இந்தியனே... நீ கருப்பா இல்லை வெள்ளையா?

அமெரிக்காவில் ஒரு கருப்பின அதிபர் வந்தபின் எங்கள் அலுவலகத்தில் என் குழுவில் அதை பற்றி பட்டும் படாமல் பேச்சு நடந்தது. எங்கள் குழுவில் கருப்பு இனத்தவர் இல்லாததால் கொஞ்சம் வெள்ளை தூக்கலாக இருந்தது. அதை பார்த்த எனக்கு வழக்கமாக வரும் நக்கல் தூக்கலாக...

நான் கருப்பு பாதி வெள்ளை மீதி
இரண்டும் சேர்ந்த கலவை நான்
கருப்பை கொன்று கருப்பை கொன்று
வெள்ளை வளர பார்க்கிறதே...

ஏய்... நாங்கெல்லாம் பி-க்கு பி, டபிள்யூ-க்கு டபிள்யூ.
புரியல? பிளாக்கு-க்கு பிரவுனு, வொயிட்டு-க்கு வீட்ட்டு.

அதாண்டா கோதுமை...

ஏண்டா எருமை
இப்ப புரியாதடா
எங்க அருமை?

நான் தப்பையும் அடிப்போம்,
தவிலையும் அடிப்போம்,
ரெண்டும் கிழிஞ்சி போனாதச்சி போட்டு அடிப்போம்...

ஏ டண்டனக்கா..
ஏ டணக்குனக்கா...

(ஹி... ஹி... எல்லாம் எங்க ஊர் காரர் தாக்கம் தூக்கலாக ஆனதால் வந்த விளைவு. )

No comments: