Showing posts with label மொக்கை | நகைச்சுவை. Show all posts
Showing posts with label மொக்கை | நகைச்சுவை. Show all posts

இவர்கள் சந்தித்தால்....

மரப் புலியும்... அதாங்க டைகர் உட்ஸ்-ம், நம்ம காவிப் பு(போ)லியும் சந்தித்தால் என்ன பேசிப்பாங்க?
மரப் புலி: நான் ஒரு விளையாட்டுப் பிள்ளை, என்னை வீணா வாம்புல மாட்டி விட்டுட்டாங்கையா... என் பெண்டாட்டி ஒரு பக்கம், பத்திரிக்கை காரர்கள் ஒரு பக்கம்ன்னு பின்னி எடுத்துட்டாங்கப்பா.

நித்தி: எங்க ஊருல பெண்கள் புலிய முரத்தால் அடித்ததாக வீர வரலாற்று செய்திகள் இருக்கு, ஆனா முகத்துல அடிச்சதா இல்லை. நீ வேஸ்ட்டப்பா. மூஞ்சில அடிவாங்கின சரி, காரை ஏன் கொண்டி மரத்துலயும் ஃபயர் ஹைட்ரண்ட் மேலயும் மோதின?

புலி: உண்மைதான் சாமி, எனக்கு உங்களவுக்கு திறமை இல்லை. உங்க கூட ஆசிரமத்துக்கு வந்து கொஞ்சம் பயிற்ச்சி எடுத்துக்கனும். நீங்க ஜாலிய படுத்து இருக்கீங்க, எல்லாத்தையும் அந்த புள்ளையே பண்ணுது.
நித்தி: (மனசுக்குள்... அட பாவிங்களா, இவன் நம்மூரு டி.வி.யும் பேப்பரும் படிக்க மாட்டான்னு நினைச்சி கொஞ்சம் பில்டப் பண்ணுலாம்ன்னு பார்த்தா இமேஜ டேமேஜ் பண்ணிட்டீங்களா?) புலி அதெல்லாம் கிராபிஃக்ஸ், நம்பாதீங்க.

புலி: சாமி, விடுங்க சாமி காய்ச்ச மரம்தான் கல்லடிபடும்ன்னு சொல்லுவாங்க. இருந்தாலும் இந்த விவகாரத்துல உங்களுக்கு திறமை பத்தாது சாமி, நான் இதுமாதிரி காரியத்துக்கெல்லாம் தனி சொகுசு படகு வெச்சிருக்கேன்... தயங்காம கேளுங்க கொடுத்து உதவுரேன்.

சிறிது நாட்களுக்கு பிறகு...
சாமி: புலி, என்ன இஞ்சி தின்ன குரங்கு மாதிரி ஆயிட்டீங்க?

புலி: சாமி, தெரியாம ஒன்பது பொண்ணுங்கன்னு ஒலறிட்டேன், ஒழுங்கா மத்ததையும் மறைக்காம சொல்லுன்னு உட்காரவெச்சி கேள்வி மேல கேள்வி கேக்கிறாங்க சாமி

சாமி: என்ன பாருங்க... அதெல்லாம் அலிஹேஸன், கான்ஸ்பைரஸி, கன்ஃபியூஸன், மிஸ்ரெப்ரஸண்டேச்ஸன், மேனிப்புலேஸன், பெனிப்ஃட் ஆஃப் டவுட்டுன்னு சொல்லிட்டு... எனக்கு கும்ப மேலா வேல இருக்குன்னு எஸ்கேப் ஆயி ஹிமாச்சல் போயி செட்டில் ஆகிட போறேன்.

புலி: என்னமோ சாமி நீங்க ஸன்... ஸன்-ன்னு சொல்றீங்க, எந்த சன்ன சொல்றீங்கன்னு எனக்கு ஒன்னும் புரியல.

சாமி: உனக்கு ஒன்னும் புரியாது. இனிமேலாவது திருந்து, கேள்ஸ்ஸ விடு, கோல்ஃப் விளையாட்ட மட்டும் பாரு.

துரியோதனன் – சொ.கா.சூ

ஒருவர் நம் நம்பிக்கைக்கு பாத்திரமானவர் என்றால் அவர் சொல்வதை நாம் நம்ப வேண்டும்... இல்லையென்றால் சொந்த காசில் சூனியம் (சொ.கா.சூ) வைத்துக்கொள்ள வேண்டியதுதான்.

மஹாபாரதத்தில் அதை மிக அழகாக சொல்லியிருப்பதை பார்க்கலாம். கிருஷ்ணன் துரியோதனனை சந்தித்து பேசுகிறார், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைகிறது. சரி இனி இவனிடம் பேசி பயனில்லை என்று கிருஷ்ணன் அவன் மாளிகையிலிருந்து புறப்படுகிறார். அப்படி புறப்பட்டு வரும் போது மாளிகை வாயில் பாதையில் அஸ்வதாமன் வருவதை பார்க்கிறார், துரியோதனன் கோபத்தில் மாடியில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருப்பதையும் பார்க்கிறார். சரி இதுதான் சமயம் இவன வெச்சு அவன் மண்டைய குழப்பிட வேண்டியதுதான்னு முடிவு பண்ணி காய் நகர்த்துகிறார்.

எதிரணியில் கிருஷ்ணன் இருந்தாலும், அஸ்வதாமன் மரியாதை நிமித்தம் கை குவித்து கிருஷ்ணனுக்கு வணக்கம் தெரிவிக்கிறான். அதுதான் சமயம் என்று கிருஷ்ணன் தன் மோதிரத்தை கழட்டி கீழே விட, கிருஷ்ணன் மரியாதைக்குரியவர் என்பதால் அஸ்வதாமன் அதை குனிந்து எடுத்து கிருஷ்ணன் கையில் கொடுக்கிறான். கிருஷ்ணன் அதை நன்றியுடன் (சிறிது கயை பிடித்து அழுத்தி) வாங்கி கொள்கிறார். ஒன்றும் பேசிக் கொள்ளவே இல்லை, பிறகு இருவரும் வணங்கி விடை பெருகின்றனர்.

மாளிகையின் மாடியிலிருந்து இந்த காட்சியை ஊமைப் படமாய் துரியோதனன் பார்க்கிறான். கிருஷ்ணன் அஸ்வதாமனிடம் பேசி அவனை அவர்கள் (பாண்டவர்கள்) பக்கம் மாற்றிவிட்டான் என எண்ணுகிறான்.

இனி... துரியோதனனும் அஸ்வதாமனும் பேசிக்கொண்டது…

துரி: ஏண்டா பண்ணாட... அவ்ந்தான் நம்ம எதிரியாலுன்னு தெரியும்ல... அவன் கைல உனக்கின்னாடா பேச்சி வேண்டிகிடக்கு?

அஸ்: தோ...டா. என்னமோ புச்சா சொல்லவந்திட்டாரு. நாங்களும் உப்பு போட்டுதான் சோறு துண்றோம்... எங்களுக்கும் சொரண இருக்கு... நான் எவ்ன் கைலியும் பேஸ்ல... சும்மா மரியாதைக்காண்டி ஒரு அலோ சொல்லிகினோம்...
துரி: சரி நீ பேஸ்ல... உன்ன நம்பறேன்... ஒரு பேச்சுக்கு நீ பேஸ்லன்னே வெச்சுகிறன். நான் இங்கன இருந்ததால நீ பேஸ்னயா இல்லியான்னு என்னால கட்டன்ரைட்டா சொல்லமுடியல. ஆனா அவன் கைல அடிச்சி சத்தியம் பண்ணியே... இன்னா மேட்டரது... அத்த சொல்லு.

அஸ்: இன்னாது... நான் அவன் கைல அடிச்சி சத்தியம் பண்ணினா? யாம்பா... உன்கு ஏதாவது மண்ட கிண்ட ஓடிப்போச்சா? இல்ல... ராத்திரி அட்ச்ச மப்பு இன்னும் தெளியலயா?

துரி: நீ என் கைல டபாய்ககாத... என் ரெண்டு கண்ணால பார்த்தேன். தரையிலேருந்து மண்ண எடுத்து அவன் கைல அடிச்சி சத்தியம் பண்ணுன.

அஸ்: யோவ்... இன்னாயா உன்கூட படா பேஜாராகீது... பேசாதத பேஸ்னேங்கிற... செய்யாதத செஞ்சேங்கிற... இத்தான் பெரியவங்கோ சொல்றத கேட்கனுங்கிறது. நீ யான் தோஸ்த்து, நீதான் எனக்கு முக்கியம்னு... நீ தப்பானவன்னு தெரிஞ்சும் உன்கு உதவ வந்தம் பாரு... எம்புத்திய ஜோட்டால அடிக்கனும்... அக்காங்.

(எது எப்படியோ, கிருஷ்ணன் அவர் நினைச்ச வேளைய கச்சிதமா செய்து முடித்திட்டார்).

கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், உடையவரிடம் நேரடியாக கேட்டு தெரிந்து கொள்வதே மெய்.