இவன் ஒரு CORPORATE கிராமத்தான். அரசூர் என் தாத்தாவின் சொந்த ஊர், எங்கள் ஊரில் (செம்பனார்கோவில்) என் தாத்தாவை அரசூரார் என்று அழைப்பார்கள்... அவர் நினைவாக இந்த அரசூரான்.
மங்கள்யான் - செவ்வாயில் இந்தியன்!
வந்திட்டேன் வந்திட்டேன் ஆர்பிட்டச் சுத்தி
சொல்லாதீங்க சொல்லாதீங்க என் ரகசியத்தக் கத்தி!
மங்களாயன் வானில் பத்திரமாய் பயணித்து சென்றது செவ்வாய்
மக்கள் வாயில் இனிப்பாய் மெள்ளக் கிடைத்தது அவலாய்!
ஆசியாவில் முதலாம், அகிலத்தில் நான்காம் (முயற்ச்சித்தவை ஆறாம்)
அண்டவெளியில் பயணித்ததோ அறுபத்தி ஐந்து கோடி கிலோமீட்டராம்!
நாசா உட்டா காசு, இஸ்ரோ உட்டா லேசு
கிலோமீட்டருக்கு நான்கு ரூபாய் மட்டுமே செலவு செய்தது கிளாஸூ!
கணணி துறையில் மட்டும் இல்லடா நாங்க கேடி
அதை அமெரிக்கா கிட்ட சொல்ல வராரு எங்க மோடி!!
ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன்… வாலி
இன்று முதல்… பூவுலகில் அந்த இடம் ”காலி”
வயதானாலும் உன் பாடல்களில் துள்ளும் “ஜாலி”
காமத்துப் பாடல்களில் போட்டிருப்பாய் “வேலி”.
பொருளுடன் பாடல் எழுதினாய் கிடைக்கவில்லை துட்டு!
பொருளுக்கு பாடல் எழுதினாய் கிடைத்தது கைத்தட்டு!!
இன்று வானுலகம் சென்றுவிட்டீர் எங்களை விட்டு!!!
எப்பொருள் யார் யார்…
(வெளி வேலைகளை முடித்து விட்டு வீடு திரும்பும் கணவன்…)
கணவன்: என்னம்மா உடம்பு ஏதும் சரியில்லையா? ஒரு மாதிரி இருக்க?
எதுல காப்பி போட?
என்ன இது புதுசா கேட்கிற, வழக்கம் போல போடு
டூ பர்சண்டல போடவா இல்லை ஹோல் மில்க்ல போடவான்னு கேட்டேன்
இது என்ன புதுக் கேள்வி? நாம டூ பர்சண்ட் மில்க்குக்கு மாறி பல வருஷம் ஆயிடுச்சே, காப்பிய போடு முதல்ல.
நான் என்ன லூசா? புதுசா கேட்கிறதுக்கு?
உனக்கு என்ன பைத்தியமா? சம்பந்தம் இல்லாம பேசுர? இப்ப காப்பி போடுறயா இல்லை நானே போட்டுக்கவா?
ஆமாம் நான் தான் பைத்தியம், அதைதான் அய்யா ஊர் முழுக்க சொல்லிகிட்டு வரீங்க போல இருக்கு
என்ன சொல்ர? நான் என்னத்த ஊர் முழுக்க சொல்லிட்டு வரேன்?
கோமதி வீட்ல என்னப்பத்தி என்ன சொன்னீங்க?
நான் என்ன சொன்னேன்? உன்னைப் பத்தி ஒன்னும் சொல்லலியே, அப்படியே சொன்னாலும் பெருமையாத்தானே சொல்லியிருப்பேன்?!
பொய் சொல்லாதீங்க, உங்களை காணோம்னு இப்பதான் கோமதிகிட்ட பேசினேன், அவ அங்க நடந்தது எல்லாத்தையும் சொன்னா
எல்லாத்தையும் சொன்னான்னா எனக்கு என்ன தெரியும், நான் என்ன சொன்னேன்னு சொன்னா?
என்ன பைத்தியம்னு சொன்னீங்களாம், அதுவும் சுத்தப் பைத்தியம்ன்னு சொன்னீங்களாம், என்ன பார்த்தா என்ன லூசாவா தெரியுது உங்களுக்கு?
ஓ… அதான் விசயமா? எதையுமே சரியா புரிஞ்சிக்காம சொன்னா இப்படித்தான். வீட்ல எடுத்த பொருள் எடுத்த எடுத்துல வைக்கனும்னு சொல்லுவ, வீட்டை நீ ரொம்ப சுத்தமா துடைச்சி துடைச்சி வெச்சிப்ப இல்லையா? அதைதான் நான் நீ ”சுத்தப்” பைத்தியம்னு சொன்னேன்.
காலையில் ஒரு காப்பி, மாலையில் ஒரு காப்பின்னு காப்பி பைத்தியமா இருக்கோமே அத மாதிரி சொன்னேன். அதப்போய்…
சரி, சரி இந்தாங்க காப்பி.
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பது அறிவு.
ஐ.பி.எல்லே…
இன்று புக்கிங்கால் ஆயிடுச்சி தரங்கெட்டு, தரிகெட்டு!!
ஐ.பி.எல்லே… நீ இந்தியன் பிரிமியர் லீகா?
இல்லை… நீ இந்தியன் பிராடு லீகா?
ஆட்டக்காரன் ஆட்டத்தை குறைத்து மைதானத்தில் பணம் பேசி ஆடுகிறான்!
ஆட்டக்காரி ஆடையை குறைத்து மைதானத்தில் மனம் கூசி ஆடுகிறாள்!!
ஐ.பி.எல்லே… நீ இந்தியன் பிரிமியர் லீகா?
இல்லை… நீ இந்தியன் பிளேபாய் லீகா?
சூதில் பணம் சேர்த்து சொத்து சேர்த்தவன் மூன்று பேரு!
அதில் மனம் தோற்று செத்து போனவன் முன்னூறு பேரு!!
ஐ.பி.எல்லே… நீ இந்தியன் பிரிமியர் லீகா?
இல்லை… நீ இந்தியன் பித்தலாட்ட லீகா?
மூன்று பேரும்…
ஒத்துக்கிட்டா தூக்கி மத்திய-சிறையில போடு!
இல்லாவிட்டா துரத்தி என்-கவுண்டர்ல போடு!!
சங்க சந்தை
மீண்டும் ஒரு முறை கேளுங்கள்
தலைப்பை கவிதையாக்க அல்ல, சரியாக புரிந்து கொள்ள!
ஆம், சங்க சண்டை அல்ல தலைப்பு, சங்க சந்தை!
சங்க நிகழ்வுகளால் ஏறுமுகமாகவும் இறங்கு முகமாகவும் இருக்க
பங்கு சந்தையல்ல நம் உறவு!
மன மகிழ்வுகளால் இன்முகமாகவும் பன்முகமாகவும் இருக்க
நன்கு அறிய வேண்டியது நம் உறவு!
காளையோ கரடியோ அல்ல - நாம்
உணர்வால் விழுந்து எழ அல்லது புரண்டு அழ!
நாம் உணர்வால் தமிழ்ப் பால் குடித்த சிங்கம்
உரிமையோடு சொல்வோம் நாம் ஒவ்வொருவரும்
தமிழ்ச் சங்கத்தின் அங்கம்!
அன்பர்கள் தினப் பெயர்ச்சியா?
ஆத்தா... கலியுகம் ஆத்தா கலியுகம். இன்னும் உன்னை வைத்து என்ன என்ன பூசையெல்லாம் பண்ண போகிறார்களோ தெரியலயே? அவ்வ்வ்வ்.
பின் குறிப்பு: இது எவர் மனதையும் வருந்த வைக்க அல்ல... இக்கோவிலுக்கு ஒன்றரை ஆண்டுகள் தொடந்து சென்றவன், கோவில் வலைப்பக்கத்தில் இதைக் கண்டேன்... என் மன வருத்தத்தை பதிவு செய்யவே.
முல்லை பெரியாறு – த மஸ்ட்
முல்லை பெரியாறு – த மஸ்ட், சிவாஜி – த பாஸ்-லேருந்து என் எண்ணமாக நான் சொல்ல நினைப்பது.
எப்படி சிவாஜி (பழைய படம் இல்லை, சங்கர் இயக்கத்தில் வந்த்து) படத்தில் சிவாஜி என்ற ஒரு தனி மனிதன் ஒரு நல்ல நோக்கத்தோடு கல்வி மற்றும் மருத்துவ கூடங்களை நிறுவ பல வகையான எதிர்ப்புகளை எதிர் கொள்ளுவார். சுய நலம் கொண்ட தனி மனித எதிர்ப்பு, அனுமதி பெறவேண்டி அரசு அலுவர்களின் லஞ்ச லாவன்ய கெடுபிடி, லோக்கல் ரவுடியில் ஆரம்பித்து கடைசியில் ஒரு மாநிலத்தின் கல்வி மற்றும் முதல் அமைச்சர் வரை.
முல்லை பெரியாறு விவகாரத்திலும் அதுதான் நடைபெறுகிறது. பென்னிகுயிக் என்ற ஒரு நல்ல மனிதன் இரண்டு மாநிலங்களுக்கும் உதவட்டுமே என்ற உயர்ந்த நோக்கத்தோடு ஒரு சிறந்த அணையை நமக்கு அளித்துவிட்டு சென்றிருக்கிறார். பின்னாட்களில் நடக்கப் போவதை முன்கூட்டியே அனுமானிக்க கூடியவர்கள் அறிவாளிகள் – தீர்க்கதரிசிகள். அப்படிப்பட்ட அறிவாளிகள் எதிகாலத்தில் சுய நலக் காரர்களிடம் இருந்தும், அரசியல் வியாதிகளிடம் இருந்தும் மனித வாழ்வாதாரமான தண்ணீரை காக்க அதை 999 வருட ஒப்பந்தமாக நிலை நிறுத்திவிட்டு சென்றிருக்கிறார்கள்.
மாநிலத்திலும் மத்தியிலும் அரசியல் மாற்றங்கள் நிகழும் போதும், அங்கு அவர்களின் ஆட்சிக்கு அச்சுருத்தல்கள் வரும்போதும் அவர்கள் பிரச்சனைகளை திசை திருப்பவே முல்லைப்பெரியாறு அணையை கையில் எடுக்கிறார்கள் என்பதுதான் உண்மை. [சிவாஜி படத்தில் சொல்வது போல், நீங்க கொடுத்ததெல்லாம் அந்த பார்ட்டிக்கு, எனக்கு என்ன கொடுப்பீங்க, உங்க புராஜெக்ட் வேல்யு எவ்வளவு?]
தன் சுய லாபத்திற்க்காக அணைப் பிரச்சனையை கிளறி விடும் அயோக்கியர்களே, உங்கள் ஒவ்வொருவரு ஆட்சி மாற்றதிற்க்கும் உறுதியாக இருக்கின்ற அணையை ஓட்டை போட்டு ஓட்டை போட்டு அணையின் உறுதியை உருகுலைக்கும் அரசியல் வாதிகளே, நீங்கள் போட்ட ஓட்டையால் அணையில் நீர்க்கசிவு உண்டாகிறதோ இல்லையோ, ஒற்றுமையாய் வாழும் தமிழக-கேரள மக்களின் இருதயத்தில இரத்தக் கசிவை உண்ட்டாக்கி விட்டீர்கள். போதும் உங்கள் சோதனை, இம்முறை செய்யும் சோதனை இறுதியாக இருக்கட்டும், முடிவு உறுதியாக இருக்கட்டும்.
மனம் இருந்தால் மார்க்கமுண்டு. உங்கள் அருகில் உள்ள சிறிய நாட்டைப் பாருங்கள், கற்றுக்கொள்ளுங்கள். சிங்கப்பூர் – இயற்க்கை வளம் இல்லாத நாடு/ஊர். மலேசியாவிடம் இருந்துதான் குடிநீர் பெறுகிறது. இங்கு உள்ள பிரச்சனைகள் போலத்தான் அங்கும் நிகழ்ந்தது. உதாரணத்திற்க்கு ஒன்று – மலேசியாவிடம் இருந்து பெற்ற நீரை சிங்கப்பூரில் சுத்தப்படுத்தி, பாட்டிலில் அடைத்து அதை மலேசிய சந்தையில் விற்பாதாக. [தமிழகம் கேரள தண்ணீரில் விவசாயம் செய்து அதை கேரளத்தில் விற்பது போல்].
சிங்கப்பூரின் மதியுக அமைச்சர் லீ-குவான்-யூ மற்றும் முதல் அமைச்சர் கோ-சோ-தோங் அணி 2010-ல் முடிவுக்கு வர இருந்த தண்ணீர் ஒப்பந்தத்தை மிக அழகாக கையாண்டார்கள். அப்போது மலேசியா இதில் மலேசிய மக்களின் சிங்கப்பூர் மத்திய சேமிப்பு நிதி இருப்பை (சி.பி.எஃப்) துருப்புச்சீட்டாக உபயோகப்படுத்தியது. எதை எவ்வளவு விட்டுக் கொடுக்க வேண்டுமோ அதை விட்டுகொடுத்து, இரண்டு நாட்டிற்க்கும் எது நல்லதோ அதை முன்னிறுத்தி சிங்கப்பூருக்கு 2011 முதல் 2061 வரை, தற்போதைய விலையை விட 46 பைசா (செண்ட்) அதிகம் கொடுத்து தண்ணீர் வரத்தை உறுதி படுத்தினர். இது தொலை நோக்கு பார்வை மற்றும் பயணத்திற்க்காண தீர்வு, இனி 50 ஆண்டுகளுக்கு அவர்கள் அதைப்பற்றி பேசப்போவது இல்லை.
ஒரே நாட்டில், அருகருகில் உள்ள இரண்டு மாநிலங்களுக்குள் உள்ள தண்ணீர் தேவையை/பிரச்சனையை நம்மால் தீர்க்க முடியாதா?
இரு மாநில மக்களும் சொல்லவேண்டிய ஒரே வாக்கியம், அது சிங்கப்பாதை வாக்கியம் : முல்லை பெரியாறு – த மஸ்ட்
Most Unenviable Source to Tamilnadu
Mallus Use and Secure Tenancy
கடலையா இல்லை பீட்டரா?
இந்த “வோக்கல் ஃபிரை” அதிகம் காணப்படுவது பெண்கள் இடத்தில் என்று ”ஜர்னல் ஆஃப் வாய்ஸ்”-ன் சமீபத்திய கணக்கெடுப்பு சொல்லுகிறது. இது ஒரு பக்கம் பேச்சின் புதிய வடிவம்/அமைப்பு (ஃபேஷன்/ஸ்டைல்)-ன்னு சொன்னாலும் இது ஒரு வைகையான பாதிப்பு (ஸ்பீச் டிஸாடர்)-ன்னு மருத்துவகள் சொல்லுகிறார்கள். நான் இது பற்றி “இன்னா பேசுர நீ”-ன்னு ஒரு பதிவிட்டிருந்தேன்.
ஓ பேபி பேபி கேட்கனும்னா படத்தை கிளிக்குங்க.
உப்புமாக் கவி!
தெரியுமா உனக்கு வெண்பா?
கேள்வி கேட்கும் நண்பா
எனக்கு பேசதெரியும் அன்பா!
இலக்கணத்தில்
நேர் நேர் தேமா, நிரை நேர் புளிமா
அரசியலில்
நேரு நேரு மாமா, அமெரிக்க அதிபர் ஒபாமா
கவிதைக்கு அழகு - சீரும் தொடையும்
மதிய உணவுக்கு அழகு - மோரும் வடையும்
கவிதையை மெருகூட்ட - தலையும் யாப்பும்
சிகையை மெருகூட்ட - சோப்பும் சீப்பும்
கவிதை சிறக்க - எதுகையும் மோனையும்
புதுக்கவிதை சிறக்க - ரைமிங்கும் டைமிங்கும்
ஆஹா, புதுக்கவிதையில்
நீ ஓபாமா!
அய்யகோ,
கவிஞன் எனச் சொல்ல என்மனம் ஒப்புமா?
கவிதையில் இது வெறும் உப்புமா!!
தமிழ் இனி மெல்ல வாழும்...
தமிழ் தமிழென்று தமிழ் அமிழ்தமாய்
தமிழ்மொழி நம் தாய்மொழி எனும் தாரக மந்திரமாய்
தமிழ் தமிழ்நாட்டில் வாழ்ந்த காலம் - இறந்த காலமாய்
இனி
இனிய மொழிகளிலே தமிழ் மொழிபோல்
இனிதானது எங்கும் காணோம் என்று
இன்று இணையத்தில் தமிழ் வாழும் காலம் – நிகழ் காலமாய்
மெல்ல
தமிழ் இனி மெல்லச் சாகும்
எனச் சொன்னவர்களிடம் மெல்லச் சொல்லுங்கள்
புலம்பெயர்ந்த தமிழர்களிடம் தமிழ் – எதிர் காலமாய்
வாழும்
வாழ்வாங்கு வாழ்வது வள்ளுவரின் குறள் மட்டுமல்ல
வாழையடி வாழையாய் நாம் பேசும் தாய்மொழியும் தான் என்று
மெல்ல அல்ல உரக்கச் சொல்லுங்கள்
தமிழ் இனி மெல்ல வாழும் – காலம் காலமாய்.
குறிப்பு: இது நான் அட்லாண்டா தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற விடுமுறை தின கவிதை அரங்கத்திற்க்காக எழுதியது. தமிழ் நாட்டில் தமிழ் இறந்த காலமாய் என குறிப்பிட்டது இன்றைய தமிழ் ஆர்வத்தையும், ஆங்கில மோகத்தையும் காலத்தால் குறிப்பிடவே அன்றி குறைத்து மதிப்பிட அல்ல.
அடி ராக்கம்மா ராக்கு ராக்கு...
அதில் முதலாவதாக நான் இன்றைய செய்தியில் பார்த்து ரசித்தது... உங்களுக்காக.
இங்கே சொடுக்குங்க... சில வினாடி விளம்பரங்களுக்கு பிறகு வரும் ஆடலை கண்டு ரசிங்க.
அம்மாடி என்ன ஒரு நேர்த்தியான படைப்பு.
எனக்கு அவர்கள் பெயரை ”ரேடியோ சிட்டி ராக்கெட்டர்ஸ்” கேட்டவுடனேயே நினைவுக்கு வந்தது சிறுத்தை பட பாடல் அடி ராக்கம்மா ராக்கு ராக்கு... அதான் தலைப்பா ஆயிடுச்சி.
அடி ராக்கம்மா ராக்கு ராக்கு நெஞ்சுக்குள்ள ராக்கெட்டு
தாக்கம்மா தாக்கு தாக்கு ஆட்டத்துல விக்கெட்டு
இந்த ரேடியோ சிட்டி ராக்கம்மா எல்லாம் ஒரு ஐம்பது வருடமாக இப்படி ஆடி பல விக்கெட்ட ”கிக்” பண்ணியிருக்காங்க.
மாதிரிக்கு சில... கீழேயுள்ள இரண்டு தொடுப்பையும் சொடுக்கி பாருங்க.
2010 கிருஸ்துமஸ் அணிவகுப்பு
2008 மேசீஸ் அணிவகுப்பு
சரி... கிக்கு கிக்கா இருந்துச்சா? நாம பாடலை மேற்கொண்டு தொடருவோமா?
எதுக்கும்மா உதைக்க வர? கூட்டமா கூடி வர?
உன் காலல ஏன் காத்துல நீ கவிதை எழுதுர?
என்னையா சொல்ல வர? எப்பவுமே துள்ளுகிற
இல்லாத என் இடுப்ப இப்ப ஏன் கிள்ளவர?
மங்காத்தா அப்ப... மாயவரத்தா(ன்) இப்ப...
யூ ட்யூப்ல பார்த்தேன்... நீங்களும் பார்த்து ரசிங்க...
இங்க சொடுக்குங்க...
மறந்தே போச்சி... ரொம்ப நாள் ஆச்சி...
நான் பதிவு போட்டு-ன்னு சொல்ல வந்தேன், அதுவே தலைப்பாகி விட்டது.
மூன்று மாத காலமாக, அலுவல், தமிழ்க் கல்விப் பணி, எங்கள் (அட்லாண்டா) தமிழ்ச் சங்கப் பணி, இந்தியப் பயணம் பிறகு வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை பணி என்று நாட்கள் ஓடிவிட்டது.
சரி நாட்டுல என்ன நடக்குதுன்னு பார்த்தா... திருந்தாத முன்னேற்றக் கழகம் திஹார் முன்னேற்ற கழகமா மாறிவிட்டது போல இருக்கு. மேற்கொண்டு செய்திகள வாசிச்சா ஒரு அருமையான நகைச்சுவை விருந்த நமது எஸ்.ஏ.சி சொல்லியிருக்காரு... தகவல் என்னன்னு பெட்டிச் செய்திய பாருங்க.
எனக்கு ஒன்னும் புரியல, உங்களுக்கு ஏதாவது புரியுதா?
செல்வி செயலலிதாவோட ஆப்பு அடிக்கிற விதமே தனி, எஸ்.ஏ.சி-க்கு அவசியம் பின்னாடி கேடயம் தேவை என்கிறதைதான் இப்படி சொல்கிறாரோ? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.
எங்கே இருக்கிறேன் நான்...
யாரிடம் கேட்கிறாய் வரி....
வரி வசூலிக்கும் அதிகாரி ஒருவர் வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பெருசு-கள் அரசாங்க உதவித்தொகையில் உல்லாசமாக இருப்பதை கண்டு, அவர்கள் ஓய்வு காலத்தில் ஈட்டும் வருமானம் பற்றியும், அவர்களிடம் மேலும் வரி வசூலிக்க முடியுமா என்பதையும் கண்டறிய ஒரு உல்லாச தாத்தாவிற்க்கு வரி வசூலிக்கும் அலுவலகத்திற்க்கு நேரில் வந்து ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினார். வரி வசூலிப்பு அலுவலக உரையாடலாக இந்த பதிவு.
உல்லாச தாத்தா (உ.தா) தன் வழக்கறிஞர் உடன் வரி தணிக்கையாளர் (வ.த) அலுவலகம் வருகின்றார். வழக்கறிங்ஞருடன் வந்த உ.தா-வை பார்த்த வ.த-வுக்கு வியப்பு ஒன்றும் இல்லை (ஏனெனில் அமெரிக்காவில் வலிய வந்து ஆஜர் ஆகிறவர்தான் வக்கீல், மாத்திரை சாப்பிட்டு மயக்கம் போட்டு விழுந்து விட்டீர்களா? உடனடியாக என்னை அனுகுங்கள் அந்த மருந்து நிறுவனம் மீது வழக்குப் போட்டு உங்களுக்கு நிவாரணத்தொகை வாங்கி தருகிறேன் என்று விளம்பரப்படுத்தி நமக்கு உதவி செய்பவர்கள்).
வ.த: வாங்க, எங்கள் அழைப்பை ஏற்று ஒரு பொருப்பான குடிமகனாய் ஒத்துழைப்பு நல்கியதற்க்கு நன்றி. நீங்கள் ஓய்வு பெற்று விட்டீர்கள், அரசாங்கத்திடம் இருந்து உதவித்தொகை பெறுகின்றீர்கள், இருந்தாலும் கெடிலாக் கார், ஹவாய் கப்பல் பயணம் என்று அதீத செலவு செய்கின்றீர்கள், உங்கள் வருமானம் பற்றிய தகவல்களை நீங்கள் எங்களுக்கு (வருமான வரி துறைக்கு) தெரியப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
உ.தா: ஓ அதுவா, நான் ஒரு சிறந்த சூதாட்டக்காரன். அந்த வருமானங்களை நிரந்தர வருமானமாக கணக்கில் கொள்ள முடியாது. அதனால் அதை வருமானமாக வகைப்படுத்த இயலாது.
வ.த: அப்படியா? சற்று நம்ப கடினமாக உள்ளது...உ.தா: என் வார்த்தையில் நம்பிக்கை இல்லை அதானே? நீங்கள் விரும்பினால் ஒரு பந்தயத்தை செயல்முறையில் காட்டினால் ஒத்துக்கொள்வீர்கள்தானே?
வ.த: ம், அது நன்றாக தெரிகிறது, செயல்படுத்திக் காட்டுங்கள். நான் பந்தயத்திற்கு உடன்படுகிறேன்.
உ.தா: நான் என் கண்களை என் பல்லால் கடித்துக் காட்டுகிறேன்... ஆயிரம் டாலர் பந்தயம் என்றார்.
வ.த: தாத்தா தானகத்தான் நடந்து வந்தார், கண் நன்றாக இருக்க வேண்டும் என நினைத்து ஆகட்டும் என்றார்.
உ.தா. தான் அணிந்திருந்த குளிர் கண்ணாடியையும் கழட்டினார், கூடவே ஒற்றை பளிங்கு கண்ணையும் கழட்டினார். பளிங்கு கண்ணை வாயில் போட்டு கடித்தார்.
வ.த-வுக்கு சற்று வருத்தம், அவசரத்தில் கோட்டை விட்டோமே என்று தாடை தொங்கிற்று.
உ.தா: சரி, இன்னொரு கண்ணையும் கடிக்கிறேன்... ஆனால் பந்தயம் ஈராயிரம் டாலர் என்றார்.
வ.த: ஒரு கண்ணு நொல்லையா இருந்திருக்கும், அதுல நாம் ஏமாந்திட்டோம்... நிச்சயம் தாத்தா இதுல மாட்டிக்கப் போறாரு, சரி ரெண்டாயிரம் பந்தயம் என்றார்.
உ.தா: இப்போது பல்செட்டை கழட்டி அந்த நல்ல கண்ணை கடித்தார்.
வ.த-வுக்கு இப்போது கொஞ்சம் படபடப்பு கூடிட்று, மூன்றாயிரம் போனது கூட வருத்தமாய் இல்லை, தாத்தாவின் வழக்கறிங்ஞர் முன் இப்படி மூக்குடை பட்டுவிட்டோமே என்று உள்ளுக்குள் உதறல்.
உ.தா: கவலைப்படாதீர்கள், உங்கள் மூவாயிறத்தை ஆறாயிரமாக தருகிறேன், என் அடுத்த பந்தயத்திற்கு ஒத்துக்கொண்டால் என்றார்.
வ.த: சரி சொல்லுங்கள், நான் கேட்டு விட்டுத்தான் சொல்லுவேன் பந்தயத்திற்க்கு உடன்படுகிறேனா இல்லையா என்று (உஷாராயிட்டாரு).
உ.தா: நிச்சயமாக அது உங்கள் விருப்பம், நான் உங்கள் மேசையின் இந்த பக்கத்திலிருந்து அந்த பக்கத்தில் உள்ள குப்பைக்கூடையில் மிகச் சரியாக மூச்சா அடிக்கிறேன், மேசையில் ஒரு சொட்டு பட்டாலும் நான் உங்களுக்கு ஆறாயிரம் தருகின்றேன்... நன்கு யோசித்து சொல்லுங்கள் தோற்றால் நீங்கள் மூவாயிரம் தரவேண்டாம்... வென்றால் ஆறாயிரம்... என்றார்.
வ.த: தாத்தா உள்ள நிலைமைக்கு மேசைக்கு இந்த பக்கத்தில் இருந்து அடித்தாலே தோற்றுவிடுவார், அதிலும் அந்த பக்கத்திலிருந்து, மேலும் மேசையில் ஒரு சொட்டுப் படாமால்...ம் தாத்தாவுக்கு என்ன ஆச்சு? வென்ற மூவாயிரமும் வேண்டாமாம், தோற்றுப் போனால் ஆறில் மூன்றை கழித்து மூன்றை கொடுத்துவிட்டுப் போயிருக்கலாம். மொத்ததில் நமக்கு இரட்டை வருமானம், கையிலிந்து மூவாயிரம் இழப்பு மிச்சம், ஆறாயிரம் வருமானம் என்று இரட்டிப்பு மகிழ்ச்சியில் மிக்க மகிழ்ச்சியோட பந்தயத்திற்க்கு ஒத்துகொள்வாதாக சொன்னார்.
உ.தா: தான் சொன்ன படியே செய்ய முயற்ச்சித்தார், முயற்சி தோல்வி... வ.த-வின் மேசையெல்லாம் உ.தா-வின் மூச்சா.
வ.த: வெற்றிக் களிப்பில் எழுத்து ஆட ஆரம்பித்து விட்டார். ஆடும்போதுதான் கவனித்தார்... உ.தா-வுடன் வந்த வழக்கறிங்ஞர் தன் தலையில் கைவத்து அமர்ந்திருந்ததை. அருகில் சென்று கேட்டார்... ஏன் என்னவாயிற்று என்று?
உ.தா.வ: உ.தா காலையில் அழைத்து சொன்னார், வேலையில்லா வெட்டி ஆப்பிசர் வருமானம் இல்லாத என்ன கூப்பிட்டு வரிகட்ட சொல்லுரார், நான் அவர் மேசையில் மூச்சா அடிச்சி அவர் மூக்க உடைக்கிறேன் என்றார்.
வ.த: பிறகு?
உ.தா.வ: நான் நீங்க கோபத்தில் அவர் மீது வழக்கு போடுவீர்கள் என்றேன். அதற்கு உ.தா இல்லை இல்லை அவர் மகிழ்ச்சியாக நடனம் ஆடுவார், இருபத்தி ஐந்தாயிரம் பந்தயம் கட்டுகிறேன் என்றார்... நானும் ஒத்துக்கொண்டேன்.
வ.த: ஆஹா... பெருசு உங்களுக்கு வெச்சுட்டா ஆப்பு?
உ.தா.வ: யோவ், எனக்கு மட்டுமா ஆப்பு, உனக்கும்தான்யா... ராத்திரி ஐஞ்சு லிட்டர் சரக்க போட்டுட்டு இன்னும் இங்க டெலிவரி பண்ணிகிட்டு இருக்கிறாரு பாரு, உன் மேசை, தரைக் கம்பளம், ஆப்பீசு எல்லாம் மாத்தானும் நீ.... எங்க சேர்ந்து சொல்லு....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.ஓல்ட் ஈஸ் கோல்ட், அவர்கள் அனுபவத்தால் கற்ற பாடங்கள் எல்லாம் புத்தகமாக தொகுக்கப்பட வில்லை... அல்லது வலையுலகில் பதிவாகப் பதியப்படவும் இல்லை. அனுபவசாலிகளிடம் மோதுவது தவிர்க்கப்பட வேண்டும் அல்லது மிகவும் கவனம் வேண்டும். இல்லையேல் பெருசு-கள் எல்லாம் ரஜினி பட பாடலான “என்கிட்ட மோதாதே...” பாட்ட பாடிகிட்டு ரவுசு பண்ணவார்கள்... பெருசு-கிட்ட காட்டாத ரவுசு...ன்னு பஞ்ச் டயலாக்கோட.
பயணங்கள் முடிவதில்லை...
1984-ல் கரு பெற்றால் உரு பெற்றால், அன்றுமுதல் இன்று வரை பல விண்வெளி தகவல் திரட்டு, ஆராச்சி மற்றும் சர்வதேச விண்வெளி மேடை அமைப்பு பணிகளை செவ்வனே செய்திருப்பவள்... அவள் பெயர் டிஸ்கவரி (விண்வெளி ஊர்தி).
இது நாள் வரை அவள் கொண்ட பயணம் முப்பத்தி எட்டு, பயணப் பட்ட தொலைவு மில்லியனில்... 142,917,535 மைல்கள் ( 230,003,477 கிலோ மீட்டர்). விண்ணில் வாழ்ந்த நாட்கள் 351, சுமந்து சென்ற விண்வெளி அறிவியலர் 246 பேர்.
நாஸாவில் இவளைப்போல் மூன்று பேர் இருந்தாலும் இவளே முதுமையானவள், பயணம் என்றால் பயப்படாமல் பெட்டி படுக்கைகளை தயார் செய்பவள். இன்று இன்னும் சில மணி நேரங்களில் அவளின் கடைசி விண்வெளிப் பயணம் தொடங்க போகிறாள்... அவளின் இப்பயணமும் முந்தைய பயணங்கள் போல் வெற்றியடையா வாழ்த்துகிறேன்.
இன்று அவள் செல்லப் போகும் பயணம் வேண்டுமானால் இறுதியாக இருக்கலாம், ஆனால் அவளுடைய பயணங்களும் அதன் பயன்பாடுகளும் விண்வெளி ஆராச்சியிலும், சாதனையாக அருங்காட்சியகத்திலும் தொடரப்போகின்றன... டிஸ்கவரியின் பயணங்கள் முடிவதில்லை.
பொறுப்பி: 39-வது பயணத்திற்க்குப் பிறகு டிஸ்கவரியை நீங்கள் ஸ்மித்ஸோனியன் இன்ஸ்டிடியூட்-ல் உட்வர் கேஸி மையத்தில் பார்க்கலம்.
வாழ்க்கைக்கு உறுதுணை உறவா நட்பா?
அதை நீங்க கண்டு கேட்டு ரசிக்க இத்துடன் காணொளித் தொடர்புகளை இணைத்துள்ளேன்.
பட்டிமன்ற நிகழ்வுத் தொடக்கம்...
பட்டிமன்ற ராஜா தொடக்கவுரை...
திரு.பிரதீப் திருமலை உறவே...
திருமதி.லெக்ஷ்மி தேசம் நட்பே...
திருமதி.சுரேகா பாலாஜி உறவே...
திரு.ஸ்ரீராம் சுப்ரமணியம் நட்பே...
அரசூரான் (ராஜா) உறவே...
திருமதி. அவ்வை மகள் நட்பே...
பட்டிமன்ற ராஜா தீர்ப்புரை...
நன்றி.
கேட்ஸ் பொங்கல் விழா 2011... தகவல்கள்
500 பேர் அமரும் அரங்கம்... உட்கார இடமின்றி அரங்கத்தின் இருபுறமும் நின்றவாறு நிகழ்ச்சியை கண்டுகளித்தனர் விருந்தினர்கள்.
காலை சின்னஞ்சிறு மொட்டுக்களின் ஆடல் பாடலுடன் தொடங்கிய விழா, சிறப்பு விருந்தினர், லில்பர்ன் மேயர் திருமதி டயானா ப்ரஸ்டன் அவர்களின் சீறிய உரையுடன் மதிய இடைவேளையை தொட்டது. அரங்கத்தில் ஒருபுறம் தாளம் மறுபுறம் கோலம், ஆம் வண்ணமயமான கோலப்போட்டியும் நடைபெற்றது.
கோலத்தைக் காண...இங்கே சொடுக்கவும்...
அரங்கம் நிறைந்து வழிந்தோடிய கூட்டம், நின்றுகொண்டே விருந்தினர்கள் பட்டிமன்றத்தை கேட்டு ரசித்தனர். பட்டி மன்றம் ராஜா, தனக்கே உரிய பாணியில் தமிழ் சங்கங்களின் சேவைகளையும் மற்றும் அதில் உறுப்பினராவதின் தேவைகளையும் வலியுறுத்தி பேசியதோடு, புலம்பெயர்ந்து வாழும் வாழ்க்கையில் நட்பின் அவசியத்தையும், உறவின் தாக்கத்தையும் ஒப்பிட்டு, வாழ்க்கைக்கு உறுதுணையாக இருப்பது உறவே என தீர்ப்பு கூறி பட்டிமன்றத்தை நிறைவு செய்தார். (நான் தான் உறவு அணிக்கு தலமை பொறுப்பேற்றிருந்தேன்... அப்படி என்ன பேசினோம் என்றுதானே கேட்கிறீர்கள்... ஹா... ஹா... ஹா... உண்மையப் பேசினோம்)
விரைவில் பட்டிமன்ற காணொளியை இணைக்கிறேன்.
பொங்கல் விழா அழைப்பு

