இவன் ஒரு CORPORATE கிராமத்தான். அரசூர் என் தாத்தாவின் சொந்த ஊர், எங்கள் ஊரில் (செம்பனார்கோவில்) என் தாத்தாவை அரசூரார் என்று அழைப்பார்கள்... அவர் நினைவாக இந்த அரசூரான்.
தமிழ் இனி மெல்ல வாழும்...
தமிழ் தமிழென்று தமிழ் அமிழ்தமாய்
தமிழ்மொழி நம் தாய்மொழி எனும் தாரக மந்திரமாய்
தமிழ் தமிழ்நாட்டில் வாழ்ந்த காலம் - இறந்த காலமாய்
இனி
இனிய மொழிகளிலே தமிழ் மொழிபோல்
இனிதானது எங்கும் காணோம் என்று
இன்று இணையத்தில் தமிழ் வாழும் காலம் – நிகழ் காலமாய்
மெல்ல
தமிழ் இனி மெல்லச் சாகும்
எனச் சொன்னவர்களிடம் மெல்லச் சொல்லுங்கள்
புலம்பெயர்ந்த தமிழர்களிடம் தமிழ் – எதிர் காலமாய்
வாழும்
வாழ்வாங்கு வாழ்வது வள்ளுவரின் குறள் மட்டுமல்ல
வாழையடி வாழையாய் நாம் பேசும் தாய்மொழியும் தான் என்று
மெல்ல அல்ல உரக்கச் சொல்லுங்கள்
தமிழ் இனி மெல்ல வாழும் – காலம் காலமாய்.
குறிப்பு: இது நான் அட்லாண்டா தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற விடுமுறை தின கவிதை அரங்கத்திற்க்காக எழுதியது. தமிழ் நாட்டில் தமிழ் இறந்த காலமாய் என குறிப்பிட்டது இன்றைய தமிழ் ஆர்வத்தையும், ஆங்கில மோகத்தையும் காலத்தால் குறிப்பிடவே அன்றி குறைத்து மதிப்பிட அல்ல.
அடி ராக்கம்மா ராக்கு ராக்கு...
அதில் முதலாவதாக நான் இன்றைய செய்தியில் பார்த்து ரசித்தது... உங்களுக்காக.
இங்கே சொடுக்குங்க... சில வினாடி விளம்பரங்களுக்கு பிறகு வரும் ஆடலை கண்டு ரசிங்க.
அம்மாடி என்ன ஒரு நேர்த்தியான படைப்பு.
எனக்கு அவர்கள் பெயரை ”ரேடியோ சிட்டி ராக்கெட்டர்ஸ்” கேட்டவுடனேயே நினைவுக்கு வந்தது சிறுத்தை பட பாடல் அடி ராக்கம்மா ராக்கு ராக்கு... அதான் தலைப்பா ஆயிடுச்சி.
அடி ராக்கம்மா ராக்கு ராக்கு நெஞ்சுக்குள்ள ராக்கெட்டு
தாக்கம்மா தாக்கு தாக்கு ஆட்டத்துல விக்கெட்டு
இந்த ரேடியோ சிட்டி ராக்கம்மா எல்லாம் ஒரு ஐம்பது வருடமாக இப்படி ஆடி பல விக்கெட்ட ”கிக்” பண்ணியிருக்காங்க.
மாதிரிக்கு சில... கீழேயுள்ள இரண்டு தொடுப்பையும் சொடுக்கி பாருங்க.
2010 கிருஸ்துமஸ் அணிவகுப்பு
2008 மேசீஸ் அணிவகுப்பு
சரி... கிக்கு கிக்கா இருந்துச்சா? நாம பாடலை மேற்கொண்டு தொடருவோமா?
எதுக்கும்மா உதைக்க வர? கூட்டமா கூடி வர?
உன் காலல ஏன் காத்துல நீ கவிதை எழுதுர?
என்னையா சொல்ல வர? எப்பவுமே துள்ளுகிற
இல்லாத என் இடுப்ப இப்ப ஏன் கிள்ளவர?
மங்காத்தா அப்ப... மாயவரத்தா(ன்) இப்ப...
யூ ட்யூப்ல பார்த்தேன்... நீங்களும் பார்த்து ரசிங்க...
இங்க சொடுக்குங்க...
மறந்தே போச்சி... ரொம்ப நாள் ஆச்சி...
நான் பதிவு போட்டு-ன்னு சொல்ல வந்தேன், அதுவே தலைப்பாகி விட்டது.
மூன்று மாத காலமாக, அலுவல், தமிழ்க் கல்விப் பணி, எங்கள் (அட்லாண்டா) தமிழ்ச் சங்கப் பணி, இந்தியப் பயணம் பிறகு வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை பணி என்று நாட்கள் ஓடிவிட்டது.
சரி நாட்டுல என்ன நடக்குதுன்னு பார்த்தா... திருந்தாத முன்னேற்றக் கழகம் திஹார் முன்னேற்ற கழகமா மாறிவிட்டது போல இருக்கு. மேற்கொண்டு செய்திகள வாசிச்சா ஒரு அருமையான நகைச்சுவை விருந்த நமது எஸ்.ஏ.சி சொல்லியிருக்காரு... தகவல் என்னன்னு பெட்டிச் செய்திய பாருங்க.
எனக்கு ஒன்னும் புரியல, உங்களுக்கு ஏதாவது புரியுதா?
செல்வி செயலலிதாவோட ஆப்பு அடிக்கிற விதமே தனி, எஸ்.ஏ.சி-க்கு அவசியம் பின்னாடி கேடயம் தேவை என்கிறதைதான் இப்படி சொல்கிறாரோ? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.
எங்கே இருக்கிறேன் நான்...
யாரிடம் கேட்கிறாய் வரி....
வரி வசூலிக்கும் அதிகாரி ஒருவர் வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பெருசு-கள் அரசாங்க உதவித்தொகையில் உல்லாசமாக இருப்பதை கண்டு, அவர்கள் ஓய்வு காலத்தில் ஈட்டும் வருமானம் பற்றியும், அவர்களிடம் மேலும் வரி வசூலிக்க முடியுமா என்பதையும் கண்டறிய ஒரு உல்லாச தாத்தாவிற்க்கு வரி வசூலிக்கும் அலுவலகத்திற்க்கு நேரில் வந்து ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினார். வரி வசூலிப்பு அலுவலக உரையாடலாக இந்த பதிவு.
உல்லாச தாத்தா (உ.தா) தன் வழக்கறிஞர் உடன் வரி தணிக்கையாளர் (வ.த) அலுவலகம் வருகின்றார். வழக்கறிங்ஞருடன் வந்த உ.தா-வை பார்த்த வ.த-வுக்கு வியப்பு ஒன்றும் இல்லை (ஏனெனில் அமெரிக்காவில் வலிய வந்து ஆஜர் ஆகிறவர்தான் வக்கீல், மாத்திரை சாப்பிட்டு மயக்கம் போட்டு விழுந்து விட்டீர்களா? உடனடியாக என்னை அனுகுங்கள் அந்த மருந்து நிறுவனம் மீது வழக்குப் போட்டு உங்களுக்கு நிவாரணத்தொகை வாங்கி தருகிறேன் என்று விளம்பரப்படுத்தி நமக்கு உதவி செய்பவர்கள்).
வ.த: வாங்க, எங்கள் அழைப்பை ஏற்று ஒரு பொருப்பான குடிமகனாய் ஒத்துழைப்பு நல்கியதற்க்கு நன்றி. நீங்கள் ஓய்வு பெற்று விட்டீர்கள், அரசாங்கத்திடம் இருந்து உதவித்தொகை பெறுகின்றீர்கள், இருந்தாலும் கெடிலாக் கார், ஹவாய் கப்பல் பயணம் என்று அதீத செலவு செய்கின்றீர்கள், உங்கள் வருமானம் பற்றிய தகவல்களை நீங்கள் எங்களுக்கு (வருமான வரி துறைக்கு) தெரியப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
உ.தா: ஓ அதுவா, நான் ஒரு சிறந்த சூதாட்டக்காரன். அந்த வருமானங்களை நிரந்தர வருமானமாக கணக்கில் கொள்ள முடியாது. அதனால் அதை வருமானமாக வகைப்படுத்த இயலாது.
வ.த: அப்படியா? சற்று நம்ப கடினமாக உள்ளது...உ.தா: என் வார்த்தையில் நம்பிக்கை இல்லை அதானே? நீங்கள் விரும்பினால் ஒரு பந்தயத்தை செயல்முறையில் காட்டினால் ஒத்துக்கொள்வீர்கள்தானே?
வ.த: ம், அது நன்றாக தெரிகிறது, செயல்படுத்திக் காட்டுங்கள். நான் பந்தயத்திற்கு உடன்படுகிறேன்.
உ.தா: நான் என் கண்களை என் பல்லால் கடித்துக் காட்டுகிறேன்... ஆயிரம் டாலர் பந்தயம் என்றார்.
வ.த: தாத்தா தானகத்தான் நடந்து வந்தார், கண் நன்றாக இருக்க வேண்டும் என நினைத்து ஆகட்டும் என்றார்.
உ.தா. தான் அணிந்திருந்த குளிர் கண்ணாடியையும் கழட்டினார், கூடவே ஒற்றை பளிங்கு கண்ணையும் கழட்டினார். பளிங்கு கண்ணை வாயில் போட்டு கடித்தார்.
வ.த-வுக்கு சற்று வருத்தம், அவசரத்தில் கோட்டை விட்டோமே என்று தாடை தொங்கிற்று.
உ.தா: சரி, இன்னொரு கண்ணையும் கடிக்கிறேன்... ஆனால் பந்தயம் ஈராயிரம் டாலர் என்றார்.
வ.த: ஒரு கண்ணு நொல்லையா இருந்திருக்கும், அதுல நாம் ஏமாந்திட்டோம்... நிச்சயம் தாத்தா இதுல மாட்டிக்கப் போறாரு, சரி ரெண்டாயிரம் பந்தயம் என்றார்.
உ.தா: இப்போது பல்செட்டை கழட்டி அந்த நல்ல கண்ணை கடித்தார்.
வ.த-வுக்கு இப்போது கொஞ்சம் படபடப்பு கூடிட்று, மூன்றாயிரம் போனது கூட வருத்தமாய் இல்லை, தாத்தாவின் வழக்கறிங்ஞர் முன் இப்படி மூக்குடை பட்டுவிட்டோமே என்று உள்ளுக்குள் உதறல்.
உ.தா: கவலைப்படாதீர்கள், உங்கள் மூவாயிறத்தை ஆறாயிரமாக தருகிறேன், என் அடுத்த பந்தயத்திற்கு ஒத்துக்கொண்டால் என்றார்.
வ.த: சரி சொல்லுங்கள், நான் கேட்டு விட்டுத்தான் சொல்லுவேன் பந்தயத்திற்க்கு உடன்படுகிறேனா இல்லையா என்று (உஷாராயிட்டாரு).
உ.தா: நிச்சயமாக அது உங்கள் விருப்பம், நான் உங்கள் மேசையின் இந்த பக்கத்திலிருந்து அந்த பக்கத்தில் உள்ள குப்பைக்கூடையில் மிகச் சரியாக மூச்சா அடிக்கிறேன், மேசையில் ஒரு சொட்டு பட்டாலும் நான் உங்களுக்கு ஆறாயிரம் தருகின்றேன்... நன்கு யோசித்து சொல்லுங்கள் தோற்றால் நீங்கள் மூவாயிரம் தரவேண்டாம்... வென்றால் ஆறாயிரம்... என்றார்.
வ.த: தாத்தா உள்ள நிலைமைக்கு மேசைக்கு இந்த பக்கத்தில் இருந்து அடித்தாலே தோற்றுவிடுவார், அதிலும் அந்த பக்கத்திலிருந்து, மேலும் மேசையில் ஒரு சொட்டுப் படாமால்...ம் தாத்தாவுக்கு என்ன ஆச்சு? வென்ற மூவாயிரமும் வேண்டாமாம், தோற்றுப் போனால் ஆறில் மூன்றை கழித்து மூன்றை கொடுத்துவிட்டுப் போயிருக்கலாம். மொத்ததில் நமக்கு இரட்டை வருமானம், கையிலிந்து மூவாயிரம் இழப்பு மிச்சம், ஆறாயிரம் வருமானம் என்று இரட்டிப்பு மகிழ்ச்சியில் மிக்க மகிழ்ச்சியோட பந்தயத்திற்க்கு ஒத்துகொள்வாதாக சொன்னார்.
உ.தா: தான் சொன்ன படியே செய்ய முயற்ச்சித்தார், முயற்சி தோல்வி... வ.த-வின் மேசையெல்லாம் உ.தா-வின் மூச்சா.
வ.த: வெற்றிக் களிப்பில் எழுத்து ஆட ஆரம்பித்து விட்டார். ஆடும்போதுதான் கவனித்தார்... உ.தா-வுடன் வந்த வழக்கறிங்ஞர் தன் தலையில் கைவத்து அமர்ந்திருந்ததை. அருகில் சென்று கேட்டார்... ஏன் என்னவாயிற்று என்று?
உ.தா.வ: உ.தா காலையில் அழைத்து சொன்னார், வேலையில்லா வெட்டி ஆப்பிசர் வருமானம் இல்லாத என்ன கூப்பிட்டு வரிகட்ட சொல்லுரார், நான் அவர் மேசையில் மூச்சா அடிச்சி அவர் மூக்க உடைக்கிறேன் என்றார்.
வ.த: பிறகு?
உ.தா.வ: நான் நீங்க கோபத்தில் அவர் மீது வழக்கு போடுவீர்கள் என்றேன். அதற்கு உ.தா இல்லை இல்லை அவர் மகிழ்ச்சியாக நடனம் ஆடுவார், இருபத்தி ஐந்தாயிரம் பந்தயம் கட்டுகிறேன் என்றார்... நானும் ஒத்துக்கொண்டேன்.
வ.த: ஆஹா... பெருசு உங்களுக்கு வெச்சுட்டா ஆப்பு?
உ.தா.வ: யோவ், எனக்கு மட்டுமா ஆப்பு, உனக்கும்தான்யா... ராத்திரி ஐஞ்சு லிட்டர் சரக்க போட்டுட்டு இன்னும் இங்க டெலிவரி பண்ணிகிட்டு இருக்கிறாரு பாரு, உன் மேசை, தரைக் கம்பளம், ஆப்பீசு எல்லாம் மாத்தானும் நீ.... எங்க சேர்ந்து சொல்லு....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.ஓல்ட் ஈஸ் கோல்ட், அவர்கள் அனுபவத்தால் கற்ற பாடங்கள் எல்லாம் புத்தகமாக தொகுக்கப்பட வில்லை... அல்லது வலையுலகில் பதிவாகப் பதியப்படவும் இல்லை. அனுபவசாலிகளிடம் மோதுவது தவிர்க்கப்பட வேண்டும் அல்லது மிகவும் கவனம் வேண்டும். இல்லையேல் பெருசு-கள் எல்லாம் ரஜினி பட பாடலான “என்கிட்ட மோதாதே...” பாட்ட பாடிகிட்டு ரவுசு பண்ணவார்கள்... பெருசு-கிட்ட காட்டாத ரவுசு...ன்னு பஞ்ச் டயலாக்கோட.
பயணங்கள் முடிவதில்லை...
1984-ல் கரு பெற்றால் உரு பெற்றால், அன்றுமுதல் இன்று வரை பல விண்வெளி தகவல் திரட்டு, ஆராச்சி மற்றும் சர்வதேச விண்வெளி மேடை அமைப்பு பணிகளை செவ்வனே செய்திருப்பவள்... அவள் பெயர் டிஸ்கவரி (விண்வெளி ஊர்தி).
இது நாள் வரை அவள் கொண்ட பயணம் முப்பத்தி எட்டு, பயணப் பட்ட தொலைவு மில்லியனில்... 142,917,535 மைல்கள் ( 230,003,477 கிலோ மீட்டர்). விண்ணில் வாழ்ந்த நாட்கள் 351, சுமந்து சென்ற விண்வெளி அறிவியலர் 246 பேர்.
நாஸாவில் இவளைப்போல் மூன்று பேர் இருந்தாலும் இவளே முதுமையானவள், பயணம் என்றால் பயப்படாமல் பெட்டி படுக்கைகளை தயார் செய்பவள். இன்று இன்னும் சில மணி நேரங்களில் அவளின் கடைசி விண்வெளிப் பயணம் தொடங்க போகிறாள்... அவளின் இப்பயணமும் முந்தைய பயணங்கள் போல் வெற்றியடையா வாழ்த்துகிறேன்.
இன்று அவள் செல்லப் போகும் பயணம் வேண்டுமானால் இறுதியாக இருக்கலாம், ஆனால் அவளுடைய பயணங்களும் அதன் பயன்பாடுகளும் விண்வெளி ஆராச்சியிலும், சாதனையாக அருங்காட்சியகத்திலும் தொடரப்போகின்றன... டிஸ்கவரியின் பயணங்கள் முடிவதில்லை.
பொறுப்பி: 39-வது பயணத்திற்க்குப் பிறகு டிஸ்கவரியை நீங்கள் ஸ்மித்ஸோனியன் இன்ஸ்டிடியூட்-ல் உட்வர் கேஸி மையத்தில் பார்க்கலம்.