நான் பிச்சைக்காரன்...

பயப்படாதீங்க, நான் இத படிக்க வந்த உங்க கிட்ட பிச்சை கேட்களீங்க, நான் கடவுள்-னு ஒரு படம் எடுத்தாரே இயக்குநர் பாலா அவர்கிட்ட கேட்கிறேன்...

அய்யா... சாமி... பாலா... தயவு செய்து இப்படி கொல்லாதீங்க அய்யா... ஆசைபட்டு படம் பார்க்க வந்த எங்கள ஏன் சாமி இந்த பாடு படுத்துறீங்க... நாங்க என்ன சாமி குத்தம் செஞ்சோம்...

ஏதோ பாலா படத்துல கொஞ்சம் நகைச்சுவை இருக்கும் என்பதை மறக்காமல், பிச்சை எடுக்கும் போது அப்ப அப்ப பழைய சோத்துக்கு நடுவே சுடு சோறு கிடைக்குமே அதே மாதிரி, அங்க அங்க வரும் அந்த குள்ளர்களின் வசனமும், எம்.ஜி.ஆர் வேடத்தில் வருபவர் சிவாஜி வேடத்தில் உள்ளவரை பார்த்து "கணேசா எவன் எவனோ நடிகன்னு வந்து கொல்ராம்பா... நீ கொஞ்சம் நடிப்ப சொல்லி கொடுத்துவிட்டு போயிருக்க கூடாதா"-னு கேட்பார்... சிரிக்கும் படியாக இருந்தது.

பாரதிராஜாவின் பொம்மலாட்டம் பார்த்து... அடடா ஒரு படத்திற்க்கு இயக்குநர் தான் கதாநாயகன்-னு மீண்டும் நிருபித்து இருக்கான்னு நினைச்சு சந்தோஷப் பட்டேன்... அத நீங்க காலி பண்ணிப்புட்டீங்களே சாமி... இது நியாயமா? தருமமா?

அய்யா... பிச்சை எடுக்கும் போது தருமம் பண்ணுங்க சாமின்னு கேட்ப்பாங்க... நானும் அதான் கேட்கிரேன்... காசு கொடுத்து சினிமா பார்க்க வர எங்கள தயவு செய்து பல்ல பிடிச்சி பதம் பார்க்காம... மக்களின் ரசனை என்கிற பல்ஸை பார்த்து படம் பண்ணுங்க சாமி.

யார் கடவுள்?
இயக்குநர் கடவுளா?? இல்ல...
படத்தோட கதை கடவுளா???

இல்லீங்க இந்த கருமத்த எல்லாம் காசு கொடுத்து படம் பார்க்கிற நம்ம தாங்க கடவுள்

No comments: