பயணங்கள் முடிவதில்லை...

ஒரு எந்திரத் தாயின் இறுதிப் பயணம். அவள் இதுவரை தான் விண்ணுக்குச் சுமந்து சென்றர்வர்கள் அனைவரையும் மீண்டும் பத்திரமாக மீண்டும் வீடு கொண்டுவந்து சேர்த்திருக்கிறாள்.

1984-ல் கரு பெற்றால் உரு பெற்றால், அன்றுமுதல் இன்று வரை பல விண்வெளி தகவல் திரட்டு, ஆராச்சி மற்றும் சர்வதேச விண்வெளி மேடை அமைப்பு பணிகளை செவ்வனே செய்திருப்பவள்... அவள் பெயர் டிஸ்கவரி (விண்வெளி ஊர்தி).

இது நாள் வரை அவள் கொண்ட பயணம் முப்பத்தி எட்டு, பயணப் பட்ட தொலைவு மில்லியனில்... 142,917,535 மைல்கள் ( 230,003,477 கிலோ மீட்டர்). விண்ணில் வாழ்ந்த நாட்கள் 351, சுமந்து சென்ற விண்வெளி அறிவியலர் 246 பேர்.

நாஸாவில் இவளைப்போல் மூன்று பேர் இருந்தாலும் இவளே முதுமையானவள், பயணம் என்றால் பயப்படாமல் பெட்டி படுக்கைகளை தயார் செய்பவள். இன்று இன்னும் சில மணி நேரங்களில் அவளின் கடைசி விண்வெளிப் பயணம் தொடங்க போகிறாள்... அவளின் இப்பயணமும் முந்தைய பயணங்கள் போல் வெற்றியடையா வாழ்த்துகிறேன்.

இன்று அவள் செல்லப் போகும் பயணம் வேண்டுமானால் இறுதியாக இருக்கலாம், ஆனால் அவளுடைய பயணங்களும் அதன் பயன்பாடுகளும் விண்வெளி ஆராச்சியிலும், சாதனையாக அருங்காட்சியகத்திலும் தொடரப்போகின்றன... டிஸ்கவரியின் பயணங்கள் முடிவதில்லை.

முதல் 10 நிமிடப் பயணம்...

பொறுப்பி: 39-வது பயணத்திற்க்குப் பிறகு டிஸ்கவரியை நீங்கள் ஸ்மித்ஸோனியன் இன்ஸ்டிடியூட்-ல் உட்வர் கேஸி மையத்தில் பார்க்கலம்.

வாழ்க்கைக்கு உறுதுணை உறவா நட்பா?

கேட்ஸ் தமிழ்ச் சங்கப் பொங்கல் விழாவில் பட்டிமன்றம் புகழ் திரு.ராஜா தலைமையேற்று மிகச் சிறப்பாக நடத்தினார்... அவருக்கே உரிய நகைச்சுவையுடன். அதில் பங்கு பெற்றோரும் சிறப்பாகவே பேசினார்கள்.

அதை நீங்க கண்டு கேட்டு ரசிக்க இத்துடன் காணொளித் தொடர்புகளை இணைத்துள்ளேன்.

பட்டிமன்ற நிகழ்வுத் தொடக்கம்...

பட்டிமன்ற ராஜா தொடக்கவுரை...

திரு.பிரதீப் திருமலை உறவே...

திருமதி.லெக்ஷ்மி தேசம் நட்பே...

திருமதி.சுரேகா பாலாஜி உறவே...

திரு.ஸ்ரீராம் சுப்ரமணியம் நட்பே...

அரசூரான் (ராஜா) உறவே...

திருமதி. அவ்வை மகள் நட்பே...

பட்டிமன்ற ராஜா தீர்ப்புரை...


நன்றி.

கேட்ஸ் பொங்கல் விழா 2011... தகவல்கள்

பொங்கல் விழா இனிதே நடந்தேறியது. நேரில் வந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நண்பர்களுக்கும், தொலைபேசியில் வாழ்த்து சொன்ன அன்பர்களுக்கும் நன்றி... நன்றி... நன்றி.

500 பேர் அமரும் அரங்கம்... உட்கார இடமின்றி அரங்கத்தின் இருபுறமும் நின்றவாறு நிகழ்ச்சியை கண்டுகளித்தனர் விருந்தினர்கள்.

காலை சின்னஞ்சிறு மொட்டுக்களின் ஆடல் பாடலுடன் தொடங்கிய விழா, சிறப்பு விருந்தினர், லில்பர்ன் மேயர் திருமதி டயானா ப்ரஸ்டன் அவர்களின் சீறிய உரையுடன் மதிய இடைவேளையை தொட்டது. அரங்கத்தில் ஒருபுறம் தாளம் மறுபுறம் கோலம், ஆம் வண்ணமயமான கோலப்போட்டியும் நடைபெற்றது.

கோலத்தைக் காண...இங்கே சொடுக்கவும்...

அரங்கம் நிறைந்து வழிந்தோடிய கூட்டம், நின்றுகொண்டே விருந்தினர்கள் பட்டிமன்றத்தை கேட்டு ரசித்தனர். பட்டி மன்றம் ராஜா, தனக்கே உரிய பாணியில் தமிழ் சங்கங்களின் சேவைகளையும் மற்றும் அதில் உறுப்பினராவதின் தேவைகளையும் வலியுறுத்தி பேசியதோடு, புலம்பெயர்ந்து வாழும் வாழ்க்கையில் நட்பின் அவசியத்தையும், உறவின் தாக்கத்தையும் ஒப்பிட்டு, வாழ்க்கைக்கு உறுதுணையாக இருப்பது உறவே என தீர்ப்பு கூறி பட்டிமன்றத்தை நிறைவு செய்தார். (நான் தான் உறவு அணிக்கு தலமை பொறுப்பேற்றிருந்தேன்... அப்படி என்ன பேசினோம் என்றுதானே கேட்கிறீர்கள்... ஹா... ஹா... ஹா... உண்மையப் பேசினோம்)

விரைவில் பட்டிமன்ற காணொளியை இணைக்கிறேன்.

பொங்கல் விழா அழைப்பு

நண்பர்களே வணக்கம்!

கிரேட்டர் அட்லாண்டாத் தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் விழா வருகின்ற பிப்ரவரி 6-ம் தேதி ஞாயிற்றுக் கிழமை நடைபெற உள்ளது. சிறப்பு விருந்தினராக பட்டிமன்றம் புகழ் ராஜா அவர்கள் கலந்து கொள்கிறார், வாழை இலையில் சாப்பாடு மற்றும் கலை நிகழ்ச்சிகள்... அட்லாண்டா வாசிகளும் அருகில் உள்ளோரும் வந்து கலந்துகொண்டால் பெரும் மகிழ்ச்சியடைவோம்... நன்றி.


பட்டிமன்ற ராஜாவின் அழைப்பு... படத்தை தொடுக்கவும்

2011-ல் மீண்டும் 2ஜி புயல்...

ஹி... ஹி... அது தமிழகம் வந்த நம்ம மன்மோகன்ஜி-யும், அவருக்கு தண்ணி காட்டின கலைஞர்ஜி-யும்தான்...






அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அஞ்சா நெஞ்ஜன் அசாங்...

விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் பால் அசாங் பற்றி நிறைய படித்திருப்பீர்கள், இல்லையேல் பதிவர் சுடுதண்ணி-ய படிங்க. இது சும்மா நகைச்சுவைக்காக மட்டும்.




தகுதி என்பது...1

காஞ்சி மகாப் பெரியவர் பற்றி திரு.சுகி சிவம் அவர்கள் பேசியதை கேட்டுக்கொண்டிருந்தேன்... ஒரு உயர்ந்த பதவியில் இருப்பவர் அல்லது பொது நலச்சேவையில் இருப்பவர் எப்படி இருக்க வேண்டும், சிலர் எப்படி வாழ்ந்தார்கள் என்று சொன்னார்... அப்படி நான் கேட்டதில் ஒன்றிரண்டு... நன்றி சொல்வேந்தர் சுகி அவர்களுக்கு.


அன்று வழக்கம் போல் பூசை முடிந்தது, மகா பெரியவர் தனக்கு பிட்சை (உணவு) வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம். சரி பெரியவருக்கு பசியில்லை போல என நினைத்து அலுவலர்கள் தங்கள் வேலையை பார்க்க சென்றுவிட்டார்கள். இரண்டாம் நாளும் பெரியவர் பூசை முடித்து போசனம் வேண்டாம் என்று சொல்லி சென்றுவிட்டார். மடாலய நிர்வாகிகளுக்குள் சற்று பயம், ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்ள ஆரம்பித்தனர், யார்-என்ன-ஏது நடந்தது என தகவல் பறிமாற்றம் தீவிரமடைந்தது.

மூன்றம் நாள், பெரியவர் வழக்கம் போல் பூசையில், இன்று எல்லா மட நிர்வாகிகளும் ஆஜர், பிட்ஷைக்கு அழைப்பு, பெரியவர் மறுப்பு. மடத்தின் நிர்வாகிகள் இன்று நாங்கள் செய்த தவறு தெரியாமல் வேறு வேலை செய்யப்போவது இல்லை (உணவு உண்பது உட்பட) என்று பெரியவரிடம் சொல்ல, பெரியவர் சொன்னாராம்... சரி என்னை விடமாட்டீங்க போல இருக்கு, தவறு செய்தது நான் தான் என்றும், அதற்க்கு தண்டனையாய் உணவருந்தாமல் இருப்பதாகவும் சொன்னாராம்.

கீரைக்கு ஆசைப்பட்டு...


அவர் அப்படி என்ன தவறு செய்தார் தெரியுமா? பெரியவர் சொன்னதாக..
ஒரு நாள் (பிட்ஷை வேண்டாம் என்று சொன்ன மூன்று தினங்களுக்கு முன்) உணவில் கீரை சாப்பிட்டேன், நன்றாக இருக்க கொஞ்சம் அதிகம் சாப்பிட்டேன், அதை கவனித்த மட சிப்பந்தி இரண்டாம் நாளும் அந்த கீரையை சமைத்து பறிமாறினார், அன்றும் நன்றாக சாப்பிட்டேன். மூன்றாம் நாள் பூசையின் போதே மனம் பூசையில் ஒட்டாமல் இன்றும் சமையலில் கீரை இருக்குமா என்று நினைக்க ஆரம்பித்து விட்டது. அந்த ஆசையை ஒழிக்கவும், பூசையில் மனமில்லாமல் உணவை நினைத்ததிற்காகவும் நான் எனக்கு கொடுத்து கொள்ளும் தண்டனை இது, நீங்கள் அவர் அவர் தங்கள் அலுவல்களை கவனியுங்கள் என்று சொன்னாராம்.

பெரியவர்... தன் செயல்பாட்டால் என்றுமே பெரியவர்.