபவாகினி-ல பார்த்தது) வரைக்கும் கட்டுவேன்.

ஸ்விம்மிங்க் ஃபுளோட்: வாழை சீஸன் முடிந்து இருந்தால் வாழை கொள்ளையில் வெட்டி போட்ட மரத்தை எடுத்து வந்து ஆத்துலயோ இல்ல குளத்திலயோ போட்டு தம்பட்டம் அடிப்போம். இல்லையா இருக்கவே இருக்கு எருமை மாடு... அது வாலை பிடித்துக் கொண்டே குளத்தில் நீந்தி வருவோம்.

இப்படி நாம் விளையாட்டாய் கற்ற ஒவ்வொன்றும் இன்று வியாபாரமாய்... வேறு என்ன சொல்ல?

1 comment:

ஆ.ஞானசேகரன் said...

நல்ல மலரும் நினைவலைகள்...