கோடீஸ்வர சேரிநாய்

என்ன கொடுமை சார் இது? நீங்க இந்த பதிவோட தலைப்ப சொல்லுறீங்க... நான் எனக்கு தெரிஞ்ச தமிழ்ல ஸ்லம்டாக் மில்லினியர் படத்தோட பேர மொழி பெயர்த்தா அப்படிதாங்க வருது அதுக்கு நான் என்ன பண்ணட்டும்?

ஏங்க நான் தெரியாமதான் கேட்குறேன் இந்த படத்துக்கு கோடீஸ்வர சேரிபையன்-ன்னு அதாங்க ஸ்லம்பாய் மில்லினியர்-னு வெச்சிருந்தா இன்னும் பொருத்தமாகவும் நன்றாகவும் இருந்திருக்கும் என்பது என் எண்ணம். நீங்க என்னா நினக்கிறீங்க?

எனக்கு என்னவோ டைரக்டர் டேனி பாயலுக்கோ அல்லது ரைட்டர் சைமன் பியூபாய்க்கோ தங்கபூமி விருது குழு-வில் யாரையாவது தெரிஞ்சிருக்கனும்ன்னு நினைக்கிறேன். விஹாஸ் ஸ்வரூப்-பின் மூலக் கதை, லவ்லீன் டேண்டனின் திரைக்கதை - சும்மா சொல்ல கூடாது மூன்று டிராக் கதை (ஹூ.வா.மி நிகழ்ச்சி - இண்ட் ராகேஸன் - பழைய சம்பவம்) ஒருங்கிணைப்பு அருமை... பாராட்டலாம்.

ஏ.ஆர்.ரஹ்மானின் இசை மிக அருமை. இளையராஜா இசைக்கு ஈஸ்வரன் என்றால், இவர் கோடீஸ்வரன்.

கௌவுதம் மேனன் மட்டும் வாரணமாயிரம் படத்துக்கு ஆங்கில பேரு வெச்சிருந்தா நிச்சயம் ஆஸ்கர் கிடைச்சிருக்கும். என்னடா இப்படி சொல்லுரனேன்னு நினைக்காதீங்க என்கிட்ட இருக்கு காரணமாயிரம். மக்கா படம் முழுவதும் ஒரே இங்கிலீஸுதான்.

சரி விடுங்க... இதுக்காக வடக்கு வாழ்கிறது தெற்க்கு தேய்கிறதுன்னு நினைக்காதீங்க. எப்ப ஒரு ஹிந்தி படம் தங்க பூமி விருது வாங்கினுதோ அது மணி ஓசை (வரும் முன்னே) யானை-யா (வரும் பின்னே) அடுத்தது ஒரு தமிழ் படம் ஆஸ்கர் விருது வாங்கப் போவது நிச்சயம் - அதுவரை காத்திருப்போம்.

No comments: