எப்பொருள் யார் யார்…


(வெளி வேலைகளை முடித்து விட்டு வீடு திரும்பும் கணவன்…)

கணவன்: என்னம்மா உடம்பு ஏதும் சரியில்லையா? ஒரு மாதிரி இருக்க?

மனைவி: எனக்கென்ன, எப்பவும் போலத்தான் இருக்கேன்!

அப்ப சரி, நீ காப்பி குடிச்சிட்டியா? எனக்கு ஒரு காப்பி கொடேன்

எதுல காப்பி போட?

என்ன இது புதுசா கேட்கிற, வழக்கம் போல போடு

டூ பர்சண்டல போடவா இல்லை ஹோல் மில்க்ல போடவான்னு கேட்டேன்

இது என்ன புதுக் கேள்வி? நாம டூ பர்சண்ட் மில்க்குக்கு மாறி பல வருஷம் ஆயிடுச்சே, காப்பிய போடு முதல்ல.

நான் என்ன லூசா? புதுசா கேட்கிறதுக்கு?


உனக்கு என்ன பைத்தியமா? சம்பந்தம் இல்லாம பேசுர? இப்ப காப்பி போடுறயா இல்லை நானே போட்டுக்கவா?

ஆமாம் நான் தான் பைத்தியம், அதைதான் அய்யா ஊர் முழுக்க சொல்லிகிட்டு வரீங்க போல இருக்கு

என்ன சொல்ர? நான் என்னத்த ஊர் முழுக்க சொல்லிட்டு வரேன்?

கோமதி வீட்ல என்னப்பத்தி என்ன சொன்னீங்க?

நான் என்ன சொன்னேன்? உன்னைப் பத்தி ஒன்னும் சொல்லலியே, அப்படியே சொன்னாலும் பெருமையாத்தானே சொல்லியிருப்பேன்?!

பொய் சொல்லாதீங்க, உங்களை காணோம்னு இப்பதான் கோமதிகிட்ட பேசினேன், அவ அங்க நடந்தது எல்லாத்தையும் சொன்னா

எல்லாத்தையும் சொன்னான்னா எனக்கு என்ன தெரியும், நான் என்ன சொன்னேன்னு சொன்னா?

என்ன பைத்தியம்னு சொன்னீங்களாம், அதுவும் சுத்தப் பைத்தியம்ன்னு சொன்னீங்களாம், என்ன பார்த்தா என்ன லூசாவா தெரியுது உங்களுக்கு?


ஓ… அதான் விசயமா? எதையுமே சரியா புரிஞ்சிக்காம சொன்னா இப்படித்தான். வீட்ல எடுத்த பொருள் எடுத்த எடுத்துல வைக்கனும்னு சொல்லுவ, வீட்டை நீ ரொம்ப சுத்தமா துடைச்சி துடைச்சி வெச்சிப்ப இல்லையா? அதைதான் நான் நீ ”சுத்தப்” பைத்தியம்னு சொன்னேன்.

காலையில் ஒரு காப்பி, மாலையில் ஒரு காப்பின்னு காப்பி பைத்தியமா இருக்கோமே அத மாதிரி சொன்னேன். அதப்போய்…

சரி, சரி இந்தாங்க காப்பி.


எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்

மெய்பொருள் காண்பது அறிவு.

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஓஹோ... இப்படியும் ஒரு சமாளிப்பு...!

sury siva said...

///எடுத்த பொருள் எடுத்த எடுத்துல வைக்கனும்னு சொல்லுவ, வீட்டை நீ ரொம்ப சுத்தமா துடைச்சி துடைச்சி வெச்சிப்ப இல்லையா? அதைதான் நான் நீ ”சுத்தப்” பைத்தியம்னு சொன்னேன்.//////

அரசோரான் அவர்களே ! வணக்கம்.

அசகாயமாக ஒரு பதிவு. இங்கு இன்று தான் அப்பாதுரை பதிவு வழியே உங்கள் பின்னூட்டத்தில் என் பெயரை நீங்கள் பதிவு செய்யக்கண்டு உங்கள் பதிவுக்கு வந்தேன்.

வந்த இடத்தில் ஒதுங்கலாம் என்றால் , இங்கேயும் அதே கதை தான் .

வெச்ச பொருளை வெச்ச இடத்தில் தான் வைக்கணும் அப்படின்னு சொல்லுறது சரிதான் .

ஆனா ஒரு வயசு வரைக்கும்தாங்க அது முடியறது.

வயசாச்சுன்னா, அது அதுக்குன்னு ஒரு இடம் இருக்குது. அங்கே போய் ஒளிஞ்சிக்கினு இருக்குது. நீ திருப்பியும்
வச்ச இடத்திலே ... அப்படின்னா ...

சரிப்படுங்களா... நீங்களே சொல்லுங்க...

அது சரி...

தம்பி.. எந்த ஊரு...
எங்க பதிவுக்கு வந்தீகன்னா ஒரு டிகிரி காஃபி போட்டு தருவோம்ல..

சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.in

அரசூரான் said...

வணக்கம் சார், உங்க பதிவுகளை வந்து படித்திருக்கிறேன் - ரசித்திருக்கிறேன், மன்னிக்கவும் பின்னூட்டம் இடவில்லை - நான் இன்னும் அந்தளவுக்கு வளரவில்லை.