பதறினால் சிதறிடுவாய்

பதறினால் சிதறிடுவாய், எங்கயோ கேள்வி பட்ட மாதிரி இருக்கா? நம்ம ஊரு லாரியில் பின்னாடி எழுதியிருக்கும். லாரியை கடக்கும் போது நாம ரொம்ப கவனமா பதறாம இருக்கனும்னு சொல்லி இருப்பாங்க. மண்ணு லாரியையும் தண்ணி லாரியையும் பார்த்த பிறகுமா... அது சரி லாரிய ஓட்டிகிட்டு வருவது அவங்க... நாம எப்படி பதறாம இருக்கிறது?

அமெரிக்காவில் எனது நண்பர் அவர் பெயர் லேரி... நம்ம லாரி-ன்னு வைச்சுக்கோங்க. அவர் தன் மனைவி கொஞ்ச நாளா சரியா பேச மாட்டேன்கிறாங்க, சரியா சாப்பிட மாட்டேன் எங்கிறார்கள் என்று பதறி மனைவியை ஒரு குடும்ப நாட்டாமை டாக்டர் (ஃபேமிலி கவுன்சிலிங்) கிட்ட அழைச்சிகிட்டு போனாரு.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நாட்டாமை, லேரியின் மனைவி மிகவும் மன அழுத்தத்துடனும் மன சோர்வுடனும் இருப்பதை விளக்கி கூறி, மன அழுத்தம் போக வேண்டுமானல் லேரியின் மனைவி அவருடைய மன குமுறளை ஏதாவது ஒரு வகையில் கொட்டி தீர்த்துவிட வேண்டும் என்று கூறினார்...அதற்கு பெயர் வெண்டிங் த ஃப்ரஸ்ட்ரேஸன் என்று விளக்கினார்.

லேரிக்கும் லேரி மனைவிக்கும் ஒன்றும் புரிய வில்லை... (லேரி மனதிற்க்குள் திட்டிக் கொண்டு இருந்தான் இவதான் நம்மை தினமும் திட்டி தீக்குரா... இன்னும் என்ன என்று யோசிக்க). நாட்டமை நிலைமையை புரிந்துகொண்டு பேச ஆரம்பித்தார்...

உதாரணத்திற்க்கு இத பாருங்க... இது காற்று நிரப்பிய கம்பு... அடித்தால் வலிக்காது... இதால் உங்கள் கணவரை அடிக்கலாம் அல்லது... என்று மேற்கொண்டு பேச முற்பட... இடையில் லேரி சுதாரித்து கொண்டு அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என சொல்ல... நாட்டமை சொன்னார்... சற்று பொருங்கள் உங்கள் மனைவி என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம் என சொல்ல... லேரியின் மனைவியோ... ஆமாம் நான் அவரை அடிக்க வேண்டும் என்று மனதுக்குள் நினைப்பது உண்டு என்று சொல்ல...

நாட்டாமை லேரியை ஒரு பார்வை பார்த்து விட்டு காற்று நிரப்பிய கம்பை லேரியின் மனைவியிடம் கொடுக்க... லேரி மனைவி தண்ணி லாரி கணக்கா லேரியை வெளுக்க... அடி வாங்கி பதறிய லேரி சிதறிய குரலில் நாட்டாமையை கேட்டான்... நாட்டாமை அடித்தது போதுமா இல்லை நிறுத்திக்கலாமா என்று...

நாட்டமை சொன்னார்... எனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை உங்கள் பார்வை நேரம் இன்னும் அரை மணி நேரம் மீதம் இருக்கிறது என்று.

நம்ம ஊர் லாரியின் வசனம் லேரிக்கு ரொம்ப பொருத்தமா இருந்தது.

1 comment:

ஆ.ஞானசேகரன் said...

ஏதோ சொல்ல வரிங்க எனக்குதான் புரியல