மூன்று முகம்

முகப்புத்தகத்தில் தன் நிஜமுகத்தை இழந்து
அறி-முகமில்லாரோடு அன்பாய் பழகி
முகமெல்லாம் சந்தோஷம் – உலகமெங்கும் நண்பர்கள்
முகம்மறந்து போனேன் – உள்ளூர் நண்பர்கள் யாரென்று.

முகப்புத்தகத்தை கண்டெடுத்தவன்
முகமறியா முன்கோபம் கொண்டேன்
முட்டாள், ஐனூறு மில்லியன் முகத்தை ஒருமுகமாக்கி
எழுனூறு பில்லியன் மணித்துளிகளை மரணித்துவிட்டானென்று.

வாய்ப்புகள் நிறைந்த நாட்டில் தற்போது வேலையிழப்பு
அதனால் கல்வியின் முகவரியிழப்பு - வேதனை
கொட்டி கொடுத்திருக்கிறாய் நூறு மில்லியன்
இன்று உன் முகமும் தெரிந்தது, அகமும் தெரிந்த்து
இருபத்தியாறு வயதில் இணையில்லா – சாதனை.

5 comments:

பழமைபேசி said...

பகிர்வுக்கு நன்றி!

Chitra said...
This comment has been removed by the author.
Chitra said...

Good one on Facebook!

நட்புடன் ஜமால் said...

எழுனூறு பில்லியன் மணித்துளிகளை மரணித்துவிட்டானென்று.]]


டாப்பு மாம்ஸே

அரசூரான் said...

@ பழமை
@ சித்ரா
@ ஜமால்
வருகைக்கு நன்றி நண்பர்களே.