உப்புமாக் கவி!

கவிதை எழுதும் நண்பா
தெரியுமா உனக்கு வெண்பா?

கேள்வி கேட்கும் நண்பா
எனக்கு பேசதெரியும் அன்பா!

இலக்கணத்தில்
நேர் நேர் தேமா, நிரை நேர் புளிமா

அரசியலில்
நேரு நேரு மாமா, அமெரிக்க அதிபர் ஒபாமா

கவிதைக்கு அழகு - சீரும் தொடையும்
மதிய உணவுக்கு அழகு - மோரும் வடையும்

கவிதையை மெருகூட்ட - தலையும் யாப்பும்
சிகையை மெருகூட்ட - சோப்பும் சீப்பும்

கவிதை சிறக்க - எதுகையும் மோனையும்
புதுக்கவிதை சிறக்க - ரைமிங்கும் டைமிங்கும்

ஆஹா, புதுக்கவிதையில்
நீ ஓபாமா!

அய்யகோ,
கவிஞன் எனச் சொல்ல என்மனம் ஒப்புமா?
கவிதையில் இது வெறும் உப்புமா!!

5 comments:

நட்புடன் ஜமால் said...

மாம்ஸே இந்த கவிதையப்படிச்சிப்போட்டு, இதுக்கு முதல்ல ஒரு இடுக்கை இருந்திச்சே அதன் தலைப்பையும் படிச்சேன் ஒரே சிப்பு சிப்பா வருது ...

நட்புடன் ஜமால் said...

மதிய உணவுக்கு அழகு - மோரும் வடையும்


புதுக்கவிதை சிறக்க - ரைமிங்கும் டைமிங்கும்


superuuuuuuu

Yaathoramani.blogspot.com said...

அருமயான படைப்பு
படித்து படித்து மகிழ்ந்தேன்
தொடர வாழ்த்துக்கள்

Ranjani Narayanan said...

அன்புடையீர்,

உங்களது இந்தப் பதிவை இன்றைய வலைச்சரத்தில் பகிர்ந்து கொண்டுள்ளேன்.

இணைப்பு:http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_11.html
வருகை தருக!

நன்றி!

பழமைபேசி said...

மயிலாடுதுறை, விஜய் டி.ஆரு ஊர்க்காரங்களாம் இவுக. என்னா போடு போடுறாய்ங்க பார்த்தீகளா?! நடக்கட்டு, நடக்கட்டு!!