சத்தியமாய்
சாதிப் பிடிக்காது
ஆனால்
மதம் பிடிக்கும்.
மதம் பிடிக்கும்
சில சமயங்களில்
எனக்கு
சாதியைப் பிடிக்கும்
சண்டாளா
சாதி மதம் பிடிக்காதென்று
பதிவு எழுதி பேசியது?
பேசியது உண்மைதான்...
சாதிகள் இரண்டொழிய வேறில்லை
அதை மீண்டும் உணர்த்திச் சொல்லப் பதிவு
பதிவெழுதி பதிவெழுதி
பலவேலைகளை நான் கால தா-மதம் செய்தும்
அதை பொருட்-படுத்தாத
என் பெண்-சாதியை பிடிக்கும்
அதை பொருட்-படுத்தினாலும்
மதம் பிடிக்காத பெண்-சாதியை பிடிக்கும்
தா-மதம் தா-மதம் என்றாலும்
இன்னுமொரு இடுக்கை இடவில்லையா
என பதிவெழுத சம்-மதம் சொல்லும்
மதம் பிடித்த பெண்-சாதியை பிடிக்கும்.
இவன் ஒரு CORPORATE கிராமத்தான். அரசூர் என் தாத்தாவின் சொந்த ஊர், எங்கள் ஊரில் (செம்பனார்கோவில்) என் தாத்தாவை அரசூரார் என்று அழைப்பார்கள்... அவர் நினைவாக இந்த அரசூரான்.
குடைச்சல்...
ஒருவன்தான் உணவுண்டேன்
சோற்றுடன் கறி ஒன்று
ஒழித்துப் போட்டேன்
பத்துப்பசை பாத்திரங்கள் ஒன்பது
கழுவிப் போட்டேன்
கையெல்லாம் வலி குடையுது
என்னவளை எண்ணினேன்
நித்தம் கறி இரண்டு
ஒழித்துப் போடப்போட
வற்றா பத்துப்பசை பாத்திரங்கள்
கைவலித்ததாய் செவிமடிக்கவில்லை
மனதெல்லாம் வலி குடையுது
சோற்றுடன் கறி ஒன்று
ஒழித்துப் போட்டேன்
பத்துப்பசை பாத்திரங்கள் ஒன்பது
கழுவிப் போட்டேன்
கையெல்லாம் வலி குடையுது
என்னவளை எண்ணினேன்
நித்தம் கறி இரண்டு
ஒழித்துப் போடப்போட
வற்றா பத்துப்பசை பாத்திரங்கள்
கைவலித்ததாய் செவிமடிக்கவில்லை
மனதெல்லாம் வலி குடையுது
வகை
கவிதை
கவி.பர்வீன் சுல்தானாவிற்கு நன்றி
கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடுமென்பது – அன்று
கருணாநிதி வீட்டிக் கட்டில்தறி கவிபாடியது – இன்று
கவிஞர் பர்வீன் சுல்தானா
கவிஞர் பர்வீன் சுல்தானா
கவிதையாய்
பாரில் இனி உன் தமிழ் சொல் தானா?
அவையில் உங்களை
பேசச்சொல்லி அழைத்தவர் துணைத்தலைவர் ரவி
கேட்டு ரசித்ததோ அவையில் உள்ளோரின் செவி.
தலைப்போ சிகரம் தொட்டு
தலைப்போ “பெண்மையின்” சிகரம் தொட்டு
திகைத்தோம் உங்கள் உரையைக் கேட்டு
காரணம் – நீங்கள் பேசியவை
ஒவ்வொன்றும் எங்கள் மனதைத் தொட்டு.
நீங்கள் பேசியதெல்லாம் பெண்ணின் “சுயம்”
அதைக்கேட்ட ஆண்களுக்கு சற்றே பயம்.
அகநானூறு சொன்னீர், புறநானூறு சொன்னீர்
ஆம், அகம் சொன்னீர், புறம் சொன்னீர்
அகமோ, புறமோ
உங்களால் இந்த முத்தமிழ் விழாவில் நாங்கள் பெற்றது
தமிழ் எனும் சுகம் சுகம் சுகம்.
கருணாநிதி வீட்டிக் கட்டில்தறி கவிபாடியது – இன்று
கவிஞர் பர்வீன் சுல்தானா
கவிஞர் பர்வீன் சுல்தானா
கவிதையாய்
பாரில் இனி உன் தமிழ் சொல் தானா?
அவையில் உங்களை
பேசச்சொல்லி அழைத்தவர் துணைத்தலைவர் ரவி
கேட்டு ரசித்ததோ அவையில் உள்ளோரின் செவி.
தலைப்போ சிகரம் தொட்டு
தலைப்போ “பெண்மையின்” சிகரம் தொட்டு
திகைத்தோம் உங்கள் உரையைக் கேட்டு
காரணம் – நீங்கள் பேசியவை
ஒவ்வொன்றும் எங்கள் மனதைத் தொட்டு.
நீங்கள் பேசியதெல்லாம் பெண்ணின் “சுயம்”
அதைக்கேட்ட ஆண்களுக்கு சற்றே பயம்.
அகநானூறு சொன்னீர், புறநானூறு சொன்னீர்
ஆம், அகம் சொன்னீர், புறம் சொன்னீர்
அகமோ, புறமோ
உங்களால் இந்த முத்தமிழ் விழாவில் நாங்கள் பெற்றது
தமிழ் எனும் சுகம் சுகம் சுகம்.
கொசுத் தொல்லை...
அமெரிக்கா வந்த ஐந்து ஆண்டுகளில் நான் (ஏன் இந்த கொசுக் கடிய ஒவ்வொரு தேசியும் அனுபவிச்சி இருப்பாங்க) அதிகம் கடி பட்டது இரண்டு கொசுக்களிடம். ஒன்று தேசிக் கொசு, மற்றொன்று விதேசிக் கொசு. இந்த ரெண்டு கொசுக்களை அடையாளம் காணுதல், அவற்றை கையாளுதல் மட்டுமே இந்தப் பதிவின் நோக்கம். நகச்சுவைக்காக மட்டுமே, யார் மனதையும் புண்படுத்த அல்ல.
தேசிக் கொசு:
இந்தக் கொசு தேசியை மட்டும்தான் கடிக்கும். இது மளிகை கடை, காய்கறி கடை மற்றும் வால்மார்ட் போன்ற தேசிகள் அதிகம் நடமாடும் இடங்களில் தென்படும். இது உங்களை பார்த்தவுடன் சிரிக்கும், நீங்கள் பதிலுக்கு சிரித்தவுடன் (சிரிக்கா விட்டாலும்) உங்களை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே என்று குசலம் விசாரிக்கும். பிறகு பழகுவதற்க்கும், தொடர் நட்பிற்க்கும் என்று சொல்லி உங்கள் தொலைபேசி எண்ணை கேட்கும். தொலைபேசியில் அவ்வப்போது தொடர்பு கொண்டு மீண்டும் சந்திக்கலாம் என்றும், வீட்டிலிருந்தபடியே பணம் பண்ணலாம் என்றும் கடிக்கும். இந்த சிறுகடி ஒரு நாள் பெருங்கடியாக மாறும். இது ரொம்ப சமர்த்தான கொசு கடைசி வரை ஏன் கடிக்கிறேன் எதுக்கு கடிக்கிறேன் என்று சொல்லாது... ஆனா கடிக்கும். இந்த கொசு உங்களை ஒரு வியாபார குழு சந்திப்பிற்க்கு அழைக்கும், உங்களுக்காக அது ஒரு இருக்கையை முன்பதிவு செய்திருப்பதாக சொல்ல... சிறுது நேரத்தில் ஒரு கொசுக் கூட்டம்... உங்கள் காதில் (கிழிய) ரத்தம் வர வர கடிக்கும். நீங்கள் கொஞ்சம் ஏமார்ந்தால் அன்றே அது உங்கள் மணி பர்சையும் கடிக்கும்.
இந்த கொசுக்களை நீங்கள் எளிதில் அடையாளம் காணலாம். மேற்ச்சொன்ன இடங்களில் இந்தக் கொசு வெறும் வண்டியுடன் (எம்டி கார்ட்) சுற்றும்.
இந்தக் கொசுக்களை சமாளிப்பது எப்படி? அது மிகச் சுலபம். உங்கள் தொலைக்காட்சி பெட்டியில் வரும் மன மகிழ்வு தொலைபேசி எண்களை (உதாரணத்திற்கு, கொஸ்ட் எண்) நினைவு படுத்தி அதை அந்தக் கொசுவிடம் கொடுத்து விடுங்கள். பிறகு என்ன? உங்களுக்கு ஜாலி... கொசுவுக்கு டென்சன்.
விதேசிக் கொசு:
இந்தக் கொசு பெரும்பாலும் தொடர் குடியிருப்பில் உள்ள அனைவரையும் கடிக்கும். இது சனிக்கிழமை அல்லது விடுமுறை நாட்களில் உங்கள் கதவை தட்டும். உங்கள் நாடு மற்றும் அமெரிக்கா பற்றிய சில நல்ல விசயங்களை கடித்துவிட்டு மெல்ல உங்களை சமயம் பற்றி கடிக்க ஆரம்பிக்கும். இந்த கொசு பரிசுத்த வேதகாமம், பழைய/புதிய ஏற்பாடுகளில் இருந்து சில நீதி/வசனம் என்று சொல்லியும், உங்களை வருகின்ற ஞாயிற்றுக் கிழமை கூட்டு பிரார்த்தனைக்கு வாங்க என அழைத்துக் கடிக்கும்.
இந்தக் கொசுவையும் நீங்கள் எளிதில் அடையாளம் காணலாம். இந்தக் கொசு வீட்டிற்க்கே வந்து கதவை தட்டி கடிப்பதால், கையில் உள்ள விசயங்களை வைத்து முடிவு செய்து விடலாம்.
இந்தக் கொசுக்களை சமாளிப்பது எப்படி? இந்த விதேசிக் கொசு தேசிக் கொசுக்களைக் காட்டிலும் பல மடங்கு நல்ல கொசுக்கள். இதன் நோக்கம் நல்ல(?!) நோக்கம் என்பதாலும், கடிக்கும் போது நல்ல விசயங்களை சொல்லி கடிப்பதாலும் இந்தக் கடியை பொருத்துக் கொள்ளலாம். மேலும் இதை உங்கள் மன நிலைக்கும், பக்குவத்திற்க்கும் ஏற்ப்ப இதைக் கையாளலாம். உதாரணத்திற்கு, கார்ட் ப்ளஸ் அமெரிக்கா, பிறகு சந்திப்போம் என்று சொல்லி அனுப்பி விடலாம். இல்லை எனில் இந்தக் கொசு பரிசுத்த வேதகாமம் என்று ஆரம்பிக்கும் போது நீங்களும், பகவத்கீதை, சுலோஹம் 67, ஸ்ரீ பகவானுவுவாச்ச-ன்னு உங்க பராக்கிரமத்த (கடிதான்) காட்டலாம்.
அன்புடன் அழைக்கிறேன்...
நீங்கள் அட்லாண்டா (அமெரிக்கா – ஜார்ஜியா மாகாணம்) வாழ் தமிழராகவோ அல்லது அட்லாண்டா அருகில் வாழும் தமிழார்வம் கொண்டவராகவோ இருப்பின் உங்களை கேட்ஸ் – கலிஃபோர்னியா தமிழ்க் கழகத் தமிழ்ப் பள்ளிகளின் முதலாம் ஆண்டு விழாவிற்க்கு, விழாக் குழுவினரின் சார்பில் உங்களை வருக வருக என வரவேற்ப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
நாள் : மே 16, 2010 ஞாயிற்றுக் கிழமை
நேரம்: மதியம் 2 மணி முதல்
இடம் : இண்டிபெண்டன்ஸ் உயர் நிலைப் பள்ளி,
மில்டன் மையம், 86 – ஸ்கூல் டிரைவ், அல்ஃபரட்டா, ஜார்ஜியா – 30009.
நிகழ்ச்சிக் குறிப்பு : 141 குழந்தைகளுக்கு கல்வியாண்டு சான்றிதழ் வழங்குதல், அவர்களின் கலை நிகழ்ச்சிகள் – ஆடல், பாடல், நாடகம், வில்லுப் பாட்டு, காவடியாட்டம் போன்ற தமிழ்க் கலாச்சார மற்றும் பண்பாட்டு கலைகளுடன்.
150-க்கு மேற்ப்பட்ட தமிழ்க் குடும்பங்கள் மற்றும் தமிழ் ஆர்வளர்களின் சந்திப்புக்கள்.
உங்கள் பகுதியில் புதிய கல்விக்கூடம் அமைப்பதற்க்காண வழிகாட்டுதல்கள்.
நாள் : மே 16, 2010 ஞாயிற்றுக் கிழமை
நேரம்: மதியம் 2 மணி முதல்
இடம் : இண்டிபெண்டன்ஸ் உயர் நிலைப் பள்ளி,
மில்டன் மையம், 86 – ஸ்கூல் டிரைவ், அல்ஃபரட்டா, ஜார்ஜியா – 30009.
நிகழ்ச்சிக் குறிப்பு : 141 குழந்தைகளுக்கு கல்வியாண்டு சான்றிதழ் வழங்குதல், அவர்களின் கலை நிகழ்ச்சிகள் – ஆடல், பாடல், நாடகம், வில்லுப் பாட்டு, காவடியாட்டம் போன்ற தமிழ்க் கலாச்சார மற்றும் பண்பாட்டு கலைகளுடன்.
150-க்கு மேற்ப்பட்ட தமிழ்க் குடும்பங்கள் மற்றும் தமிழ் ஆர்வளர்களின் சந்திப்புக்கள்.
உங்கள் பகுதியில் புதிய கல்விக்கூடம் அமைப்பதற்க்காண வழிகாட்டுதல்கள்.
இளவேனில் கால மஞ்சள் நீராட்டு
இளவேனில்...
ஊரெல்லாம் மஞ்சள்
மகரந்தத்தின் கொஞ்சல்
இது
இளவேனில்கால கெஞ்சல்
வரும் கோடைக்கான அஞ்சல்
மஞ்சள் நீராட்டு...
கை படாமல் கார் வாஷ் செய்து
கராஜில் நிற்காமல் காற்றாட நின்றவளை
அங்கமெல்லாம் மஞ்சள் பூசி சென்றவன் எவன்?
அவள் மாமனோ? அவன் பெயர் போலனோ?
ஓவ்வாமை...
காதலி
காதோடு ஆடுது கம்மல்
காரணி
உன்னால் வந்த தும்மல்.
ஊரெல்லாம் மஞ்சள்
மகரந்தத்தின் கொஞ்சல்
இது
இளவேனில்கால கெஞ்சல்
வரும் கோடைக்கான அஞ்சல்
மஞ்சள் நீராட்டு...
கை படாமல் கார் வாஷ் செய்து
கராஜில் நிற்காமல் காற்றாட நின்றவளை
அங்கமெல்லாம் மஞ்சள் பூசி சென்றவன் எவன்?
அவள் மாமனோ? அவன் பெயர் போலனோ?
ஓவ்வாமை...
காதலி
காதோடு ஆடுது கம்மல்
காரணி
உன்னால் வந்த தும்மல்.
இவர்கள் சந்தித்தால்....
மரப் புலியும்... அதாங்க டைகர் உட்ஸ்-ம், நம்ம காவிப் பு(போ)லியும் சந்தித்தால் என்ன பேசிப்பாங்க?
மரப் புலி: நான் ஒரு விளையாட்டுப் பிள்ளை, என்னை வீணா வாம்புல மாட்டி விட்டுட்டாங்கையா... என் பெண்டாட்டி ஒரு பக்கம், பத்திரிக்கை காரர்கள் ஒரு பக்கம்ன்னு பின்னி எடுத்துட்டாங்கப்பா.
நித்தி: எங்க ஊருல பெண்கள் புலிய முரத்தால் அடித்ததாக வீர வரலாற்று செய்திகள் இருக்கு, ஆனா முகத்துல அடிச்சதா இல்லை. நீ வேஸ்ட்டப்பா. மூஞ்சில அடிவாங்கின சரி, காரை ஏன் கொண்டி மரத்துலயும் ஃபயர் ஹைட்ரண்ட் மேலயும் மோதின?
புலி: உண்மைதான் சாமி, எனக்கு உங்களவுக்கு திறமை இல்லை. உங்க கூட ஆசிரமத்துக்கு வந்து கொஞ்சம் பயிற்ச்சி எடுத்துக்கனும். நீங்க ஜாலிய படுத்து இருக்கீங்க, எல்லாத்தையும் அந்த புள்ளையே பண்ணுது.
நித்தி: (மனசுக்குள்... அட பாவிங்களா, இவன் நம்மூரு டி.வி.யும் பேப்பரும் படிக்க மாட்டான்னு நினைச்சி கொஞ்சம் பில்டப் பண்ணுலாம்ன்னு பார்த்தா இமேஜ டேமேஜ் பண்ணிட்டீங்களா?) புலி அதெல்லாம் கிராபிஃக்ஸ், நம்பாதீங்க.
புலி: சாமி, விடுங்க சாமி காய்ச்ச மரம்தான் கல்லடிபடும்ன்னு சொல்லுவாங்க. இருந்தாலும் இந்த விவகாரத்துல உங்களுக்கு திறமை பத்தாது சாமி, நான் இதுமாதிரி காரியத்துக்கெல்லாம் தனி சொகுசு படகு வெச்சிருக்கேன்... தயங்காம கேளுங்க கொடுத்து உதவுரேன்.
சிறிது நாட்களுக்கு பிறகு...
சாமி: புலி, என்ன இஞ்சி தின்ன குரங்கு மாதிரி ஆயிட்டீங்க?
புலி: சாமி, தெரியாம ஒன்பது பொண்ணுங்கன்னு ஒலறிட்டேன், ஒழுங்கா மத்ததையும் மறைக்காம சொல்லுன்னு உட்காரவெச்சி கேள்வி மேல கேள்வி கேக்கிறாங்க சாமி
சாமி: என்ன பாருங்க... அதெல்லாம் அலிஹேஸன், கான்ஸ்பைரஸி, கன்ஃபியூஸன், மிஸ்ரெப்ரஸண்டேச்ஸன், மேனிப்புலேஸன், பெனிப்ஃட் ஆஃப் டவுட்டுன்னு சொல்லிட்டு... எனக்கு கும்ப மேலா வேல இருக்குன்னு எஸ்கேப் ஆயி ஹிமாச்சல் போயி செட்டில் ஆகிட போறேன்.
புலி: என்னமோ சாமி நீங்க ஸன்... ஸன்-ன்னு சொல்றீங்க, எந்த சன்ன சொல்றீங்கன்னு எனக்கு ஒன்னும் புரியல.
சாமி: உனக்கு ஒன்னும் புரியாது. இனிமேலாவது திருந்து, கேள்ஸ்ஸ விடு, கோல்ஃப் விளையாட்ட மட்டும் பாரு.
நித்தி: எங்க ஊருல பெண்கள் புலிய முரத்தால் அடித்ததாக வீர வரலாற்று செய்திகள் இருக்கு, ஆனா முகத்துல அடிச்சதா இல்லை. நீ வேஸ்ட்டப்பா. மூஞ்சில அடிவாங்கின சரி, காரை ஏன் கொண்டி மரத்துலயும் ஃபயர் ஹைட்ரண்ட் மேலயும் மோதின?
புலி: உண்மைதான் சாமி, எனக்கு உங்களவுக்கு திறமை இல்லை. உங்க கூட ஆசிரமத்துக்கு வந்து கொஞ்சம் பயிற்ச்சி எடுத்துக்கனும். நீங்க ஜாலிய படுத்து இருக்கீங்க, எல்லாத்தையும் அந்த புள்ளையே பண்ணுது.
புலி: சாமி, விடுங்க சாமி காய்ச்ச மரம்தான் கல்லடிபடும்ன்னு சொல்லுவாங்க. இருந்தாலும் இந்த விவகாரத்துல உங்களுக்கு திறமை பத்தாது சாமி, நான் இதுமாதிரி காரியத்துக்கெல்லாம் தனி சொகுசு படகு வெச்சிருக்கேன்... தயங்காம கேளுங்க கொடுத்து உதவுரேன்.
சிறிது நாட்களுக்கு பிறகு...
புலி: சாமி, தெரியாம ஒன்பது பொண்ணுங்கன்னு ஒலறிட்டேன், ஒழுங்கா மத்ததையும் மறைக்காம சொல்லுன்னு உட்காரவெச்சி கேள்வி மேல கேள்வி கேக்கிறாங்க சாமி
சாமி: என்ன பாருங்க... அதெல்லாம் அலிஹேஸன், கான்ஸ்பைரஸி, கன்ஃபியூஸன், மிஸ்ரெப்ரஸண்டேச்ஸன், மேனிப்புலேஸன், பெனிப்ஃட் ஆஃப் டவுட்டுன்னு சொல்லிட்டு... எனக்கு கும்ப மேலா வேல இருக்குன்னு எஸ்கேப் ஆயி ஹிமாச்சல் போயி செட்டில் ஆகிட போறேன்.
புலி: என்னமோ சாமி நீங்க ஸன்... ஸன்-ன்னு சொல்றீங்க, எந்த சன்ன சொல்றீங்கன்னு எனக்கு ஒன்னும் புரியல.
சாமி: உனக்கு ஒன்னும் புரியாது. இனிமேலாவது திருந்து, கேள்ஸ்ஸ விடு, கோல்ஃப் விளையாட்ட மட்டும் பாரு.
Subscribe to:
Posts (Atom)