தமிழகமோ இல்லை புலம் பெயர்ந்த அகமோ, வேலை வேலை... எல்லோருக்கும் வேலை என்று ஆளாய் பறந்துகொண்டிருக்கும் நாட்களில், நாடு எந்த நாடாய் இருந்தால் என்ன? நம் மண்ணும் நம் பழக்க வழக்கமும்தான் நாம் நம் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்கும் பழக்கம் என்பதை மிக அழகாக உணர்த்தினார் என் நண்பர்.
ஓர் மாலை நேர சந்திப்பிற்க்காக அழைந்திருந்தேன், வந்தார் முகத்தில் முத்தான சிரிப்புடனும் முக்கனிகளுடனும்... இல்லை நான்கு கனிகளுடன்... ஒரு சகோதரியின் வீட்டுக்கு சீர்வரிசை செய்யப்போகும் சகோதரனாய்.
அவர் கொண்டுவந்தது அப்படியே...
வீட்டிற்க்கு வரும் நண்பர்களை நா(ன்)ம் எப்போதும் வீட்டில் இருந்து “பை” சொல்லுவதில்லை. வாசல் வந்து வழியனுப்புவோம். எப்போதும் என் மகள் கேட்பாள் ஏனப்பா இங்கிருந்தே சொல்லக்கூடாதா என்று... இன்று அவளும் என்னோடு வாசல் வந்து “பை” சொன்னால் நண்பர்களுக்கு.
நன்றி நண்பரே.