நேற்று வரை… திரையுலகில் உன் பெயர் ”வாலி”
இன்று முதல்… பூவுலகில் அந்த இடம் ”காலி”
வயதானாலும் உன் பாடல்களில் துள்ளும் “ஜாலி”
காமத்துப் பாடல்களில் போட்டிருப்பாய் “வேலி”.
பொருளுடன் பாடல் எழுதினாய் கிடைக்கவில்லை துட்டு!
பொருளுக்கு பாடல் எழுதினாய் கிடைத்தது கைத்தட்டு!!
இன்று வானுலகம் சென்றுவிட்டீர் எங்களை விட்டு!!!
இவன் ஒரு CORPORATE கிராமத்தான். அரசூர் என் தாத்தாவின் சொந்த ஊர், எங்கள் ஊரில் (செம்பனார்கோவில்) என் தாத்தாவை அரசூரார் என்று அழைப்பார்கள்... அவர் நினைவாக இந்த அரசூரான்.
எப்பொருள் யார் யார்…
(வெளி வேலைகளை முடித்து விட்டு வீடு திரும்பும் கணவன்…)
கணவன்: என்னம்மா உடம்பு ஏதும் சரியில்லையா? ஒரு மாதிரி இருக்க?
மனைவி: எனக்கென்ன, எப்பவும் போலத்தான் இருக்கேன்!
எதுல காப்பி போட?
என்ன இது புதுசா கேட்கிற, வழக்கம் போல போடு
டூ பர்சண்டல போடவா இல்லை ஹோல் மில்க்ல போடவான்னு கேட்டேன்
இது என்ன புதுக் கேள்வி? நாம டூ பர்சண்ட் மில்க்குக்கு மாறி பல வருஷம் ஆயிடுச்சே, காப்பிய போடு முதல்ல.
நான் என்ன லூசா? புதுசா கேட்கிறதுக்கு?
உனக்கு என்ன பைத்தியமா? சம்பந்தம் இல்லாம பேசுர? இப்ப காப்பி போடுறயா இல்லை நானே போட்டுக்கவா?
ஆமாம் நான் தான் பைத்தியம், அதைதான் அய்யா ஊர் முழுக்க சொல்லிகிட்டு வரீங்க போல இருக்கு
என்ன சொல்ர? நான் என்னத்த ஊர் முழுக்க சொல்லிட்டு வரேன்?
கோமதி வீட்ல என்னப்பத்தி என்ன சொன்னீங்க?
நான் என்ன சொன்னேன்? உன்னைப் பத்தி ஒன்னும் சொல்லலியே, அப்படியே சொன்னாலும் பெருமையாத்தானே சொல்லியிருப்பேன்?!
பொய் சொல்லாதீங்க, உங்களை காணோம்னு இப்பதான் கோமதிகிட்ட பேசினேன், அவ அங்க நடந்தது எல்லாத்தையும் சொன்னா
எல்லாத்தையும் சொன்னான்னா எனக்கு என்ன தெரியும், நான் என்ன சொன்னேன்னு சொன்னா?
என்ன பைத்தியம்னு சொன்னீங்களாம், அதுவும் சுத்தப் பைத்தியம்ன்னு சொன்னீங்களாம், என்ன பார்த்தா என்ன லூசாவா தெரியுது உங்களுக்கு?
ஓ… அதான் விசயமா? எதையுமே சரியா புரிஞ்சிக்காம சொன்னா இப்படித்தான். வீட்ல எடுத்த பொருள் எடுத்த எடுத்துல வைக்கனும்னு சொல்லுவ, வீட்டை நீ ரொம்ப சுத்தமா துடைச்சி துடைச்சி வெச்சிப்ப இல்லையா? அதைதான் நான் நீ ”சுத்தப்” பைத்தியம்னு சொன்னேன்.
காலையில் ஒரு காப்பி, மாலையில் ஒரு காப்பின்னு காப்பி பைத்தியமா இருக்கோமே அத மாதிரி சொன்னேன். அதப்போய்…
சரி, சரி இந்தாங்க காப்பி.
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பது அறிவு.
ஐ.பி.எல்லே…
இந்தியனுக்கு பெருமை சேர்த்த விளையாட்டு கிரிகெட்டு!
இன்று புக்கிங்கால் ஆயிடுச்சி தரங்கெட்டு, தரிகெட்டு!!
ஐ.பி.எல்லே… நீ இந்தியன் பிரிமியர் லீகா?
இல்லை… நீ இந்தியன் பிராடு லீகா?
ஆட்டக்காரன் ஆட்டத்தை குறைத்து மைதானத்தில் பணம் பேசி ஆடுகிறான்!
ஆட்டக்காரி ஆடையை குறைத்து மைதானத்தில் மனம் கூசி ஆடுகிறாள்!!
ஐ.பி.எல்லே… நீ இந்தியன் பிரிமியர் லீகா?
இல்லை… நீ இந்தியன் பிளேபாய் லீகா?
சூதில் பணம் சேர்த்து சொத்து சேர்த்தவன் மூன்று பேரு!
அதில் மனம் தோற்று செத்து போனவன் முன்னூறு பேரு!!
ஐ.பி.எல்லே… நீ இந்தியன் பிரிமியர் லீகா?
இல்லை… நீ இந்தியன் பித்தலாட்ட லீகா?
மூன்று பேரும்…
ஒத்துக்கிட்டா தூக்கி மத்திய-சிறையில போடு!
இல்லாவிட்டா துரத்தி என்-கவுண்டர்ல போடு!!
இன்று புக்கிங்கால் ஆயிடுச்சி தரங்கெட்டு, தரிகெட்டு!!
ஐ.பி.எல்லே… நீ இந்தியன் பிரிமியர் லீகா?
இல்லை… நீ இந்தியன் பிராடு லீகா?
ஆட்டக்காரன் ஆட்டத்தை குறைத்து மைதானத்தில் பணம் பேசி ஆடுகிறான்!
ஆட்டக்காரி ஆடையை குறைத்து மைதானத்தில் மனம் கூசி ஆடுகிறாள்!!
ஐ.பி.எல்லே… நீ இந்தியன் பிரிமியர் லீகா?
இல்லை… நீ இந்தியன் பிளேபாய் லீகா?
சூதில் பணம் சேர்த்து சொத்து சேர்த்தவன் மூன்று பேரு!
அதில் மனம் தோற்று செத்து போனவன் முன்னூறு பேரு!!
ஐ.பி.எல்லே… நீ இந்தியன் பிரிமியர் லீகா?
இல்லை… நீ இந்தியன் பித்தலாட்ட லீகா?
மூன்று பேரும்…
ஒத்துக்கிட்டா தூக்கி மத்திய-சிறையில போடு!
இல்லாவிட்டா துரத்தி என்-கவுண்டர்ல போடு!!
சங்க சந்தை...
சங்க சந்தை
மீண்டும் ஒரு முறை கேளுங்கள்
தலைப்பை கவிதையாக்க அல்ல, சரியாக புரிந்து கொள்ள!
ஆம், சங்க சண்டை அல்ல தலைப்பு, சங்க சந்தை!
சங்க நிகழ்வுகளால் ஏறுமுகமாகவும் இறங்கு முகமாகவும் இருக்க
பங்கு சந்தையல்ல நம் உறவு!
மன மகிழ்வுகளால் இன்முகமாகவும் பன்முகமாகவும் இருக்க
நன்கு அறிய வேண்டியது நம் உறவு!
காளையோ கரடியோ அல்ல - நாம்
உணர்வால் விழுந்து எழ அல்லது புரண்டு அழ!
நாம் உணர்வால் தமிழ்ப் பால் குடித்த சிங்கம்
உரிமையோடு சொல்வோம் நாம் ஒவ்வொருவரும்
தமிழ்ச் சங்கத்தின் அங்கம்!
சங்க சந்தை
மீண்டும் ஒரு முறை கேளுங்கள்
தலைப்பை கவிதையாக்க அல்ல, சரியாக புரிந்து கொள்ள!
ஆம், சங்க சண்டை அல்ல தலைப்பு, சங்க சந்தை!
சங்க நிகழ்வுகளால் ஏறுமுகமாகவும் இறங்கு முகமாகவும் இருக்க
பங்கு சந்தையல்ல நம் உறவு!
மன மகிழ்வுகளால் இன்முகமாகவும் பன்முகமாகவும் இருக்க
நன்கு அறிய வேண்டியது நம் உறவு!
காளையோ கரடியோ அல்ல - நாம்
உணர்வால் விழுந்து எழ அல்லது புரண்டு அழ!
நாம் உணர்வால் தமிழ்ப் பால் குடித்த சிங்கம்
உரிமையோடு சொல்வோம் நாம் ஒவ்வொருவரும்
தமிழ்ச் சங்கத்தின் அங்கம்!
அன்பர்கள் தினப் பெயர்ச்சியா?
ஆத்தா... தாயே பராசக்தி, உன் கோவிலில் சனிப் பெயர்ச்சி பூசை பார்த்திருக்கிறேன், குருப்பெயச்சி பூசை கூட பார்த்திருக்கேன். இது என்ன அன்பர்தினப் பெயர்ச்சியா? இந்த பூசை விளம்பரத்தை பார்த்தவுடன் எனக்கு பேர் அதிர்ச்சி!
ஆத்தா... கலியுகம் ஆத்தா கலியுகம். இன்னும் உன்னை வைத்து என்ன என்ன பூசையெல்லாம் பண்ண போகிறார்களோ தெரியலயே? அவ்வ்வ்வ்.
பின் குறிப்பு: இது எவர் மனதையும் வருந்த வைக்க அல்ல... இக்கோவிலுக்கு ஒன்றரை ஆண்டுகள் தொடந்து சென்றவன், கோவில் வலைப்பக்கத்தில் இதைக் கண்டேன்... என் மன வருத்தத்தை பதிவு செய்யவே.
முல்லை பெரியாறு – த மஸ்ட்
வலை முழுவதும் முல்லை பெரியாறு பற்றிய பல ஆவணங்கள், யூ-டியூப் காணொளிகள் என்று ஆயிரக் கணக்கில் உள்ளன. எனவே நான் அவற்றை இங்கு குறிப்பிட விரும்ப வில்லை.
முல்லை பெரியாறு – த மஸ்ட், சிவாஜி – த பாஸ்-லேருந்து என் எண்ணமாக நான் சொல்ல நினைப்பது.
எப்படி சிவாஜி (பழைய படம் இல்லை, சங்கர் இயக்கத்தில் வந்த்து) படத்தில் சிவாஜி என்ற ஒரு தனி மனிதன் ஒரு நல்ல நோக்கத்தோடு கல்வி மற்றும் மருத்துவ கூடங்களை நிறுவ பல வகையான எதிர்ப்புகளை எதிர் கொள்ளுவார். சுய நலம் கொண்ட தனி மனித எதிர்ப்பு, அனுமதி பெறவேண்டி அரசு அலுவர்களின் லஞ்ச லாவன்ய கெடுபிடி, லோக்கல் ரவுடியில் ஆரம்பித்து கடைசியில் ஒரு மாநிலத்தின் கல்வி மற்றும் முதல் அமைச்சர் வரை.
முல்லை பெரியாறு விவகாரத்திலும் அதுதான் நடைபெறுகிறது. பென்னிகுயிக் என்ற ஒரு நல்ல மனிதன் இரண்டு மாநிலங்களுக்கும் உதவட்டுமே என்ற உயர்ந்த நோக்கத்தோடு ஒரு சிறந்த அணையை நமக்கு அளித்துவிட்டு சென்றிருக்கிறார். பின்னாட்களில் நடக்கப் போவதை முன்கூட்டியே அனுமானிக்க கூடியவர்கள் அறிவாளிகள் – தீர்க்கதரிசிகள். அப்படிப்பட்ட அறிவாளிகள் எதிகாலத்தில் சுய நலக் காரர்களிடம் இருந்தும், அரசியல் வியாதிகளிடம் இருந்தும் மனித வாழ்வாதாரமான தண்ணீரை காக்க அதை 999 வருட ஒப்பந்தமாக நிலை நிறுத்திவிட்டு சென்றிருக்கிறார்கள்.
மாநிலத்திலும் மத்தியிலும் அரசியல் மாற்றங்கள் நிகழும் போதும், அங்கு அவர்களின் ஆட்சிக்கு அச்சுருத்தல்கள் வரும்போதும் அவர்கள் பிரச்சனைகளை திசை திருப்பவே முல்லைப்பெரியாறு அணையை கையில் எடுக்கிறார்கள் என்பதுதான் உண்மை. [சிவாஜி படத்தில் சொல்வது போல், நீங்க கொடுத்ததெல்லாம் அந்த பார்ட்டிக்கு, எனக்கு என்ன கொடுப்பீங்க, உங்க புராஜெக்ட் வேல்யு எவ்வளவு?]
தன் சுய லாபத்திற்க்காக அணைப் பிரச்சனையை கிளறி விடும் அயோக்கியர்களே, உங்கள் ஒவ்வொருவரு ஆட்சி மாற்றதிற்க்கும் உறுதியாக இருக்கின்ற அணையை ஓட்டை போட்டு ஓட்டை போட்டு அணையின் உறுதியை உருகுலைக்கும் அரசியல் வாதிகளே, நீங்கள் போட்ட ஓட்டையால் அணையில் நீர்க்கசிவு உண்டாகிறதோ இல்லையோ, ஒற்றுமையாய் வாழும் தமிழக-கேரள மக்களின் இருதயத்தில இரத்தக் கசிவை உண்ட்டாக்கி விட்டீர்கள். போதும் உங்கள் சோதனை, இம்முறை செய்யும் சோதனை இறுதியாக இருக்கட்டும், முடிவு உறுதியாக இருக்கட்டும்.
மனம் இருந்தால் மார்க்கமுண்டு. உங்கள் அருகில் உள்ள சிறிய நாட்டைப் பாருங்கள், கற்றுக்கொள்ளுங்கள். சிங்கப்பூர் – இயற்க்கை வளம் இல்லாத நாடு/ஊர். மலேசியாவிடம் இருந்துதான் குடிநீர் பெறுகிறது. இங்கு உள்ள பிரச்சனைகள் போலத்தான் அங்கும் நிகழ்ந்தது. உதாரணத்திற்க்கு ஒன்று – மலேசியாவிடம் இருந்து பெற்ற நீரை சிங்கப்பூரில் சுத்தப்படுத்தி, பாட்டிலில் அடைத்து அதை மலேசிய சந்தையில் விற்பாதாக. [தமிழகம் கேரள தண்ணீரில் விவசாயம் செய்து அதை கேரளத்தில் விற்பது போல்].
சிங்கப்பூரின் மதியுக அமைச்சர் லீ-குவான்-யூ மற்றும் முதல் அமைச்சர் கோ-சோ-தோங் அணி 2010-ல் முடிவுக்கு வர இருந்த தண்ணீர் ஒப்பந்தத்தை மிக அழகாக கையாண்டார்கள். அப்போது மலேசியா இதில் மலேசிய மக்களின் சிங்கப்பூர் மத்திய சேமிப்பு நிதி இருப்பை (சி.பி.எஃப்) துருப்புச்சீட்டாக உபயோகப்படுத்தியது. எதை எவ்வளவு விட்டுக் கொடுக்க வேண்டுமோ அதை விட்டுகொடுத்து, இரண்டு நாட்டிற்க்கும் எது நல்லதோ அதை முன்னிறுத்தி சிங்கப்பூருக்கு 2011 முதல் 2061 வரை, தற்போதைய விலையை விட 46 பைசா (செண்ட்) அதிகம் கொடுத்து தண்ணீர் வரத்தை உறுதி படுத்தினர். இது தொலை நோக்கு பார்வை மற்றும் பயணத்திற்க்காண தீர்வு, இனி 50 ஆண்டுகளுக்கு அவர்கள் அதைப்பற்றி பேசப்போவது இல்லை.
ஒரே நாட்டில், அருகருகில் உள்ள இரண்டு மாநிலங்களுக்குள் உள்ள தண்ணீர் தேவையை/பிரச்சனையை நம்மால் தீர்க்க முடியாதா?
இரு மாநில மக்களும் சொல்லவேண்டிய ஒரே வாக்கியம், அது சிங்கப்பாதை வாக்கியம் : முல்லை பெரியாறு – த மஸ்ட்
Most Unenviable Source to Tamilnadu
Mallus Use and Secure Tenancy
முல்லை பெரியாறு – த மஸ்ட், சிவாஜி – த பாஸ்-லேருந்து என் எண்ணமாக நான் சொல்ல நினைப்பது.
எப்படி சிவாஜி (பழைய படம் இல்லை, சங்கர் இயக்கத்தில் வந்த்து) படத்தில் சிவாஜி என்ற ஒரு தனி மனிதன் ஒரு நல்ல நோக்கத்தோடு கல்வி மற்றும் மருத்துவ கூடங்களை நிறுவ பல வகையான எதிர்ப்புகளை எதிர் கொள்ளுவார். சுய நலம் கொண்ட தனி மனித எதிர்ப்பு, அனுமதி பெறவேண்டி அரசு அலுவர்களின் லஞ்ச லாவன்ய கெடுபிடி, லோக்கல் ரவுடியில் ஆரம்பித்து கடைசியில் ஒரு மாநிலத்தின் கல்வி மற்றும் முதல் அமைச்சர் வரை.
முல்லை பெரியாறு விவகாரத்திலும் அதுதான் நடைபெறுகிறது. பென்னிகுயிக் என்ற ஒரு நல்ல மனிதன் இரண்டு மாநிலங்களுக்கும் உதவட்டுமே என்ற உயர்ந்த நோக்கத்தோடு ஒரு சிறந்த அணையை நமக்கு அளித்துவிட்டு சென்றிருக்கிறார். பின்னாட்களில் நடக்கப் போவதை முன்கூட்டியே அனுமானிக்க கூடியவர்கள் அறிவாளிகள் – தீர்க்கதரிசிகள். அப்படிப்பட்ட அறிவாளிகள் எதிகாலத்தில் சுய நலக் காரர்களிடம் இருந்தும், அரசியல் வியாதிகளிடம் இருந்தும் மனித வாழ்வாதாரமான தண்ணீரை காக்க அதை 999 வருட ஒப்பந்தமாக நிலை நிறுத்திவிட்டு சென்றிருக்கிறார்கள்.
மாநிலத்திலும் மத்தியிலும் அரசியல் மாற்றங்கள் நிகழும் போதும், அங்கு அவர்களின் ஆட்சிக்கு அச்சுருத்தல்கள் வரும்போதும் அவர்கள் பிரச்சனைகளை திசை திருப்பவே முல்லைப்பெரியாறு அணையை கையில் எடுக்கிறார்கள் என்பதுதான் உண்மை. [சிவாஜி படத்தில் சொல்வது போல், நீங்க கொடுத்ததெல்லாம் அந்த பார்ட்டிக்கு, எனக்கு என்ன கொடுப்பீங்க, உங்க புராஜெக்ட் வேல்யு எவ்வளவு?]
தன் சுய லாபத்திற்க்காக அணைப் பிரச்சனையை கிளறி விடும் அயோக்கியர்களே, உங்கள் ஒவ்வொருவரு ஆட்சி மாற்றதிற்க்கும் உறுதியாக இருக்கின்ற அணையை ஓட்டை போட்டு ஓட்டை போட்டு அணையின் உறுதியை உருகுலைக்கும் அரசியல் வாதிகளே, நீங்கள் போட்ட ஓட்டையால் அணையில் நீர்க்கசிவு உண்டாகிறதோ இல்லையோ, ஒற்றுமையாய் வாழும் தமிழக-கேரள மக்களின் இருதயத்தில இரத்தக் கசிவை உண்ட்டாக்கி விட்டீர்கள். போதும் உங்கள் சோதனை, இம்முறை செய்யும் சோதனை இறுதியாக இருக்கட்டும், முடிவு உறுதியாக இருக்கட்டும்.
மனம் இருந்தால் மார்க்கமுண்டு. உங்கள் அருகில் உள்ள சிறிய நாட்டைப் பாருங்கள், கற்றுக்கொள்ளுங்கள். சிங்கப்பூர் – இயற்க்கை வளம் இல்லாத நாடு/ஊர். மலேசியாவிடம் இருந்துதான் குடிநீர் பெறுகிறது. இங்கு உள்ள பிரச்சனைகள் போலத்தான் அங்கும் நிகழ்ந்தது. உதாரணத்திற்க்கு ஒன்று – மலேசியாவிடம் இருந்து பெற்ற நீரை சிங்கப்பூரில் சுத்தப்படுத்தி, பாட்டிலில் அடைத்து அதை மலேசிய சந்தையில் விற்பாதாக. [தமிழகம் கேரள தண்ணீரில் விவசாயம் செய்து அதை கேரளத்தில் விற்பது போல்].
சிங்கப்பூரின் மதியுக அமைச்சர் லீ-குவான்-யூ மற்றும் முதல் அமைச்சர் கோ-சோ-தோங் அணி 2010-ல் முடிவுக்கு வர இருந்த தண்ணீர் ஒப்பந்தத்தை மிக அழகாக கையாண்டார்கள். அப்போது மலேசியா இதில் மலேசிய மக்களின் சிங்கப்பூர் மத்திய சேமிப்பு நிதி இருப்பை (சி.பி.எஃப்) துருப்புச்சீட்டாக உபயோகப்படுத்தியது. எதை எவ்வளவு விட்டுக் கொடுக்க வேண்டுமோ அதை விட்டுகொடுத்து, இரண்டு நாட்டிற்க்கும் எது நல்லதோ அதை முன்னிறுத்தி சிங்கப்பூருக்கு 2011 முதல் 2061 வரை, தற்போதைய விலையை விட 46 பைசா (செண்ட்) அதிகம் கொடுத்து தண்ணீர் வரத்தை உறுதி படுத்தினர். இது தொலை நோக்கு பார்வை மற்றும் பயணத்திற்க்காண தீர்வு, இனி 50 ஆண்டுகளுக்கு அவர்கள் அதைப்பற்றி பேசப்போவது இல்லை.
ஒரே நாட்டில், அருகருகில் உள்ள இரண்டு மாநிலங்களுக்குள் உள்ள தண்ணீர் தேவையை/பிரச்சனையை நம்மால் தீர்க்க முடியாதா?
இரு மாநில மக்களும் சொல்லவேண்டிய ஒரே வாக்கியம், அது சிங்கப்பாதை வாக்கியம் : முல்லை பெரியாறு – த மஸ்ட்
Most Unenviable Source to Tamilnadu
Mallus Use and Secure Tenancy
Subscribe to:
Posts (Atom)

