தே பா ச...

2002 இந்திய அரசை பாரதிய ஜனதா பார்டி ஆட்சி செய்தபோது தேசிய நலனை கருத்தில் கோண்டு கொண்டுவரப் பட்ட சட்டம் (பொடா-PoTA) தே.பா.ச என்கிற தேசிய பாதுகாப்புச் சட்டம்.

ஆனா அது தேசியத்த பாதுகாத்ததை விட பல அரசியல் தேராவெட்டிகளை பாதுகாத்ததுதான் அதிகம். ஒரு கால கட்டத்துல வடக்கு முதல் தெற்க்கு வரை அது அரசியல் வாதிகளின் மீது தேடி பாயும் ட்டம் ஆக இருந்ததுன்னே சொல்லல்லாம்.

தமிழகத்துல நம்ம அ.இ.அ.தி.மு.க கொ.ப.செ (அட செல்வி ஜெயலலிதாங்க) அந்த தே.பா.ச-வ நம்ம வைக்கோ மேல போட்டாங்க... என்ன ஆச்சு? அண்ணன் மு.க தம்பி மீது சுமத்தப் பட்டுள்ள அவதூருகளை தேடி பார்த்தோம் ரியில்லை... அவரு வைக்கோ இல்ல சைக்கோ-ன்னு சொல்லிட்டாரு.

அப்புறம் பழ. நெடுமாறன் மேல, அவர் மேல இவர் மேலன்னு இப்ப இயக்குனர் சீமான் வரைக்கும் வந்து நிக்குது... தேடி பார்த்தோம் ரியில்லை என்று சொல்லி விடுவார்கள்.

ஆமாம் நீங்க இந்த பதிவுல என்னத்த தேடுறீங்க? மெஸேஜா? நையாண்டியா?

என்ன நக்கலா? பதிவோட தலைப்ப பாருங்க... மு.க சொன்னதையேதான் நானும் சொல்றேன். தே.பா.ச-ன்னா தேடி பார்த்தோம் சரியில்ல.

No comments: