அன்றும்... இன்றும்... -1

அன்று...
ஆசிரியர்: முருகா, வர வெள்ளிகிழமை விளையாட்டு போட்டிக்கு ஒரு 100 பேர் உட்கார பெஞ்சு போடனும்டா... அந்த வேளைய நீ பார்த்துக்கோ.

இன்று...
நண்பர்: முருகன், வர வெள்ளிகிழமை பிறந்த நாள் பார்ட்டி, ஒரு 100 பேர் உட்கார நாற்காலி ஏற்பாடு பண்ணும்... அத நீங்க பார்த்துக்கிறீங்களா?

முருகன்: சரி சார், காலைல ஏ.பி சார்கிட்ட சொல்லி அட்டெண்டன்ஸ் போட்டுட சொல்லுங்க... நான் கூட ரவிய அழைச்சிகிறேன், விளையாட்டு மைதானத்துல மதியம் பெஞ்ச இறக்கிடுறோம்.

ஒன்னும் பெரிய விசயம் இல்ல, ஒரு ஒன் அவர் அவே ஃப்ரம் டெஸ்க்னு போட்டுட்டு, மதியம் லன்ச் பிரேக்ல போயி எடுத்து கொண்டுவந்து வீட்டுல போட்டுடுறேன்.

டேய் ரவி வாடா ஒரு 20 பெஞ்சு ஏத்தனும், எங்க சிகப்பு காளை மாட்ட ஓட்டிக்கலாம், எங்க பார வண்டி சரிபடாது, உங்க வீட்டு டயர் வண்டிய எடுத்துப்போம், நம்ம தெருவிலேயே எடுத்து கொண்டாந்து இறக்கிடலாம்.

கணேஷ், லன்ச் பிரேக்ல ரெண்ட்-ய-பிளேஸ் வரை போயி கொஞ்சம் சேர் ஏத்திட்டு வந்திடலாமா? என் வண்டில ஏத்த முடியாது, யூகால்ல டிரக்க எடுத்துக்கலாம், அப்படியே ராஜ் வீட்டுல இறக்கிட்டு வந்திடலாம்.

பாட்டி: முருகா, பெஞ்ச ஒடைச்சி கொண்டாந்து போடுறீங்களா? காலு நொடிக்குது?

சேல்ஸ் லேடி: எச்சூசுமி, ரெண்டு சேரு டேமேஜ் ஆயிருக்கு

முருகன்: பாட்டி, அது ஏத்தும் போதே நொடிச்சிகிட்டுதான் இருந்துது... நீ பாக்கு இடிச்சி இடிச்சி... நொடிச்சி போச்சி. கவலை படாத அடுத்த வாரம் எங்க வீட்டுக்கு ஆசாரியார் வராரு அவர கூட்டிவந்து சரி பண்ணிதரேன்.

நாங்க செக் பண்ணல, உங்க டெலிவரிமேன் தான் லோட் பண்ணுனார், இருந்தாலும் இன்சூரன்ஸ் எடுத்திருக்கோம், அதுல கவர் பண்ணிக்கோங்க.

காலங்கள் மாறும்... காட்சிகள் மாறும்...
ஆனால் முருகனும் நானும் வேறல்ல...


இந்தியாவில் பாதி... அமெரிக்காவில் மீதி...
அன்றும் இன்றும் நம் நினைவுகள் ஒன்றல்லோ...


இத கவியரசர் கண்ணதாசன் எவ்வளவு அழகா பாட்டா எழுதியிருக்கார்.... கேட்கனுமா... இங்க அழுத்துங்க.

4 comments:

பழமைபேசி said...

அஃகஃகா.... சனிக்கிழமை ஊட்ல நல்ல சிந்தனைதான் போங்க....

பத்மா said...

நல்லா இருக்கு ஒங்க blog

நட்புடன் ஜமால் said...

மாம்ஸூ செம இண்ட்ரஸ்ட்டிங்க

அரசூரான் said...

நன்றி பழமை, பத்மா, ஜமால்.