சாமீ... எனக்கொரு உம்ம தெரிஞ்சாவனும்...

(வீட்டில் தொலைபேசி கட்டணம் கட்டுக்கடங்காமல் போகவே... அவசர கூட்டம் கூடுகிறது)

கணவன்: நான் விடிய காலை ஆபீஸ் போனா இரவுதான் வீடு திரும்புறேன்... என் தேவைக்கு ஆபீஸ் போனத்தான் உபயோக்கிறேன்... யார் இவ்வளவு பேசுறது?

மனைவி: ஏங்க நானும் என் தோழிகளுடன் அலுவலக நேரத்திலேயெ பேசி முடிச்சிடுரேன்... அப்புறம் எப்படி?

பையன்: தோ பாருங்க, எனக்கு வேலை விசயமா போன் குடுத்து இருக்காங்க, நான் அதையே என் சொந்த உபயோகத்துக்கும் பயன் படுத்திக்கிறேன்... நான் அவன் இல்லை.

வேலைகாரி: என்ன இங்க கூட்டம் போட்டு சத்தம் போட்டுகிட்டு இருக்கிங்க? ஆளாலுக்கு அவங்க வேலை இடத்துல உள்ள போன தான உபயோக்கிறீங்க? என்னமோ அத பெருசா பேசிகிட்டு... போங்க போயி அவங்க அவங்க வேலைய பாருங்க... நீங்க இப்படி சத்தம் போட்டு பேசினா நான் எப்படி போன்-ல பேசுறது?

No comments: