துரியோதனன் – சொ.கா.சூ

ஒருவர் நம் நம்பிக்கைக்கு பாத்திரமானவர் என்றால் அவர் சொல்வதை நாம் நம்ப வேண்டும்... இல்லையென்றால் சொந்த காசில் சூனியம் (சொ.கா.சூ) வைத்துக்கொள்ள வேண்டியதுதான்.

மஹாபாரதத்தில் அதை மிக அழகாக சொல்லியிருப்பதை பார்க்கலாம். கிருஷ்ணன் துரியோதனனை சந்தித்து பேசுகிறார், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைகிறது. சரி இனி இவனிடம் பேசி பயனில்லை என்று கிருஷ்ணன் அவன் மாளிகையிலிருந்து புறப்படுகிறார். அப்படி புறப்பட்டு வரும் போது மாளிகை வாயில் பாதையில் அஸ்வதாமன் வருவதை பார்க்கிறார், துரியோதனன் கோபத்தில் மாடியில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருப்பதையும் பார்க்கிறார். சரி இதுதான் சமயம் இவன வெச்சு அவன் மண்டைய குழப்பிட வேண்டியதுதான்னு முடிவு பண்ணி காய் நகர்த்துகிறார்.

எதிரணியில் கிருஷ்ணன் இருந்தாலும், அஸ்வதாமன் மரியாதை நிமித்தம் கை குவித்து கிருஷ்ணனுக்கு வணக்கம் தெரிவிக்கிறான். அதுதான் சமயம் என்று கிருஷ்ணன் தன் மோதிரத்தை கழட்டி கீழே விட, கிருஷ்ணன் மரியாதைக்குரியவர் என்பதால் அஸ்வதாமன் அதை குனிந்து எடுத்து கிருஷ்ணன் கையில் கொடுக்கிறான். கிருஷ்ணன் அதை நன்றியுடன் (சிறிது கயை பிடித்து அழுத்தி) வாங்கி கொள்கிறார். ஒன்றும் பேசிக் கொள்ளவே இல்லை, பிறகு இருவரும் வணங்கி விடை பெருகின்றனர்.

மாளிகையின் மாடியிலிருந்து இந்த காட்சியை ஊமைப் படமாய் துரியோதனன் பார்க்கிறான். கிருஷ்ணன் அஸ்வதாமனிடம் பேசி அவனை அவர்கள் (பாண்டவர்கள்) பக்கம் மாற்றிவிட்டான் என எண்ணுகிறான்.

இனி... துரியோதனனும் அஸ்வதாமனும் பேசிக்கொண்டது…

துரி: ஏண்டா பண்ணாட... அவ்ந்தான் நம்ம எதிரியாலுன்னு தெரியும்ல... அவன் கைல உனக்கின்னாடா பேச்சி வேண்டிகிடக்கு?

அஸ்: தோ...டா. என்னமோ புச்சா சொல்லவந்திட்டாரு. நாங்களும் உப்பு போட்டுதான் சோறு துண்றோம்... எங்களுக்கும் சொரண இருக்கு... நான் எவ்ன் கைலியும் பேஸ்ல... சும்மா மரியாதைக்காண்டி ஒரு அலோ சொல்லிகினோம்...
துரி: சரி நீ பேஸ்ல... உன்ன நம்பறேன்... ஒரு பேச்சுக்கு நீ பேஸ்லன்னே வெச்சுகிறன். நான் இங்கன இருந்ததால நீ பேஸ்னயா இல்லியான்னு என்னால கட்டன்ரைட்டா சொல்லமுடியல. ஆனா அவன் கைல அடிச்சி சத்தியம் பண்ணியே... இன்னா மேட்டரது... அத்த சொல்லு.

அஸ்: இன்னாது... நான் அவன் கைல அடிச்சி சத்தியம் பண்ணினா? யாம்பா... உன்கு ஏதாவது மண்ட கிண்ட ஓடிப்போச்சா? இல்ல... ராத்திரி அட்ச்ச மப்பு இன்னும் தெளியலயா?

துரி: நீ என் கைல டபாய்ககாத... என் ரெண்டு கண்ணால பார்த்தேன். தரையிலேருந்து மண்ண எடுத்து அவன் கைல அடிச்சி சத்தியம் பண்ணுன.

அஸ்: யோவ்... இன்னாயா உன்கூட படா பேஜாராகீது... பேசாதத பேஸ்னேங்கிற... செய்யாதத செஞ்சேங்கிற... இத்தான் பெரியவங்கோ சொல்றத கேட்கனுங்கிறது. நீ யான் தோஸ்த்து, நீதான் எனக்கு முக்கியம்னு... நீ தப்பானவன்னு தெரிஞ்சும் உன்கு உதவ வந்தம் பாரு... எம்புத்திய ஜோட்டால அடிக்கனும்... அக்காங்.

(எது எப்படியோ, கிருஷ்ணன் அவர் நினைச்ச வேளைய கச்சிதமா செய்து முடித்திட்டார்).

கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், உடையவரிடம் நேரடியாக கேட்டு தெரிந்து கொள்வதே மெய்.

2 comments:

நட்புடன் ஜமால் said...

இம்பூட்டு சுலுவா சொல்லிக்கினபா

அரசூரான் said...

ஜமால், வருகைக்கு தேங்க்ஸ்பா.